பள்ளிக்காலத்தில் எனக்கென்று சில நண்பர்கள் இருந்தார்கள் . குமாரசாமி, குமார் , அண்ணாமலை, முத்துப்பிரகாஶ் , ஸ்டிபன் போன்றோர் . இவர்களில்லாமல் நான் எங்கும் செல்வதில்லை . அண்ணாமலை எனக்கு நட்பினை போதித்தான் . ஸ்டீபன் பெயிலாகியதால் , என்னுடன் கூட வர இயலவில்லை . குமாரசாமி எனது ’குடி’த்தனத்தின் ஆசான் . முத்துப்பிரகாஶ் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை . குமாரை நான் கடைசியாக கண்டது அவனது ப்ளாஸ்டிக் கல்லூரியில் . இவ்வாறாக எனது பள்ளிக்கால தொடர்புகள் , பி எஸ் என் னலின் விரிவாக்கம் போல் பட்டும் படாமலும் இருக்கிறது . நான் கூற வந்த கூடாதிருந்திருக்க வேண்டிய நட்பு எனது கல்லூரிக் காலத்தானது .
கல்லூரிக்கு வந்தது முதலே நான் மிகுந்த கடுப்பும் , வெறுப்பும் கொண்டிருந்தேன் . நண்பர்களைப் பிரிந்ததும் , படித்த கல்லூரியினை விட்டதும், என்னவளை பார்க்க இயலாத இயலாமையும் எனக்குள் ஆறாத ரணமாகியிருந்தன .
கல்லூரியில் அறிமுகமானதும் சில வாரங்கள் கழித்து , " பேட்ஸ் " என்ற எங்களது கூட்டம் உருவாகியது . ஒன்றான மனநிலை கொண்ட அனைவரும் ஒருமித்து இருந்து , வழக்குண்டாக்கி , ’ஓட்டி ’ வாழ்ந்ததால் , இந்த பெயர் . இன்றும் ,நான் எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாகச் சொல்வதென்றால் , அது எனது இந்த நட்பு வட்டாரமே!! . கவலையென்ற ஒன்றிறியாத , இருந்தாலும் காட்டிக்கொள்ளாத , வரும் இடரினையும் களிப்பாக்கி வென்று காணும் கூட்டம் , எனது நண்பர் கூட்டம் !!!
நாங்கள் மாதம் முதல் தேதிகளில் வாழ்வாங்கு இருந்ததும் உண்டு , மாதக்கடைசிகளில் வாழ்ந்து கெட்டதும் உண்டு . காதல் வெற்றிகளில் களிப்புற்றிருந்ததும் உண்டு , தோல்விகளில் அதனையும் வென்றிருந்ததும் உண்டு. ஒருவனின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் வகையில் கொண்டாடியதும் உண்டு , காசில்லாது டீக்கடையில் அக்கவுண்ட்டில் வாங்கிய பிரட்டாலும் , டீயினாலும் அதனை சிறப்பித்ததும் உண்டு !!
ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள் அவ்வப்பொழுது வேற்றுமைகள் இருக்கும் . தான் வாங்கிய விகடனை மற்றவன் படிப்பதில் ஆரம்பித்து , மற்றவனுக்கு முடி வெட்டி விளையாடும் அளவிற்கு சென்று , தனக்குப் பிடிக்காத பெண்ணிணை மற்றவன் விரும்புகிறானே !! , என்றளவிற்கு பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் என்றும் மற்றவர் முன் விட்டுக் கொடுத்ததில்லை , இனியும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை .
இப்படி அனைவரும் ஒன்றாக இருந்த வேளையில் எனக்கு மட்டும் ஒருவன் / இருவர் மேல் தனி பிரியம் . ஏன் என்று தெரியவில்லை , எப்படி என்று தெரியவில்லை . தானாக மற்றவன் மேல் ஒரு வித தனி பிரியம் . அவன் மேல் ஒரு வித தனிப் பற்றுதல் . அவனுக்காக , அல்லது அவனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ செய்த மனப்பிரயாசம் . இப்பொழுது நினைத்தால் , கேவலமாக இருக்கிறது . தன்னை உதாசினப்படுத்திய காதலியின் பின்னால் அலைவதையும் விட கொடுமையானதாகத் தோன்றுகிறது .
எனினும் வேலைக்காக வந்தேனோ அதோ விதிவசத்தால் வந்தேனோ , வெளிநாட்டுக்கு வந்தவுடன் , அந்த " உறவின் " தாக்கம் மெல்ல மெல்ல மட்டுப்பட தொடங்கியுள்ளது . அதனையே நானும் விரும்புகிறேன் . சில நேரங்களில் , குடும்பம் , நட்பு இதுயெல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு , சில வருடங்கள் தனிமையில் , மாதாமாதம் வீட்டிற்கு மட்டும் பணம் அனுப்பிக் கொண்டு வாழ்ந்தால் என்ன என்றும் தோன்றுகிறது . பிணைத்திருக்கும் பாசக் கயிறுகள் யாவற்றையும் அறுத்தேறிந்துவிட்டு வெளியேற வேண்டும் எனவும் தோன்றுகிறது . ஆனால் எனக்குத் தெரியும் , என்னால் இது மட்டும் கண்டிப்பாக முடியாதேன்பதை.மீண்டும் சந்திக்கும் பொழுதோ , சந்தித்தப்பின் கட்டித்தழுவும் அந்த வேளையிலோ , ஏற்கனவே மதில் மேல் பூனையாக இருக்கும் இந்த மனம் , அப்பக்கம் சாய்ந்துவிடுமோ என பயமாயிருக்கிறது . என்மீது எனக்கே பயமாயிருக்கிறதேன்பது மட்டும் உண்மை .
நாம் சிலரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் , அவர்களும் நம்மைப் பற்றி நினைப்பார்களா என்றேண்ணிப் பார்க்கிறது மனம் . அது தேவையில்லாதது என்று மற்றோர் மனம் சொல்கிறது . எது எப்படியிருந்தாலும் , நான் நானாக இருப்பதினை விட மேலானது வேறோன்றும் இல்லை என்பதை நம்புகிறேன்.
எஞ்சியிருக்கும் காலம் முழுதும் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் !!
மீண்டும் வருகிறேன் . !!!
Thursday, October 4, 2007
அம்முவாகிய நான் :
அம்முவாகிய நான் படம் பார்த்தேன் . தவிர்க்கவே முடியாமல் தியாகராஜனின் நினைவு வந்தது. அந்தளவு ஆர்ப்பாட்டம் அப்பெயரால்!! கதையும் ஓரளவு , அவன் ’விரும்பும் ’ துறையினைப் பற்றியதாக இருப்பது தற்செயல் !
அழகான , அமைதியான படம் என்பது படம் ஆரம்பித்த , சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடுகிறது . குடும்ப சூழ்நிலை காரணமாகவே , இத்தொழிலுக்கு வருவதாக பல படங்களில் காட்டிவிட்டதால் , விரும்பி இத்தொழிலுக்கு வருவதாக காட்டியிருப்பது புதிது .
குழந்தையினை வாங்கும் பொழுது, பின்னால் பழைய பேப்பர் வியாபாரம் நடப்பது போல் காட்டியிருப்பது போன்ற நச் சீன்கள் படத்தில் ஏராளம் . " நானும் தான் வரிசைல நின்னேன் , என்னை விளையாட்டுல சேர்த்துக்கல்ல " என்று குழந்தை புலம்புதல் , வியாதி வந்து காணாமல் போகும் ராஜஸ்ரி , கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் , புடவையினை அவிழ்த்து விட்டு , "இதுதான் ப்ரியா இருக்கு " என்று ஒரு தொழில்க்காரிக்கான நேர்த்தியினுடன் கூறுதல் , என படத்தின் பல சீன்கள் இயக்குனரின் திறமையினை காட்டுகிறது .
வசனங்களும் பளீச்சிடுகின்றன . " காசு குடுத்துருக்கேல்ல , பிடிக்காம போகுமா ? " என்றும் , " ரைட்டரா , ஓஓ அந்த மாதிரி ரைட்டரா ? " என்னும் பொழுதும் , " அங்க தப்பில்ல , இங்க தப்பு " என்னும் பொழுதும் ,அவை திரைக்காட்சிக்கு வழு சேர்க்கின்றன .
பாரதியின் நடிப்பு அற்புதம் . குறிப்பாக கல்யாணத்தின் பொழுது காட்டும் அந்த கண்ஜாடை !! கணவனின் ரகசிய பரிசைக் காணும் ஆவலோடு கூடிய நடை , முதலில் பார்த்திபனைப் பார்க்கும் பொழுது காட்டும் அதட்டல் குறும்பு என படம் முழுக்க பாரதியாட்டம் தான் !!
பார்த்திபன் டைப் வசனங்களும் உண்டு , சில இடத்தில் மட்டும் . அதிரடியில்லாத இசையும் , வசனமும் , பாரதியின் யதார்த்தமான நடிப்பும் கண்டிப்பாக மீண்டும் ஒரு தடவை பார்க்கத் தூண்டும் .
அற்புதமான , அமைதியான படம் .
மீண்டும் வருகிறேன் !!!
அழகான , அமைதியான படம் என்பது படம் ஆரம்பித்த , சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடுகிறது . குடும்ப சூழ்நிலை காரணமாகவே , இத்தொழிலுக்கு வருவதாக பல படங்களில் காட்டிவிட்டதால் , விரும்பி இத்தொழிலுக்கு வருவதாக காட்டியிருப்பது புதிது .
குழந்தையினை வாங்கும் பொழுது, பின்னால் பழைய பேப்பர் வியாபாரம் நடப்பது போல் காட்டியிருப்பது போன்ற நச் சீன்கள் படத்தில் ஏராளம் . " நானும் தான் வரிசைல நின்னேன் , என்னை விளையாட்டுல சேர்த்துக்கல்ல " என்று குழந்தை புலம்புதல் , வியாதி வந்து காணாமல் போகும் ராஜஸ்ரி , கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் , புடவையினை அவிழ்த்து விட்டு , "இதுதான் ப்ரியா இருக்கு " என்று ஒரு தொழில்க்காரிக்கான நேர்த்தியினுடன் கூறுதல் , என படத்தின் பல சீன்கள் இயக்குனரின் திறமையினை காட்டுகிறது .
வசனங்களும் பளீச்சிடுகின்றன . " காசு குடுத்துருக்கேல்ல , பிடிக்காம போகுமா ? " என்றும் , " ரைட்டரா , ஓஓ அந்த மாதிரி ரைட்டரா ? " என்னும் பொழுதும் , " அங்க தப்பில்ல , இங்க தப்பு " என்னும் பொழுதும் ,அவை திரைக்காட்சிக்கு வழு சேர்க்கின்றன .
பாரதியின் நடிப்பு அற்புதம் . குறிப்பாக கல்யாணத்தின் பொழுது காட்டும் அந்த கண்ஜாடை !! கணவனின் ரகசிய பரிசைக் காணும் ஆவலோடு கூடிய நடை , முதலில் பார்த்திபனைப் பார்க்கும் பொழுது காட்டும் அதட்டல் குறும்பு என படம் முழுக்க பாரதியாட்டம் தான் !!
பார்த்திபன் டைப் வசனங்களும் உண்டு , சில இடத்தில் மட்டும் . அதிரடியில்லாத இசையும் , வசனமும் , பாரதியின் யதார்த்தமான நடிப்பும் கண்டிப்பாக மீண்டும் ஒரு தடவை பார்க்கத் தூண்டும் .
அற்புதமான , அமைதியான படம் .
மீண்டும் வருகிறேன் !!!
Sunday, September 9, 2007
ஜமீலா :
ஆனந்தவிகடனும் குமுதமும் மட்டுமே தமிழ் ’இலக்கியங்கள் ’ என்ற எனது நீண்ட கால எண்ணத்தினை தகர்த்தேறிந்து விட்டது வெண்மணி அனுப்பி வைத்த புத்தகங்கள் . மூன்று ருஶ்ய நாவல்களும் , கவிதைத் தொகுப்பும் , இன்னும் சிலவும் எனது " முதல் லைப்ப்ரரி"யினை ஆரம்பித்திருக்கின்றன .
அவ்வகையில் நான் முதலில் ஆரம்பித்தது " உண்மை மனிதனின் கதை " . அதைப் பற்றி பின்னால் எழுதுகிறேன் . அடுத்து படித்தது " ஜமீலா " . கதை மிகவும் பாதிக்கிறது . ஜமீலாவும், தானியாரும் , கிச்சனே பாலாவும் இன்னும் சில நாட்கள் என்னைத் விடாது துரத்தப் போகிறார்கள் என்பது திண்ணம் .
ஒருவரிக் கதை . போருக்குச் சென்றுவிட்ட கணவன் . அவனது அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கும் மனைவி . கடிதத்தில் கூட "பின்குறிப்பாக " மட்டுமே மனைவியின் நலம் விசாரிக்கும் கணவன் . ஒவியக்கார சிறுவயது கொழுந்தன் . விட்டேந்தியாக திரியும் தனியார் . இசையால் தானியாருக்கும் ஜமீலாவுக்குமான பற்றுதல் . இதுதான் கதை . ஆனால் புத்தகத்திலும் திரைகதையின் தாக்கத்தினை கொண்டுவருதல் சாத்தியமே என நீருபித்திருக்கிறார் ஆசிரியர் .
ஒரு ஓவியத்தில் இருந்து ஆரம்பித்து , அங்கிருந்தே கதைக்குச் சென்று , கடைசியாக அதிலேயே கதையினை நிறைவு செய்திருக்கும் ஆசிரியரின் பாங்கு அற்புதம் . கதையின் சில பகுதிகளை திரைக்காட்சியாக நினைத்தாலே புல்லரிக்கிறது . சில பகுதிகளில் ஆழ்மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடு .....
அண்ணி ஜமீலாவிடம் முரட்டுத்தனமாக நடக்கும் உஸ்மோனை எதிர்த்து ஒண்ணும் செய்யமுடியாமல் தவிக்கும் சிறுவனின் உள்ளக்குமுறல் , அதிக பளுவுள்ள மூட்டையினை தானியாரைத் தூக்கச் செய்த ஜமீலாவின் மற்றும் சிறுவனின் குற்றவுணர்ச்சி , ஸ்தெப்பிக் காடுகளில் தானியாரின் பாட்டு , பின்னர் ஜமீலாவுக்கும் தானியாருக்குமான நெருக்கம் , அவர்களுக்கிடையேயான பற்றுதல் குறித்த சிறுவனின் எண்ணவோட்டம் , அவனது ஓவியத்தினை ஜமீலா ரகசியமாக வாங்கி வைத்துக்கொள்வது , கணவனிடமிருந்து வந்த கடிதத்தினை ஜமீலா படிப்பதை தனியார் பார்ப்பது என கதையின் அனைத்துப் பாகங்களும் அற்புதமோ அற்புதம் . ரஶ்யாவின் ஸ்தெப்பிக் காடுகளுக்கும் , பாறைக் குன்றுக்கும் போய் வரவேண்டும் போல் உண்மையில் தோன்றுகிறது .
இக்கதையினை திரைப்படமாக எடுக்க யார் சரி என யோசித்துப் பார்த்தேன் . எஸ் ஜே சூரியாவிடம் கொடுத்தால் , பக்காவான மலையாள நீலப்படம் ரெடியாகிவிடும் . மணிரத்னம் , ஶங்கர் போன்றோர் கதையின் ஆழத்தினை சிதைத்துவிடுவார்களோ என பயமாய் இருக்கிறது . பாரதிராஜாவிடம் கொடுக்கலாம் . பதினாரு வயதினேலே , முதல் மரியாதையய்யும் மிஞ்சக் கூடிய காவியம் கிடைக்கும் .
பார்க்கலாம் .
மீண்டும் வருகிறேன் !!
அவ்வகையில் நான் முதலில் ஆரம்பித்தது " உண்மை மனிதனின் கதை " . அதைப் பற்றி பின்னால் எழுதுகிறேன் . அடுத்து படித்தது " ஜமீலா " . கதை மிகவும் பாதிக்கிறது . ஜமீலாவும், தானியாரும் , கிச்சனே பாலாவும் இன்னும் சில நாட்கள் என்னைத் விடாது துரத்தப் போகிறார்கள் என்பது திண்ணம் .
ஒருவரிக் கதை . போருக்குச் சென்றுவிட்ட கணவன் . அவனது அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கும் மனைவி . கடிதத்தில் கூட "பின்குறிப்பாக " மட்டுமே மனைவியின் நலம் விசாரிக்கும் கணவன் . ஒவியக்கார சிறுவயது கொழுந்தன் . விட்டேந்தியாக திரியும் தனியார் . இசையால் தானியாருக்கும் ஜமீலாவுக்குமான பற்றுதல் . இதுதான் கதை . ஆனால் புத்தகத்திலும் திரைகதையின் தாக்கத்தினை கொண்டுவருதல் சாத்தியமே என நீருபித்திருக்கிறார் ஆசிரியர் .
ஒரு ஓவியத்தில் இருந்து ஆரம்பித்து , அங்கிருந்தே கதைக்குச் சென்று , கடைசியாக அதிலேயே கதையினை நிறைவு செய்திருக்கும் ஆசிரியரின் பாங்கு அற்புதம் . கதையின் சில பகுதிகளை திரைக்காட்சியாக நினைத்தாலே புல்லரிக்கிறது . சில பகுதிகளில் ஆழ்மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடு .....
அண்ணி ஜமீலாவிடம் முரட்டுத்தனமாக நடக்கும் உஸ்மோனை எதிர்த்து ஒண்ணும் செய்யமுடியாமல் தவிக்கும் சிறுவனின் உள்ளக்குமுறல் , அதிக பளுவுள்ள மூட்டையினை தானியாரைத் தூக்கச் செய்த ஜமீலாவின் மற்றும் சிறுவனின் குற்றவுணர்ச்சி , ஸ்தெப்பிக் காடுகளில் தானியாரின் பாட்டு , பின்னர் ஜமீலாவுக்கும் தானியாருக்குமான நெருக்கம் , அவர்களுக்கிடையேயான பற்றுதல் குறித்த சிறுவனின் எண்ணவோட்டம் , அவனது ஓவியத்தினை ஜமீலா ரகசியமாக வாங்கி வைத்துக்கொள்வது , கணவனிடமிருந்து வந்த கடிதத்தினை ஜமீலா படிப்பதை தனியார் பார்ப்பது என கதையின் அனைத்துப் பாகங்களும் அற்புதமோ அற்புதம் . ரஶ்யாவின் ஸ்தெப்பிக் காடுகளுக்கும் , பாறைக் குன்றுக்கும் போய் வரவேண்டும் போல் உண்மையில் தோன்றுகிறது .
இக்கதையினை திரைப்படமாக எடுக்க யார் சரி என யோசித்துப் பார்த்தேன் . எஸ் ஜே சூரியாவிடம் கொடுத்தால் , பக்காவான மலையாள நீலப்படம் ரெடியாகிவிடும் . மணிரத்னம் , ஶங்கர் போன்றோர் கதையின் ஆழத்தினை சிதைத்துவிடுவார்களோ என பயமாய் இருக்கிறது . பாரதிராஜாவிடம் கொடுக்கலாம் . பதினாரு வயதினேலே , முதல் மரியாதையய்யும் மிஞ்சக் கூடிய காவியம் கிடைக்கும் .
பார்க்கலாம் .
மீண்டும் வருகிறேன் !!
காத்திருப்பு :
எத்தனையோ விஶயங்களுக்காக காத்திருக்கிறோம் . எதற்காக , என்னவென்று தெரியாமலே சில , தெரிந்து தவிர்க்க விரும்பியும் இயலாமலும் சில , வேண்டியிருந்த காத்திருப்புகளும் சில . இந்த வாரம் எனது நண்பன் ஒருவன் இந்தியா திரும்புகிறான் , விடுமுறையில் . அவனை வழியனுப்ப வேண்டி ஏர்போர்ட்டில் காத்திருந்தேன் . அப்பொழுது தோன்றியது , வாழ்வில் எத்தனை முறை காத்திருந்திருக்கிறேன் ? எனது மறக்க முடியாத காத்திருப்புகள் இவை .
எனது இதுநாள்வரை வாழ்வில் எத்தனையோ விஶயங்களுக்காக காத்திருந்திருக்கிறேன் . சிலவற்றை மறக்க வேண்டும் எனவும் , சிலவற்றை என்றேன்றும் நினைத்திருக்க வேண்டும் எனவும் எப்பொழுதும் நினைத்திருப்பேன் . தவிர்க்கவே முடியாமல் நான் மறக்க நினைத்த காத்திருப்புகளே என் நினைவில் முதலில் தோன்றுகின்றன .
இஞ்சினியரிங் முடித்த கையோடு , ஆர் . டீ . ஓ ஆபிஸில் வேலையில் இருந்த பொழுது , தினப்படி எனது சம்பளம் ஐம்பது ரூபாய் . அதனை தரும் பொழுது , சொல்லி வைத்தாற் போல் , ஆபிஸர் கையில் சில்லறை இருக்காது . சில்லறை மாற்றி வருகிறேன் என்று சொல்லி விட்டு , அருகில் இருக்கும் பாருக்குச் சென்று , சிறிது நேரம் கழித்து திரும்புவர் எனது மாமாவும் அந்த ஆபிஸரும் . அந்த அரை மணி நேர காத்திருப்பு என்னால் இனி எப்பொழுதும் மறக்க முடியாதவை . பாக்கெட்டில் ஐந்து பைசா இருக்காது . அந்த நேரத்தில் , சிகரட் அடித்துக் கொண்டு , புகை விட்டுத் திரியும் ஆட்கள் என்னைக் கடந்து சென்றால் , அவர்கள் வம்சம் முழுவதுக்குமாய் திட்டுவேன் . காசில்லாது இருக்கையில் , புகையும் சிகரெட்டுடனும் , காற்றில் பரவ விடும் அந்த புகையின் வாசத்தையும் நுகரும் , எனக்கு அளவிற்கு மீறிய எரிச்சல் வரும் . அக்காத்திருப்பு என்னால் மறக்க முடியாது .
பிரிவுகள் சில சமயம் சந்தோசப் படவும் , சில சமயங்களில் வேதனைப் படவும் வைக்கின்றன . எனது அடுத்த மறக்க முடியாத காத்திருப்பும் மதுரையில் தான் . நண்பர்களைப் பிரிந்து , மதுரையில் இருந்த நேரம் . பிலிப்ஸில் வேலை . அடுத்த நாள் எனக்கு திருச்சி செல்ல வேண்டியிருந்தது . அப்பொழுது பார்த்து , பிரசன்னாவும் , பாலாஜியும் சிவகாசிக்கு ஒரு வேலை விஶயமாக வருவதாக கூறியிருந்தார்கள் . காலையில் நான்கு மணிக்கெல்லாம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டில் காத்திருந்தேன். அவர்கள் பஸ் எதேச்சையாக நாலரைக்கு வரும் எனக் கூறியிருந்தார்கள் . அவர்களை தொடர்பு கொள்ளவும் வழியில்லை . கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காத்திருந்துவிட்டு , ஐந்தரைக்கு பஸ் ஏறினேன் . இல்லாவிடில் எனது திருச்சி டீலரை பார்க்க முடியாமல் போய் விடும். ஆதலால் மனசே இல்லாமல் பஸ் ஏறினேன் . பஸ் பேருந்து நிலைய வளைவினைக் கூடத் தாண்டியிருக்காது . போனில் பிரசன்னா . " மதுரை மாட்டுத்தாவணில இருந்து பேசுறேன் , மச்சி " என்றான் . ஒரு வருடம் பார்க்காமல் இருந்த நண்பர்களை , ஒரு ஐந்து நிமிட காத்திருப்பில் தவற விட்டிருக்கிறேன் !!! தாங்க முடியாத கோபத்தினூடும் , வருத்ததினூடும் பயணத்தைத் தொடர்ந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது . !!
அதே போல் தான் , சென்னையிலும். பிலிப்ஸில் இருக்கும் எனது மானேஜருடன் சண்டை . ராஜினாமா செய்யச் சொன்னார் . " இவன் என்ன சொல்லி , நாம் கேட்பது ? " என்ற வைராக்கியத்தில் நேரே ஹச் ஆர் சென்று எனது ராஜினாமா கடிதம் கொடுத்தேன் . கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார்கள் . அந்த காத்திருப்பில் மனதில் நிறைய எண்ணங்கள் . அடுத்ததாக என்ன ? என்பது முக்கியமானது . உண்மையில் அப்பொழுது என்னால் காத்திருக்கவே முடியவில்லை . மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வரவேண்டுமா ? என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது . எந்நேரமும் அழுதுவிடுவேன் என்ற நிலை . வேறெதுவும் தோன்றவில்லை . சிவாவுக்கு போன் பண்ணியதும் , அவன் அதற்குள் ஐந்தாறு தடவை போன் செய்து அசுவாசப்படுத்தியதும் , மறக்க கூடாதவை . மறந்தால் நான் மனிதனில்லை .
இனிமையான காத்திருப்புகளும் உண்டு . பள்ளியில் படிக்கும் பொழுது , நானும் குமாரசாமியும் குளக்கரையில் காத்திருப்போம் . அதுவும் இரவு எட்டு மணி வாக்கில் . ஆளரவம் இல்லாத அந்த கும்மிருட்டில் , எங்களுக்கான சிகரட்டுடன் காத்திருந்து கதை பேசித் திரிவோம் . சிறிது நேரத்தில் குமார் வருவான் . கையில் பாட்டிலுடன் . பின்னர் என்ன , கூத்தும் கச்சேரியும் தான் . இரவு நேரத்தில் , எங்களுக்கான சிந்தனைகளுடனும் , தனிமையுடனும் , மல்லாந்து படுத்து, வானத்து நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் அந்த இரவு நேர காத்திருப்பு மனதிற்கு அமைதியைத் தந்ததாகவே நினைக்கிறேன் . !!
என்னவளுக்காக காத்திருக்கும் நேரங்கள் அற்புதமானவை . சில நேரங்களில் அதனைப் பற்றி மீண்டும் நினைக்கும் பொழுது , நானா அப்படி ? என்று சிரிப்பாகவும் , மனதிற்கு சுகமாகவும் இருக்கிறது . அதிகாலை ஏழு மணி பஸ்ஸிற்காக , அதற்கு முந்தைய பஸ்ஸினைப் பிடித்து , இடலக்குடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி , காத்திருப்பேன் . எட்டு மணி வாக்கில் தரிசனம் கிடைக்கும் . அந்த சில நேரங்களில் , எனது எண்ணவோட்டங்களை வார்த்தைகளில் வடித்தல் இயலாதது . அதனைப் பற்றி நினைக்கும் இந்த நேரத்திலும் , கிட்டத்தட்ட அதே மனநிலைமையில் இருப்பதாகவும் , அதே அதிர்வுகளையும் உணர்கிறேன் . கையில் பையுடனும் , வழித்துச் சீவப்பட்ட முடியுடனும் , நெற்றியில் மெல்லிதாக தீட்டப்பட்ட குங்குமத்துடனும் , சிரித்த முகமாகவும் இருக்கும் என்னையே மீண்டும் ஒரு தடவை பார்க்கவேண்டும் போல் உள்ளது . அதே சூழ்நிலையில் மீண்டும் ஒரு தடவையாவது , அதே அதிர்வினை அனுபவிக்கவேண்டும் போல் உள்ளது .
மீனாவின் பேச்சுப் போட்டிக்காக காத்திருந்து , அவள் பரிசு வாங்கும் வரை பள்ளியின் தெருவொர மேடைக்கருகில் காத்திருந்தது , கல்லூரியிலும் லீவ் முடிந்த நான் சீக்கிரமே திரும்பிவிட , மற்றவர்களின் வருகைக்காக நானும் பிரசன்னாவும் காத்திருந்தது , சிவாவின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் அண்ணனின் செக்குக்காக , ஈஓபி பேங்கில் காத்திருந்தது , பெங்களூரில் தியாகராஜனுக்காக காத்திருந்தது , " தேவன் " பட அருண்பாண்டியன் போல் வந்தவனை வரவேற்றது , அண்ணாமலைக்காக ரெயில்வே ஸ்டேஶனில் காத்திருந்தது என காத்திருப்பின் சுவாரஸ்ய நினைவுகளுக்கு பஞ்சமேயில்லை . !!
இந்தியா திரும்ப வேண்டி , ஏர்போர்ட்டில் ’இமிக்ரேஶன் ’ முடித்து காத்திருக்கும் அந்த சில மணி நேரங்களுக்காக காத்திருக்கிறேன் . !!!
மீண்டும் வருகிறேன் . !!
எனது இதுநாள்வரை வாழ்வில் எத்தனையோ விஶயங்களுக்காக காத்திருந்திருக்கிறேன் . சிலவற்றை மறக்க வேண்டும் எனவும் , சிலவற்றை என்றேன்றும் நினைத்திருக்க வேண்டும் எனவும் எப்பொழுதும் நினைத்திருப்பேன் . தவிர்க்கவே முடியாமல் நான் மறக்க நினைத்த காத்திருப்புகளே என் நினைவில் முதலில் தோன்றுகின்றன .
இஞ்சினியரிங் முடித்த கையோடு , ஆர் . டீ . ஓ ஆபிஸில் வேலையில் இருந்த பொழுது , தினப்படி எனது சம்பளம் ஐம்பது ரூபாய் . அதனை தரும் பொழுது , சொல்லி வைத்தாற் போல் , ஆபிஸர் கையில் சில்லறை இருக்காது . சில்லறை மாற்றி வருகிறேன் என்று சொல்லி விட்டு , அருகில் இருக்கும் பாருக்குச் சென்று , சிறிது நேரம் கழித்து திரும்புவர் எனது மாமாவும் அந்த ஆபிஸரும் . அந்த அரை மணி நேர காத்திருப்பு என்னால் இனி எப்பொழுதும் மறக்க முடியாதவை . பாக்கெட்டில் ஐந்து பைசா இருக்காது . அந்த நேரத்தில் , சிகரட் அடித்துக் கொண்டு , புகை விட்டுத் திரியும் ஆட்கள் என்னைக் கடந்து சென்றால் , அவர்கள் வம்சம் முழுவதுக்குமாய் திட்டுவேன் . காசில்லாது இருக்கையில் , புகையும் சிகரெட்டுடனும் , காற்றில் பரவ விடும் அந்த புகையின் வாசத்தையும் நுகரும் , எனக்கு அளவிற்கு மீறிய எரிச்சல் வரும் . அக்காத்திருப்பு என்னால் மறக்க முடியாது .
பிரிவுகள் சில சமயம் சந்தோசப் படவும் , சில சமயங்களில் வேதனைப் படவும் வைக்கின்றன . எனது அடுத்த மறக்க முடியாத காத்திருப்பும் மதுரையில் தான் . நண்பர்களைப் பிரிந்து , மதுரையில் இருந்த நேரம் . பிலிப்ஸில் வேலை . அடுத்த நாள் எனக்கு திருச்சி செல்ல வேண்டியிருந்தது . அப்பொழுது பார்த்து , பிரசன்னாவும் , பாலாஜியும் சிவகாசிக்கு ஒரு வேலை விஶயமாக வருவதாக கூறியிருந்தார்கள் . காலையில் நான்கு மணிக்கெல்லாம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டில் காத்திருந்தேன். அவர்கள் பஸ் எதேச்சையாக நாலரைக்கு வரும் எனக் கூறியிருந்தார்கள் . அவர்களை தொடர்பு கொள்ளவும் வழியில்லை . கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காத்திருந்துவிட்டு , ஐந்தரைக்கு பஸ் ஏறினேன் . இல்லாவிடில் எனது திருச்சி டீலரை பார்க்க முடியாமல் போய் விடும். ஆதலால் மனசே இல்லாமல் பஸ் ஏறினேன் . பஸ் பேருந்து நிலைய வளைவினைக் கூடத் தாண்டியிருக்காது . போனில் பிரசன்னா . " மதுரை மாட்டுத்தாவணில இருந்து பேசுறேன் , மச்சி " என்றான் . ஒரு வருடம் பார்க்காமல் இருந்த நண்பர்களை , ஒரு ஐந்து நிமிட காத்திருப்பில் தவற விட்டிருக்கிறேன் !!! தாங்க முடியாத கோபத்தினூடும் , வருத்ததினூடும் பயணத்தைத் தொடர்ந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது . !!
அதே போல் தான் , சென்னையிலும். பிலிப்ஸில் இருக்கும் எனது மானேஜருடன் சண்டை . ராஜினாமா செய்யச் சொன்னார் . " இவன் என்ன சொல்லி , நாம் கேட்பது ? " என்ற வைராக்கியத்தில் நேரே ஹச் ஆர் சென்று எனது ராஜினாமா கடிதம் கொடுத்தேன் . கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார்கள் . அந்த காத்திருப்பில் மனதில் நிறைய எண்ணங்கள் . அடுத்ததாக என்ன ? என்பது முக்கியமானது . உண்மையில் அப்பொழுது என்னால் காத்திருக்கவே முடியவில்லை . மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வரவேண்டுமா ? என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது . எந்நேரமும் அழுதுவிடுவேன் என்ற நிலை . வேறெதுவும் தோன்றவில்லை . சிவாவுக்கு போன் பண்ணியதும் , அவன் அதற்குள் ஐந்தாறு தடவை போன் செய்து அசுவாசப்படுத்தியதும் , மறக்க கூடாதவை . மறந்தால் நான் மனிதனில்லை .
இனிமையான காத்திருப்புகளும் உண்டு . பள்ளியில் படிக்கும் பொழுது , நானும் குமாரசாமியும் குளக்கரையில் காத்திருப்போம் . அதுவும் இரவு எட்டு மணி வாக்கில் . ஆளரவம் இல்லாத அந்த கும்மிருட்டில் , எங்களுக்கான சிகரட்டுடன் காத்திருந்து கதை பேசித் திரிவோம் . சிறிது நேரத்தில் குமார் வருவான் . கையில் பாட்டிலுடன் . பின்னர் என்ன , கூத்தும் கச்சேரியும் தான் . இரவு நேரத்தில் , எங்களுக்கான சிந்தனைகளுடனும் , தனிமையுடனும் , மல்லாந்து படுத்து, வானத்து நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் அந்த இரவு நேர காத்திருப்பு மனதிற்கு அமைதியைத் தந்ததாகவே நினைக்கிறேன் . !!
என்னவளுக்காக காத்திருக்கும் நேரங்கள் அற்புதமானவை . சில நேரங்களில் அதனைப் பற்றி மீண்டும் நினைக்கும் பொழுது , நானா அப்படி ? என்று சிரிப்பாகவும் , மனதிற்கு சுகமாகவும் இருக்கிறது . அதிகாலை ஏழு மணி பஸ்ஸிற்காக , அதற்கு முந்தைய பஸ்ஸினைப் பிடித்து , இடலக்குடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி , காத்திருப்பேன் . எட்டு மணி வாக்கில் தரிசனம் கிடைக்கும் . அந்த சில நேரங்களில் , எனது எண்ணவோட்டங்களை வார்த்தைகளில் வடித்தல் இயலாதது . அதனைப் பற்றி நினைக்கும் இந்த நேரத்திலும் , கிட்டத்தட்ட அதே மனநிலைமையில் இருப்பதாகவும் , அதே அதிர்வுகளையும் உணர்கிறேன் . கையில் பையுடனும் , வழித்துச் சீவப்பட்ட முடியுடனும் , நெற்றியில் மெல்லிதாக தீட்டப்பட்ட குங்குமத்துடனும் , சிரித்த முகமாகவும் இருக்கும் என்னையே மீண்டும் ஒரு தடவை பார்க்கவேண்டும் போல் உள்ளது . அதே சூழ்நிலையில் மீண்டும் ஒரு தடவையாவது , அதே அதிர்வினை அனுபவிக்கவேண்டும் போல் உள்ளது .
மீனாவின் பேச்சுப் போட்டிக்காக காத்திருந்து , அவள் பரிசு வாங்கும் வரை பள்ளியின் தெருவொர மேடைக்கருகில் காத்திருந்தது , கல்லூரியிலும் லீவ் முடிந்த நான் சீக்கிரமே திரும்பிவிட , மற்றவர்களின் வருகைக்காக நானும் பிரசன்னாவும் காத்திருந்தது , சிவாவின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் அண்ணனின் செக்குக்காக , ஈஓபி பேங்கில் காத்திருந்தது , பெங்களூரில் தியாகராஜனுக்காக காத்திருந்தது , " தேவன் " பட அருண்பாண்டியன் போல் வந்தவனை வரவேற்றது , அண்ணாமலைக்காக ரெயில்வே ஸ்டேஶனில் காத்திருந்தது என காத்திருப்பின் சுவாரஸ்ய நினைவுகளுக்கு பஞ்சமேயில்லை . !!
இந்தியா திரும்ப வேண்டி , ஏர்போர்ட்டில் ’இமிக்ரேஶன் ’ முடித்து காத்திருக்கும் அந்த சில மணி நேரங்களுக்காக காத்திருக்கிறேன் . !!!
மீண்டும் வருகிறேன் . !!
லேபர் கேம்ப்புகள்
தூய்மைக்கும் , கேளிக்கைக்கும் பெயர் போன துபாய் நகரம் , லேபர் கேம்ப்புகளுக்கும் பெயர் போனது என்பதை சில நாட்களுக்கு முன் தான் அறிந்தேன் . அபுதாபி லேபர் கேம்ப்புகளுக்கும் நிறைய தடவை சென்றிருக்கிறேன் . ஆனால் அவை பரவாயில்லை ரகம் . துபாயின் மற்றொரு முகத்தை யாரும் அறியா வண்ணம் மறைத்து வைத்திருக்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது .
உலகில் உள்ள மற்ற பணக்கார நாடுகளேல்லாம் வளர்ந்துவிட்டு , அடுத்ததாக யாரைக் கவிழ்க்கலாம் என திட்டம் தீட்டிக் கொண்டிருக்க , தன்னிடம் உள்ள எண்ணை வளத்தை மட்டுமே கொண்டு , வளர்ந்து வரும் நாடு யு. ஏ . இ . இப்பொழுது உலகில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் பாதிக்கும் மேலாக துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது . உலகில் உள்ள கட்டுமானப் பணிகளுக்கான கிரேன்களில் கிட்டத்தட்ட அறுபது சதவிகிதத்திற்கும் மேல் இங்கு உள்ளது என்றால் , இங்கு நடைபேறும் வளர்ச்சிப் பணிகளையும் , அதற்காக செய்யப் பட்டிருக்கும் முதலீட்டைப் பற்றியும் சுமாராக ஒரு எண்ணத்திற்கு வரலாம் !! வளர்ந்து வரும் நாட்டின் திட்டப் பணிகளுக்கு , உலகளாவிய அங்கிகாரம் பெற வேண்டி , உலகிலேயே அதிக உயரமுள்ள டவர் கட்டுவது , வெப்ப பூமியான இங்கு, குளிர்ப் பிரதேச சூழல் உண்டாக்குவது என அரசாங்கம் , பலதரப்பட்ட வேலைகளில் இறங்கியுள்ளது .
இக்கட்டடப் பணிக்களுக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் பெரும்பாலவர்கள் இந்தியா , பாகிஸ்தான் , பங்களாதேஶ் போன்ற தெற்காசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் . சீனர்களும் பெருமளவில் உண்டு ! அனைவரும் கேம்ப்புகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள் . வாரம் ஆறு நாட்கள் பணியும் , ஒரு நாள் விடுமுறையும் இருக்கும் . அதுவும் ஊரில் இருந்து தள்ளியிருப்பதால் , கம்பனி செலவிலேயே , நகரின் ஏதாவதொரு முக்கியச் சந்திப்பில் இறக்கி விட்டு , மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அழைத்துச் செல்வர் . அதாவது மந்தை ஆடுகளைப் போல !!
இந்த " கன்ஸ்ட்ரக்ஶன் பூம் " , தத்தமது தொழிலுக்கு ஏற்றவாறு உபயோகித்துக் கொள்வது என்னைப் போன்ற , எலக்ட்ரிக்கல் கம்பனிகளில் " கையில் பையும் , வாயில் பொய்யுமாக " திரிபவர்களின் பணி .இப்பணி விஶயமாக புதியதாய் கட்டப் பட்டுக் கொண்டிருந்த ஒரு லேபர் கேம்புக்குச் சென்ற பொழுது தான் , கேம்ப்களின் உண்மை நிலவரம் அறிந்தேன் .
ஒரு பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை . ௩0 அடிக்கு ௩ அடி ஒரு ரூம் . அதில் " டபுள் காட் " முறையில் கிட்டத்தட்ட இருபத்திஐந்து பேர் . ஒரே ரூம் . காமன் டாய்லட் . முன்னமே சொல்லியிருந்தது பொல , வெள்ளிக்கிழமை மட்டும் தான் விடுமுறை . அன்று தான் துணி துவைத்தல் , இதர அத்தியாவசிய பணிகள் . சில சமயங்களில் அதுவும் ஓவர் டைம் என்ற பெயரில் காசாக்கப் படும் . சிலர் ஒன்று கூடி காசு போட்டு, டீவி வாங்கியுள்ளனர் . மற்றவர்கள் அதற்கான கேபிள் செட் ஆப் !!
சத்வா மற்றும் சோலாபூரில் இருக்கும் லேபர் கேம்ப்புகளில் கேம்ப் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு கடை . மதியம் சாப்பாட்டிற்கு காலை பதினோரு மணிக்கே காத்திருந்தால் தான் சாப்பாடு கிடைக்கும் போலிருக்கிறது . அதுவும் ஒரு பங்களாதேசிக் கடை . அதனால் நாம் ஆசைப்படும் இட்லியும் , தோசையும் கொஞ்சம் கஶ்டம் தான் . !!
கட்டப் படப் போகும் புதிய லேபர் கேம்ப் , தற்பொழுது உள்ளதினைப் போலவே திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டதால் , அதன் உள்ளே சென்று பார்த்தேன் . கொடுமை . குமட்டும் வாசனை . பிலிப்பிணிகள் இருப்பதனலோ என்னவோ சகிக்க முடியாத வாசனை !! .இருக்கும் இருபத்திஐந்து பேருக்கும் துணி காயப்போட ஒரே இடம் . அனைவரது துணியும் அங்கு காய்ந்து கொண்டிருந்தன !!! . அங்கும் ஒரு தமிழன் இருந்தான் . பெயர் அய்யனார் . திருச்சிப் பக்கம் எதோ ஏரியா என்று சொன்னான் . பேசிக்கொண்டிருந்தோம் . நல்ல பையன் . காதலிக்கிறானாம் . கிட்டத்தட்ட சம்பாதிப்பதில் பாதிக்கும் மேலாக உண்டிக் காலுக்கே சரியாய் போய் விடுகிறது என்றான் . இந்தியாவில் இருக்கும் ஏஜன்ட் மூலமாக தான் , தன்னைப் போல பலரும் ஏமாற்றுப் பட்டுவிட்டதாகக் கூறினான் . இரண்டோரு வாரத்தில் இந்தியா செல்ல லீவ் சாங்கஶன் ஆகிவிட்டதாகவும் , போனால் திரும்ப வருவதில்லை எனவும் கூறினான் .
வழக்கம் போல , காண்டிராக்டர் வந்தார் . " லேபர் காம்ப் தான் ஸார் . அதனால இருக்கிறதுல சீப்பா இருக்குறத குடுங்க " என்றார் . சரி என்று தலையாட்டிவிட்டுத் திரும்பினேன் !!. வேறேன்ன செய்ய முடியும் என்னால் ? வரும் பொழுது கண்ட காட்சி என்னை உலுக்கி விட்டது . பால்கனி மாதிரி இருக்கும் இடத்தில் இருந்து ஒருவன் பேசிக்கொண்டிருந்தான் . வீட்டிற்காக இருக்க வேண்டும் . நெல்லைத் தமிழ் போல இருந்தது . " சரியில்லன்னா மாத்திடுங்க , கொஞ்சம் பெரிசா பாருங்க , அட்வான்ஸ் நான் அனுப்பி வைக்கிறேன் . ஆமா நான் நல்லா இருக்கேன் " !!
என்னவோ போல் இருந்தது !!
மீண்டும் வருகிறேன் !!
உலகில் உள்ள மற்ற பணக்கார நாடுகளேல்லாம் வளர்ந்துவிட்டு , அடுத்ததாக யாரைக் கவிழ்க்கலாம் என திட்டம் தீட்டிக் கொண்டிருக்க , தன்னிடம் உள்ள எண்ணை வளத்தை மட்டுமே கொண்டு , வளர்ந்து வரும் நாடு யு. ஏ . இ . இப்பொழுது உலகில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் பாதிக்கும் மேலாக துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது . உலகில் உள்ள கட்டுமானப் பணிகளுக்கான கிரேன்களில் கிட்டத்தட்ட அறுபது சதவிகிதத்திற்கும் மேல் இங்கு உள்ளது என்றால் , இங்கு நடைபேறும் வளர்ச்சிப் பணிகளையும் , அதற்காக செய்யப் பட்டிருக்கும் முதலீட்டைப் பற்றியும் சுமாராக ஒரு எண்ணத்திற்கு வரலாம் !! வளர்ந்து வரும் நாட்டின் திட்டப் பணிகளுக்கு , உலகளாவிய அங்கிகாரம் பெற வேண்டி , உலகிலேயே அதிக உயரமுள்ள டவர் கட்டுவது , வெப்ப பூமியான இங்கு, குளிர்ப் பிரதேச சூழல் உண்டாக்குவது என அரசாங்கம் , பலதரப்பட்ட வேலைகளில் இறங்கியுள்ளது .
இக்கட்டடப் பணிக்களுக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் பெரும்பாலவர்கள் இந்தியா , பாகிஸ்தான் , பங்களாதேஶ் போன்ற தெற்காசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் . சீனர்களும் பெருமளவில் உண்டு ! அனைவரும் கேம்ப்புகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள் . வாரம் ஆறு நாட்கள் பணியும் , ஒரு நாள் விடுமுறையும் இருக்கும் . அதுவும் ஊரில் இருந்து தள்ளியிருப்பதால் , கம்பனி செலவிலேயே , நகரின் ஏதாவதொரு முக்கியச் சந்திப்பில் இறக்கி விட்டு , மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அழைத்துச் செல்வர் . அதாவது மந்தை ஆடுகளைப் போல !!
இந்த " கன்ஸ்ட்ரக்ஶன் பூம் " , தத்தமது தொழிலுக்கு ஏற்றவாறு உபயோகித்துக் கொள்வது என்னைப் போன்ற , எலக்ட்ரிக்கல் கம்பனிகளில் " கையில் பையும் , வாயில் பொய்யுமாக " திரிபவர்களின் பணி .இப்பணி விஶயமாக புதியதாய் கட்டப் பட்டுக் கொண்டிருந்த ஒரு லேபர் கேம்புக்குச் சென்ற பொழுது தான் , கேம்ப்களின் உண்மை நிலவரம் அறிந்தேன் .
ஒரு பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை . ௩0 அடிக்கு ௩ அடி ஒரு ரூம் . அதில் " டபுள் காட் " முறையில் கிட்டத்தட்ட இருபத்திஐந்து பேர் . ஒரே ரூம் . காமன் டாய்லட் . முன்னமே சொல்லியிருந்தது பொல , வெள்ளிக்கிழமை மட்டும் தான் விடுமுறை . அன்று தான் துணி துவைத்தல் , இதர அத்தியாவசிய பணிகள் . சில சமயங்களில் அதுவும் ஓவர் டைம் என்ற பெயரில் காசாக்கப் படும் . சிலர் ஒன்று கூடி காசு போட்டு, டீவி வாங்கியுள்ளனர் . மற்றவர்கள் அதற்கான கேபிள் செட் ஆப் !!
சத்வா மற்றும் சோலாபூரில் இருக்கும் லேபர் கேம்ப்புகளில் கேம்ப் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு கடை . மதியம் சாப்பாட்டிற்கு காலை பதினோரு மணிக்கே காத்திருந்தால் தான் சாப்பாடு கிடைக்கும் போலிருக்கிறது . அதுவும் ஒரு பங்களாதேசிக் கடை . அதனால் நாம் ஆசைப்படும் இட்லியும் , தோசையும் கொஞ்சம் கஶ்டம் தான் . !!
கட்டப் படப் போகும் புதிய லேபர் கேம்ப் , தற்பொழுது உள்ளதினைப் போலவே திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டதால் , அதன் உள்ளே சென்று பார்த்தேன் . கொடுமை . குமட்டும் வாசனை . பிலிப்பிணிகள் இருப்பதனலோ என்னவோ சகிக்க முடியாத வாசனை !! .இருக்கும் இருபத்திஐந்து பேருக்கும் துணி காயப்போட ஒரே இடம் . அனைவரது துணியும் அங்கு காய்ந்து கொண்டிருந்தன !!! . அங்கும் ஒரு தமிழன் இருந்தான் . பெயர் அய்யனார் . திருச்சிப் பக்கம் எதோ ஏரியா என்று சொன்னான் . பேசிக்கொண்டிருந்தோம் . நல்ல பையன் . காதலிக்கிறானாம் . கிட்டத்தட்ட சம்பாதிப்பதில் பாதிக்கும் மேலாக உண்டிக் காலுக்கே சரியாய் போய் விடுகிறது என்றான் . இந்தியாவில் இருக்கும் ஏஜன்ட் மூலமாக தான் , தன்னைப் போல பலரும் ஏமாற்றுப் பட்டுவிட்டதாகக் கூறினான் . இரண்டோரு வாரத்தில் இந்தியா செல்ல லீவ் சாங்கஶன் ஆகிவிட்டதாகவும் , போனால் திரும்ப வருவதில்லை எனவும் கூறினான் .
வழக்கம் போல , காண்டிராக்டர் வந்தார் . " லேபர் காம்ப் தான் ஸார் . அதனால இருக்கிறதுல சீப்பா இருக்குறத குடுங்க " என்றார் . சரி என்று தலையாட்டிவிட்டுத் திரும்பினேன் !!. வேறேன்ன செய்ய முடியும் என்னால் ? வரும் பொழுது கண்ட காட்சி என்னை உலுக்கி விட்டது . பால்கனி மாதிரி இருக்கும் இடத்தில் இருந்து ஒருவன் பேசிக்கொண்டிருந்தான் . வீட்டிற்காக இருக்க வேண்டும் . நெல்லைத் தமிழ் போல இருந்தது . " சரியில்லன்னா மாத்திடுங்க , கொஞ்சம் பெரிசா பாருங்க , அட்வான்ஸ் நான் அனுப்பி வைக்கிறேன் . ஆமா நான் நல்லா இருக்கேன் " !!
என்னவோ போல் இருந்தது !!
மீண்டும் வருகிறேன் !!
பள்ளிக்கூடம் :
தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம் பார்த்தேன் . பேட்டிகளிலும் , விளம்பரத்திலும் சொல்லப் பட்டப் படி , நமது பள்ளிக்குச் சென்று , நமது சீட்டில் உட்கார வைக்காவிடினும் , கண்டிப்பாக நமது பள்ளி நாட்களை நினைவு கூறுகிறது படம் .
நிறைய பேட்டிகளில் கதையினை சொல்லிவிட்ட படியினால் , கதையின் மீதான நமது ஒன்றுதல் குறைகிறது . கதை தெரிந்துவிட்ட படியினால் , மேற்கொண்டு என்ன? என்ற கேள்வி இல்லாமலே படம் பயணிப்பபது ஒரு குறையாகவே படுகிறது .
இடிந்து , திமிகோலப்படும் ஒரு பள்ளியினை , அப்பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து , ஒரு விழா எடுத்து திரும்ப புதுப்பித்துத் தருகின்றனர் . படத்தின் பிண்ணனி இசை சில இடங்களில் சிலிர்க்க வைக்கிறது . சில இடங்களில் கடுப்பேற்றுகிறது .
படத்தின் சில காட்சிகளை சொல்லியே தீர வேண்டும் . சீமான் , தங்கரையும் , நரேனையும் பார்ப்பது , தனது பழைய நினைவுகளில் மூழ்கியிருக்கும் நரேன் கிளாசுக்கு ஸ்நேகா வருவது , பீச்சில் சண்டையிடும் நரேனுக்கு பதிலாக தங்கர் ’டீச்சர் ’ ஸ்ரேயாவிடம் முறையிடுவது , ஸ்ரேயாரேட்டி அழுது புலம்புவது , மாணவன் அவளுடனே பஸ்ஸில் ஏறிச் செல்வது , படத்தின் கடைசிக் காட்சியில் தங்கர் தனிமையில் க்ளாஸில் அமர்ந்திருக்க , பிண்ணனியில் வாத்தியாரின் அறிவுரை கேட்பது என திரையில் சில ஹைக்கூக்கள் .
" காடு பதுங்குறோமே ’ பாடல் கலக்கல் . அதனூடே தங்கரின் அப்பா அழுது புலம்புவது போல வைத்திருப்பது அழகு . உண்மையில் எனது பள்ளியில் வந்த இன்ஸ்பெக்ஶன் ஞாபகம் வருகிறது . "மீண்டும் பள்ளிக்குப் " பாடல் நன்றாக இருந்தாலும் , இன்னும் கொஞ்சம் பாடல் வரிகளில் குழைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . !!
நரேனுக்கும் ஸ்நேகாவுக்குமான காதல் , ஒரு கவிதை. அந்த பாட்டும் அற்புதமாக இருக்கிறது . நல்ல சினிமா பற்றி வாய் கிழிய பேசும் தங்கர் , அவரது படத்தில் ஸ்ரேயா ரெட்டியிடம் மாணவர்கள் செய்யும் குறும்பினையும் தவிர்த்திருக்கலாம் !!
முன்னரே சொல்லியிருந்தது போல் , மீண்டும் க்ளாஸிக்கு சென்று உட்கார வைக்காவிடினும் , கண்டிப்பாக நமது பள்ளி நாட்களை நினைவு கூறுகிறது படம் . அடிதடி மசாலா படங்களுக்கு நடுவே , ஆழ்மன உணர்வுகளை தூண்டும் அற்புதமானதோரு படம் .
மீண்டும் வருகிறேன் !!
நிறைய பேட்டிகளில் கதையினை சொல்லிவிட்ட படியினால் , கதையின் மீதான நமது ஒன்றுதல் குறைகிறது . கதை தெரிந்துவிட்ட படியினால் , மேற்கொண்டு என்ன? என்ற கேள்வி இல்லாமலே படம் பயணிப்பபது ஒரு குறையாகவே படுகிறது .
இடிந்து , திமிகோலப்படும் ஒரு பள்ளியினை , அப்பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து , ஒரு விழா எடுத்து திரும்ப புதுப்பித்துத் தருகின்றனர் . படத்தின் பிண்ணனி இசை சில இடங்களில் சிலிர்க்க வைக்கிறது . சில இடங்களில் கடுப்பேற்றுகிறது .
படத்தின் சில காட்சிகளை சொல்லியே தீர வேண்டும் . சீமான் , தங்கரையும் , நரேனையும் பார்ப்பது , தனது பழைய நினைவுகளில் மூழ்கியிருக்கும் நரேன் கிளாசுக்கு ஸ்நேகா வருவது , பீச்சில் சண்டையிடும் நரேனுக்கு பதிலாக தங்கர் ’டீச்சர் ’ ஸ்ரேயாவிடம் முறையிடுவது , ஸ்ரேயாரேட்டி அழுது புலம்புவது , மாணவன் அவளுடனே பஸ்ஸில் ஏறிச் செல்வது , படத்தின் கடைசிக் காட்சியில் தங்கர் தனிமையில் க்ளாஸில் அமர்ந்திருக்க , பிண்ணனியில் வாத்தியாரின் அறிவுரை கேட்பது என திரையில் சில ஹைக்கூக்கள் .
" காடு பதுங்குறோமே ’ பாடல் கலக்கல் . அதனூடே தங்கரின் அப்பா அழுது புலம்புவது போல வைத்திருப்பது அழகு . உண்மையில் எனது பள்ளியில் வந்த இன்ஸ்பெக்ஶன் ஞாபகம் வருகிறது . "மீண்டும் பள்ளிக்குப் " பாடல் நன்றாக இருந்தாலும் , இன்னும் கொஞ்சம் பாடல் வரிகளில் குழைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . !!
நரேனுக்கும் ஸ்நேகாவுக்குமான காதல் , ஒரு கவிதை. அந்த பாட்டும் அற்புதமாக இருக்கிறது . நல்ல சினிமா பற்றி வாய் கிழிய பேசும் தங்கர் , அவரது படத்தில் ஸ்ரேயா ரெட்டியிடம் மாணவர்கள் செய்யும் குறும்பினையும் தவிர்த்திருக்கலாம் !!
முன்னரே சொல்லியிருந்தது போல் , மீண்டும் க்ளாஸிக்கு சென்று உட்கார வைக்காவிடினும் , கண்டிப்பாக நமது பள்ளி நாட்களை நினைவு கூறுகிறது படம் . அடிதடி மசாலா படங்களுக்கு நடுவே , ஆழ்மன உணர்வுகளை தூண்டும் அற்புதமானதோரு படம் .
மீண்டும் வருகிறேன் !!
Thursday, July 26, 2007
ஜாதிய ஆதிக்கம் :
மெல்ல மெல்ல எனக்குள் ஜாதிய ரீதியிலான எண்ணங்கள் மேலெழுந்து வருகிறது . ஏன் , எப்படி என்று தெரியவில்லை . அவை தேவை என்ற எண்ணம் தோன்றுகிறது . என் அப்பா யாருடனும் முதலில் பரிச்சயப்படும் பொழுதும் பேச்சினுடே கேட்கும் கேள்வி " நீங்க என்ன ஆளுங்க ? " என்பது தான் . அப்பொழுதெல்லாம் எனக்கும் சுரிர் என கோபம் வரும் . ஆனால் இப்பொழுது எனக்கும் ஜாதிய ரீதியிலான வேறுபாடுகள் தேவை தான் எனத் தோன்றுகிறது .
சமீபத்தில் ஒரு வாராந்திர நாளிதழில் ஜாதிகளைப் பற்றியும் அது குறித்த மற்ற குறிப்புகளையும் படித்தேன் . பிறந்த குலத்தை வைத்து , அவரவர் செய்யும் தொழில்களை பொறுத்தும் வரையறுக்கப்பட்டது ஜாதி .இன்னின்ன ஜாதியினர் இன்னின்ன வேலைகளைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது அந்நாளில் . உலகம் கையிடுக்கில் சுருங்கிக் கொண்டுவரும் இந்நாளில் பழைய பஞ்சாங்க முறைகளையும் , ஆச்சாரங்களையும் நம்பியிருப்பது கேவலம்
எனது கம்பனியில் வேம்பு என்ற ஒருவன் இருக்கிறான் . ஐயன் . சுத்தம் சுகாதாரம் என ஊரறிய வாய்கிழிய பேசுவான் . தனது துணி ஸ்டாண்டின் மேல் மற்றவர் கை பட்டால் கூட , கற்பு போய் விட்டது போல கத்துவான் . " தான் " என்ற அகங்காரம் அதிகம் உண்டு அவனிடம் . தன்னம்பிக்கை இருப்பது நல்லது . ஆனால் " தான் " தான் என்ற நம்பிக்கை இருப்பது தவறு . ஐயனுகளுக்கே உரித்தான கஞ்சத்தனமும் உண்டு அவனிடம் . அவனுடன் பழகிப் பழகி , அவர்களது அந்த " தான் " என்ற அகந்தையினை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது . அதுவே வெறியாகி விட்டது .
தாழ்த்தப்பட்டவன் என்ற எண்ணமே யாரிடமும் இருத்தல் கூடாது . இன்னமும் தனது ஜாதி தான் உயர்ந்தது என்று நம்புபவர்களை விஜயகாந்தின் படங்களை தொடர்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும் ( மரண தண்டனையினை விட கொடிய தண்டனையாக இருக்கும் இது ) .
’ தான் ’ என்ற ஆணவத்தினையும் , தான் செய்வதெல்லாம் சரி என்ற அவர்களது எண்ணத்தினை அழிக்க வேண்டும் . இந்த விபரித எண்ணத்தினால் தான் குலக் கல்வி முறையினைக் கொண்டுவந்தார் ராஜாஜி . அதனாலேயே ஆட்சியினையும் இழந்தார். இனியும் அதுபோல எண்ணங்கள் கொண்டு வரும் யாராக இருந்தாலும் இதனையும் விட அதிகமான சம்மட்டி அடி அடிக்க வேண்டும் . இத்தகைய எண்ணங்கள் கொண்டு வருபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவே ராமதாஸும் , திருமாவும் தத்தமது ஜாதிக்காக போராடுகிறார்கள் போலும் !! . அதுவே அவர்களது எண்ணமாக இருந்தால் , அது தவறில்லை என்பேன் நான் .
மேல் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களை , இடஒதுக்கீட்டின் மட்டும் மட்டம் தட்டினால் போதாது , இன்னமும் ஏதாவது செய்து ஒடுக்க வேண்டும் . இப்பொழுதைக்கு என்னால் முடிந்தது வேம்பு சொல்லும் அல்லது செய்யும் எந்த ஒரு விஶயத்திற்கும் தடையாக இருப்பதே . தவறு என்று தெரிந்தாலும் , கண்டிப்பாக மீண்டும் மீண்டும் செய்வேன் . அவர்கள் தோற்று தலைகுனியும் பொழுது , எதனையோ சாதித்துவிட்டது போல ஒரு தோன்றுதல் .
இதனை எழுதும் பொழுது , பள்ளி நாட்களில் படித்த ஒரு சிறுகதை தான் ஞாபகத்திற்கு வருகிறது . கூரை வேய்யும் ஒரு கூலித் தொழிளாளி ஒருவன் , உடம்பு முடியாமல் வீட்டில் படுத்திருப்பான் . அப்பொழுது அவ்வூரின் பண்ணையார் அவனைத் தனது வீட்டின் கூரை வேய வேலைக்கு அழைப்பார் . தனது மனைவி தடுத்தும் , அத்தொழிளாளி வேலைக்குச் செல்வான் . அதன் காரணமாக அவன் கூறுவது , கூரை வேயும் சமயத்தில் அவன் உச்சியில் இருப்பதும் , முதலாளி கீழே இருப்பதுமாகும். கதையினை படித்த அந்நாட்களில் அத்தொழிலாளியின் அற்ப சந்தோஶம் என்றே நினைத்தேன் . இப்பொழுது தான் அதன் வீரியம் புரிகிறது . இதுபோல இன்னும் பல கதைகள் வரவேண்டும் , அதனை நான் படிக்க வேண்டும் .
இதில் முக்கியமான விஶயம் என்னவெனில், இன்னமும் எனது ஜாதி என்னதென்று தெளிவாகத் தெரியவில்லை . ஸ்காலர்ஷிப் வேண்டி எனது ஜாதியினை எனது தந்தை மாற்றினார்( சர்ட்டிவிகேட்டில் மட்டும் ) என்பதைத் தவிற வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை எனக்கு . இன்னமும் தெரியாது .
தெரிந்துகொண்டு மீண்டும் வருகிறேன் .
சமீபத்தில் ஒரு வாராந்திர நாளிதழில் ஜாதிகளைப் பற்றியும் அது குறித்த மற்ற குறிப்புகளையும் படித்தேன் . பிறந்த குலத்தை வைத்து , அவரவர் செய்யும் தொழில்களை பொறுத்தும் வரையறுக்கப்பட்டது ஜாதி .இன்னின்ன ஜாதியினர் இன்னின்ன வேலைகளைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது அந்நாளில் . உலகம் கையிடுக்கில் சுருங்கிக் கொண்டுவரும் இந்நாளில் பழைய பஞ்சாங்க முறைகளையும் , ஆச்சாரங்களையும் நம்பியிருப்பது கேவலம்
எனது கம்பனியில் வேம்பு என்ற ஒருவன் இருக்கிறான் . ஐயன் . சுத்தம் சுகாதாரம் என ஊரறிய வாய்கிழிய பேசுவான் . தனது துணி ஸ்டாண்டின் மேல் மற்றவர் கை பட்டால் கூட , கற்பு போய் விட்டது போல கத்துவான் . " தான் " என்ற அகங்காரம் அதிகம் உண்டு அவனிடம் . தன்னம்பிக்கை இருப்பது நல்லது . ஆனால் " தான் " தான் என்ற நம்பிக்கை இருப்பது தவறு . ஐயனுகளுக்கே உரித்தான கஞ்சத்தனமும் உண்டு அவனிடம் . அவனுடன் பழகிப் பழகி , அவர்களது அந்த " தான் " என்ற அகந்தையினை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது . அதுவே வெறியாகி விட்டது .
தாழ்த்தப்பட்டவன் என்ற எண்ணமே யாரிடமும் இருத்தல் கூடாது . இன்னமும் தனது ஜாதி தான் உயர்ந்தது என்று நம்புபவர்களை விஜயகாந்தின் படங்களை தொடர்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும் ( மரண தண்டனையினை விட கொடிய தண்டனையாக இருக்கும் இது ) .
’ தான் ’ என்ற ஆணவத்தினையும் , தான் செய்வதெல்லாம் சரி என்ற அவர்களது எண்ணத்தினை அழிக்க வேண்டும் . இந்த விபரித எண்ணத்தினால் தான் குலக் கல்வி முறையினைக் கொண்டுவந்தார் ராஜாஜி . அதனாலேயே ஆட்சியினையும் இழந்தார். இனியும் அதுபோல எண்ணங்கள் கொண்டு வரும் யாராக இருந்தாலும் இதனையும் விட அதிகமான சம்மட்டி அடி அடிக்க வேண்டும் . இத்தகைய எண்ணங்கள் கொண்டு வருபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவே ராமதாஸும் , திருமாவும் தத்தமது ஜாதிக்காக போராடுகிறார்கள் போலும் !! . அதுவே அவர்களது எண்ணமாக இருந்தால் , அது தவறில்லை என்பேன் நான் .
மேல் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களை , இடஒதுக்கீட்டின் மட்டும் மட்டம் தட்டினால் போதாது , இன்னமும் ஏதாவது செய்து ஒடுக்க வேண்டும் . இப்பொழுதைக்கு என்னால் முடிந்தது வேம்பு சொல்லும் அல்லது செய்யும் எந்த ஒரு விஶயத்திற்கும் தடையாக இருப்பதே . தவறு என்று தெரிந்தாலும் , கண்டிப்பாக மீண்டும் மீண்டும் செய்வேன் . அவர்கள் தோற்று தலைகுனியும் பொழுது , எதனையோ சாதித்துவிட்டது போல ஒரு தோன்றுதல் .
இதனை எழுதும் பொழுது , பள்ளி நாட்களில் படித்த ஒரு சிறுகதை தான் ஞாபகத்திற்கு வருகிறது . கூரை வேய்யும் ஒரு கூலித் தொழிளாளி ஒருவன் , உடம்பு முடியாமல் வீட்டில் படுத்திருப்பான் . அப்பொழுது அவ்வூரின் பண்ணையார் அவனைத் தனது வீட்டின் கூரை வேய வேலைக்கு அழைப்பார் . தனது மனைவி தடுத்தும் , அத்தொழிளாளி வேலைக்குச் செல்வான் . அதன் காரணமாக அவன் கூறுவது , கூரை வேயும் சமயத்தில் அவன் உச்சியில் இருப்பதும் , முதலாளி கீழே இருப்பதுமாகும். கதையினை படித்த அந்நாட்களில் அத்தொழிலாளியின் அற்ப சந்தோஶம் என்றே நினைத்தேன் . இப்பொழுது தான் அதன் வீரியம் புரிகிறது . இதுபோல இன்னும் பல கதைகள் வரவேண்டும் , அதனை நான் படிக்க வேண்டும் .
இதில் முக்கியமான விஶயம் என்னவெனில், இன்னமும் எனது ஜாதி என்னதென்று தெளிவாகத் தெரியவில்லை . ஸ்காலர்ஷிப் வேண்டி எனது ஜாதியினை எனது தந்தை மாற்றினார்( சர்ட்டிவிகேட்டில் மட்டும் ) என்பதைத் தவிற வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை எனக்கு . இன்னமும் தெரியாது .
தெரிந்துகொண்டு மீண்டும் வருகிறேன் .
Tuesday, July 24, 2007
சாப்பாடு :
சாப்பாட்டினைக் குறித்து நான் எழுதுவேன் என கனவிலும் நினைத்ததில்லை . காரணம் உண்டு . நேற்று கிரிடம் படம் பார்க்கச் சென்றேன் . ஒன்றரைக்கு ஶோ. நான் பத்தரைகே அந்த ஏரியாவிற்கு சென்றுவிட்டேன் . அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை விஶேசம் . கண்டிப்பாக அனைவரும் நமாஸ் செய்வார்கள் . வெள்ளிக்கிழமை பன்னிரென்டு மணியில் இருந்து ஒரு மணி வரை , அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும் . மீறி திறந்து வியாபாரம் செய்யும் கடைகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.
வேறு வழியில்லாது நாற்பத்திநான்கு டிகிரி " குளிரில் " நின்று கொண்டிருந்தேன் . நேரம் களைய வேண்டி , சுற்றிக் கொண்டிருந்த பொழுது தான் " சரவணபவன் " ஹோட்டலைக் கண்டேன் . இதுவும் ஒரு மணிக்கு தான் திறக்கும் . ஏதாவது வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு விட்டு , படம் பார்க்கலாம் என நினைத்து காத்திருந்தேன் . தமிழ் பாசம் பொங்க , ஒரு மணிக்கு திறந்ததும் முதல் ஆளாய் உள்ளே சென்றால் , வெரைட்டி ரைஸ் இல்லை , புல் மீல்ஸ் தான் இருக்கிறது என்றார்கள் . பசியில்லை , சாப்பிட எப்படியும் இருபது நிமிடம் ஆகிவிடும் , அதன் பின் தியேட்டர் சென்றால் , படத்தில் முதல் சில காட்சிகளை பார்க்கமுடியாது என்று நினைத்தவாறே எழுந்தேன் . கிண்ணத்தில் காரக்கொழம்பைக் கண்டதும் , என்னையும் அறியாமல் , புல் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன் . சாப்பிட்டு முடித்து , டாக்ஸி பிடித்து சென்று , படத்தை முதலில் இருந்து பார்த்தது தனிக் கதை . எனினும் காரக்கொழம்பா ஆஜித் படமா என்றபொழுது , காரக்கொழம்பு வென்றதன் காரணம் பிடிகிட்டவில்லை !!!
என்றென்றுமே சாப்பாட்டிற்கு நான் மதிப்பளித்ததில்லை . பத்தாவது வரை சுவையான அம்மா சமையல் . பதினொன்றும் பன்னிரென்டாவதும் பாட்டி, மற்றும் அத்தையின் சமையல். அந்நாட்களில் ஹோட்டல் பக்கம் சென்றதில்லை . ப்ளஸ் டூ படிக்கும் பொழுது , அவ்வப்பொழுது ’புல்சே’வுக்கு அடிமையாகி ஹோட்டலுக்கு செல்வது உண்டு . அதிசயமாக ஏதாவது வாங்க வேண்டி , டவுன் சென்றால் மறக்காமல் நானும் அம்மாவும் சாம்பார்வடை சாப்பிடுவோம் . அம்மாவுக்கும் எனக்கும் பிடித்த டிஶ் அது . மற்றபடி டீ ,காபி மட்டும் அடிக்கடி குடிப்பேன் .அசைவம் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது . என்னவளின் வீட்டில் தான் முதலில் அசைவம் சாப்பிட்டேன் . பின்னர் அதுவும் இல்லை . கல்லூரியில் சிவா புண்ணியத்தினால் தான் சிக்கன் ஆரம்பம் . இன்றும் தொடர்கிறது . பின்னர் கடலை வீட்டில் , பறப்பது , நடப்பது , நீந்துவது , ஊர்வது எல்லாம் சாப்பிடலாம் . சாப்பிட்டோம் !! கல்லூரியில் ஹோட்ட்ல் சாப்பாடு , மற்றும் மெஸ் சாப்பாடு !! அவ்வளவுதான் எனக்கும் சாப்பாட்டிற்கும் எனக்கும் இருந்த தொடர்பு !!
வேலைக்குச் சேர்ந்த பின் தான் ஹோட்டல் வாசம் . மைசூர் , சிமோகா , பெங்களுரு வில் ஆரம்பித்து , இன்று அபுதாபி வரை ஹோட்டல் சாப்பாடு தான் .எனக்கு இன்னமும் மீன் சாப்பிடத் தெரியாது .காலேஜில் பாலாஜி முள் எடுத்துத் தருவான் . என்னவோ மீன் சாப்பிட , இன்றுவரை எனக்கு பிடிக்கவில்லை .ஆனால் மைசூர் அருகே , ஒரு கையேந்தி பவனில் கிடைக்கும் மீன் சாப்பாடு கலக்கலாக இருக்கும் . மைசூர் சென்றால் அதற்காகவே பஸ் பிடித்து , எம்.ஆர்.யேப் செல்வேன் . பின்னர் சாப்பாட்டு விஶயத்தில் முக்கியமாக சொல்லப்பட வேண்டியது பஜாஜ் உமாசங்கரை . சரவணபவனையும் , சங்கீதாவையும் , அஞ்சப்பரையும் , அவற்றின் சுவையினையும் அறிமுகப்படுத்தியது அவர் தான் . அவருடனே சுற்றிக் கொண்டிருந்ததால் , நானும் அவருடனே சாப்பிட வேண்டியதாகிவிட்டது . காசு அதிகம் செலவாகிறது என்று சரவணபவன் பக்கம் செல்வதே இல்லை . பின்னர் அதற்கே அடிமையாகி அடிக்கடி சென்றதும் உண்டு .அண்ணாச்சி எப்படியோ , அவரது ஹோட்டலில் சாப்பாடு அமர்க்களமாக இருக்கும் . சாம்பார் சாதம் சரவணபவனின் ஸ்பெஶல் . மீல்ஸில் இருக்கும் சாம்பார் வேறு சுவையுடையதாய் இருக்கும் . தனியாக சாம்பார் சாதமும் , அப்பளமும் , காசு அதிகம் இருந்தால் தயிர் வடையும் வாங்கிச் சாப்பிட்டால் , வேண்டாம் எழுதும் பொழுதே எச்சில் ஊறுகிறது !!
ஒருநாள் நல்ல பசி . நானும் கூவமும் வடபழனி சரவணபவன் சென்றோம் . கீழே கூட்டமிருந்ததால் , மாடியில் ஏசி ரூமில் அமர்ந்து சாப்பிட்டோம் . பக்கத்து டேபிளுக்கு வந்த பில்லைப் பார்த்ததும் தான் தெரிந்தது , ஒரு மீல்ஸ் கிட்டத்தட்ட தொண்ணூறு ரூபாய்க்குப் பக்கத்தில் என்று . என்ன செய்வது , கை நனைத்தாகிவிட்டது . வெளுத்துக் கட்டினோம் . பர்ஸ் காலியாகி , வயிறு நிரம்பி வெளியே வந்தோம் . !!
என்னால் மறக்க முடியாத சாப்பாடு என்றால் அது பாலச்சந்தரின் வீட்டில் சாப்பிட்டது . சாதம் , பருப்பு , சாம்பார் , காரக்கொழம்பு , ரசம் , தயிர் , குடிக்க மோர் , இரண்டு சுவீட் , கடைசியாக வாழைப்பழமும் என்று அசத்திவிட்டார்கள் . பின் கார்த்தீ வீட்டு சாப்பாடு . சாதமும் , சிக்கன் கொழம்பும் , சிக்கன் வறுவலும் , ரசமும் . சாப்பிட்டு அது செரிக்க வேண்டி , வீட்டிற்கு செல்லும் முன்பும், திரும்பும் பொழுதும் நடந்தே அழைத்துச் சென்றான் கார்த்தி!! கடலை வீட்டு அசைவமும் , குறிப்பாக இறாலும் , கூவம் வீட்டின் நுரை ததும்பும் சூடான காபியும் , காரக்கொழம்பும் , அசோக் வீட்டு முட்டைக்கொழம்பும் , சிவா பாதி சாப்பிட்டு , மீதியில் சமைக்கும் , அவனால் டேஸ்ட் பார்க்கப் பட்ட பிரியாணியும் என்றென்றும் எனது பேவரிட் !!
சூடான , நிதானமாக , நேரம் பார்த்து வடிக்கப்பட்ட , பளீர் வெள்ளை சாதத்தில் காரக்கொழம்பை விட்டு சாப்பிடும் சுகம் அலாதியானது . அதற்கு சற்றும் சளைக்காதது , ரசம் விட்டு சாப்பிடுவது . இரண்டும் அற்புத சுவை .வடபழனியில் இருக்கும் பொழுது கிட்டத்தட்ட ரசத்தின் அடிமையே ஆகிவிட்டேன் . தினமும் ’தாமுவின் ஆளை’ ரசம் வைக்கச் சொல்லி சாப்பிட்டது நினைவிருக்கிறது .
சுவையான மோர்க்கொழம்பும் , காரட் அல்லது கத்திரிக்காய் பொரியல் இருந்தால் , வயிறு வெடிக்கும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பேன் .கூடவே மோர் மிளகாய் இருந்தால் , கேட்கவே வேண்டாம் . அதுபோலவே புளியோதரையும் , எலுமிச்சை சாதமும் . தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னியும் , கையில் விகடனும் இருந்துவிட்டால் , அதனையும் விட உலகில் வேறு எதுவும் வேண்டுமா என்ன ?
அதுபோலத் தான் அம்மா பண்ணும் தேங்காய்ச் சாதமும் , வெங்காயச் சட்னியும் .வெங்காயச் சட்னிக்காகவே கூடுதல் ஐந்தாறு சூடான இட்லிகள் அடிக்கலாம் !! மதுரை ஆரப்பாளயத்து கையேந்திபவனில் , சுகாதாரம் இருக்கிறதோ இல்லையோ , சுவைக்கு நான் கியாரண்டி . இட்லியினையும் , முட்டைத் தோசையினையும் அவர்கள் எடுக்கும் விதமே தனி !! தண்ணியா சாம்பாரா எனக் குழப்பம் வந்தாலும் , சாம்பார் சுவையாகவே கிடைக்கும் .
இங்கு அபுதாபியில் ஹோட்டலில் தினமும் அசைவம் சாப்பிட்டு , முகத்தில் அடித்து விட்டது . தினமும் சிக்கன் . என்ன ஒன்று அது சில்லியா , சுக்காவா , மசாலாவா என்பதில் தான் வேறுபாடு !! இங்கும் நல்ல தமிழ் சாப்பாடு கிடைக்கும் , ஆனால் அதற்கு மெயின் எரியா செல்ல வேண்டும் . காசும் ரொம்பவே அதிகம் . சரவணபவன் , சங்கீதா , செட்டிநாடு , தலைப்பாக்கட்டு என்று அனைத்து ஹோட்டல்களும் இருந்தாலும் , தூரமாக இருக்கின்றன . தினமும் டாக்ஸியில் சென்று சாப்பிடுவது கட்டுப்படியாகாது . அந்தக் காசில் , தமிழ்நாட்டில் ஒரு ஹோட்டலே நடத்தலாம் !!
அமிர்தமே என்றாலும் , அம்மா சாப்பாட்டிற்கு அருகில் வருமா ?
காத்திருக்கிறேன் , மே - ஜூன் மாதத்திற்காக !!
மீண்டும் வருகிறேன் !!
வேறு வழியில்லாது நாற்பத்திநான்கு டிகிரி " குளிரில் " நின்று கொண்டிருந்தேன் . நேரம் களைய வேண்டி , சுற்றிக் கொண்டிருந்த பொழுது தான் " சரவணபவன் " ஹோட்டலைக் கண்டேன் . இதுவும் ஒரு மணிக்கு தான் திறக்கும் . ஏதாவது வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு விட்டு , படம் பார்க்கலாம் என நினைத்து காத்திருந்தேன் . தமிழ் பாசம் பொங்க , ஒரு மணிக்கு திறந்ததும் முதல் ஆளாய் உள்ளே சென்றால் , வெரைட்டி ரைஸ் இல்லை , புல் மீல்ஸ் தான் இருக்கிறது என்றார்கள் . பசியில்லை , சாப்பிட எப்படியும் இருபது நிமிடம் ஆகிவிடும் , அதன் பின் தியேட்டர் சென்றால் , படத்தில் முதல் சில காட்சிகளை பார்க்கமுடியாது என்று நினைத்தவாறே எழுந்தேன் . கிண்ணத்தில் காரக்கொழம்பைக் கண்டதும் , என்னையும் அறியாமல் , புல் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன் . சாப்பிட்டு முடித்து , டாக்ஸி பிடித்து சென்று , படத்தை முதலில் இருந்து பார்த்தது தனிக் கதை . எனினும் காரக்கொழம்பா ஆஜித் படமா என்றபொழுது , காரக்கொழம்பு வென்றதன் காரணம் பிடிகிட்டவில்லை !!!
என்றென்றுமே சாப்பாட்டிற்கு நான் மதிப்பளித்ததில்லை . பத்தாவது வரை சுவையான அம்மா சமையல் . பதினொன்றும் பன்னிரென்டாவதும் பாட்டி, மற்றும் அத்தையின் சமையல். அந்நாட்களில் ஹோட்டல் பக்கம் சென்றதில்லை . ப்ளஸ் டூ படிக்கும் பொழுது , அவ்வப்பொழுது ’புல்சே’வுக்கு அடிமையாகி ஹோட்டலுக்கு செல்வது உண்டு . அதிசயமாக ஏதாவது வாங்க வேண்டி , டவுன் சென்றால் மறக்காமல் நானும் அம்மாவும் சாம்பார்வடை சாப்பிடுவோம் . அம்மாவுக்கும் எனக்கும் பிடித்த டிஶ் அது . மற்றபடி டீ ,காபி மட்டும் அடிக்கடி குடிப்பேன் .அசைவம் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது . என்னவளின் வீட்டில் தான் முதலில் அசைவம் சாப்பிட்டேன் . பின்னர் அதுவும் இல்லை . கல்லூரியில் சிவா புண்ணியத்தினால் தான் சிக்கன் ஆரம்பம் . இன்றும் தொடர்கிறது . பின்னர் கடலை வீட்டில் , பறப்பது , நடப்பது , நீந்துவது , ஊர்வது எல்லாம் சாப்பிடலாம் . சாப்பிட்டோம் !! கல்லூரியில் ஹோட்ட்ல் சாப்பாடு , மற்றும் மெஸ் சாப்பாடு !! அவ்வளவுதான் எனக்கும் சாப்பாட்டிற்கும் எனக்கும் இருந்த தொடர்பு !!
வேலைக்குச் சேர்ந்த பின் தான் ஹோட்டல் வாசம் . மைசூர் , சிமோகா , பெங்களுரு வில் ஆரம்பித்து , இன்று அபுதாபி வரை ஹோட்டல் சாப்பாடு தான் .எனக்கு இன்னமும் மீன் சாப்பிடத் தெரியாது .காலேஜில் பாலாஜி முள் எடுத்துத் தருவான் . என்னவோ மீன் சாப்பிட , இன்றுவரை எனக்கு பிடிக்கவில்லை .ஆனால் மைசூர் அருகே , ஒரு கையேந்தி பவனில் கிடைக்கும் மீன் சாப்பாடு கலக்கலாக இருக்கும் . மைசூர் சென்றால் அதற்காகவே பஸ் பிடித்து , எம்.ஆர்.யேப் செல்வேன் . பின்னர் சாப்பாட்டு விஶயத்தில் முக்கியமாக சொல்லப்பட வேண்டியது பஜாஜ் உமாசங்கரை . சரவணபவனையும் , சங்கீதாவையும் , அஞ்சப்பரையும் , அவற்றின் சுவையினையும் அறிமுகப்படுத்தியது அவர் தான் . அவருடனே சுற்றிக் கொண்டிருந்ததால் , நானும் அவருடனே சாப்பிட வேண்டியதாகிவிட்டது . காசு அதிகம் செலவாகிறது என்று சரவணபவன் பக்கம் செல்வதே இல்லை . பின்னர் அதற்கே அடிமையாகி அடிக்கடி சென்றதும் உண்டு .அண்ணாச்சி எப்படியோ , அவரது ஹோட்டலில் சாப்பாடு அமர்க்களமாக இருக்கும் . சாம்பார் சாதம் சரவணபவனின் ஸ்பெஶல் . மீல்ஸில் இருக்கும் சாம்பார் வேறு சுவையுடையதாய் இருக்கும் . தனியாக சாம்பார் சாதமும் , அப்பளமும் , காசு அதிகம் இருந்தால் தயிர் வடையும் வாங்கிச் சாப்பிட்டால் , வேண்டாம் எழுதும் பொழுதே எச்சில் ஊறுகிறது !!
ஒருநாள் நல்ல பசி . நானும் கூவமும் வடபழனி சரவணபவன் சென்றோம் . கீழே கூட்டமிருந்ததால் , மாடியில் ஏசி ரூமில் அமர்ந்து சாப்பிட்டோம் . பக்கத்து டேபிளுக்கு வந்த பில்லைப் பார்த்ததும் தான் தெரிந்தது , ஒரு மீல்ஸ் கிட்டத்தட்ட தொண்ணூறு ரூபாய்க்குப் பக்கத்தில் என்று . என்ன செய்வது , கை நனைத்தாகிவிட்டது . வெளுத்துக் கட்டினோம் . பர்ஸ் காலியாகி , வயிறு நிரம்பி வெளியே வந்தோம் . !!
என்னால் மறக்க முடியாத சாப்பாடு என்றால் அது பாலச்சந்தரின் வீட்டில் சாப்பிட்டது . சாதம் , பருப்பு , சாம்பார் , காரக்கொழம்பு , ரசம் , தயிர் , குடிக்க மோர் , இரண்டு சுவீட் , கடைசியாக வாழைப்பழமும் என்று அசத்திவிட்டார்கள் . பின் கார்த்தீ வீட்டு சாப்பாடு . சாதமும் , சிக்கன் கொழம்பும் , சிக்கன் வறுவலும் , ரசமும் . சாப்பிட்டு அது செரிக்க வேண்டி , வீட்டிற்கு செல்லும் முன்பும், திரும்பும் பொழுதும் நடந்தே அழைத்துச் சென்றான் கார்த்தி!! கடலை வீட்டு அசைவமும் , குறிப்பாக இறாலும் , கூவம் வீட்டின் நுரை ததும்பும் சூடான காபியும் , காரக்கொழம்பும் , அசோக் வீட்டு முட்டைக்கொழம்பும் , சிவா பாதி சாப்பிட்டு , மீதியில் சமைக்கும் , அவனால் டேஸ்ட் பார்க்கப் பட்ட பிரியாணியும் என்றென்றும் எனது பேவரிட் !!
சூடான , நிதானமாக , நேரம் பார்த்து வடிக்கப்பட்ட , பளீர் வெள்ளை சாதத்தில் காரக்கொழம்பை விட்டு சாப்பிடும் சுகம் அலாதியானது . அதற்கு சற்றும் சளைக்காதது , ரசம் விட்டு சாப்பிடுவது . இரண்டும் அற்புத சுவை .வடபழனியில் இருக்கும் பொழுது கிட்டத்தட்ட ரசத்தின் அடிமையே ஆகிவிட்டேன் . தினமும் ’தாமுவின் ஆளை’ ரசம் வைக்கச் சொல்லி சாப்பிட்டது நினைவிருக்கிறது .
சுவையான மோர்க்கொழம்பும் , காரட் அல்லது கத்திரிக்காய் பொரியல் இருந்தால் , வயிறு வெடிக்கும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பேன் .கூடவே மோர் மிளகாய் இருந்தால் , கேட்கவே வேண்டாம் . அதுபோலவே புளியோதரையும் , எலுமிச்சை சாதமும் . தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னியும் , கையில் விகடனும் இருந்துவிட்டால் , அதனையும் விட உலகில் வேறு எதுவும் வேண்டுமா என்ன ?
அதுபோலத் தான் அம்மா பண்ணும் தேங்காய்ச் சாதமும் , வெங்காயச் சட்னியும் .வெங்காயச் சட்னிக்காகவே கூடுதல் ஐந்தாறு சூடான இட்லிகள் அடிக்கலாம் !! மதுரை ஆரப்பாளயத்து கையேந்திபவனில் , சுகாதாரம் இருக்கிறதோ இல்லையோ , சுவைக்கு நான் கியாரண்டி . இட்லியினையும் , முட்டைத் தோசையினையும் அவர்கள் எடுக்கும் விதமே தனி !! தண்ணியா சாம்பாரா எனக் குழப்பம் வந்தாலும் , சாம்பார் சுவையாகவே கிடைக்கும் .
இங்கு அபுதாபியில் ஹோட்டலில் தினமும் அசைவம் சாப்பிட்டு , முகத்தில் அடித்து விட்டது . தினமும் சிக்கன் . என்ன ஒன்று அது சில்லியா , சுக்காவா , மசாலாவா என்பதில் தான் வேறுபாடு !! இங்கும் நல்ல தமிழ் சாப்பாடு கிடைக்கும் , ஆனால் அதற்கு மெயின் எரியா செல்ல வேண்டும் . காசும் ரொம்பவே அதிகம் . சரவணபவன் , சங்கீதா , செட்டிநாடு , தலைப்பாக்கட்டு என்று அனைத்து ஹோட்டல்களும் இருந்தாலும் , தூரமாக இருக்கின்றன . தினமும் டாக்ஸியில் சென்று சாப்பிடுவது கட்டுப்படியாகாது . அந்தக் காசில் , தமிழ்நாட்டில் ஒரு ஹோட்டலே நடத்தலாம் !!
அமிர்தமே என்றாலும் , அம்மா சாப்பாட்டிற்கு அருகில் வருமா ?
காத்திருக்கிறேன் , மே - ஜூன் மாதத்திற்காக !!
மீண்டும் வருகிறேன் !!
நொட்ஸ் இரண்டு :
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் , பாலாஜியின் காமடி குறையாமல் திகட்டுகிறது . இவனைப் பற்றி எழுதினாலே மனதிற்குள் மகிழ்ச்சி .
தாமுவுடனும் , பிரசன்னாவிடமும் நொட்ஸின் காமடிகள் இவை !!
தாமுவும் , நொட்ஸும் போனில் பேசுகிறார்கள் .
நொட்ஸ் : ஹலோ தாமு?
தாமு : ம். சொல்லு மச்சி !! எப்படீ இருக்க? ( இன்கமிங் கால்களில் மட்டுமே நலம் விசாரிப்பது தாமுவின் வழக்கம் )
.நல்லாயிருகேன்டா , நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன் மச்சி .
அப்புறம் என்ன விஶேசம் ?
ஒண்ணுமில்ல , சும்மா தான் கால் பண்ணுனேன் . ஆமா நீ எங்க இருக்க ? ஆபிஸ்ல மச்சி .
ஏன் என்ன விஶயம் ?
பக்கத்துல பிரசன்னா இருந்தா குடு மச்சி , அவன்ட்ட பேசணும் .!!
வாரத்திற்கு ஒரு தடவை போன் பண்ணி , தான் நொட்ஸ் தான் என்று நிருபிக்காவிட்டால் , பாலாஜிக்கு தூக்கம் வராது போலும் !!
தாமுவின் நிலைமையினை என்னால் உணர முடிகிறது . ஆபிஸ் சமயத்தில் , பொங்கி வரும் சிரிப்பினைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்திருப்பான் , பாவம் .
தாமுவிடம் நம்பர் வாங்கி பிரசன்னாவிற்கு போன் பண்ணுகிறான் நொட்ஸ் . திருப்பதியில் இருந்ததினால் , அச்சமயத்தில் நொட்ஸ் செய்த காமடிகள், இன்னமும் கிடைக்கப் படாத புறநானூற்று ஓலைகளைப் போல, தெரிந்தால் பாக்கியம் . ஆனால் ஒன்று என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும் , எஸ் டி டி பூத்தில் " பெங்களூர் கால் பண்ணணும் , இந்தியாவோட ஐ.எஸ்.டி கோட் என்ன ஸார் ? " என்று கேட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது . !!
நொட்ஸ் : ஹலோ , பிரசன்னா ஸார் இருக்காங்களா ? ஹிஹி ஹி .. ( அந்த சமயத்தில் நொட்ஸின் குரலிலும் , முகத்திலும் தோன்றியிருக்கும் எதனையோ சாதித்துவிட்ட திருப்தியினையும் , எகதாளத்தையும் வார்த்தயால் விவரிக்க முடியாது. )
பிரசன்னா : சொல்லு , நட்பே . எப்படியிருக்க ? என்ன திடீருனு போன் ?ஒண்ணுமில்ல மச்சி , சும்மாதான் பண்ணுனேன் . நீ நல்லாயிருக்கியா ? நல்லாயிருகேன்டா , உங்க வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா ? நல்லாயிருக்காங்க மச்சி , முக்கியமான விசயம் ஒண்ணு சொல்லணும் . நீ பாட்டு கலராகணும்னு , சிவா அண்ணி கொண்டுவந்திருக்கிற குங்குமப்பூவ சாப்பிட்றாதடா , அது என் தங்கச்சிக்கு வேணும் !!
அதுவரை அண்ணி குங்குமப்பூ கொண்டுவந்த விசயம் பிரசன்னாவிற்கு தெரியாது . மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என நான் சொல்லத் தேவையில்லை . " நீ நடந்தால் நடையழகு " .பாடலை பிரசன்னாவை வைத்து பாடி , கலங்கியிருப்பான் நொட்ஸ் !!
நுணமும் தன் வாயால் கெடும் என்று சொல்வார்களே , அது போல தான் நொட்சும், தனது வாயாலயே கெடுவான் , மற்றவரை சிரிக்க வைப்பான் !!
பின்னர் ஒருநாள் இதுகுறித்து நொட்ஸிடம் கேட்டேன் . அதற்கு பதிலாக நொட்ஸ் உதிர்த்த தத்துவ முத்து ... " அது ஓண்ணுமில்ல மச்சி , " ஊத்தி வைக்கிற பாத்திரத்த பொருத்து தான் தண்ணியோட வடிவம்ன்னு சொல்லுவாங்கள்ல , அதுமாதிரி தான் மச்சி , மத்த எல்லார்டையும் கரெக்டா தான் மச்சி பேசுறேன் . இந்த தாமுட்ட பேசுறப்ப தான் மச்சி தடுமாறிடுறேன் !! அது என் தப்பில்ல மச்சி , தாமுவோட டைப்பு !! " என்று டி ஆர் பாணியில் முடித்தான் !! முத்தாய்ப்பாக என்னிடம் " நாயே , நீ தான் எல்லாத்துடையும் போன் பண்ணி இத பரப்புறியா ? அதுக்கு பேசாம போஸ்டர் அடிச்சி ஒட்டிறேண்டா ?? " பின்னர் அவனே சொன்னான் , " இனி இத நெட்டுல போடுறது தான் பாக்கி , இதையும் நெட்ல போட்டுறாதடா , சாமி உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் " .
போட்டாச்சு நொட்ஸ் . உனது அடுத்தடுத்த காமடிக்காகவும் , உன் பாஶையில் " தடுமாற்றத்திற்காகவும் " காத்திருக்கிறேன் !!
மீண்டும் வருகிறேன் !!
தாமுவுடனும் , பிரசன்னாவிடமும் நொட்ஸின் காமடிகள் இவை !!
தாமுவும் , நொட்ஸும் போனில் பேசுகிறார்கள் .
நொட்ஸ் : ஹலோ தாமு?
தாமு : ம். சொல்லு மச்சி !! எப்படீ இருக்க? ( இன்கமிங் கால்களில் மட்டுமே நலம் விசாரிப்பது தாமுவின் வழக்கம் )
.நல்லாயிருகேன்டா , நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன் மச்சி .
அப்புறம் என்ன விஶேசம் ?
ஒண்ணுமில்ல , சும்மா தான் கால் பண்ணுனேன் . ஆமா நீ எங்க இருக்க ? ஆபிஸ்ல மச்சி .
ஏன் என்ன விஶயம் ?
பக்கத்துல பிரசன்னா இருந்தா குடு மச்சி , அவன்ட்ட பேசணும் .!!
வாரத்திற்கு ஒரு தடவை போன் பண்ணி , தான் நொட்ஸ் தான் என்று நிருபிக்காவிட்டால் , பாலாஜிக்கு தூக்கம் வராது போலும் !!
தாமுவின் நிலைமையினை என்னால் உணர முடிகிறது . ஆபிஸ் சமயத்தில் , பொங்கி வரும் சிரிப்பினைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்திருப்பான் , பாவம் .
தாமுவிடம் நம்பர் வாங்கி பிரசன்னாவிற்கு போன் பண்ணுகிறான் நொட்ஸ் . திருப்பதியில் இருந்ததினால் , அச்சமயத்தில் நொட்ஸ் செய்த காமடிகள், இன்னமும் கிடைக்கப் படாத புறநானூற்று ஓலைகளைப் போல, தெரிந்தால் பாக்கியம் . ஆனால் ஒன்று என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும் , எஸ் டி டி பூத்தில் " பெங்களூர் கால் பண்ணணும் , இந்தியாவோட ஐ.எஸ்.டி கோட் என்ன ஸார் ? " என்று கேட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது . !!
நொட்ஸ் : ஹலோ , பிரசன்னா ஸார் இருக்காங்களா ? ஹிஹி ஹி .. ( அந்த சமயத்தில் நொட்ஸின் குரலிலும் , முகத்திலும் தோன்றியிருக்கும் எதனையோ சாதித்துவிட்ட திருப்தியினையும் , எகதாளத்தையும் வார்த்தயால் விவரிக்க முடியாது. )
பிரசன்னா : சொல்லு , நட்பே . எப்படியிருக்க ? என்ன திடீருனு போன் ?ஒண்ணுமில்ல மச்சி , சும்மாதான் பண்ணுனேன் . நீ நல்லாயிருக்கியா ? நல்லாயிருகேன்டா , உங்க வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா ? நல்லாயிருக்காங்க மச்சி , முக்கியமான விசயம் ஒண்ணு சொல்லணும் . நீ பாட்டு கலராகணும்னு , சிவா அண்ணி கொண்டுவந்திருக்கிற குங்குமப்பூவ சாப்பிட்றாதடா , அது என் தங்கச்சிக்கு வேணும் !!
அதுவரை அண்ணி குங்குமப்பூ கொண்டுவந்த விசயம் பிரசன்னாவிற்கு தெரியாது . மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என நான் சொல்லத் தேவையில்லை . " நீ நடந்தால் நடையழகு " .பாடலை பிரசன்னாவை வைத்து பாடி , கலங்கியிருப்பான் நொட்ஸ் !!
நுணமும் தன் வாயால் கெடும் என்று சொல்வார்களே , அது போல தான் நொட்சும், தனது வாயாலயே கெடுவான் , மற்றவரை சிரிக்க வைப்பான் !!
பின்னர் ஒருநாள் இதுகுறித்து நொட்ஸிடம் கேட்டேன் . அதற்கு பதிலாக நொட்ஸ் உதிர்த்த தத்துவ முத்து ... " அது ஓண்ணுமில்ல மச்சி , " ஊத்தி வைக்கிற பாத்திரத்த பொருத்து தான் தண்ணியோட வடிவம்ன்னு சொல்லுவாங்கள்ல , அதுமாதிரி தான் மச்சி , மத்த எல்லார்டையும் கரெக்டா தான் மச்சி பேசுறேன் . இந்த தாமுட்ட பேசுறப்ப தான் மச்சி தடுமாறிடுறேன் !! அது என் தப்பில்ல மச்சி , தாமுவோட டைப்பு !! " என்று டி ஆர் பாணியில் முடித்தான் !! முத்தாய்ப்பாக என்னிடம் " நாயே , நீ தான் எல்லாத்துடையும் போன் பண்ணி இத பரப்புறியா ? அதுக்கு பேசாம போஸ்டர் அடிச்சி ஒட்டிறேண்டா ?? " பின்னர் அவனே சொன்னான் , " இனி இத நெட்டுல போடுறது தான் பாக்கி , இதையும் நெட்ல போட்டுறாதடா , சாமி உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் " .
போட்டாச்சு நொட்ஸ் . உனது அடுத்தடுத்த காமடிக்காகவும் , உன் பாஶையில் " தடுமாற்றத்திற்காகவும் " காத்திருக்கிறேன் !!
மீண்டும் வருகிறேன் !!
Saturday, July 21, 2007
கிரிடம் :
ஹிரோ ஒரே சமயத்தில் பத்து பதினைந்து பேரை அடிக்கும் சாகசம் இல்லை . கட் பண்ணினால் பாரின் லோகேஶன் கனவுப் பாட்டு இல்லை , சந்தனைத்தையும் குங்குமத்தையும் குழைத்து முகத்தில் பூசிக் கொண்டு எதிரிகளைக் கொல்லும் சினிமாத்தனம் இல்லை . டீக்கடையில் டீ குடிப்பதையே கூட சாகசமாக கருதி பஞ்ச் டயலாக் அடிக்கும் ஹிரோ இல்லை. ஹாஸ்பிடல் செலவு வைக்கும் , காது கிழிக்கும் அதிரடி இசை இல்லை .ஐந்து பாட்டு , நாலு பைட் என்ற வழக்கமான பார்முலா இல்லை . பின் இப்படத்தில் என்ன தான் இருக்கிறது ?
படத்தில் அமைதி இருக்கிறது . உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கிறது . திருச்சியினையே அழகாக காட்டும் திருவின் காமிரா இருக்கிறது . அமர்க்களமான நடிப்பில் ராஜ்கிரணும் , அஜீத்தும் இருக்கிறார்கள் . அழகான காதல் இருக்கிறது . அற்புதமான பாடல்கள் இருக்கிறது . பிரகாஶின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை இருக்கிறது . அழகாய் திரிஶாவும் , அதை விட அமர்க்களமாய் அஜித்தும் இருக்கிறார்கள் . முக்கியமாக கதை இருக்கிறது . அதிலும் முக்கியமாக யதார்த்தம் !!
அவனையும் மீறி வாழ்க்கை அவனை விட்டு நழுவிச் செல்கிறது . அவனதும் அவனது தந்தையின் கனவும் கலைகிறது . யதார்த்தமாக செய்துவிட்ட ஒரு காரியத்தால் , குடும்பத்தின் அமைதி கலைகிறது . ஊரே அவனை வேறு கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது . தந்தையும் மகனுக்குமான உறவுப் போராட்டத்தில் கலங்கடிக்கிறார்கள் .
ஒரு ரெளடி தனது தந்தையய் அடிப்பதை தாங்க மாட்டாமல் திரும்ப அவனை அடிக்கிறார் அஜித் . அவன் சாய , ஊரே அஜித்தை ரெளடியாகப் பார்க்கிறது . தான் அப்படி இல்லை என நீருபிக்கும் முன்பாகவே அடுத்தடுத்த சம்பவங்கள் அவனை ரெளடி என நிருபிக்கின்றன . இதனால் அவனது காதல் கலைகிறது . குடும்பமே அவனை ரெளடியாக பார்க்க ஆரம்பிக்கும் பொழுது , அக்குடும்பத்துக்காக வேண்டி வில்லனை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறார் அஜித் . பாலகுமாரன் நாவல்களில் வரும் முடிவு . யதார்த்தமான கதை .
படத்தின் முதற்பாதி அற்புதம் .இரண்டாம் பாதியில் சோகத்தின் சாரல் கொஞ்சம் பலமாகவே இருக்கிறது . அஜித்தின் அறிமுகம் அமர்க்களம் . பிள்ளையார் திருடுவது , திரிஶா துரத்தல் , காதலை தெரிவிப்பது , ராத்திரியில் தொட்டியில் அமர்ந்து இருவரும் பேசுவது , அதனை குடும்பமே கேட்பது என திரையில் சில ஹைகூக்கள் .
சொல்லப்பட வேண்டியது திருவின் காமிரா . படம் பளிச்சென்று இருக்கிறது . படத்தில் அடிக்கடி வந்து போகும் சில மஞ்சள் வெயில் காட்சிகளும் , படத்தின் சோக மூடில் வரும் காட்சிகளும் அற்புதம் . பிரகாஶ் பாடல்களில் தெரிகிறார் . சில சமயத்தில் படத்தில் பிண்ணனி இசையே இல்லையோ என்று தோன்றுகிறது . அதுவே சில நேரங்களில் காட்சிக்கு வலுவாகவும் , சில நேரங்களில் தொய்வாகவும் இருக்கிறது . சந்தானத்தின் மற்றும் விவேக்கின் சில டைமிங் காமடிகளுக்கு சிரித்துத்தான் ஆகவேண்டும் .
அஜித் இளமையாக இருக்கிறார் . அழகான நடிப்பு . கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் இல்லாவிட்டால் , " வாலி " படத்து அஜித் தான்.
இது அஜித் ரசிகர்களுக்கான படம் அல்ல , கதைப் பிரியர்களுக்கான படம் . ஒரு ஸ்மால் அடித்துவிட்டு , சாயங்கால ஶோவில் , கதையில் லயித்து , தனிமையில் படம் பாருங்கள் , உங்களுக்கு இது பிடித்துப் போகும்.
மீண்டும் வருகிறேன் .
படத்தில் அமைதி இருக்கிறது . உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கிறது . திருச்சியினையே அழகாக காட்டும் திருவின் காமிரா இருக்கிறது . அமர்க்களமான நடிப்பில் ராஜ்கிரணும் , அஜீத்தும் இருக்கிறார்கள் . அழகான காதல் இருக்கிறது . அற்புதமான பாடல்கள் இருக்கிறது . பிரகாஶின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை இருக்கிறது . அழகாய் திரிஶாவும் , அதை விட அமர்க்களமாய் அஜித்தும் இருக்கிறார்கள் . முக்கியமாக கதை இருக்கிறது . அதிலும் முக்கியமாக யதார்த்தம் !!
அவனையும் மீறி வாழ்க்கை அவனை விட்டு நழுவிச் செல்கிறது . அவனதும் அவனது தந்தையின் கனவும் கலைகிறது . யதார்த்தமாக செய்துவிட்ட ஒரு காரியத்தால் , குடும்பத்தின் அமைதி கலைகிறது . ஊரே அவனை வேறு கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது . தந்தையும் மகனுக்குமான உறவுப் போராட்டத்தில் கலங்கடிக்கிறார்கள் .
ஒரு ரெளடி தனது தந்தையய் அடிப்பதை தாங்க மாட்டாமல் திரும்ப அவனை அடிக்கிறார் அஜித் . அவன் சாய , ஊரே அஜித்தை ரெளடியாகப் பார்க்கிறது . தான் அப்படி இல்லை என நீருபிக்கும் முன்பாகவே அடுத்தடுத்த சம்பவங்கள் அவனை ரெளடி என நிருபிக்கின்றன . இதனால் அவனது காதல் கலைகிறது . குடும்பமே அவனை ரெளடியாக பார்க்க ஆரம்பிக்கும் பொழுது , அக்குடும்பத்துக்காக வேண்டி வில்லனை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறார் அஜித் . பாலகுமாரன் நாவல்களில் வரும் முடிவு . யதார்த்தமான கதை .
படத்தின் முதற்பாதி அற்புதம் .இரண்டாம் பாதியில் சோகத்தின் சாரல் கொஞ்சம் பலமாகவே இருக்கிறது . அஜித்தின் அறிமுகம் அமர்க்களம் . பிள்ளையார் திருடுவது , திரிஶா துரத்தல் , காதலை தெரிவிப்பது , ராத்திரியில் தொட்டியில் அமர்ந்து இருவரும் பேசுவது , அதனை குடும்பமே கேட்பது என திரையில் சில ஹைகூக்கள் .
சொல்லப்பட வேண்டியது திருவின் காமிரா . படம் பளிச்சென்று இருக்கிறது . படத்தில் அடிக்கடி வந்து போகும் சில மஞ்சள் வெயில் காட்சிகளும் , படத்தின் சோக மூடில் வரும் காட்சிகளும் அற்புதம் . பிரகாஶ் பாடல்களில் தெரிகிறார் . சில சமயத்தில் படத்தில் பிண்ணனி இசையே இல்லையோ என்று தோன்றுகிறது . அதுவே சில நேரங்களில் காட்சிக்கு வலுவாகவும் , சில நேரங்களில் தொய்வாகவும் இருக்கிறது . சந்தானத்தின் மற்றும் விவேக்கின் சில டைமிங் காமடிகளுக்கு சிரித்துத்தான் ஆகவேண்டும் .
அஜித் இளமையாக இருக்கிறார் . அழகான நடிப்பு . கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் இல்லாவிட்டால் , " வாலி " படத்து அஜித் தான்.
இது அஜித் ரசிகர்களுக்கான படம் அல்ல , கதைப் பிரியர்களுக்கான படம் . ஒரு ஸ்மால் அடித்துவிட்டு , சாயங்கால ஶோவில் , கதையில் லயித்து , தனிமையில் படம் பாருங்கள் , உங்களுக்கு இது பிடித்துப் போகும்.
மீண்டும் வருகிறேன் .
சந்திப்புகள் - ஒன்று .
வாழ்வில் தவிர்க்கப்பட முடியாதவை சந்திப்புகள் . கண நேர சந்திப்பு , வாழ்வினையே புரட்டிபோட்டு விடும் வல்லமை வாய்ந்தவையாக இருந்திருக்கின்றன . வரலாற்று உதாரணங்கள் தவிர்த்து, அனைவரது வாழ்விலும் சிற்சில சந்திப்புகள் இருக்கும் , இதுவரை இல்லாவிடில் இனி நிகழும் . எனது வாழ்விலேயே நிறைய சந்திப்புகள் மறக்க முடியாதவை . என்றென்றும் நினைவில் நிற்பவை . சில சந்திப்புகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும் , உபயோகமுள்ளவையாக இருக்கும் , சில வருத்தப்பட வைக்கும் , சில அறிவுருத்தும் . என்னை யோசிக்க வைத்த சந்திப்பு இது !!
முசாபாவில் இருந்து அபுதாபி செல்ல வேண்டி டாக்ஸிக்காக காத்திருந்தேன் . ஆபிஸ் பயணம் . மனநிலையினைப் பொருத்தும் , பண நிலையய் பொருத்தும் சில சமயங்களில் ஶேரிங் டாக்ஸியிலோ , சில சமயங்களில் தனி டாக்ஸியிலோ செல்வேன் . . சுமார் அரை மணி நேரம் ஆகும் பயணம் . உடன் வர யாரும் இல்லாததால் , தனி டாக்ஸி ஏறினேன் . வழக்கமாக டாக்ஸியில் செல்லும் பொழுது டிரைவருடன் பேசிக் கொண்டே செல்வது வழக்கம் . அப்படி பேசிக் கொண்டே சென்றேன் . டிரைவரின் பெயர் மஜாகான் . பாகிஸ்தான் . மனைவியும் , இரு மக்களும் அங்கு இருக்கிறார்கள் என்பவை பேச்சின் வாயிலாக அறிந்தது .
பேச்சின் போக்கு தமிழ்நாட்டையும் கேரளத்தையும் பற்றிச் சென்றது . நானும் சென்னை , மதுரை என்று பேசிக்கொண்டிருந்தேன் . கருணாநிதி ஆட்சி குறித்து விசாரித்தார் . ஆச்சரியம் அடைந்தேன் . கருணாநிதி பற்றி எப்படி தெரியும் என்றேன் .கருணாநிதி , ஜெயலலிதா என்று ஆரம்பித்து , கேரளத்து உம்மண் சாண்டி , அச்சுதானந்தன் என்று சென்று , ஆந்திர ராமாராவின் வழியே , வாஜ்பாய் , சோனியா என தேசிய அரசியலில் முடித்தோம் . கட்சியினை விட்டு எம்.ஜி .ஆரை நீக்கியது குறித்து கூட பேசினோம் .சினிமாவிலும் சிவாஜி ரஜினியும் ,கமல் , மோகன்லால் , மம்முட்டி தெரிந்திருக்கிறது . ஹிந்தியும் கொறச்சு மலையாளமும் சம்சாரிக்கிறார்.அவரது பரந்த விஶய ஞானத்தையும் , நினைவாற்றலையும் குறித்து வியந்தேன் .
பாகிஸ்தான்காரன் .இவ்வளவு விஶயங்கள் தெரிந்திருக்கிறானே என்ற ஆச்சரியக் குறி தோன்றும் முன் , எப்படி தெரிந்துகொண்டார் ? என்ற கேள்விக்குறியே தோன்றியது. அவன் இதற்கு முன் வேலை செய்த கம்பனியில் தமிழர்களும் , மலையாளிகளும் அதிகம் இருந்தார்களாம் . அவர்களுடன் இன்றும் பேசுவாராம் . அதுவாயிலாக தான் தெரிந்தது என்றார்.
பாகிஸ்தான் குறித்து ஏதாவது பேசி , பதிலுக்கு அவரை வாயடைக்கச் செய்ய வேண்டுமென்று தோன்றினாலும் , என்ன பேச ? இஸ்லாமாபாத்தையும் , முசரப் , பெனாசிர் பூட்டொவையும் தவிர வேறேன்ன தெரியும் ? விஶய ஞானமின்மை குறித்து வெட்கப்பட்டேன் .
இறங்குமிடம் வந்தது . மொபைல் நம்பர் கொடுத்து , டாக்ஸி வேண்டுமானால் போன் பண்ணுங்கள் வருகிறேன் என்று சொல்லி , கிளம்பிப் போய் விட்டார் .
பின்னர் இதுகுறித்து சிந்தித்துப் பார்த்தேன் . கற்க வேண்டும் . விஶயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒன்று பழக வேண்டும் அல்லது படிக்க வேண்டும். வேற்று நாட்டு இலக்கியங்களைப் படிக்க வேண்டும் . புரிந்து கொள்ள வேண்டும் . " நானா அடுத்த சூப்பர் ஸ்டார் - பதறுகிறார் விஜய் ? ? " என்ற பேட்டியினையும் , ஆர்யாவின் அடுத்த ஆறு படங்களையும் பற்றி தெரிந்திருப்பதை விடவும் , இவற்றைக் குறித்து தெரிந்திருப்பது முக்கியம் என்றே நினைக்கிறேன் .
மீண்டும் வருகிறேன் !!
முசாபாவில் இருந்து அபுதாபி செல்ல வேண்டி டாக்ஸிக்காக காத்திருந்தேன் . ஆபிஸ் பயணம் . மனநிலையினைப் பொருத்தும் , பண நிலையய் பொருத்தும் சில சமயங்களில் ஶேரிங் டாக்ஸியிலோ , சில சமயங்களில் தனி டாக்ஸியிலோ செல்வேன் . . சுமார் அரை மணி நேரம் ஆகும் பயணம் . உடன் வர யாரும் இல்லாததால் , தனி டாக்ஸி ஏறினேன் . வழக்கமாக டாக்ஸியில் செல்லும் பொழுது டிரைவருடன் பேசிக் கொண்டே செல்வது வழக்கம் . அப்படி பேசிக் கொண்டே சென்றேன் . டிரைவரின் பெயர் மஜாகான் . பாகிஸ்தான் . மனைவியும் , இரு மக்களும் அங்கு இருக்கிறார்கள் என்பவை பேச்சின் வாயிலாக அறிந்தது .
பேச்சின் போக்கு தமிழ்நாட்டையும் கேரளத்தையும் பற்றிச் சென்றது . நானும் சென்னை , மதுரை என்று பேசிக்கொண்டிருந்தேன் . கருணாநிதி ஆட்சி குறித்து விசாரித்தார் . ஆச்சரியம் அடைந்தேன் . கருணாநிதி பற்றி எப்படி தெரியும் என்றேன் .கருணாநிதி , ஜெயலலிதா என்று ஆரம்பித்து , கேரளத்து உம்மண் சாண்டி , அச்சுதானந்தன் என்று சென்று , ஆந்திர ராமாராவின் வழியே , வாஜ்பாய் , சோனியா என தேசிய அரசியலில் முடித்தோம் . கட்சியினை விட்டு எம்.ஜி .ஆரை நீக்கியது குறித்து கூட பேசினோம் .சினிமாவிலும் சிவாஜி ரஜினியும் ,கமல் , மோகன்லால் , மம்முட்டி தெரிந்திருக்கிறது . ஹிந்தியும் கொறச்சு மலையாளமும் சம்சாரிக்கிறார்.அவரது பரந்த விஶய ஞானத்தையும் , நினைவாற்றலையும் குறித்து வியந்தேன் .
பாகிஸ்தான்காரன் .இவ்வளவு விஶயங்கள் தெரிந்திருக்கிறானே என்ற ஆச்சரியக் குறி தோன்றும் முன் , எப்படி தெரிந்துகொண்டார் ? என்ற கேள்விக்குறியே தோன்றியது. அவன் இதற்கு முன் வேலை செய்த கம்பனியில் தமிழர்களும் , மலையாளிகளும் அதிகம் இருந்தார்களாம் . அவர்களுடன் இன்றும் பேசுவாராம் . அதுவாயிலாக தான் தெரிந்தது என்றார்.
பாகிஸ்தான் குறித்து ஏதாவது பேசி , பதிலுக்கு அவரை வாயடைக்கச் செய்ய வேண்டுமென்று தோன்றினாலும் , என்ன பேச ? இஸ்லாமாபாத்தையும் , முசரப் , பெனாசிர் பூட்டொவையும் தவிர வேறேன்ன தெரியும் ? விஶய ஞானமின்மை குறித்து வெட்கப்பட்டேன் .
இறங்குமிடம் வந்தது . மொபைல் நம்பர் கொடுத்து , டாக்ஸி வேண்டுமானால் போன் பண்ணுங்கள் வருகிறேன் என்று சொல்லி , கிளம்பிப் போய் விட்டார் .
பின்னர் இதுகுறித்து சிந்தித்துப் பார்த்தேன் . கற்க வேண்டும் . விஶயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒன்று பழக வேண்டும் அல்லது படிக்க வேண்டும். வேற்று நாட்டு இலக்கியங்களைப் படிக்க வேண்டும் . புரிந்து கொள்ள வேண்டும் . " நானா அடுத்த சூப்பர் ஸ்டார் - பதறுகிறார் விஜய் ? ? " என்ற பேட்டியினையும் , ஆர்யாவின் அடுத்த ஆறு படங்களையும் பற்றி தெரிந்திருப்பதை விடவும் , இவற்றைக் குறித்து தெரிந்திருப்பது முக்கியம் என்றே நினைக்கிறேன் .
மீண்டும் வருகிறேன் !!
Wednesday, July 4, 2007
நினைவில் நிற்கும் முகங்கள் :
பெற்றோர் , உற்றார் உறவினர் , நண்பர்கள் , அவர்களது சொந்தங்கள் , வேலை விசயமாக பரிச்சயமானவர்கள் , அது தவிர்த்து மற்ற வழியில் பரிச்சயமானவர்கள் ... இவர்கள் அனைவரின் முகங்களும் நம் நினைவில் இருப்பது இயல்பு . அதனையும் தாண்டியும் ஒரு சில முகங்கள் நம் நினைவை விட்டு அகலாது . எனது இதுநாள்வரை வாழ்வில் நான் சந்தித்த அத்தகைய முகங்களின் தொகுப்பு இது .
முகம் ஒன்று : பிலிப்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் .சாலையோர பயணங்களில் மனதினை தொலைத்து நான் பயணிப்பது உண்டு . அதுவும் மதுரை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது , கோவில்பட்டி தாண்டி ஒரு மோட்டலில் டீ காபி சாப்பிடுவதற்காக நிறுத்துவார்கள் . அந்த கால் மணி நேர நிறுத்தத்திற்காக நான் காத்திருப்பேன் . தம் அடிப்பதற்காக !! அந்த வேளையில் டீ அல்லது காபி கண்டிப்பாக குடிப்பது வழக்கம் . சூடான இட்லிக்கு காரசட்னி போல , தம்மிற்கு டீ !! கூட இருந்தால் அற்புதம் !! அனுபவித்தவர்களுக்கு தெரியும் !! அவ்வாறான அனுபவத்தில் இருந்த பொழுது தான் அந்த முகத்தினைப் பார்த்தேன் . வழக்கம் போல் டீ வாங்கிக் கொண்டு , பஸ்ஸுக்கு அருகில் பின்னால் இருக்கும் படிக்கட்டின் பக்கத்தில் வந்து நின்றேன் . அப்பொழுது தான் அந்த முகத்தினைப் பார்த்தேன் . அவன் வெகு நேரத்திற்கு முன்னரே என்னைக் கவனித்திருக்க வேண்டும் . !!
சிறு பிராயம் .கரு நிறம் . இடுப்பில் குழந்தை . தங்கையாக இருக்கலாம் . எண்ணெய் கண்டறியாத தலைமுடி . வெள்ளையாக இருக்கவேண்டிய சட்டையும் கால் ட்ரொசரும் , படிந்து விட்ட அழுக்கின் சாட்சியாக ஆங்காங்கே மஞ்சளூம் கருமையும் கலந்து இருந்தன . இடுப்பில் இருந்த சிறுகுழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியா , சோகமா என்று கண்டறிய முடியாத ஒரு முகபாவம் !! அக்குழந்தையின் வாயில் இருந்து ஒழுகிய எச்சில் , சிறிது தூரம் வடிந்து காய்ந்து போயிருக்க வேண்டும் .அதன் சுவடு தெரிந்தது .
அப்பையனின் முகம் எதனுக்காகவோ காத்திருந்து அதற்காக ஏங்கியிருப்பதாக தோன்றியது .கண்களின் அந்த வெறிச்சிடும் , ஏங்கும் அந்த பார்வை இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது . பசியால் தான் பார்க்கிறான் என்றெண்ணி கையில் இருந்த டீக் கிளாஸைக் காண்பித்து , சைகையாலே உனக்கும் வேண்டுமா என்று கேட்டேன் . மறுதலிப்பது போல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகி வேறு பக்கம் சென்றுவிட்டான் . " ஆமாம் " என்று சொல்லி டீ வாங்கிக் கொடுத்திருந்தாலோ , அத்துடன் அவனது முகம் எனக்கு மறந்திருக்கும் !! " வேண்டாம் " என்று சொல்லிவிட்டு சென்றதால் மட்டுமே , இன்னும் அவன் எனக்கு ஞாபகம் இருக்கிறான் !! .
விலகிச் சென்றபடியே , மோட்டலும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்திறக்கு சென்றுவிட்டான் . கடைசியாக திரும்பும் முன் ஒரு பார்வை . அதன் அர்த்தங்கள் பலவாறாக இருக்கக்கூடும் !! நல்ல வேளையாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன் . ஒரு வேளை , நம்மை யாராவது கவனிக்கிறார்களா என்று அவன் கவனித்தான் என்றால் , நான் தேறிவிட்டேன் . அது அல்லாது , நமக்கே வாங்கித் தருகிறேன் என்றானே யாரவன்..... என்றெண்ணியிருந்தால் ???... அவன் நல்ல குடும்பத்தில் பிறந்து , நன்றாக வாழ்ந்து , விதியின் வசத்தால் இவ்வாறு இருக்க நேர்ந்தால் , சே நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது , அவனது தன்மானத்தை தீண்டியவனாகி விட்டவனல்லவாகிவிட்டேன் ???
தவறிழைத்து விட்டேன் என்ற குற்றவுணர்ச்சி காரணமாகவோ என்னவோ , பஸ்ஸில் ஏறிய பின்னரும் அவனது முகம் எனக்கு ஞாபகம் இருந்தது . பின்னர் பலதரப்பட்ட சூழ்நிலைகளால் நான் அவனை மறந்தாலும் , அதன் பின்னர் நான் வேறு எந்த மோட்டலில் நின்றாலும் அவனைத் தேடுவது வழக்கமாகிப் போனது . அவனைக் இதுவரைக் கண்டதில்லை . கண்டாலும் என்ன சொல்லவதென்று எனக்குத் தெரியவில்லை . ஆனாலும் அந்த முகம் என்றும் என் நினைவில் இருக்கும் !!!
முகம் இரண்டு : அபுதாபிக்கு வர விசா கிடைத்து விட்ட பின் , ஒரு முறை மதுரை சென்றிருந்தேன் . அதாவது மதுரை நண்பர்களிடம் இருந்து விடைபெற !! சதிஸ் என்பவன் எனக்கு பழக்கம் . எனது மதுரை டீலரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தான் . நானும் அவனும் தான் ரிலீஸாகும் அனைத்துப் படங்களுக்கும் நைட் ஶோ செல்வோம் . ஒன்றாக ஊர் சுற்றுவோம் .
மதுரையில் எங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்திருந்த ஒரு இடம் இருந்தது . அமைதியாம இடம் . சிவகங்கை போகும் வழியில் சாலையின் இருபுறமும் மரங்களும் , வயல்வெளிகளுமாக இருக்கும் அந்த இடத்தில் , இரண்டு மூன்று பேர் உட்கார்வதற்கு ஏற்றபடி கல்மேடு ஒன்று இருக்கும் . மற்றபடி விடுமுறை நாட்களில் நானும் சதிஷும் பீரோ , பாட்டிலோ வாங்கிக் கொண்டு அங்கு சென்றுவிடுவோம் . காலை பத்து மணிக்கு சென்று , மதியம் ஒன்று இரண்டு மணிக்கு திரும்ப வருவோம் .
இந்த தடவையும் சென்றோம் , நாலைந்து பேர் உள்ள கூட்டமாக !! . தண்ணிக் கச்சேரி நடக்கவும் , அருகில் இருந்த வயலுக்கு மோட்டார் விடவும் சரியாக இருந்தது . அதனால் தண்ணி அடிப்பதும் , குளிப்பதுமாக கச்சேரி களை கட்டியது .
சிகரட் தீர்ந்துவிட்டதால் , வாங்க வண்டி ( ஓசி வண்டி ஓட்டுவதும் ஒரு சுகம் தான் ) எடுத்துக் கொண்டு சென்றேன் . அருகில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று வாங்கிவிட்டு , வண்டியில் ஏறி உட்காரும் பொழுது , எனது கால் ஒருவரின் மேல் பட்டுவிட்டது . மன்னிப்புக் கேட்க நினைத்துத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தேன் . இந்திரா செளந்திராஜனின் அமானுஶ்ய நாவல்களில் வரும் சாமியார்களைப் போல இருந்தார் . கந்தலாடையும் , நீண்டு வளர்ந்த தாடியும் , சுருக்கம் விழுந்த ஒட்டிப் போன கன்னங்களுமாய் இருந்த அவரை பார்த்தவுடன் பக்தி வராது , பயம் தான் வரும் ...
" மன்னிச்சுகோங்க சார் (?) " என்றேன் .
பதிலுக்கு அவர் , " என்ன பேரு ?" என்றார் . நானும் "குமாரசாமி " என்றேன் . என்னை உற்று நோக்கியும் , கைகளை ஆட்டிக் கொண்டும் காற்றில் ஏதேதோ செய்துவிட்டு , திடீரென எனது தலையில் கைவைத்து , " நல்லாயிருடா " என்று சொல்லிவிட்டு திரும்பி கடைக்குள் சென்றுவிட்டார் . வாழ்த்தா , சாபமா என்று தெரியாமல் , திரும்பி விட்டேன் . ஆனாலும் இன்னும் சில வேளைகளில் திடீரென அந்த முகம் ஞாபகம் வரும் !! தண்ணி அடிக்கும் பொழுது தான் , சிவாவிடமும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறேன் . பதிலுக்கு என்ன சொன்னான் என்று ஞாபகம் இல்லை .
சொந்தக்காரர்களின் முகம் கூட சில சமயம் மறந்துவிடுகிறது . எழுதாமல் விட்ட முகங்களையும் சேர்த்து இவர்களின் முகம் மட்டும் நினைவில் இருக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை . இன்னும் எழுதாமல் விட்ட முகங்கள் நிறைய உண்டு . மதுரையில் எங்களது அடுத்த வீட்டில் இருந்த மனநிலை தவறிய சின்னப் பெண் பானு , நான் பள்ளிக்குக் கிளம்பும் அதே சமயத்தில் தச்சு வேலைக்குக் கிளம்பி என்னுடனே சைக்கிளில் ஒன்றாக வந்த ரமேஶ் , ஆர் .டி .ஓ ஆபீஸுக்கு எதிரில் டீக்கடை வைத்திருந்த பார்த்திபன் ...... போன்ற இன்னும் பலரின் முகங்களும் சில சமயங்களில் திடீரென பளிச்சிடும் .காரணம் யாமறியேன் !!
பார்த்துவிட்ட முகங்களின் நினைவுகளுக்காகவும் , இனி பார்க்க போகும் முகங்களிடம் கிடைக்கப் பெறும் அனுபவங்களுக்காகவும் .......... காத்திருக்கிறேன் !!
மீண்டும் வருகிறேன் !!!
முகம் ஒன்று : பிலிப்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் .சாலையோர பயணங்களில் மனதினை தொலைத்து நான் பயணிப்பது உண்டு . அதுவும் மதுரை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது , கோவில்பட்டி தாண்டி ஒரு மோட்டலில் டீ காபி சாப்பிடுவதற்காக நிறுத்துவார்கள் . அந்த கால் மணி நேர நிறுத்தத்திற்காக நான் காத்திருப்பேன் . தம் அடிப்பதற்காக !! அந்த வேளையில் டீ அல்லது காபி கண்டிப்பாக குடிப்பது வழக்கம் . சூடான இட்லிக்கு காரசட்னி போல , தம்மிற்கு டீ !! கூட இருந்தால் அற்புதம் !! அனுபவித்தவர்களுக்கு தெரியும் !! அவ்வாறான அனுபவத்தில் இருந்த பொழுது தான் அந்த முகத்தினைப் பார்த்தேன் . வழக்கம் போல் டீ வாங்கிக் கொண்டு , பஸ்ஸுக்கு அருகில் பின்னால் இருக்கும் படிக்கட்டின் பக்கத்தில் வந்து நின்றேன் . அப்பொழுது தான் அந்த முகத்தினைப் பார்த்தேன் . அவன் வெகு நேரத்திற்கு முன்னரே என்னைக் கவனித்திருக்க வேண்டும் . !!
சிறு பிராயம் .கரு நிறம் . இடுப்பில் குழந்தை . தங்கையாக இருக்கலாம் . எண்ணெய் கண்டறியாத தலைமுடி . வெள்ளையாக இருக்கவேண்டிய சட்டையும் கால் ட்ரொசரும் , படிந்து விட்ட அழுக்கின் சாட்சியாக ஆங்காங்கே மஞ்சளூம் கருமையும் கலந்து இருந்தன . இடுப்பில் இருந்த சிறுகுழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியா , சோகமா என்று கண்டறிய முடியாத ஒரு முகபாவம் !! அக்குழந்தையின் வாயில் இருந்து ஒழுகிய எச்சில் , சிறிது தூரம் வடிந்து காய்ந்து போயிருக்க வேண்டும் .அதன் சுவடு தெரிந்தது .
அப்பையனின் முகம் எதனுக்காகவோ காத்திருந்து அதற்காக ஏங்கியிருப்பதாக தோன்றியது .கண்களின் அந்த வெறிச்சிடும் , ஏங்கும் அந்த பார்வை இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது . பசியால் தான் பார்க்கிறான் என்றெண்ணி கையில் இருந்த டீக் கிளாஸைக் காண்பித்து , சைகையாலே உனக்கும் வேண்டுமா என்று கேட்டேன் . மறுதலிப்பது போல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகி வேறு பக்கம் சென்றுவிட்டான் . " ஆமாம் " என்று சொல்லி டீ வாங்கிக் கொடுத்திருந்தாலோ , அத்துடன் அவனது முகம் எனக்கு மறந்திருக்கும் !! " வேண்டாம் " என்று சொல்லிவிட்டு சென்றதால் மட்டுமே , இன்னும் அவன் எனக்கு ஞாபகம் இருக்கிறான் !! .
விலகிச் சென்றபடியே , மோட்டலும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்திறக்கு சென்றுவிட்டான் . கடைசியாக திரும்பும் முன் ஒரு பார்வை . அதன் அர்த்தங்கள் பலவாறாக இருக்கக்கூடும் !! நல்ல வேளையாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன் . ஒரு வேளை , நம்மை யாராவது கவனிக்கிறார்களா என்று அவன் கவனித்தான் என்றால் , நான் தேறிவிட்டேன் . அது அல்லாது , நமக்கே வாங்கித் தருகிறேன் என்றானே யாரவன்..... என்றெண்ணியிருந்தால் ???... அவன் நல்ல குடும்பத்தில் பிறந்து , நன்றாக வாழ்ந்து , விதியின் வசத்தால் இவ்வாறு இருக்க நேர்ந்தால் , சே நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது , அவனது தன்மானத்தை தீண்டியவனாகி விட்டவனல்லவாகிவிட்டேன் ???
தவறிழைத்து விட்டேன் என்ற குற்றவுணர்ச்சி காரணமாகவோ என்னவோ , பஸ்ஸில் ஏறிய பின்னரும் அவனது முகம் எனக்கு ஞாபகம் இருந்தது . பின்னர் பலதரப்பட்ட சூழ்நிலைகளால் நான் அவனை மறந்தாலும் , அதன் பின்னர் நான் வேறு எந்த மோட்டலில் நின்றாலும் அவனைத் தேடுவது வழக்கமாகிப் போனது . அவனைக் இதுவரைக் கண்டதில்லை . கண்டாலும் என்ன சொல்லவதென்று எனக்குத் தெரியவில்லை . ஆனாலும் அந்த முகம் என்றும் என் நினைவில் இருக்கும் !!!
முகம் இரண்டு : அபுதாபிக்கு வர விசா கிடைத்து விட்ட பின் , ஒரு முறை மதுரை சென்றிருந்தேன் . அதாவது மதுரை நண்பர்களிடம் இருந்து விடைபெற !! சதிஸ் என்பவன் எனக்கு பழக்கம் . எனது மதுரை டீலரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தான் . நானும் அவனும் தான் ரிலீஸாகும் அனைத்துப் படங்களுக்கும் நைட் ஶோ செல்வோம் . ஒன்றாக ஊர் சுற்றுவோம் .
மதுரையில் எங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்திருந்த ஒரு இடம் இருந்தது . அமைதியாம இடம் . சிவகங்கை போகும் வழியில் சாலையின் இருபுறமும் மரங்களும் , வயல்வெளிகளுமாக இருக்கும் அந்த இடத்தில் , இரண்டு மூன்று பேர் உட்கார்வதற்கு ஏற்றபடி கல்மேடு ஒன்று இருக்கும் . மற்றபடி விடுமுறை நாட்களில் நானும் சதிஷும் பீரோ , பாட்டிலோ வாங்கிக் கொண்டு அங்கு சென்றுவிடுவோம் . காலை பத்து மணிக்கு சென்று , மதியம் ஒன்று இரண்டு மணிக்கு திரும்ப வருவோம் .
இந்த தடவையும் சென்றோம் , நாலைந்து பேர் உள்ள கூட்டமாக !! . தண்ணிக் கச்சேரி நடக்கவும் , அருகில் இருந்த வயலுக்கு மோட்டார் விடவும் சரியாக இருந்தது . அதனால் தண்ணி அடிப்பதும் , குளிப்பதுமாக கச்சேரி களை கட்டியது .
சிகரட் தீர்ந்துவிட்டதால் , வாங்க வண்டி ( ஓசி வண்டி ஓட்டுவதும் ஒரு சுகம் தான் ) எடுத்துக் கொண்டு சென்றேன் . அருகில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று வாங்கிவிட்டு , வண்டியில் ஏறி உட்காரும் பொழுது , எனது கால் ஒருவரின் மேல் பட்டுவிட்டது . மன்னிப்புக் கேட்க நினைத்துத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தேன் . இந்திரா செளந்திராஜனின் அமானுஶ்ய நாவல்களில் வரும் சாமியார்களைப் போல இருந்தார் . கந்தலாடையும் , நீண்டு வளர்ந்த தாடியும் , சுருக்கம் விழுந்த ஒட்டிப் போன கன்னங்களுமாய் இருந்த அவரை பார்த்தவுடன் பக்தி வராது , பயம் தான் வரும் ...
" மன்னிச்சுகோங்க சார் (?) " என்றேன் .
பதிலுக்கு அவர் , " என்ன பேரு ?" என்றார் . நானும் "குமாரசாமி " என்றேன் . என்னை உற்று நோக்கியும் , கைகளை ஆட்டிக் கொண்டும் காற்றில் ஏதேதோ செய்துவிட்டு , திடீரென எனது தலையில் கைவைத்து , " நல்லாயிருடா " என்று சொல்லிவிட்டு திரும்பி கடைக்குள் சென்றுவிட்டார் . வாழ்த்தா , சாபமா என்று தெரியாமல் , திரும்பி விட்டேன் . ஆனாலும் இன்னும் சில வேளைகளில் திடீரென அந்த முகம் ஞாபகம் வரும் !! தண்ணி அடிக்கும் பொழுது தான் , சிவாவிடமும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறேன் . பதிலுக்கு என்ன சொன்னான் என்று ஞாபகம் இல்லை .
சொந்தக்காரர்களின் முகம் கூட சில சமயம் மறந்துவிடுகிறது . எழுதாமல் விட்ட முகங்களையும் சேர்த்து இவர்களின் முகம் மட்டும் நினைவில் இருக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை . இன்னும் எழுதாமல் விட்ட முகங்கள் நிறைய உண்டு . மதுரையில் எங்களது அடுத்த வீட்டில் இருந்த மனநிலை தவறிய சின்னப் பெண் பானு , நான் பள்ளிக்குக் கிளம்பும் அதே சமயத்தில் தச்சு வேலைக்குக் கிளம்பி என்னுடனே சைக்கிளில் ஒன்றாக வந்த ரமேஶ் , ஆர் .டி .ஓ ஆபீஸுக்கு எதிரில் டீக்கடை வைத்திருந்த பார்த்திபன் ...... போன்ற இன்னும் பலரின் முகங்களும் சில சமயங்களில் திடீரென பளிச்சிடும் .காரணம் யாமறியேன் !!
பார்த்துவிட்ட முகங்களின் நினைவுகளுக்காகவும் , இனி பார்க்க போகும் முகங்களிடம் கிடைக்கப் பெறும் அனுபவங்களுக்காகவும் .......... காத்திருக்கிறேன் !!
மீண்டும் வருகிறேன் !!!
Sunday, June 24, 2007
சார்ஜா வாழ்க்கை :
எனது கம்பனியில் இருந்து ஒருவன் விலகிவிட்டான் . அதனால் , அவனது பொறுப்பும் எனக்கு வந்தது . கூடுதல் பொறுப்பு குறித்து எனக்கு கவலையில்லை . எனது கவலையெல்லாம் அபுதாபியினை விட்டு வர வேண்டுமே என்பது தான் . தனிமை, ஆபிஸில் என்னைக் கேள்வி கேட்க யாருமில்லாதது , வேலைநேரமும் காலமும் என் தீர்மானத்தில் இருப்பது , சில நண்பர்கள் ,இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை அண்ணி வீட்டு சாப்பாடு , அக்ஷயின் மழலை என்று எனது அபுதாபி வாழ்க்கை அற்புதமாகவும் , இனிமையாகவும் சென்று கொண்டிருந்தது . அதனை விட்டு வர மனமில்லை . இருந்தாலும் வேறு வழியிருக்கவில்லை . ஒரே ஆறுதல் , மாதத்தில் இரண்டு தடவை அபுதாபி பயணம் இருப்பது .
சார்ஜா வந்த முதல் நாளே வேலை அதிகம். விருப்பமில்லாமல் வேலை செய்தேன் . அடுத்த நாள் வெள்ளி, வாராந்திர விடுமுறை .கம்பனியில் அனைவருடனும் ஒரே போல் பழகுவதால் , இங்கு அனைவருக்கும் என்னைப் பிடிக்கும் . குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இரண்டு பேர் . ஒருவன் மது ( மலையாளி ) , மற்றவன் வேம்பு ( தமிழ் ) . இருவருக்கும் ஒத்துப் போகாது . மது பேருக்கு ஏற்றாற் போல் எப்பவும் தானும் தன் பாட்டிலும் உண்டு என்று இருப்பான் . வேம்புவும் பேருக்கு ஏற்றாற் போல் தான் , ஒரே கசப்பு . ஐயன் . அதனால் அதற்கு உரிய சகல வித லட்சணங்களும் குறையாது , அடுத்தவரை குறைகூறிக் கொண்டும் , தன்னை உயர்த்திப் பேசிக் கொண்டே இருப்பது அவனது பழக்கம் .ஆனால் இருவரும் என்னிடம் ஒரே மாதிரி தான் பழகுகிறார்கள் . மது என்னை "மகனே " என்றும் , வேம்பு என்னை "தம்பீ" என்றே அழைப்பது வழக்கம் .
இருவருடனான எனது சில அனுபவங்களே இனி வருவன .
மது: போன வார வெள்ளிக்கிழமை சாயந்திரம் சிவாஜி பார்த்துவிட்ட சந்தோஶத்தில் இருந்தேன் . அப்பொழுது சித்தப்பா ( மது ) வந்தார் . "பீச்சுக்கு " அழைத்தார் . சந்தோசமாக உடன் சென்றேன் . போகும் வழியிலேயே ஜம்பொ பீர் பாக் வாங்கிக் கொண்டோம் . அஜ்மனில் உள்ள பீச்சுகள் தனிமைக்குக் பேர் போனவை. அதுவும் அங்கு பெரும்பாலான இடங்களில் கட்டிட பணிகள் நடைபெறுவதால் , அதற்குப் பின்னால் இருக்கும் பீச்சுக்கு போவது தடைசெய்யப்பட்டுள்ளது . அப்படி தடைசெய்யப்பட்ட இடம் ஒன்றில் சென்று அமர்ந்தோம் . மது திடீரென்று , "நான் கொஞ்சம் தனிமையில் இருக்க வேண்டும் " என்றான் . நானும் எனது பங்கான பீரை எடுத்துக் கொண்டு தனியாக அமர்ந்தேன்.
கடல் எப்பொழுதும் இனிமையானது. எனக்கும் கடலுக்கும் அதற்கு முன்பான உறவினைப் பற்றி நினைத்துப் பார்த்தேன் . பாட்டியுடன் எனது கன்னியாகுமரிப் பயணம் , என்னவளுடன் விவேகானந்தர் மண்டபம் சென்றது , சென்னை மெரினாவில் நடந்த வீர விளையாட்டு , கர்நாடகா கோவா பார்டரில் தனிமையான கடற்கரை ,சுனாமி நிவாரண பொருட்கள் வழங்க கன்னியாகுமரி சென்றது , அபுதாபிக்கு கிளம்பி வரும் முன் நானும் சிவாவும் தனியாக மெரினா சென்றது என கடலுடனான எனது அனுபவங்கள் நினைத்துப் பார்க்கும் பொழுதே இனிமையும் கவலையும் ஒரு சேர தர வல்லவை. நானும் , பீரும் எனது எண்ணங்களுமாக பொழுது இனிதே கழிந்தது .
பீச்சில் நாங்கள் இருவர் மட்டுமே !! அதுவும் தனித்தனியாக . மணலில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை எழுதுவேன் . கடலலை மூன்றுமுறை அருகில் வந்தும் , அப்பெயர்கள் அழியாமல் இருந்தால் , அவர்கள் காலம் முழுவதும் என்னுடனே இருப்பார்கள் என்ற நம்பிக்கை!! சில சமயங்களில் நமக்குப் பிடித்த பதில் வரும் , சில சமயத்தில் வேறு மாதிரியாக ! அதே போல் எதாவதொரு ஆசையை நினைத்துக் கொண்டு கடலுக்கு அருகில் நிற்பேன் . அடுத்ததாக வரும் கடலலை நம் காலை நனைத்துச் சென்றால் , அந்த ஆசை நிறைவேறும் என்றும் , நனைக்காமல் சென்றுவிட்டால் அது நிறைவேறாது என்று சிற்சில விளையாட்டுகள் விளையாடினேன் .
கிளம்பும் சமயமாகிய பொழுது , மதுவுக்கு அருகில் வந்தேன். உற்று நோக்கிய பொழுது தான் தெரிந்தது, அவன் அழுதிருக்கிறான் என்று . நான் அவனிடம் ஒண்ணும் கேட்கவில்லை . என்னிடம் சொல்ல முடியாத விஶயமாக இருக்கலாம் , அல்லது என்னிடம் சொல்வது பிடிக்காமல் இருக்கலாம் . ஆனால் " சொல்லப்படாத சோகங்கள் " இன்னும் அதிக வலியினை தருபவை .!!
வேம்பு : அமாவாசை அன்று மட்டும் அசைவம் தவிர்த்து , மாதத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் அசைவம் தன் சாப்பாடில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் சுத்த பிராமணன் !! வயது நாற்பதைத் தாண்டி விட்டாலும் , அவனை நேரிட்டு பார்த்து மதிப்பிட்டால் ௩0 வயது தான் இருக்கும் என்று சொல்லலாம் . நல்லவன் .... அவனுக்கு மட்டும் !!
ஒரு தடவை பேச்சுவாக்கில் " அண்ணா , நீ தான் நல்லா பாடுறியே , சினிமால ட்ரை பண்ணுணா " என்றேன் . பதில் என்னயே திக்கு முக்காட செய்தது "எங்க வீட்டுல கூட இத தான்டா சொன்னாங்க , விசா வந்துடுச்சு , வேற என்ன பண்ணுறது , அதான் வந்துட்டேன் !! ".அன்று முதல் ஆரம்பித்தது சனி . என்னை எப்பொழுது தனியாக பார்த்தாலும் , அவனுக்குள் இருக்கும் எஸ் .பி .பி முழித்துக் கொண்டு விடுவார் !!கஶ்ட காலம் !!
" முகிலினங்கள் அலைகிறதே .....
முகவரிகள் தொலைந்தனவோ ????? " என்று ஆரம்பித்து "முகவரிகள் தொலைந்ததனால் ......
அழுகிறதே , அது மழையோ ???? " என்று முடிக்கும் பொழுது , எதிரில் அமர்ந்திருக்கும் நமது கண்களிலும் மழை இருக்கும் !!
நல்ல மப்பில் இருக்கும் பொழுது , " ஐயனுகள நம்பவே கூடாதுடா , தானும் முன்னேற மாட்டாங்க , மத்தவனையும் முன்னேற விட மாட்டாங்க " என்று தமது பரம்பரை ரகசியத்தினை போட்டு உடைக்கும் நல்ல மனசுக்காரர் . மனைவி குடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால் , குடிப்பதை இரண்டு வாரங்களாக நிறுத்தி வைத்திருக்கிறார் .
இதற்கிடையில் போன வாரம் நானும் மதுவும் பீச்சுக்குச் சென்று தண்ணியடித்துவிட்டு திரும்பியது அவருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது . திடிரென்று " நீ அளவுக்கு மீறி தண்ணி அடிக்கிறடா .. ( இத்தனைக்கும் அன்று நான்கு பீர் மட்டும் தான் அடித்திருந்தேன் !! ) , உடம்புக்கு ஒத்துக்காது , பார்த்துக்கோ ... " என்று சராமரியாக இலவச அறிவுரை வழங்க ஆரம்பித்தார் !! அடுத்த நாள் மதுவிடம் போய் சண்டை பிடித்திருக்கிறார் , அவன் தான் தண்ணி வாங்கிக் கொடுத்து என்னைக் கெடுப்பதாக !! "
இதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது . ஒன்று : தான் தண்ணி அடிக்கவில்லையே , இவன் மட்டும் போய் தண்ணி அடித்துவிட்டு வருகிறானே என்ற இயலாமையினால் வரும் ஆதங்கக் கோபம் .
இரண்டு :தண்ணியடிப்பதால் வரும் விளைவுகளை அறிந்துகொண்ட ஞானம் !! (மூன்று வாரங்களுக்கு முன் என்னுடன் அமர்ந்து தண்ணியடிக்கும் பொழுது வராத ஞானம் , இப்பொழுது மட்டும் திடிரென எப்படி ? )
முன்று : உண்மையிலேயே என்னைத் திருத்தும் நல்லெண்ணம் !! ( இதற்கு வாய்ப்பு கம்மி , ஏனென்றால் இவன் ஐயன் . அப்படியே இருந்தாலும் என்னைத் திருத்துறதுக்கு இவன் யாரு ???? )
விளையாட்டும் வியாக்கியானமுமாக விரதே சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை !!!
மீண்டும் வருகிறேன் !!
சார்ஜா வந்த முதல் நாளே வேலை அதிகம். விருப்பமில்லாமல் வேலை செய்தேன் . அடுத்த நாள் வெள்ளி, வாராந்திர விடுமுறை .கம்பனியில் அனைவருடனும் ஒரே போல் பழகுவதால் , இங்கு அனைவருக்கும் என்னைப் பிடிக்கும் . குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இரண்டு பேர் . ஒருவன் மது ( மலையாளி ) , மற்றவன் வேம்பு ( தமிழ் ) . இருவருக்கும் ஒத்துப் போகாது . மது பேருக்கு ஏற்றாற் போல் எப்பவும் தானும் தன் பாட்டிலும் உண்டு என்று இருப்பான் . வேம்புவும் பேருக்கு ஏற்றாற் போல் தான் , ஒரே கசப்பு . ஐயன் . அதனால் அதற்கு உரிய சகல வித லட்சணங்களும் குறையாது , அடுத்தவரை குறைகூறிக் கொண்டும் , தன்னை உயர்த்திப் பேசிக் கொண்டே இருப்பது அவனது பழக்கம் .ஆனால் இருவரும் என்னிடம் ஒரே மாதிரி தான் பழகுகிறார்கள் . மது என்னை "மகனே " என்றும் , வேம்பு என்னை "தம்பீ" என்றே அழைப்பது வழக்கம் .
இருவருடனான எனது சில அனுபவங்களே இனி வருவன .
மது: போன வார வெள்ளிக்கிழமை சாயந்திரம் சிவாஜி பார்த்துவிட்ட சந்தோஶத்தில் இருந்தேன் . அப்பொழுது சித்தப்பா ( மது ) வந்தார் . "பீச்சுக்கு " அழைத்தார் . சந்தோசமாக உடன் சென்றேன் . போகும் வழியிலேயே ஜம்பொ பீர் பாக் வாங்கிக் கொண்டோம் . அஜ்மனில் உள்ள பீச்சுகள் தனிமைக்குக் பேர் போனவை. அதுவும் அங்கு பெரும்பாலான இடங்களில் கட்டிட பணிகள் நடைபெறுவதால் , அதற்குப் பின்னால் இருக்கும் பீச்சுக்கு போவது தடைசெய்யப்பட்டுள்ளது . அப்படி தடைசெய்யப்பட்ட இடம் ஒன்றில் சென்று அமர்ந்தோம் . மது திடீரென்று , "நான் கொஞ்சம் தனிமையில் இருக்க வேண்டும் " என்றான் . நானும் எனது பங்கான பீரை எடுத்துக் கொண்டு தனியாக அமர்ந்தேன்.
கடல் எப்பொழுதும் இனிமையானது. எனக்கும் கடலுக்கும் அதற்கு முன்பான உறவினைப் பற்றி நினைத்துப் பார்த்தேன் . பாட்டியுடன் எனது கன்னியாகுமரிப் பயணம் , என்னவளுடன் விவேகானந்தர் மண்டபம் சென்றது , சென்னை மெரினாவில் நடந்த வீர விளையாட்டு , கர்நாடகா கோவா பார்டரில் தனிமையான கடற்கரை ,சுனாமி நிவாரண பொருட்கள் வழங்க கன்னியாகுமரி சென்றது , அபுதாபிக்கு கிளம்பி வரும் முன் நானும் சிவாவும் தனியாக மெரினா சென்றது என கடலுடனான எனது அனுபவங்கள் நினைத்துப் பார்க்கும் பொழுதே இனிமையும் கவலையும் ஒரு சேர தர வல்லவை. நானும் , பீரும் எனது எண்ணங்களுமாக பொழுது இனிதே கழிந்தது .
பீச்சில் நாங்கள் இருவர் மட்டுமே !! அதுவும் தனித்தனியாக . மணலில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை எழுதுவேன் . கடலலை மூன்றுமுறை அருகில் வந்தும் , அப்பெயர்கள் அழியாமல் இருந்தால் , அவர்கள் காலம் முழுவதும் என்னுடனே இருப்பார்கள் என்ற நம்பிக்கை!! சில சமயங்களில் நமக்குப் பிடித்த பதில் வரும் , சில சமயத்தில் வேறு மாதிரியாக ! அதே போல் எதாவதொரு ஆசையை நினைத்துக் கொண்டு கடலுக்கு அருகில் நிற்பேன் . அடுத்ததாக வரும் கடலலை நம் காலை நனைத்துச் சென்றால் , அந்த ஆசை நிறைவேறும் என்றும் , நனைக்காமல் சென்றுவிட்டால் அது நிறைவேறாது என்று சிற்சில விளையாட்டுகள் விளையாடினேன் .
கிளம்பும் சமயமாகிய பொழுது , மதுவுக்கு அருகில் வந்தேன். உற்று நோக்கிய பொழுது தான் தெரிந்தது, அவன் அழுதிருக்கிறான் என்று . நான் அவனிடம் ஒண்ணும் கேட்கவில்லை . என்னிடம் சொல்ல முடியாத விஶயமாக இருக்கலாம் , அல்லது என்னிடம் சொல்வது பிடிக்காமல் இருக்கலாம் . ஆனால் " சொல்லப்படாத சோகங்கள் " இன்னும் அதிக வலியினை தருபவை .!!
வேம்பு : அமாவாசை அன்று மட்டும் அசைவம் தவிர்த்து , மாதத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் அசைவம் தன் சாப்பாடில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் சுத்த பிராமணன் !! வயது நாற்பதைத் தாண்டி விட்டாலும் , அவனை நேரிட்டு பார்த்து மதிப்பிட்டால் ௩0 வயது தான் இருக்கும் என்று சொல்லலாம் . நல்லவன் .... அவனுக்கு மட்டும் !!
ஒரு தடவை பேச்சுவாக்கில் " அண்ணா , நீ தான் நல்லா பாடுறியே , சினிமால ட்ரை பண்ணுணா " என்றேன் . பதில் என்னயே திக்கு முக்காட செய்தது "எங்க வீட்டுல கூட இத தான்டா சொன்னாங்க , விசா வந்துடுச்சு , வேற என்ன பண்ணுறது , அதான் வந்துட்டேன் !! ".அன்று முதல் ஆரம்பித்தது சனி . என்னை எப்பொழுது தனியாக பார்த்தாலும் , அவனுக்குள் இருக்கும் எஸ் .பி .பி முழித்துக் கொண்டு விடுவார் !!கஶ்ட காலம் !!
" முகிலினங்கள் அலைகிறதே .....
முகவரிகள் தொலைந்தனவோ ????? " என்று ஆரம்பித்து "முகவரிகள் தொலைந்ததனால் ......
அழுகிறதே , அது மழையோ ???? " என்று முடிக்கும் பொழுது , எதிரில் அமர்ந்திருக்கும் நமது கண்களிலும் மழை இருக்கும் !!
நல்ல மப்பில் இருக்கும் பொழுது , " ஐயனுகள நம்பவே கூடாதுடா , தானும் முன்னேற மாட்டாங்க , மத்தவனையும் முன்னேற விட மாட்டாங்க " என்று தமது பரம்பரை ரகசியத்தினை போட்டு உடைக்கும் நல்ல மனசுக்காரர் . மனைவி குடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால் , குடிப்பதை இரண்டு வாரங்களாக நிறுத்தி வைத்திருக்கிறார் .
இதற்கிடையில் போன வாரம் நானும் மதுவும் பீச்சுக்குச் சென்று தண்ணியடித்துவிட்டு திரும்பியது அவருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது . திடிரென்று " நீ அளவுக்கு மீறி தண்ணி அடிக்கிறடா .. ( இத்தனைக்கும் அன்று நான்கு பீர் மட்டும் தான் அடித்திருந்தேன் !! ) , உடம்புக்கு ஒத்துக்காது , பார்த்துக்கோ ... " என்று சராமரியாக இலவச அறிவுரை வழங்க ஆரம்பித்தார் !! அடுத்த நாள் மதுவிடம் போய் சண்டை பிடித்திருக்கிறார் , அவன் தான் தண்ணி வாங்கிக் கொடுத்து என்னைக் கெடுப்பதாக !! "
இதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது . ஒன்று : தான் தண்ணி அடிக்கவில்லையே , இவன் மட்டும் போய் தண்ணி அடித்துவிட்டு வருகிறானே என்ற இயலாமையினால் வரும் ஆதங்கக் கோபம் .
இரண்டு :தண்ணியடிப்பதால் வரும் விளைவுகளை அறிந்துகொண்ட ஞானம் !! (மூன்று வாரங்களுக்கு முன் என்னுடன் அமர்ந்து தண்ணியடிக்கும் பொழுது வராத ஞானம் , இப்பொழுது மட்டும் திடிரென எப்படி ? )
முன்று : உண்மையிலேயே என்னைத் திருத்தும் நல்லெண்ணம் !! ( இதற்கு வாய்ப்பு கம்மி , ஏனென்றால் இவன் ஐயன் . அப்படியே இருந்தாலும் என்னைத் திருத்துறதுக்கு இவன் யாரு ???? )
விளையாட்டும் வியாக்கியானமுமாக விரதே சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை !!!
மீண்டும் வருகிறேன் !!
சிவாஜி :
ரிலிஸ் அன்றே படம் பார்த்துவிட்டேன் . ரஜினி , ஶங்கர் , ஏ வி எம் , ஏ அர் ரஹ்மான் , வைரமுத்து , கே வி ஆனந்த் , தோட்டாதரணி போன்ற திறையுலக ஜாம்பவான்கள் இணைந்த படம் . ஏகத்திற்கும் எதிர்ப்பார்ப்பு ஏகிறியிருக்கிறது என்பதை பத்திரிக்கை வாயிலாக அறிவேன் . டிக்கட் முன்பதிவு செய்ய போகும் பொழுதே அது உறுதியாக தெரிந்துவிட்டது . பத்து மணிக்கு ஆரம்பித்த முன்பதிற்கு அரை மணி நேரம் தாமதமாக போனதால் , எனக்கு முன்னால் கிட்டத்தட்ட ௪௫ பேர் . மதிய ஶோவிற்கான டிக்கட் தான் கிடைத்தது . தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே , முந்தியடித்து டிக்கட் வாங்குபவர்களுக்கு சராமரியாக வசவுகளும் , கெட்ட வார்த்தைப் பிரயோகங்களும் !!
முன்பதிவு செய்துவிட்டு வெளியே வரும் பொழுது எனக்கு இருந்த மனநிலை விவரிக்க முடியாதது . இரண்டு வருடங்களுக்குப் பின் வரும் தலைவரின் படத்தை முதல் நாளே பார்க்கப் போகிறொம் என்ற உற்சாக உந்துதல் . புதன் இரவும் , வியாழனும் சிவாஜி பற்றிய சிந்தனை தான் . ஆபிஸுற்கு செல்லும் பொழுது கூட , டிக்கடினை பத்திரமாக சட்டைப் பையில் வைத்துக் கொண்டே திரிந்தேன் !!வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய துணி துவைத்தல் , ரூம் க்ளின் செய்தல் பொன்றவை வியாழன் இரவே முடிந்துவிட்டது .
வெள்ளிக்கிழமை மதியம் ௧௨ மணிக்கெல்லாம் தியேட்டருக்குச் சென்றுவிட்டேன் . படம் பார்த்துவிட்டு வருபவர்களிடம் படம் எப்படி ? என்று கேட்கக் கூடாது என்று நினைத்தே போனேன் . ஒருவேளை சரியில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை . ஆனால் ஆர்வக்கோளாறால் , வழியில் ஒரு காபி ஶாப்பில் பார்த்த இருவரிடமும் படம் பற்றிக் கேட்டு தெரிந்துகொண்டேன் . படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன் !!
ரஜினி படத்தில் முக்கியமாக இருப்பது அவரது இன்ட்ரோ. இதில் அமைதியாகத் திரும்புகிறார் . மற்ற அனைவரின் இன்ட்ரோவும் அப்படியே இருப்பது அழகு . படத்தில் பளிச் ரஜினி . சுஜாதா கூறியது போல் முதல் பாதியில் விழுகிறார் . இரண்டாம் பாதியில் எழுகிறார் . முதற்பாதியில் காமடியும் , இரண்டாம் பாதியில் ஆக்ஶனுமாக அமர்க்களப் படுத்தியிருக்கிறார் .. ’பல்லெலக்கா ’ பாடலில் சில சமயங்களில் சிரித்துக் கொண்டும் , சில சமயத்தில் ஆட முடியாமலும் ஆடி கலக்கியிருக்கிறார் . ஏர்ப்போர்டில் இருந்து அறிமுகமாகும் விவேகின் டைமிங் காமடி கலக்கல் . ஆனால் படம் முழுக்கவே அவர் ரஜினியுடன் வருவதும் , ரஜினியை விட சில காட்சிகளில் அழகாய் இருப்பதும் சில சமயங்களில் எரிச்சலைத் தருகிறது. ’ சிங்கம் சிங்கிளா தான் வரணும் ’ .
மணிவண்ணன் , சிவாவின் வடிவுக்கரசி , ரகுவரன் இன்னும் சிற்சில பேர் படத்தில் இருக்கிறார்கள் ! ஸ்ரேயா அழகு . நடித்திருக்கலாம் !! பிரச்சனைக்குள் வருவதும் , காதலியின் வீட்டில் காமடியுமாக படம் இரட்டைத் தண்டவாளத்தில் செல்கிறது . நச் என்ற இன்டர்வல் .
சங்கரின் படத்தில் எதாவது மெஸெஜ் இருக்கும் . இதில் கல்விக்காக வந்து , அப்படியே கருப்புப் பணம் என்று படம் ட்ராக் மாறுகிறது . அதுவும் நன்றாகத் தான் இருக்கிறது . முதல் காட்சியில் ரஜினி ஜெயிலுக்கு வரும் பொழுது , கூடியிருக்கும் மக்களின் அழுகுரலையும் , போராட்டத்தினையும் நியாயப்படுத்தும் அளவிற்கு படத்தில் பாமரனுக்கு உதவுவது போல் எதாவது காட்சி வைத்திருக்கலாம் . சிவாஜி ஹாஸ்பிடல் , யுனிவர்சிட்டி , ஹாஸ்பிடல் என்று சொல்வதோடு முடித்துவிடுகிறார்கள் .
படத்தில் வரும் ஆக்ஶன் காட்சிகளும் , பாடல்களும் இது ஶங்கர் படம் என்று சொல்கின்றன .படத்தின் க்ளைமாக்ஸில் வரும் மொட்டை பாஸ் கலக்கல் . இன்னும் கொஞ்ச காலம் இதுவே பேச்சாயிருக்கும் .
ரஜினியின் சிரசில் மற்றொரு மணிமகுடம் !!
முன்பதிவு செய்துவிட்டு வெளியே வரும் பொழுது எனக்கு இருந்த மனநிலை விவரிக்க முடியாதது . இரண்டு வருடங்களுக்குப் பின் வரும் தலைவரின் படத்தை முதல் நாளே பார்க்கப் போகிறொம் என்ற உற்சாக உந்துதல் . புதன் இரவும் , வியாழனும் சிவாஜி பற்றிய சிந்தனை தான் . ஆபிஸுற்கு செல்லும் பொழுது கூட , டிக்கடினை பத்திரமாக சட்டைப் பையில் வைத்துக் கொண்டே திரிந்தேன் !!வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய துணி துவைத்தல் , ரூம் க்ளின் செய்தல் பொன்றவை வியாழன் இரவே முடிந்துவிட்டது .
வெள்ளிக்கிழமை மதியம் ௧௨ மணிக்கெல்லாம் தியேட்டருக்குச் சென்றுவிட்டேன் . படம் பார்த்துவிட்டு வருபவர்களிடம் படம் எப்படி ? என்று கேட்கக் கூடாது என்று நினைத்தே போனேன் . ஒருவேளை சரியில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை . ஆனால் ஆர்வக்கோளாறால் , வழியில் ஒரு காபி ஶாப்பில் பார்த்த இருவரிடமும் படம் பற்றிக் கேட்டு தெரிந்துகொண்டேன் . படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன் !!
ரஜினி படத்தில் முக்கியமாக இருப்பது அவரது இன்ட்ரோ. இதில் அமைதியாகத் திரும்புகிறார் . மற்ற அனைவரின் இன்ட்ரோவும் அப்படியே இருப்பது அழகு . படத்தில் பளிச் ரஜினி . சுஜாதா கூறியது போல் முதல் பாதியில் விழுகிறார் . இரண்டாம் பாதியில் எழுகிறார் . முதற்பாதியில் காமடியும் , இரண்டாம் பாதியில் ஆக்ஶனுமாக அமர்க்களப் படுத்தியிருக்கிறார் .. ’பல்லெலக்கா ’ பாடலில் சில சமயங்களில் சிரித்துக் கொண்டும் , சில சமயத்தில் ஆட முடியாமலும் ஆடி கலக்கியிருக்கிறார் . ஏர்ப்போர்டில் இருந்து அறிமுகமாகும் விவேகின் டைமிங் காமடி கலக்கல் . ஆனால் படம் முழுக்கவே அவர் ரஜினியுடன் வருவதும் , ரஜினியை விட சில காட்சிகளில் அழகாய் இருப்பதும் சில சமயங்களில் எரிச்சலைத் தருகிறது. ’ சிங்கம் சிங்கிளா தான் வரணும் ’ .
மணிவண்ணன் , சிவாவின் வடிவுக்கரசி , ரகுவரன் இன்னும் சிற்சில பேர் படத்தில் இருக்கிறார்கள் ! ஸ்ரேயா அழகு . நடித்திருக்கலாம் !! பிரச்சனைக்குள் வருவதும் , காதலியின் வீட்டில் காமடியுமாக படம் இரட்டைத் தண்டவாளத்தில் செல்கிறது . நச் என்ற இன்டர்வல் .
சங்கரின் படத்தில் எதாவது மெஸெஜ் இருக்கும் . இதில் கல்விக்காக வந்து , அப்படியே கருப்புப் பணம் என்று படம் ட்ராக் மாறுகிறது . அதுவும் நன்றாகத் தான் இருக்கிறது . முதல் காட்சியில் ரஜினி ஜெயிலுக்கு வரும் பொழுது , கூடியிருக்கும் மக்களின் அழுகுரலையும் , போராட்டத்தினையும் நியாயப்படுத்தும் அளவிற்கு படத்தில் பாமரனுக்கு உதவுவது போல் எதாவது காட்சி வைத்திருக்கலாம் . சிவாஜி ஹாஸ்பிடல் , யுனிவர்சிட்டி , ஹாஸ்பிடல் என்று சொல்வதோடு முடித்துவிடுகிறார்கள் .
படத்தில் வரும் ஆக்ஶன் காட்சிகளும் , பாடல்களும் இது ஶங்கர் படம் என்று சொல்கின்றன .படத்தின் க்ளைமாக்ஸில் வரும் மொட்டை பாஸ் கலக்கல் . இன்னும் கொஞ்ச காலம் இதுவே பேச்சாயிருக்கும் .
ரஜினியின் சிரசில் மற்றொரு மணிமகுடம் !!
எனக்குப் பிடித்தவர்கள் : மூன்று
அரசியலில் எனக்குப் பிடித்தது மு.க . முன்னமே சொல்லியிருந்ததினைப் போல் , மற்ற யாரையும் பிடிக்காமல் போனதற்கு , இவரின் மேல் உள்ள தீவிர பற்றே காரணம் !!
கருணாநிதியினை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்களே எனக்குத் தோன்றுகிறது . முதலாவது ஆணாதிக்கம் !! நம்மை ஆள்வது ஒரு பெண்ணா ? என்ற ஆணாதிக்க வெறி . இரண்டாவதும் முக்கியமுமாக பத்திரிக்கைகள் !! நான் ௧௯௯௧ - ௧௯௯௨ ஆம் ஆண்டு முதல் தான் அரசியல் பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பித்தேன் . அப்பா வாங்கி வரும் ஜூனியர் விகடனும் , நக்கீரனும் எனது அப்பொழுதைய அரசியல் ஆர்வத்தின் ஆரம்ப அறிமுகமானது .அந்த வருடங்களில் பத்திரிக்கைகளில் வந்தவையெல்லாம் ஜெ வின் ஊழல்கள் குறித்தவையாகவே இருந்தன. இவற்றிற்கான ஒரே மாற்றாக அப்பொழுது இருந்தது கருணாநிதி மட்டும் தான் . வைகோவும் , விஜயகாந்தும் அப்பொழுது இல்லை . காங்கிரஸும் , கம்யுனிஸ்டுகளும் இப்பொழுது இருப்பதினை விடவும் பரிச்சயமில்லாமல் இருந்தார்கள் !! அதுவும் மத்தியில் கணிசமான உறுப்பினர்களைப் பெற்றதால் கம்யுனிஸ்டுகளும் , வழக்கமான கோஶ்டிச்சண்டையால் காங்கிரஸும் இப்பொழுது தான் மக்களுக்கு கொஞ்சம் பரிச்சயமாகத் தொடங்கியிருக்கிறது !! அதனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்து , ஊழல் மிகுந்த ஆட்சியினை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது எனது ஆசையானது . அதுவே மு .க வின் மேல் எனக்குத் தீவிர பற்று உண்டாக காரணமானது !!
பின்னர் அவரைக் குறித்து பத்திரிக்கைகளில் படிக்கும் பொழுதெல்லாம் அந்த பற்று அதிகமானதே தவிர குறையவில்லை . பன்னிரண்டு வயதில் மாணவர்மன்றம் அமைத்தும் , பதினெட்டாவது வயதில் ரயில் மறிப்பு போராட்டம் நடத்தவும் எத்துணை துணிச்சல் இருந்திருக்க வேண்டும் ?
௯௬அம் ஆண்டு ஆட்சி அமைத்து நன்றாகவே ஆட்சி செய்தார் . ஊழலற்ற நேர்மையான ஆட்சி என்று சொல்லவில்லை. உழவர் சந்தை , மினிபஸ் , பாலங்கள் , சமத்துவபுரம் போன்ற கண்ணுக்குப் புலப்படும் நற்திட்டங்கள் !!முந்தைய ஆட்சியினை விட கம்மியான ஊழல் . இன்னமும் ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று முழங்குபவர்களை தூக்கத்தில் இருந்து தான் எழுப்ப வேண்டும் . காந்தி மீண்டும் வந்தால் கூட சாத்தியமில்லை . ரமணா , முதல்வன் போன்ற படங்களில் பார்த்து மட்டும் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் !!
௨00௧ஆம் தேர்தல் முடிவுகளின் பொழுது நான் ராஜவல்லிபுரத்தில் இருந்தேன் . அப்பொழுது வீட்டில் டீவி கிடையாது . அதனால் பஸ் ஏறி சங்கர் சிமிண்ட்ஸ் பஸ் ஸ்டாப் அருகில் இருக்கும் ஒரு சலூனில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன் . தலைவர் தோற்றுப் போய்க் கொண்டிருந்தார் . மிகுந்த கவலையாய் இருந்தது !! அப்பொழுது ஒரு குரல் " கவலைப்படாதடா , அதான் நாற்பது எம் .எல் ,ஏ இருக்காங்கள்ல , தலைவரு சட்டசபைல கண்ல விரல விட்டு ஆட்டிருவாரு " ,திரும்பிப் பார்த்தால் , சோர்ந்த முகத்தோடு என் தோளில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் என் அப்பா !! நானும் எனது அப்பாவும் ஒத்துப் போகும் ஒரே விஶயம் தி மு க தான் . அன்று அப்பா சோகத்தில் சோமபானம் அருந்தினார். வெளியே நான் காத்திருந்தேன் . பின்னர் இருவரும் ஒன்றாக நடந்தே வீடு வந்து சேர்ந்தோம் . வரும் வழியிலெல்லாம் இதனைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம் . நீண்ட நாள் கழித்து அப்பாவுடன் தனிமையில் பேசியதால் , இந்த விஶயம் மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கிறது !!
பசங்களுடன் அரசியல் பற்றி அரட்டை அடிப்பது உண்டு !! நான் , பிரசன்னா , நொட்ஸ் , சிவா(?) தி மு க . பாலாஜி , காமராஜ் திவிர அதிமுக !! அரட்டை களைகட்டும் .தியாகராஜன் மக்கள் கட்சி , அதாவது எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ , அந்த கட்சி . ஹிஹிஹி !!மு கவை கைது செய்த நாளன்று நான் மதுரையில் இருந்து கிருஶ்ணகிரி வந்து கொண்டிருந்தேன் . நிறைய இடங்களில் தொண்டர்கள் மறியல் செய்வதும் , போலிஸ் வந்து கைது செய்வதுமாய் இருந்தது . சாலையினை மறிக்க வேண்டி , காவேரிப்பட்டினம் பாலம் அருகில் , டயருக்கு தீ வைத்து உருட்டி விட்டார்கள் .இதெல்லாம் பார்த்த பொழுது , தலைவருக்கு இவ்வளவு செல்வாக்கா என்று பிரமித்தேன் !!
எனக்குப் பிடித்தவர்கள் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்தும் விசித்திர குணம் எனக்கு உண்டு .அவர்களை விமர்சிப்பவர்களை கண்டாலும் , அதனைப் பற்றிப் படித்தாலும் எரிச்சல் தான் வருகிறது .எழுத்தாளர்களில் விகடன் மூலமாக ஞாநியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் . ஆனால் இந்த வார தொடரில் இவர் கருணாநிதியினை விமர்சித்திருந்தது போல் எதிர்கட்சியினர் கூட விமர்சித்திருக்கமாட்டார்கள் .படித்தவுடன் எனக்கு கோபம் தான் வந்தது . அவர் சொல்வதெல்லாம் நியாயம் தான் . உண்மை தான் . அதற்காக மற்றவரை குறை கூற இவர் யார் ? வாழ்வில் தவறேதும் செய்யாத புத்த பிட்சுவா ? மகாத்மாவா ? என்றேல்லாம் கேள்வி எனக்குள் வந்தது . காசுக்காக எழுதுபவர் தானே அவர் என்றளவுக்கெல்லாம் மனதிற்குள் திட்டித் தீர்த்தேன்.
வந்த கோபம் அப்படி !!
மீண்டும் வருகிறேன் !!
கருணாநிதியினை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்களே எனக்குத் தோன்றுகிறது . முதலாவது ஆணாதிக்கம் !! நம்மை ஆள்வது ஒரு பெண்ணா ? என்ற ஆணாதிக்க வெறி . இரண்டாவதும் முக்கியமுமாக பத்திரிக்கைகள் !! நான் ௧௯௯௧ - ௧௯௯௨ ஆம் ஆண்டு முதல் தான் அரசியல் பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பித்தேன் . அப்பா வாங்கி வரும் ஜூனியர் விகடனும் , நக்கீரனும் எனது அப்பொழுதைய அரசியல் ஆர்வத்தின் ஆரம்ப அறிமுகமானது .அந்த வருடங்களில் பத்திரிக்கைகளில் வந்தவையெல்லாம் ஜெ வின் ஊழல்கள் குறித்தவையாகவே இருந்தன. இவற்றிற்கான ஒரே மாற்றாக அப்பொழுது இருந்தது கருணாநிதி மட்டும் தான் . வைகோவும் , விஜயகாந்தும் அப்பொழுது இல்லை . காங்கிரஸும் , கம்யுனிஸ்டுகளும் இப்பொழுது இருப்பதினை விடவும் பரிச்சயமில்லாமல் இருந்தார்கள் !! அதுவும் மத்தியில் கணிசமான உறுப்பினர்களைப் பெற்றதால் கம்யுனிஸ்டுகளும் , வழக்கமான கோஶ்டிச்சண்டையால் காங்கிரஸும் இப்பொழுது தான் மக்களுக்கு கொஞ்சம் பரிச்சயமாகத் தொடங்கியிருக்கிறது !! அதனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்து , ஊழல் மிகுந்த ஆட்சியினை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது எனது ஆசையானது . அதுவே மு .க வின் மேல் எனக்குத் தீவிர பற்று உண்டாக காரணமானது !!
பின்னர் அவரைக் குறித்து பத்திரிக்கைகளில் படிக்கும் பொழுதெல்லாம் அந்த பற்று அதிகமானதே தவிர குறையவில்லை . பன்னிரண்டு வயதில் மாணவர்மன்றம் அமைத்தும் , பதினெட்டாவது வயதில் ரயில் மறிப்பு போராட்டம் நடத்தவும் எத்துணை துணிச்சல் இருந்திருக்க வேண்டும் ?
௯௬அம் ஆண்டு ஆட்சி அமைத்து நன்றாகவே ஆட்சி செய்தார் . ஊழலற்ற நேர்மையான ஆட்சி என்று சொல்லவில்லை. உழவர் சந்தை , மினிபஸ் , பாலங்கள் , சமத்துவபுரம் போன்ற கண்ணுக்குப் புலப்படும் நற்திட்டங்கள் !!முந்தைய ஆட்சியினை விட கம்மியான ஊழல் . இன்னமும் ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று முழங்குபவர்களை தூக்கத்தில் இருந்து தான் எழுப்ப வேண்டும் . காந்தி மீண்டும் வந்தால் கூட சாத்தியமில்லை . ரமணா , முதல்வன் போன்ற படங்களில் பார்த்து மட்டும் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் !!
௨00௧ஆம் தேர்தல் முடிவுகளின் பொழுது நான் ராஜவல்லிபுரத்தில் இருந்தேன் . அப்பொழுது வீட்டில் டீவி கிடையாது . அதனால் பஸ் ஏறி சங்கர் சிமிண்ட்ஸ் பஸ் ஸ்டாப் அருகில் இருக்கும் ஒரு சலூனில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன் . தலைவர் தோற்றுப் போய்க் கொண்டிருந்தார் . மிகுந்த கவலையாய் இருந்தது !! அப்பொழுது ஒரு குரல் " கவலைப்படாதடா , அதான் நாற்பது எம் .எல் ,ஏ இருக்காங்கள்ல , தலைவரு சட்டசபைல கண்ல விரல விட்டு ஆட்டிருவாரு " ,திரும்பிப் பார்த்தால் , சோர்ந்த முகத்தோடு என் தோளில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் என் அப்பா !! நானும் எனது அப்பாவும் ஒத்துப் போகும் ஒரே விஶயம் தி மு க தான் . அன்று அப்பா சோகத்தில் சோமபானம் அருந்தினார். வெளியே நான் காத்திருந்தேன் . பின்னர் இருவரும் ஒன்றாக நடந்தே வீடு வந்து சேர்ந்தோம் . வரும் வழியிலெல்லாம் இதனைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம் . நீண்ட நாள் கழித்து அப்பாவுடன் தனிமையில் பேசியதால் , இந்த விஶயம் மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கிறது !!
பசங்களுடன் அரசியல் பற்றி அரட்டை அடிப்பது உண்டு !! நான் , பிரசன்னா , நொட்ஸ் , சிவா(?) தி மு க . பாலாஜி , காமராஜ் திவிர அதிமுக !! அரட்டை களைகட்டும் .தியாகராஜன் மக்கள் கட்சி , அதாவது எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ , அந்த கட்சி . ஹிஹிஹி !!மு கவை கைது செய்த நாளன்று நான் மதுரையில் இருந்து கிருஶ்ணகிரி வந்து கொண்டிருந்தேன் . நிறைய இடங்களில் தொண்டர்கள் மறியல் செய்வதும் , போலிஸ் வந்து கைது செய்வதுமாய் இருந்தது . சாலையினை மறிக்க வேண்டி , காவேரிப்பட்டினம் பாலம் அருகில் , டயருக்கு தீ வைத்து உருட்டி விட்டார்கள் .இதெல்லாம் பார்த்த பொழுது , தலைவருக்கு இவ்வளவு செல்வாக்கா என்று பிரமித்தேன் !!
எனக்குப் பிடித்தவர்கள் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்தும் விசித்திர குணம் எனக்கு உண்டு .அவர்களை விமர்சிப்பவர்களை கண்டாலும் , அதனைப் பற்றிப் படித்தாலும் எரிச்சல் தான் வருகிறது .எழுத்தாளர்களில் விகடன் மூலமாக ஞாநியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் . ஆனால் இந்த வார தொடரில் இவர் கருணாநிதியினை விமர்சித்திருந்தது போல் எதிர்கட்சியினர் கூட விமர்சித்திருக்கமாட்டார்கள் .படித்தவுடன் எனக்கு கோபம் தான் வந்தது . அவர் சொல்வதெல்லாம் நியாயம் தான் . உண்மை தான் . அதற்காக மற்றவரை குறை கூற இவர் யார் ? வாழ்வில் தவறேதும் செய்யாத புத்த பிட்சுவா ? மகாத்மாவா ? என்றேல்லாம் கேள்வி எனக்குள் வந்தது . காசுக்காக எழுதுபவர் தானே அவர் என்றளவுக்கெல்லாம் மனதிற்குள் திட்டித் தீர்த்தேன்.
வந்த கோபம் அப்படி !!
மீண்டும் வருகிறேன் !!
எனக்குப் பிடித்தவர்கள் : இரண்டு
சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்தது அஜீத் . நான் அஜித் ரசிகனானது சுவாரஸ்ய வரலாறு !! வெறுமனே இருக்கும் பொழுது அரட்டை அடிப்பது , பசங்களின் பொழுதுப்பொக்கு . அதுபோல ஒரு நாள் , கே எஸ் ஜி எஸ்டேட்டில் இருக்கும் பொழுது , இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வந்தோம் . கச்சேரி தொடங்கியது . பேச்சுவாக்கில் அஜித்தா விஜய்யா ? என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சையில் வந்து நின்றது . . இந்த இடத்தில் பிரசன்னா பற்றி சொல்ல வேண்டும் . காலையில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது , இனிமையான அக்காலை நேர தூக்கத்தினை கெடுக்கும் வகையில் , திடிறென்று ஏதாவது சத்தமொ , பேச்சோ கேட்டால் உறுதியாக சொல்லிவிடலாம் , பிரசன்னா எழுந்துவிட்டான் என்று !! அது பொல் இரவு ரூமிற்கு வரும்பொழுது நிசப்தமாக இருந்தால் , சத்தியம் செய்து சொல்லிவிடலாம் பிரசன்னா தூங்கி விட்டான் என்று !! காலை எழுவது முதல் மாலை அடங்கும் வரை எதையாவது பேசிக்கொண்டும் , முக்கியமாக யாரையாவது ஓட்டிக் கொண்டு இருப்பது பிரசன்னாவின் அன்றாட வேலைகளுள் முதலானது . அப்படிப்பட்ட பிரசன்னாவை எதிர்த்துப் பேசி , அதனால் ஓட்டு வாங்கிக் கொண்டும் , அவனை ஓட்டிக் கொண்டும் இருப்பது அலாதியான சுகம் !! பிரசன்னா விஜய் பக்கம் , அதனால் நான் அஜித் பக்கம் நின்றேன் !!
ஆனால் நானே எதிர்பாராத வகையில் பிரசன்னாவிற்கு சப்போர்டாகவும் , விஜய்கு ஆதரவாகவும் நிறைய பேர் ஆகிவிட்டார்கள் !! பிரசன்னா , அசோக் , காமராஜ் , தியாகராஜன் , என பேட்ஸின் பெரும்புள்ளிகள் அந்தப் பக்கம் . கூட்டம் பார்த்து கடலையும் அப்பக்கம் போய்விட்டான் . நானும் , கார்த்தியும் , பாலாஜியும் மட்டுமே இப்பக்கம் . வெண்மணி பின்னால் வந்து சேர்ந்தான் . இதில் பாலாஜி மதில் மேல் இருக்கும் ’ குருட்டு , மற்றும் செவிட்டுப் பூனை ’ , அதனால் அப்பக்கம் போய் விட வாய்ப்பு அதிகம் !! தனியாக மாபெரும் கூட்டத்தினை எதிர்த்து பேசிப் போராடுவதும் சுவாரஸ்யமானது . காலை முதல் மாலை வரை இதைப் பற்றியே பேச்சாயிருக்கும் . அனுபவித்தேன் !! சொல்லிவிட்டொம் என்பதற்காகவே அஜித் படங்களை விரும்பிப் பார்ப்பேன் . நாளைடைவில் அஜித்தின் வெறித்தனமான ரசிகனானேன் !!
பசங்களுடன் பார்த்த அஜித் படங்களில் மறக்க முடியாதது ரெட்டும் , சிட்டிஸனும் !! புதூரில் மேட்ச் ஆடிய பொழுது ரிலீஸானது ரெட் . அப்பொழுது சிகரெட் வாங்கக் கூட என்னிடம் காசு இல்லை . காட்ஸிடம் கேட்டேன் . அவரும் முடியாது என்று சொல்லிக்கொண்டே வந்தார் . ரெட் படத்திற்கு பொனோம் . படம் ப்ளாப் . இன்டர்வலில் "காட்ஸ் " என்றென் . உடனே அவர் , பையில் இருந்த காசு எடுத்துக் கொடுத்து " போடா போய்ட்டு வா , அப்படியே எனக்கும் காபி வாங்கிட்டு வா , தலைய வலிக்குது " என்றார் . படம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் , " படம் கலக்கல் , கண்டிப்பாக இரண்டாவது தடவை பார்க்க வேண்டும் " என்றேன் . பதிலுக்கு ரோட்டில் போய்க் கொண்டிருந்த யாரோ , " இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்குறதுக்கு சாகலாம் " என்றது மறக்க முடியாது !! இந்த படத்திற்காக தான் சிவா நெய்வேலியில் நூறு ருபாய் ப்ளாக்கில் படம் பார்த்தது !!
நான் அஜித்தின் புகழ் பாட , பதிலுக்கு தியாகராஜனோ பிரசன்னாவோ அதனை ஓட்ட , என்று கல்லூரிக் காலங்கள் இனிதே கழிந்தன . பெயிண்டின் அக்கா கல்யாணமும் , தாமு அக்கா கல்யாணமும் அடுத்தடுத்த மூன்று நாள் இடைவேளியில் வந்தது . பேட்ஸ் அனைவரும் ஒரு டூர் பொல கிளம்பினோம் . கார்த்தி வீட்டில் சாப்பாடு , பெயிண்ட் அக்கா கல்யாணம் பின்னர் மதுரையில் தாமு அக்கா கல்யாணம் என்று ப்ளான் செய்தோம் !! தஞ்சாவூரில் இருக்கும் பொழுது ரிலிஸானது சிட்டிஸன் . தியேட்டருக்குச் சென்றால் நல்ல கூட்டம் . டிக்கட் கிடைத்து நான் மட்டும் உள்ளே சென்றேன் . பசங்களுக்கு டிக்கட் கிடைக்கவில்லை !! அதனால் வெளியே வந்தேன் . அப்புறம் தான் தெரிந்தது , டிக்கட் கிடைக்காத எரிச்சலோ , சந்தோஶமோ பிரசன்னா அதனை சலித்துக்கொண்டு தரையில் உதைத்து வெளிப்படுத்த , அதனை பார்த்த போலீஸ்காரர் அவனை காலில் அடிக்க என்று களேபரமானது !! தஞ்சாவூரில் படம் பார்க்கவில்லை . மதுரை கிளம்பினோம் .
மதுரை என் சொந்த ஊர் . அங்கு தான் " நோட் புக் " கல்யாண மஹாலில் வைத்து தாமு அக்காவின் கல்யாணம் . அங்கிருந்து அரைமணி நேர நடைதூரத்தில் அபிராமி தியேட்டர் . சிட்டிஸன் ரிலிஸ் !! நான் , நொட்ஸ் , காமராஜ் , பாலாஜி , கடலை , கார்த்தி என ஒரு கூட்டமே படம் பார்க்கச் சேன்றொம்.இரவு பத்து மணி காட்சிக்கு ஒன்பது மணிக்கே சென்றுவிட்டோம் . கவுண்டரில் கூட்டமே இல்லை . நொட்ஸ் தான் கவுண்டரில் முதலாவதாக இருந்தான் . அப்பொழுதே அவனிடம் சொன்னேன் , " மச்சி டிக்கட் கொடுக்குற நேரத்தில நிறைய பேர் வருவாங்க , அதனால ஜாக்கிரதையா இரு !! " , சொன்னது பொலவே டிக்கட் கொடுக்கும் நேரத்தில் எங்கள் மேல் ஏறிக்கொண்டும் , மிதித்துக்கொண்டும் சிலர் வர , நோட்ஸ் ஆவேசப்பட்டு சவுண்ட் விட , எனக்கோ பயம் , "எங்கே மெட்ராஸில் விட்ட பாக்கியினை மதுரையில் வாங்கிவிடுவார்களோ என்று !! நல்லவேளை பதில் சவுண்ட் வந்தவுடன் நொட்ஸ் அமைதியாகிவிட்டான் !! படம் பார்த்துவிட்டு அனைவரும் நடந்தே திரும்பிவந்தது மறக்க முடியாதது !! பின்னர் சில காலம் கழித்து பர்கூர் துரைஸ் பேரடைஸில் சிட்டிசன் இறங்கியது !! மழையோடு நனைந்து கொண்டு நானும் நொட்ஸும் படம் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . படத்துக்காக அல்ல , படத்தின் இண்டர்வலில் கிடைக்கும் டீக்காக தான் நொட்ஸ் படத்திற்கு வருவான் . படம் ஆரம்பித்ததும் ஆரம்பிக்கும் இவனது தூக்கம் , இன்டர்வலில் முடியும் , பின்னர் மறுமடியும் ஆரம்பிக்கும் !! எனக்கோ வழித்துணைக்கு ஒரு ஆள் !! அவ்வளவுதான் .
அபுதாபி கிளம்பும் முன் , பாண்டிசேரி சென்றோம் . அங்கு திருப்பதி ரிலிஸ் .பசங்கள் அனைவரும் கூட்டமாக சென்றோம் !! படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது !! இரண்டரை மணி நேர படத்தில் , கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நானும் சிவாவும் வெளியே தான் கூல் ட்ரிங் சாப்பிட்டும் , டீ குடித்தும் நேரம் போக்கினோம் !!
அஜித்தின் அனைத்துப் படங்களையும் பார்த்துவிடுவது எனது ’தலை’யாய கடமையாய் இருந்தது , இருக்கிறது !! . வேலைக்காகத படமானாலும் நான்கு தடவை பார்த்துவிட்டால் தான் நிம்மதி . குட்டி அஜித் வரப்போவதாக பேப்பரில் அறிந்தேன் . சந்தோஶம் , மகிழ்ச்சி !!
பெரிய தலை பட ரிலிஸுக்காக சின்ன தலை வேய்ட்டிங் !! கிரிடம் கண்டிப்பாக கிரிடம் சூடும் . தவறிவிட்டால் , பில்லா ௨00௭ அதற்கு பதில் சொல்லும் !!
மீண்டும் வருகிறேன் .
ஆனால் நானே எதிர்பாராத வகையில் பிரசன்னாவிற்கு சப்போர்டாகவும் , விஜய்கு ஆதரவாகவும் நிறைய பேர் ஆகிவிட்டார்கள் !! பிரசன்னா , அசோக் , காமராஜ் , தியாகராஜன் , என பேட்ஸின் பெரும்புள்ளிகள் அந்தப் பக்கம் . கூட்டம் பார்த்து கடலையும் அப்பக்கம் போய்விட்டான் . நானும் , கார்த்தியும் , பாலாஜியும் மட்டுமே இப்பக்கம் . வெண்மணி பின்னால் வந்து சேர்ந்தான் . இதில் பாலாஜி மதில் மேல் இருக்கும் ’ குருட்டு , மற்றும் செவிட்டுப் பூனை ’ , அதனால் அப்பக்கம் போய் விட வாய்ப்பு அதிகம் !! தனியாக மாபெரும் கூட்டத்தினை எதிர்த்து பேசிப் போராடுவதும் சுவாரஸ்யமானது . காலை முதல் மாலை வரை இதைப் பற்றியே பேச்சாயிருக்கும் . அனுபவித்தேன் !! சொல்லிவிட்டொம் என்பதற்காகவே அஜித் படங்களை விரும்பிப் பார்ப்பேன் . நாளைடைவில் அஜித்தின் வெறித்தனமான ரசிகனானேன் !!
பசங்களுடன் பார்த்த அஜித் படங்களில் மறக்க முடியாதது ரெட்டும் , சிட்டிஸனும் !! புதூரில் மேட்ச் ஆடிய பொழுது ரிலீஸானது ரெட் . அப்பொழுது சிகரெட் வாங்கக் கூட என்னிடம் காசு இல்லை . காட்ஸிடம் கேட்டேன் . அவரும் முடியாது என்று சொல்லிக்கொண்டே வந்தார் . ரெட் படத்திற்கு பொனோம் . படம் ப்ளாப் . இன்டர்வலில் "காட்ஸ் " என்றென் . உடனே அவர் , பையில் இருந்த காசு எடுத்துக் கொடுத்து " போடா போய்ட்டு வா , அப்படியே எனக்கும் காபி வாங்கிட்டு வா , தலைய வலிக்குது " என்றார் . படம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் , " படம் கலக்கல் , கண்டிப்பாக இரண்டாவது தடவை பார்க்க வேண்டும் " என்றேன் . பதிலுக்கு ரோட்டில் போய்க் கொண்டிருந்த யாரோ , " இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்குறதுக்கு சாகலாம் " என்றது மறக்க முடியாது !! இந்த படத்திற்காக தான் சிவா நெய்வேலியில் நூறு ருபாய் ப்ளாக்கில் படம் பார்த்தது !!
நான் அஜித்தின் புகழ் பாட , பதிலுக்கு தியாகராஜனோ பிரசன்னாவோ அதனை ஓட்ட , என்று கல்லூரிக் காலங்கள் இனிதே கழிந்தன . பெயிண்டின் அக்கா கல்யாணமும் , தாமு அக்கா கல்யாணமும் அடுத்தடுத்த மூன்று நாள் இடைவேளியில் வந்தது . பேட்ஸ் அனைவரும் ஒரு டூர் பொல கிளம்பினோம் . கார்த்தி வீட்டில் சாப்பாடு , பெயிண்ட் அக்கா கல்யாணம் பின்னர் மதுரையில் தாமு அக்கா கல்யாணம் என்று ப்ளான் செய்தோம் !! தஞ்சாவூரில் இருக்கும் பொழுது ரிலிஸானது சிட்டிஸன் . தியேட்டருக்குச் சென்றால் நல்ல கூட்டம் . டிக்கட் கிடைத்து நான் மட்டும் உள்ளே சென்றேன் . பசங்களுக்கு டிக்கட் கிடைக்கவில்லை !! அதனால் வெளியே வந்தேன் . அப்புறம் தான் தெரிந்தது , டிக்கட் கிடைக்காத எரிச்சலோ , சந்தோஶமோ பிரசன்னா அதனை சலித்துக்கொண்டு தரையில் உதைத்து வெளிப்படுத்த , அதனை பார்த்த போலீஸ்காரர் அவனை காலில் அடிக்க என்று களேபரமானது !! தஞ்சாவூரில் படம் பார்க்கவில்லை . மதுரை கிளம்பினோம் .
மதுரை என் சொந்த ஊர் . அங்கு தான் " நோட் புக் " கல்யாண மஹாலில் வைத்து தாமு அக்காவின் கல்யாணம் . அங்கிருந்து அரைமணி நேர நடைதூரத்தில் அபிராமி தியேட்டர் . சிட்டிஸன் ரிலிஸ் !! நான் , நொட்ஸ் , காமராஜ் , பாலாஜி , கடலை , கார்த்தி என ஒரு கூட்டமே படம் பார்க்கச் சேன்றொம்.இரவு பத்து மணி காட்சிக்கு ஒன்பது மணிக்கே சென்றுவிட்டோம் . கவுண்டரில் கூட்டமே இல்லை . நொட்ஸ் தான் கவுண்டரில் முதலாவதாக இருந்தான் . அப்பொழுதே அவனிடம் சொன்னேன் , " மச்சி டிக்கட் கொடுக்குற நேரத்தில நிறைய பேர் வருவாங்க , அதனால ஜாக்கிரதையா இரு !! " , சொன்னது பொலவே டிக்கட் கொடுக்கும் நேரத்தில் எங்கள் மேல் ஏறிக்கொண்டும் , மிதித்துக்கொண்டும் சிலர் வர , நோட்ஸ் ஆவேசப்பட்டு சவுண்ட் விட , எனக்கோ பயம் , "எங்கே மெட்ராஸில் விட்ட பாக்கியினை மதுரையில் வாங்கிவிடுவார்களோ என்று !! நல்லவேளை பதில் சவுண்ட் வந்தவுடன் நொட்ஸ் அமைதியாகிவிட்டான் !! படம் பார்த்துவிட்டு அனைவரும் நடந்தே திரும்பிவந்தது மறக்க முடியாதது !! பின்னர் சில காலம் கழித்து பர்கூர் துரைஸ் பேரடைஸில் சிட்டிசன் இறங்கியது !! மழையோடு நனைந்து கொண்டு நானும் நொட்ஸும் படம் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . படத்துக்காக அல்ல , படத்தின் இண்டர்வலில் கிடைக்கும் டீக்காக தான் நொட்ஸ் படத்திற்கு வருவான் . படம் ஆரம்பித்ததும் ஆரம்பிக்கும் இவனது தூக்கம் , இன்டர்வலில் முடியும் , பின்னர் மறுமடியும் ஆரம்பிக்கும் !! எனக்கோ வழித்துணைக்கு ஒரு ஆள் !! அவ்வளவுதான் .
அபுதாபி கிளம்பும் முன் , பாண்டிசேரி சென்றோம் . அங்கு திருப்பதி ரிலிஸ் .பசங்கள் அனைவரும் கூட்டமாக சென்றோம் !! படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது !! இரண்டரை மணி நேர படத்தில் , கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நானும் சிவாவும் வெளியே தான் கூல் ட்ரிங் சாப்பிட்டும் , டீ குடித்தும் நேரம் போக்கினோம் !!
அஜித்தின் அனைத்துப் படங்களையும் பார்த்துவிடுவது எனது ’தலை’யாய கடமையாய் இருந்தது , இருக்கிறது !! . வேலைக்காகத படமானாலும் நான்கு தடவை பார்த்துவிட்டால் தான் நிம்மதி . குட்டி அஜித் வரப்போவதாக பேப்பரில் அறிந்தேன் . சந்தோஶம் , மகிழ்ச்சி !!
பெரிய தலை பட ரிலிஸுக்காக சின்ன தலை வேய்ட்டிங் !! கிரிடம் கண்டிப்பாக கிரிடம் சூடும் . தவறிவிட்டால் , பில்லா ௨00௭ அதற்கு பதில் சொல்லும் !!
மீண்டும் வருகிறேன் .
எனக்குப் பிடித்தவர்கள் : ஓன்று
நண்பர்களையும் , உறவினர்களையும் தவிர்த்து , சினிமாவிலும் பொதுவாழ்க்கையிலும் எனக்குப் பிடித்தவர்கள் இவர்கள் .இவர்களைப் பிடித்துப் போனதற்கு சில பல காரணங்கள் உண்டு , ஆனால் இவர்களது துறையில் மற்றவர்களை வெறுப்பதற்கு இவர்களே காரணம் !!
சினிமாவில் ரஜினி . ரஜினியின் வெறித்தனமான ரசிகன் நான் . சின்ன வயதில் மாமாவுடனும் , சித்தியுடனும் தான் இருப்பேன் . அவர்களும் ரஜினி ரசிகர்கள் . அவர்களிடம் இருந்து தான் இது எனக்கும் தொற்றியிருக்கும் என்றே நினைக்கிறேன் !! ரஜினி படங்கள் என்றால் எனக்கு உயிர் . எத்தனை தடவை போட்டாலும் , கலங்காது பார்த்துக்கொண்டே இருப்பேன் .
அப்பொழுது வீட்டில் டி.வி இல்லை . பக்கத்து வீட்டில் டிவி போட்டால் , எங்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன் . வெள்ளிக்கிழமை தோறும் ஒளியும் ஒலியும் , ஞாயிறு தோறும் சாயங்கால வேளையில் போடும் தமிழ்த்திரைப்படம் போன்றவற்றிற்கு மட்டும் ஸ்பெஶல் பெர்மிஶன் . அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் !!சில நேரங்களில் ரஜினி படங்கள் போடுவார்கள் . அன்று காலை முதலே பரபரப்பாக இருப்பேன் . மளிகைக்கடைக்குப் போவது , வேறு எதாவது வெளி வேலை என்றேல்லாம் கேட்டு கேட்டு முடித்துவிட்டு தான் டிவி பார்க்கப் போவேன் . இல்லாவிடில் நடுவில் செல்ல வேண்டியிருக்கும் !!
தனியாக படம் பார்க்க ஆரம்பித்ததும் , பசங்களுடன் நான் பார்த்த முதல் ரஜினி படம் பாட்ஶா தான் . அதுவரை வீட்டினர் யாருடனாவது தான் படம் பார்க்கச் செல்ல முடியும் . முதல் முறையாக நண்பர்களுடன் ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் , பையில் இருக்கும் இருபது ருபாயுடன் சைக்கிளில் வேகம் வேகமாக தியேட்டர் சென்றால் , டிக்கட் விலை நாற்பது . கண்டிப்பாக வீட்டில் கேட்க முடியாது. கேட்டால் உதை விழுவது உறுதி . அதனால் என் நண்பன் வாசுதேவன் வீட்டிற்குச் சென்றேன் .அவனுக்கு தசைகளில் கோளாறு. சட்டென்று கை கால் தூக்க முடியாது . பிறவிக் கோளாறு . வைத்தியம் செய்து வந்தான் . அவர்கள் வீட்டில் பெரிய கை . அப்பாவும் அம்மாவும் டாக்டர்கள் . அதனால் பையன் படம் பார்ப்பதற்கு கண்டிப்பாக நூறு ருபாய்க்கு குறையாமல் கொடுப்பார்கள் . அவனை வழுக்கட்டாயமாக வரச் செய்து , டிக்கெட் எடுத்தால் , அது அடுத்த ஶோவுக்கான டிக்கெட் . இரவு படம் முடிந்ததும் , கால் வலிக்க சைக்கிள் மிதித்து , அவனை அண்ணாநகரில் இருந்து புதூர் வரை கொண்டு போய் விட்டு விட்டு வீட்டிற்கு வர , இரவு மணி பன்னிரெண்டு . அப்பாவின் சீப்பு அடியும் கிடைத்தது , மறக்க முடியாதது !! அடுத்த நாள் , பள்ளியில் சுதந்திரப் போராட்ட நாயகர்களைப் போல் , நானும் வாசுதேவனும் சுற்றிலும் பசங்களும் , பெண்களும் படைசூழ படத்தின் கதையினை விவரித்ததும் , அதை வைத்து வாரந்தோறம் சனிக்கிழமை நடக்கும் கிளப்பில் நாடகமாய் போட்டதும் இன்னும் நினைவிலிருக்கிறது !!!
நாகர்கோவிலில் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் படையப்பா படம் ரிலிஸானது . முதல் ஶோ பார்க்காவிட்டால் எப்படி ? நானும் குமாரசாமியும் ( சம்பத் ) மற்ற க்ளாசில் உள்ள பசங்கள் அனைவரும் படம் பார்ப்பதென முடிவானது . எப்படியும் க்ளாஸ் கட் அடிக்க வேண்டும் . காசைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை . நான் தான் க்ளாஸ் லீடர் என்பதால் , எனது க்ளாஸ் பசங்களின் மாச ஸ்கூல் பீஸ் என்னிடம் தான் இருக்கும் . முதல் தேதியே அனைவரிடமும் வாங்கி , இருபத்தியேழாம் ( கடைசி நாள் ) தேதி தான் பணம் அடைப்பேன் . அதனால் எப்பவும் என்னிடம் காசு இருக்கும் . ரிலிஸுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ரசிகர் மன்ற டிக்கட் வாங்கியாகி விட்டது .மொத்தம் இருபது டிக்கட் . க்ளாசிலோ மொத்தமே முப்பது மாணவர்கள் தான் , பெண்கள் எட்டு பேர் . முதல் நாளே ப்ளான் செய்தது போல் நானும் இன்னும் நான்கு பேரும் லீவ் எடுத்துவிட்டோம் . ( அப்பொழுது தான் அடுத்த நாள் வரவில்லையென்றாலும் சந்தேகம் வராது !! ) , சம்பத்துக்கு அன்று வயிற்றுவலி என்றும் , அவனை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல நான்கு பேருமாய் , கிட்டத்தட்ட அனைவரும் எதனையாவது சாக்குச் சொல்லி மட்டம் தட்டி விட்டு படம் பார்த்தோம் . அடுத்த நாள் பள்ளியில் பிரச்சனையாகி விட்டது . க்ளாசில் மொத்தமே பத்து மாணவர்கள் தான் இருந்திருக்கிறார்கள் . பெற்றவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி விட்டார்கள் . எப்படியோ சமாளித்தோம் . !!! எடுத்த பீஸை சரிகட்ட , லெப்ரசி டொனேஶன் என்று கார்ட் அடித்து , வீடு வீடாக சென்று பணம் வாங்கியது ஒரு தனிக்கதை !!!
கிருஶ்ணகிரியில் படிக்கும் பொழுது ரீலிஸானது ’ பாபா ’ .பிரசன்னாவும் கூவமும் சென்று காசட் வாங்கி வந்தார்கள் ( அது ஒரு தனிக்கதை ) . அக்காஸட்டினை ருமில் இருந்த அனைவரும் ஒன்றாக ஒரே ரூமில் உட்கார்ந்து கேட்டது ஞாபகம் இருக்கிறது . நானும் கூவமும் படம் பார்க்க திட்டமிட்டொம் . பாதி மேட்சில் கிளம்பி வந்தான் கூவம் . அதனால் அசோக்கும் , பிரசன்னாவிற்கும் கோபம் !! படம் பார்க்க டிக்கட் எடுக்கச் செல்லும் பொழுதெ , ரஜினியின் கட் அவுட் சரிந்தது . படம் எனக்குப் பிடித்திருந்தாலும் , ப்ளாப் . தண்ணி அடித்தோம் . அன்று பாரில் குடிமகன்கள் அனைவரும் பாபா ப்ளாப் ஆனது பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர் !!! படத்தினை ஒரு எட்டு முறை பார்திருப்பேன் தியேட்டரில் !! கடைசி முறையாக சென்ற பொழுது , நான் மட்டும் தனியாக சென்று பார்த்ததும் நினைவிலிருக்கிறது .
மதுரையில் நல்ல சம்பளத்தில் பிலிப்ஸில் இருக்கும் பொழுது ரிலிஸானது சந்திரமுகி . படத்தின் முதல் ஶோ , இண்டர்வலில் மானேஜர் ராதாகிருஶ்ணன் போன் பண்ணியிருந்தார் . வேறு எதைப் பற்றியும் கேட்கவில்லை , " படம் பார்த்திருப்பேன்னு தெரியும் , எப்படி இருக்கு ?" என்றார் . இது தான் தலைவர் !! ஏ க்ளாஸ் , பி க்ளாஸ் என்றில்லை , எல்லா க்ளாசிலும் தலைவருக்கு ரசிகர்கள் உண்டு !! மப்பில் ஒருதடவை படம் பார்க்க நானும் முத்துவும் சென்று , கீழே விழுந்து , எனக்கும் வண்டிக்கும் நல்ல அடிபட்டும் , படம் பார்த்துவிட்டே டாக்டரிடம் போனோம் .
பெங்களுரில் இருக்கும் பொழுது , நானும் சஞ்சையும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தோம் . " சரியா நடக்கத் தெரியாது , ஸ்டைலுன்டாங்க !! சரியா தமிழ் பேசத் தெரியாது ஸ்டைலுன்டாங்க !!" என்று . அதுபோல் தலைவர் எல்லாத்தையும் சரியாகச் செய்தாலும் சரி , எல்லாத்தையும் தப்பாகச் செய்தாலும் சரி , அது ஸ்டைல் தான் !!ஓரு நடிகனின் திரைப்பட அறிவிப்பே பரபரப்பாகிறது என்றால் , அது ரஜினிக்கு மட்டுமே !!ரஜினி குடிக்கும் ஜூஸிலிருந்து , வைக்கும் விக் வரை எல்லாமே பத்திரிக்கைக்கு நியூஸ் தான் .
சில சமயங்களில் உறைக்கிறது , இது கிறுக்குத்தனம் என்று !!காமராஜுக்கும் எனக்கும் இதனால் சண்டையே வந்திருக்கிறது . அவர் கமல் ரசிகர்!! . ஆனாலும் முடியவில்லை . இதோ இன்னும் பத்து நாட்களில் சிவாஜி !! இப்பொழுதே ஆபிஸில் சொல்லிவிட்டேன் . அடுத்த வாரம் அண்ணண் வீட்டில் கல்யாண நாள் என்று .படம் எப்பொழுது இங்கு ரிலிஸ் ஆகும் எனத் தெரியவில்லை . ரிலிஸ் அன்று படம் பார்க்காவிட்டால் ஜென்ம சாபல்யம் கிட்டாது போல ஒரு தவிப்பு .
மீண்டும் வருகிறேன் !!
சினிமாவில் ரஜினி . ரஜினியின் வெறித்தனமான ரசிகன் நான் . சின்ன வயதில் மாமாவுடனும் , சித்தியுடனும் தான் இருப்பேன் . அவர்களும் ரஜினி ரசிகர்கள் . அவர்களிடம் இருந்து தான் இது எனக்கும் தொற்றியிருக்கும் என்றே நினைக்கிறேன் !! ரஜினி படங்கள் என்றால் எனக்கு உயிர் . எத்தனை தடவை போட்டாலும் , கலங்காது பார்த்துக்கொண்டே இருப்பேன் .
அப்பொழுது வீட்டில் டி.வி இல்லை . பக்கத்து வீட்டில் டிவி போட்டால் , எங்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன் . வெள்ளிக்கிழமை தோறும் ஒளியும் ஒலியும் , ஞாயிறு தோறும் சாயங்கால வேளையில் போடும் தமிழ்த்திரைப்படம் போன்றவற்றிற்கு மட்டும் ஸ்பெஶல் பெர்மிஶன் . அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் !!சில நேரங்களில் ரஜினி படங்கள் போடுவார்கள் . அன்று காலை முதலே பரபரப்பாக இருப்பேன் . மளிகைக்கடைக்குப் போவது , வேறு எதாவது வெளி வேலை என்றேல்லாம் கேட்டு கேட்டு முடித்துவிட்டு தான் டிவி பார்க்கப் போவேன் . இல்லாவிடில் நடுவில் செல்ல வேண்டியிருக்கும் !!
தனியாக படம் பார்க்க ஆரம்பித்ததும் , பசங்களுடன் நான் பார்த்த முதல் ரஜினி படம் பாட்ஶா தான் . அதுவரை வீட்டினர் யாருடனாவது தான் படம் பார்க்கச் செல்ல முடியும் . முதல் முறையாக நண்பர்களுடன் ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் , பையில் இருக்கும் இருபது ருபாயுடன் சைக்கிளில் வேகம் வேகமாக தியேட்டர் சென்றால் , டிக்கட் விலை நாற்பது . கண்டிப்பாக வீட்டில் கேட்க முடியாது. கேட்டால் உதை விழுவது உறுதி . அதனால் என் நண்பன் வாசுதேவன் வீட்டிற்குச் சென்றேன் .அவனுக்கு தசைகளில் கோளாறு. சட்டென்று கை கால் தூக்க முடியாது . பிறவிக் கோளாறு . வைத்தியம் செய்து வந்தான் . அவர்கள் வீட்டில் பெரிய கை . அப்பாவும் அம்மாவும் டாக்டர்கள் . அதனால் பையன் படம் பார்ப்பதற்கு கண்டிப்பாக நூறு ருபாய்க்கு குறையாமல் கொடுப்பார்கள் . அவனை வழுக்கட்டாயமாக வரச் செய்து , டிக்கெட் எடுத்தால் , அது அடுத்த ஶோவுக்கான டிக்கெட் . இரவு படம் முடிந்ததும் , கால் வலிக்க சைக்கிள் மிதித்து , அவனை அண்ணாநகரில் இருந்து புதூர் வரை கொண்டு போய் விட்டு விட்டு வீட்டிற்கு வர , இரவு மணி பன்னிரெண்டு . அப்பாவின் சீப்பு அடியும் கிடைத்தது , மறக்க முடியாதது !! அடுத்த நாள் , பள்ளியில் சுதந்திரப் போராட்ட நாயகர்களைப் போல் , நானும் வாசுதேவனும் சுற்றிலும் பசங்களும் , பெண்களும் படைசூழ படத்தின் கதையினை விவரித்ததும் , அதை வைத்து வாரந்தோறம் சனிக்கிழமை நடக்கும் கிளப்பில் நாடகமாய் போட்டதும் இன்னும் நினைவிலிருக்கிறது !!!
நாகர்கோவிலில் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் படையப்பா படம் ரிலிஸானது . முதல் ஶோ பார்க்காவிட்டால் எப்படி ? நானும் குமாரசாமியும் ( சம்பத் ) மற்ற க்ளாசில் உள்ள பசங்கள் அனைவரும் படம் பார்ப்பதென முடிவானது . எப்படியும் க்ளாஸ் கட் அடிக்க வேண்டும் . காசைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை . நான் தான் க்ளாஸ் லீடர் என்பதால் , எனது க்ளாஸ் பசங்களின் மாச ஸ்கூல் பீஸ் என்னிடம் தான் இருக்கும் . முதல் தேதியே அனைவரிடமும் வாங்கி , இருபத்தியேழாம் ( கடைசி நாள் ) தேதி தான் பணம் அடைப்பேன் . அதனால் எப்பவும் என்னிடம் காசு இருக்கும் . ரிலிஸுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ரசிகர் மன்ற டிக்கட் வாங்கியாகி விட்டது .மொத்தம் இருபது டிக்கட் . க்ளாசிலோ மொத்தமே முப்பது மாணவர்கள் தான் , பெண்கள் எட்டு பேர் . முதல் நாளே ப்ளான் செய்தது போல் நானும் இன்னும் நான்கு பேரும் லீவ் எடுத்துவிட்டோம் . ( அப்பொழுது தான் அடுத்த நாள் வரவில்லையென்றாலும் சந்தேகம் வராது !! ) , சம்பத்துக்கு அன்று வயிற்றுவலி என்றும் , அவனை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல நான்கு பேருமாய் , கிட்டத்தட்ட அனைவரும் எதனையாவது சாக்குச் சொல்லி மட்டம் தட்டி விட்டு படம் பார்த்தோம் . அடுத்த நாள் பள்ளியில் பிரச்சனையாகி விட்டது . க்ளாசில் மொத்தமே பத்து மாணவர்கள் தான் இருந்திருக்கிறார்கள் . பெற்றவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி விட்டார்கள் . எப்படியோ சமாளித்தோம் . !!! எடுத்த பீஸை சரிகட்ட , லெப்ரசி டொனேஶன் என்று கார்ட் அடித்து , வீடு வீடாக சென்று பணம் வாங்கியது ஒரு தனிக்கதை !!!
கிருஶ்ணகிரியில் படிக்கும் பொழுது ரீலிஸானது ’ பாபா ’ .பிரசன்னாவும் கூவமும் சென்று காசட் வாங்கி வந்தார்கள் ( அது ஒரு தனிக்கதை ) . அக்காஸட்டினை ருமில் இருந்த அனைவரும் ஒன்றாக ஒரே ரூமில் உட்கார்ந்து கேட்டது ஞாபகம் இருக்கிறது . நானும் கூவமும் படம் பார்க்க திட்டமிட்டொம் . பாதி மேட்சில் கிளம்பி வந்தான் கூவம் . அதனால் அசோக்கும் , பிரசன்னாவிற்கும் கோபம் !! படம் பார்க்க டிக்கட் எடுக்கச் செல்லும் பொழுதெ , ரஜினியின் கட் அவுட் சரிந்தது . படம் எனக்குப் பிடித்திருந்தாலும் , ப்ளாப் . தண்ணி அடித்தோம் . அன்று பாரில் குடிமகன்கள் அனைவரும் பாபா ப்ளாப் ஆனது பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர் !!! படத்தினை ஒரு எட்டு முறை பார்திருப்பேன் தியேட்டரில் !! கடைசி முறையாக சென்ற பொழுது , நான் மட்டும் தனியாக சென்று பார்த்ததும் நினைவிலிருக்கிறது .
மதுரையில் நல்ல சம்பளத்தில் பிலிப்ஸில் இருக்கும் பொழுது ரிலிஸானது சந்திரமுகி . படத்தின் முதல் ஶோ , இண்டர்வலில் மானேஜர் ராதாகிருஶ்ணன் போன் பண்ணியிருந்தார் . வேறு எதைப் பற்றியும் கேட்கவில்லை , " படம் பார்த்திருப்பேன்னு தெரியும் , எப்படி இருக்கு ?" என்றார் . இது தான் தலைவர் !! ஏ க்ளாஸ் , பி க்ளாஸ் என்றில்லை , எல்லா க்ளாசிலும் தலைவருக்கு ரசிகர்கள் உண்டு !! மப்பில் ஒருதடவை படம் பார்க்க நானும் முத்துவும் சென்று , கீழே விழுந்து , எனக்கும் வண்டிக்கும் நல்ல அடிபட்டும் , படம் பார்த்துவிட்டே டாக்டரிடம் போனோம் .
பெங்களுரில் இருக்கும் பொழுது , நானும் சஞ்சையும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தோம் . " சரியா நடக்கத் தெரியாது , ஸ்டைலுன்டாங்க !! சரியா தமிழ் பேசத் தெரியாது ஸ்டைலுன்டாங்க !!" என்று . அதுபோல் தலைவர் எல்லாத்தையும் சரியாகச் செய்தாலும் சரி , எல்லாத்தையும் தப்பாகச் செய்தாலும் சரி , அது ஸ்டைல் தான் !!ஓரு நடிகனின் திரைப்பட அறிவிப்பே பரபரப்பாகிறது என்றால் , அது ரஜினிக்கு மட்டுமே !!ரஜினி குடிக்கும் ஜூஸிலிருந்து , வைக்கும் விக் வரை எல்லாமே பத்திரிக்கைக்கு நியூஸ் தான் .
சில சமயங்களில் உறைக்கிறது , இது கிறுக்குத்தனம் என்று !!காமராஜுக்கும் எனக்கும் இதனால் சண்டையே வந்திருக்கிறது . அவர் கமல் ரசிகர்!! . ஆனாலும் முடியவில்லை . இதோ இன்னும் பத்து நாட்களில் சிவாஜி !! இப்பொழுதே ஆபிஸில் சொல்லிவிட்டேன் . அடுத்த வாரம் அண்ணண் வீட்டில் கல்யாண நாள் என்று .படம் எப்பொழுது இங்கு ரிலிஸ் ஆகும் எனத் தெரியவில்லை . ரிலிஸ் அன்று படம் பார்க்காவிட்டால் ஜென்ம சாபல்யம் கிட்டாது போல ஒரு தவிப்பு .
மீண்டும் வருகிறேன் !!
Tuesday, June 5, 2007
விகடனில் ஒரு கவிதை
போன வார விகடனில் வந்திருந்த ஒரு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது . அனிதா என்பவரின் கவிதை .
" விடுதி அறையைச் சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக் கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா .
எனக்கு முன் இருந்தவரோ
அதற்கு முன் இருந்தவரோ
யாருடையதாகவும் இருக்கலாம்.
மறந்ததா மறுத்ததா எனத் தெரியாதபட்சத்தில்
மடல் விலக்கி தூசு அகற்றி சுவரில் ஒட்டிவிட்டேன்.
கொடுத்தவரும் பெற்றவரும்
இன்னும் பிரியாமல் இருக்கவும் கூடும் !!
இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானதாகிப் போனது . "மறந்ததா மறுத்ததா எனத் தெரியாதபட்சத்தில் " என சிந்திக்க ஆரம்பித்து , அதற்கான காரணத்தைக் கொண்டு முடிப்பதிலாகட்டும் , இக்கவிதை என்னை கொள்ளை கொள்கிறது .
அந்த ஒற்றை ரோஜா எதன் வெளிப்பாடாக இருக்கும் ? காதலர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம் , அல்லது காதலன் காதலியிடம் காதலை தெரிவிக்கும் காதல் கடிதமாக இருக்கலாம் !! தெரிவிக்க வேண்டி வாங்கி வைத்து , நிராகரிக்கப் பட்டுவிடுமோ என்ற பயத்தில் தெரிவிக்காமலே விட்டுவிட்ட காதலின் சாட்சியாய் இருக்கலாம், அல்லது " உனது அன்பினை ஏற்றுக் கொண்டேன் " எனத் தெரிவிக்கும் அறிவிப்புக் கடிதமாக இருக்கலாம் ,நிராகரிக்கப்பட்ட காதலின் அல்லது அன்பின் சோக சாட்சியாய் இருக்கலாம் !!
எதன் வெளிப்பாடாக இருந்தால் என்ன ? ஒற்றை ரோஜா எனபது என்றென்றும் அன்பின் சின்னம். பாதுகாப்பாய் வைத்திருக்கப் பட வேண்டியது !!
மீண்டும் வருகிறேன் !!
" விடுதி அறையைச் சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக் கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா .
எனக்கு முன் இருந்தவரோ
அதற்கு முன் இருந்தவரோ
யாருடையதாகவும் இருக்கலாம்.
மறந்ததா மறுத்ததா எனத் தெரியாதபட்சத்தில்
மடல் விலக்கி தூசு அகற்றி சுவரில் ஒட்டிவிட்டேன்.
கொடுத்தவரும் பெற்றவரும்
இன்னும் பிரியாமல் இருக்கவும் கூடும் !!
இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானதாகிப் போனது . "மறந்ததா மறுத்ததா எனத் தெரியாதபட்சத்தில் " என சிந்திக்க ஆரம்பித்து , அதற்கான காரணத்தைக் கொண்டு முடிப்பதிலாகட்டும் , இக்கவிதை என்னை கொள்ளை கொள்கிறது .
அந்த ஒற்றை ரோஜா எதன் வெளிப்பாடாக இருக்கும் ? காதலர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம் , அல்லது காதலன் காதலியிடம் காதலை தெரிவிக்கும் காதல் கடிதமாக இருக்கலாம் !! தெரிவிக்க வேண்டி வாங்கி வைத்து , நிராகரிக்கப் பட்டுவிடுமோ என்ற பயத்தில் தெரிவிக்காமலே விட்டுவிட்ட காதலின் சாட்சியாய் இருக்கலாம், அல்லது " உனது அன்பினை ஏற்றுக் கொண்டேன் " எனத் தெரிவிக்கும் அறிவிப்புக் கடிதமாக இருக்கலாம் ,நிராகரிக்கப்பட்ட காதலின் அல்லது அன்பின் சோக சாட்சியாய் இருக்கலாம் !!
எதன் வெளிப்பாடாக இருந்தால் என்ன ? ஒற்றை ரோஜா எனபது என்றென்றும் அன்பின் சின்னம். பாதுகாப்பாய் வைத்திருக்கப் பட வேண்டியது !!
மீண்டும் வருகிறேன் !!
தனிமையில் எனது எண்ணங்கள் :
மாற்றம் மானிடதத்துவம் என்று சொல்வார்கள் . அது உண்மை என்று தொன்றினாலும் , இவ்வளவு சீக்கிரம் எற்படும் மாற்றங்கள் சரியா என்று தொன்றத் தொடங்கியுள்ளது .மாற்றங்கள் எனில் , எண்ணங்களின் மாற்றங்கள் . சற்று நாள் முன்பு வரை , சரி என்று தொன்றிய விஷயங்கள் , இப்பொழுது தவறு என்று தோன்றுகிறது . இவைதான் முக்கியம் என்றெண்ணியிருந்த விஶயங்கள் , இப்பொழுது அர்த்தமில்லாமலே போகின்றன . ஒரு காலத்தில் பிடித்ததும் , ஏங்கியிருந்ததுமான விஶயங்கள் , இன்று அர்த்தமற்று போகிறது .
தனிமையில் இருக்கும் பொழுது , அதுவும் தண்ணியுடன் இருந்துவிட்டால் , நான் பலவற்றைக் குறித்தும் நான் சிந்திப்பது உண்டு . நட்பு எது வரை ? எதிர்பார்ப்புகள் சரியா , தவறா ? போன்றவற்றில் ஆரம்பித்து , போதையில் தலை சாயும் வரை சிந்தித்திருப்பேன் .இது ராமக்கிருஶ்ணனின் கேள்விக்குறி இல்லை !! விடை கிடைக்க வேண்டி ஒரு சிந்தனைப் பயணம் !! காலேஜ் படிக்கும் பொழுது , யாராவது என்னிடம் , நண்பர்கள் முக்கியமா , குடும்பம் முக்கியமா ? என்ற கேள்வி எழுப்பியிருந்தால் , கண்டிப்பாக நண்பர்களே முக்கியம் என்றிருப்பேன் . ஆனால் இப்பொழுது அதே கேள்வியினை யாராவது கேட்டால் , கண்டிப்பாக எனது பதில் வேறாகத் தான் இருக்கும் .பொறுப்புகள் கூடிக் கொண்டே போவது தான் காரணமா, இல்லை அது தான் நிஜமா என்று தெரியவில்லை , ஆனால் இப்பொழுது தொன்றுகிறது , குடும்பம் முக்கியம் என்று !! தேவையில்லாமல் கூட்டம் சேர்த்துக் கொண்டும் , அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பதினால் மட்டும் என்னால் , அதாவது இப்பொதைய குமாரசாமியால் இருந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது . ! அது ஒரு சுகம் , இனிமை , அந்த அந்த வயதிற்குள் இழந்துவிடக் கூடாத அனுபவம் . நான் அதனை நன்றாகவே அனுபவித்தாகிவிட்டது !!
அந்த சுகத்தையும் , அனுபவத்தினையும் நீட்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் , பேராசையிலும் , தான் சென்னையில் நமக்கென்று நமக்காகவென்று ஒரு பிளாட் என்றது . அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக கழிக்கவல்ல ஓர் இடம் !! வாழ்வின் கடைசிவரை ஒருவர் மற்றவரின் சுகதுக்கங்களில் பங்கேடுத்துக் கொண்டு , நாம் அனுபவித்திறாத , நாம் ஆசைப்படும் அனைத்தையும் நமது சந்ததியினருக்கு தரும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொண்டு , சுகமாய் இருக்க நல்லதொரு இடம் !! .இதில் ஆரம்பம் முதலே பிரச்சனைகள் !! சேருவான் என்றேண்ணியிருந்தவன் காலை வார .....என்பதில் ஆரம்பித்து , அன்று முதல் இன்று வரை ஏகத்துக்கும் ஏகத்துக்கும் பிரச்சனைகள் , மனஸ்தாபங்கள் , கோபங்கள் !! இத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தினை விட்டு வெளியேறுகிறோம் என்பது மட்டும் புலனாகிறது !!நான் இந்த ப்ளாகில் எழுத எண்ணியிருந்த விஶயத்தை விட்டு , தடம் மாறிவிட்டேன் , மீண்டும் விஶயத்திற்கு வருகிறேன் !!
’தளபதி’ ரஜினி அளவிற்கு நாம் இல்லாவிட்டாலும் , மம்முட்டி அளவிற்கு கூட இருக்க இயலாதவர்களை என்னவென்று சொல்வது ? நாம் செலுத்தும் அன்பும் அக்கறையும் , குறைந்தபட்சம் பாதியளவாவது திரும்ப கிடைத்தால் பரவாயில்லை , ஆனால் பாலைவனத்திற்கு இறைத்த நீரானால் ? உண்மையில் யாராலும் தாங்க முடியாது என்றே தோன்றுகிறது !! கண்டிப்பாக என்னால் முடியவில்லை !! காதலி தன்னை நேருக்கு நேர் நிராகரிக்கும் கொடுமைக்கு மேலானது அது !!
எதிர்பார்ப்புகள் இல்லாதது தான் நட்பு என்கிறான் , இங்கிருக்கும் நண்பன் (?) ஒருவன் . அதுவே சரி என்றாலும் எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையோ , சொந்தமோ , நட்போ தேவையா என்ன ? எனக்குத் தெரியவில்லை . பதில் எப்பொழுது உறைக்கும் என்றும் தெரியவில்லை . விளையும் என்ற நம்பிக்கையில், காலந்தோறும் விழலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க நான் ஒன்றும் மகாத்மா இல்லை , மனிதன் தான் !! சிவாவை போல் இருக்க நினைக்கிறேன் . யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது நட்பையும் , குடும்பத்தையும் சரிவிகிதத்தில் சமாளிப்பான் .
திகட்ட திகட்ட அனுபவிக்கும் எதுவும் தித்திக்கும் என்பார்களே அது போல , திகட்ட திகட்ட வாரி வழங்கும் நட்பும், பாசமும் திகட்டும் பொலிருக்கிறது . அதாவது பெறுவருக்கு திகட்டிப் போகும் அளவிற்கும் , அளிப்பவர் வெறுத்துப் போகும் அளவிற்கும் !!
இப்பொழுதெல்லாம் நான் தனிமையினை அதிகம் நாடுகிறேன் . நண்பர்கள் அருகில் இல்லை என்பதல்ல காரணம் , தனிமையாய் இருக்க விரும்புகிறேன் என்பதே காரணம் . தனிமையில் வானமே எல்லை !! கற்பனா உலகில் இஶ்டம் போல் சஞ்சரிக்கலாம் ! தனியாக படுத்துக் கொண்டு விகடன் படிக்கும் அந்த நேரங்கள் இனிமையானவை . அந்த நேரத்தில் போன் கால் வந்தால் , எரிச்சலுருகிறேன் !! சபித்துக்கொண்டே போன் எடுக்கிறேன் !! எதிர்முனையில் இருப்பவனின் உத்தேசம் எனது நலனாய் இருப்பினும் , நடக்கக் கூடாது என்றே வேண்டுவேன் !!
ஓன்றாக கூடவே இருப்பதால் மட்டும் அன்பும், அக்கறையும் நிலைக்கும் , நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கூடவே இருப்பதால் , மற்றவர் மீது எரிச்சலும் , கோபமுமே வருகிறது . வீணான சம்பாஶனைகளும் , தேவையில்லாத சண்டைகளுமாக இருக்கும் கொஞ்ச நஞ்ச நட்பும் நசித்துப் போகிறது . பிரிவில் தான் மற்றவரின் அன்பும் , அக்கறையும் நமக்குப் புலப்படும் !!
கல்லூரி நாட்களில் அதிகம் சந்தோசமாய் கூடி இருந்துவிட்டொம் என நினைக்கிறேன் . அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம் என இப்பொழுது தோன்றுதிறது . மனம் அதை நாடினாலும் , அதனை பெற முடியாத சூழ்நிலையில் நானும் , தர முடியாத அளவிற்கு ரொம்பவே பிசியாக (?) அவர்களும்!! சில சமயங்களில் , யாரையும் தொடர்பு கொள்ளாது , யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஏதாவது ஊருக்குச் சென்றுவிடலாம் என்று கூட தோன்றுகிறது. மாதாமாதம் விட்டிற்கு தேவையானதை மட்டும் அனுப்பிக் கொண்டு , எனக்கென எனக்காக வாழலாம் என்றும் தோன்றுகிறது !! அதுவும் சில நாட்கள் நன்றாகத் தான் இருக்கும் , நண்பர்களைப் பற்றிய நினைவு வரும் வரை !!
சிரித்திருந்த நேரங்களை பின்னாளில் நினைத்துப் பார்த்தால் , அவை அழ வைக்கும் என்று எதிலோ கேட்டது சரிதான் போலிருக்கிறது !!
மீண்டும் வருகிறேன் !!
தனிமையில் இருக்கும் பொழுது , அதுவும் தண்ணியுடன் இருந்துவிட்டால் , நான் பலவற்றைக் குறித்தும் நான் சிந்திப்பது உண்டு . நட்பு எது வரை ? எதிர்பார்ப்புகள் சரியா , தவறா ? போன்றவற்றில் ஆரம்பித்து , போதையில் தலை சாயும் வரை சிந்தித்திருப்பேன் .இது ராமக்கிருஶ்ணனின் கேள்விக்குறி இல்லை !! விடை கிடைக்க வேண்டி ஒரு சிந்தனைப் பயணம் !! காலேஜ் படிக்கும் பொழுது , யாராவது என்னிடம் , நண்பர்கள் முக்கியமா , குடும்பம் முக்கியமா ? என்ற கேள்வி எழுப்பியிருந்தால் , கண்டிப்பாக நண்பர்களே முக்கியம் என்றிருப்பேன் . ஆனால் இப்பொழுது அதே கேள்வியினை யாராவது கேட்டால் , கண்டிப்பாக எனது பதில் வேறாகத் தான் இருக்கும் .பொறுப்புகள் கூடிக் கொண்டே போவது தான் காரணமா, இல்லை அது தான் நிஜமா என்று தெரியவில்லை , ஆனால் இப்பொழுது தொன்றுகிறது , குடும்பம் முக்கியம் என்று !! தேவையில்லாமல் கூட்டம் சேர்த்துக் கொண்டும் , அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பதினால் மட்டும் என்னால் , அதாவது இப்பொதைய குமாரசாமியால் இருந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது . ! அது ஒரு சுகம் , இனிமை , அந்த அந்த வயதிற்குள் இழந்துவிடக் கூடாத அனுபவம் . நான் அதனை நன்றாகவே அனுபவித்தாகிவிட்டது !!
அந்த சுகத்தையும் , அனுபவத்தினையும் நீட்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் , பேராசையிலும் , தான் சென்னையில் நமக்கென்று நமக்காகவென்று ஒரு பிளாட் என்றது . அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக கழிக்கவல்ல ஓர் இடம் !! வாழ்வின் கடைசிவரை ஒருவர் மற்றவரின் சுகதுக்கங்களில் பங்கேடுத்துக் கொண்டு , நாம் அனுபவித்திறாத , நாம் ஆசைப்படும் அனைத்தையும் நமது சந்ததியினருக்கு தரும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொண்டு , சுகமாய் இருக்க நல்லதொரு இடம் !! .இதில் ஆரம்பம் முதலே பிரச்சனைகள் !! சேருவான் என்றேண்ணியிருந்தவன் காலை வார .....என்பதில் ஆரம்பித்து , அன்று முதல் இன்று வரை ஏகத்துக்கும் ஏகத்துக்கும் பிரச்சனைகள் , மனஸ்தாபங்கள் , கோபங்கள் !! இத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தினை விட்டு வெளியேறுகிறோம் என்பது மட்டும் புலனாகிறது !!நான் இந்த ப்ளாகில் எழுத எண்ணியிருந்த விஶயத்தை விட்டு , தடம் மாறிவிட்டேன் , மீண்டும் விஶயத்திற்கு வருகிறேன் !!
’தளபதி’ ரஜினி அளவிற்கு நாம் இல்லாவிட்டாலும் , மம்முட்டி அளவிற்கு கூட இருக்க இயலாதவர்களை என்னவென்று சொல்வது ? நாம் செலுத்தும் அன்பும் அக்கறையும் , குறைந்தபட்சம் பாதியளவாவது திரும்ப கிடைத்தால் பரவாயில்லை , ஆனால் பாலைவனத்திற்கு இறைத்த நீரானால் ? உண்மையில் யாராலும் தாங்க முடியாது என்றே தோன்றுகிறது !! கண்டிப்பாக என்னால் முடியவில்லை !! காதலி தன்னை நேருக்கு நேர் நிராகரிக்கும் கொடுமைக்கு மேலானது அது !!
எதிர்பார்ப்புகள் இல்லாதது தான் நட்பு என்கிறான் , இங்கிருக்கும் நண்பன் (?) ஒருவன் . அதுவே சரி என்றாலும் எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையோ , சொந்தமோ , நட்போ தேவையா என்ன ? எனக்குத் தெரியவில்லை . பதில் எப்பொழுது உறைக்கும் என்றும் தெரியவில்லை . விளையும் என்ற நம்பிக்கையில், காலந்தோறும் விழலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க நான் ஒன்றும் மகாத்மா இல்லை , மனிதன் தான் !! சிவாவை போல் இருக்க நினைக்கிறேன் . யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது நட்பையும் , குடும்பத்தையும் சரிவிகிதத்தில் சமாளிப்பான் .
திகட்ட திகட்ட அனுபவிக்கும் எதுவும் தித்திக்கும் என்பார்களே அது போல , திகட்ட திகட்ட வாரி வழங்கும் நட்பும், பாசமும் திகட்டும் பொலிருக்கிறது . அதாவது பெறுவருக்கு திகட்டிப் போகும் அளவிற்கும் , அளிப்பவர் வெறுத்துப் போகும் அளவிற்கும் !!
இப்பொழுதெல்லாம் நான் தனிமையினை அதிகம் நாடுகிறேன் . நண்பர்கள் அருகில் இல்லை என்பதல்ல காரணம் , தனிமையாய் இருக்க விரும்புகிறேன் என்பதே காரணம் . தனிமையில் வானமே எல்லை !! கற்பனா உலகில் இஶ்டம் போல் சஞ்சரிக்கலாம் ! தனியாக படுத்துக் கொண்டு விகடன் படிக்கும் அந்த நேரங்கள் இனிமையானவை . அந்த நேரத்தில் போன் கால் வந்தால் , எரிச்சலுருகிறேன் !! சபித்துக்கொண்டே போன் எடுக்கிறேன் !! எதிர்முனையில் இருப்பவனின் உத்தேசம் எனது நலனாய் இருப்பினும் , நடக்கக் கூடாது என்றே வேண்டுவேன் !!
ஓன்றாக கூடவே இருப்பதால் மட்டும் அன்பும், அக்கறையும் நிலைக்கும் , நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கூடவே இருப்பதால் , மற்றவர் மீது எரிச்சலும் , கோபமுமே வருகிறது . வீணான சம்பாஶனைகளும் , தேவையில்லாத சண்டைகளுமாக இருக்கும் கொஞ்ச நஞ்ச நட்பும் நசித்துப் போகிறது . பிரிவில் தான் மற்றவரின் அன்பும் , அக்கறையும் நமக்குப் புலப்படும் !!
கல்லூரி நாட்களில் அதிகம் சந்தோசமாய் கூடி இருந்துவிட்டொம் என நினைக்கிறேன் . அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம் என இப்பொழுது தோன்றுதிறது . மனம் அதை நாடினாலும் , அதனை பெற முடியாத சூழ்நிலையில் நானும் , தர முடியாத அளவிற்கு ரொம்பவே பிசியாக (?) அவர்களும்!! சில சமயங்களில் , யாரையும் தொடர்பு கொள்ளாது , யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஏதாவது ஊருக்குச் சென்றுவிடலாம் என்று கூட தோன்றுகிறது. மாதாமாதம் விட்டிற்கு தேவையானதை மட்டும் அனுப்பிக் கொண்டு , எனக்கென எனக்காக வாழலாம் என்றும் தோன்றுகிறது !! அதுவும் சில நாட்கள் நன்றாகத் தான் இருக்கும் , நண்பர்களைப் பற்றிய நினைவு வரும் வரை !!
சிரித்திருந்த நேரங்களை பின்னாளில் நினைத்துப் பார்த்தால் , அவை அழ வைக்கும் என்று எதிலோ கேட்டது சரிதான் போலிருக்கிறது !!
மீண்டும் வருகிறேன் !!
நொட்ஸ் :
சிலரைப் பற்றி நினைத்தாலே , அவர்களாது செய்கைகளின் ஞாபகங்களும் , மனோபாவமும் நமக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள் . அது அவர்களது தனித்தன்மை என்றே நினைக்கிறேன் !! உதாரணத்திற்கு , ரஜினி என்றால் ஸ்டைல் , ஸ்நேகா என்றால் புன்னகை , அதுபோல நொட்ஸ் என்றால் .................. வேறன்ன காமடி தான் . தன்னை அழித்துக்கொண்டு பிறருக்கு ஒளி தரும் மெழுகுவர்த்தியினைப் போலில்லாமல் , தான் செய்யும் கேனத்தனங்களால் , பிறரை சிரிக்க வைத்து , அது தெரிந்ததும் தானும் சிரித்து , அசடு வழியும் ஒரு மகாபுருஶன் !! நொட்ஸின் காமடிகள் என்றென்றும் நினைவிலிருப்பவை . நான் ப்ளாக் எழுதிக்கொண்டிருக்கும் , இந்த நேரத்தில் கண்டிப்பாக பற்பல நொட்ஸ் காமடிகள் நடந்தேறியிருக்கும் !! இதையெல்லாம் நான் எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருகையிலேயே என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை . தனியாக சிரித்துக்கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன் !!
கட்டம் போட்ட லுங்கியும் , கையில்லாத முண்டா பனியனுடனும் , தலைக்கு தனது கைகளை கொடுத்துக்கொண்டும் ,தனது கால்களை டக் டக் என ஆட்டிக் கொண்டும் , திறந்திருக்கும் புத்தகத்திற்கு பக்கத்தில் , கண் மூடி படுத்துக்கொண்டிருக்கும் அவனைப் பார்க்கும் வெளியாட்கள் , இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரத்தின் விளைவுகள் குறித்தும் , பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதன் கட்டாயத்தினை குறித்தும் சிந்தனையில் இருக்கிறார் என்று நினைப்பது இயல்பு . ஆனால் எங்களைப் போன்ற அவனுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் அமையப்பட்டவர்களுக்கே தெரியும் , அவன் அடுத்த வேளை சாப்பாட்டில் , காரக்குழம்பிற்கு அப்புறம் ரசம் விட்டு சாப்பிடுவதா இல்லை ரசம் விட்டு சாப்பிட்ட பின் காரக்குழம்பு ஊற்றி சாப்பிடுவதா என்பதை பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினைக் குறித்து யோசிக்கிறான் என்று !! நானும் தாமுவும் நொட்ஸின் காமடிகளை புத்தகமாக போடுவது பற்றியும் , அவனை திரையில் வடிவமைத்து விட்டால் உண்டாகும் சிரிப்பலைகளைக் குறித்தும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !! இது தான் நொட்ஸ் !!!
ஆளைப் பார்த்தால் தெரியாது .
எப்பொழுதும் டக் இன் செய்யப்பட்ட சர்ட், அதற்கு மேட்சான பேன்ட் ,அடர்த்தியான மீசை என ஆள் கம்பிரமாக இருப்பான் ! நெருங்கி வந்து நம்மிடம் " ஹாய் , குட்மார்னிங் ’ என்று சொல்லிவிட்டு , வெளிநாட்டுக் கம்பனியய் விலைக்கு வாங்கிவிட்ட ரத்தன் டாட்டாவை போல் லுக் விடும் பொழுதே , நமக்கு குபீரென்று சிரிப்பு வரும் !! காரணம் , அது இரவு எழு அல்லது எட்டு மணியாக இருக்கும் !! நொட்ஸ் வேண்டுமென்றே காமடி செய்வதில்லை , ஆனால் அவன் செய்யும் எல்லாமே காமடி தான் !! ஐந்து ருபாய்க்கு பேரம் பேசிவிட்டு , ஐம்பது ருபாய் அதிகம் கொடுத்துவிட்டு வருவது ,எட்டு மணி ட்ரேயினைப் பிடிக்க சீக்கிரம் கிளம்பி வழியில் பேப்பர் படிக்க கடைக்குச் சென்று அதற்கடுத்த ட்ரேயினையும் கோட்டை விடுவது , இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்ல , அரை மணி நேரம் சாவி பொடாமலேயே வண்டியய் ஸ்டார்ட் செய்வது , பொன்றவையேல்லாம் நொட்ஸ் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் !! நமக்கோ காமடி டைம்கள் !! நொட்ஸை நான் முதன்முதலில் பார்த்தது பாலாஜி லாட்ஜில் அவன் அப்பாவுடன் என்றாலும் ,அவன் எனக்கு முதலில் பரிச்சயமானது ராமசுப்பு ஹாஸ்டலில் தான் . காலேஜ் ஆரம்பித்த நாட்களில் சாயந்திரம் ஐந்து மணிக்கெல்லாம் , மடியில் ட்ராயிங் பேடை வைத்துக்கொண்டு , கெமிஸ்டரி புக்கின் இன்ட்ரோடக்ஶன் பக்கத்தை மனனம் செய்து கொண்டிருப்பான் . பைனல் பரிட்சை நடக்கும் பொழுதும் அதையே தான் படித்துக்கொண்டிருப்பான் !! நொட்ஸ் என்பது காரணப் பெயர் . வருண்சிவம் சூடிய நாமாகரணம் !! கண்ணாடியய் வலக்கையில் பிடித்துக்கொண்டு ,காய்ந்திருக்கும் தலைமுடியய் ’வரட் வரட் ’ என இடக்கையால் அவன் தலைசீவும் அழகே அழகு !!
கல்லூரி காலத்து நினைவுகள் வருமாயின் , நொட்ஸுக்கு அதில் நீங்கா இடம் உண்டு ! . முதலாம் ஆண்டு விளையாட்டுப்போட்டிகளில் , நோட்ஸ் இடக்கையில் பேட் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சென்றதும் , சென்ற வேகத்திலேயே திரும்ப வந்ததும் , திரும்பி வந்து இடக்கை தலையய் தடவிக்கொண்டிருக்க , ’சே ஒவர் பிட்ச் பால் , நான் எதிர்பார்க்கல மச்சி ’ என பீலிங் விட்டுத் திரிவதில் அவனுக்கு நிகர் அவனே !!அவனிடம் எதாவது சில்மிஶம் செய்து மாட்டிக் கொண்டால் , வலக்கை நமது சட்டைக்காலரை பிடித்துக் கொண்டிருக்க , பருக்கள் நிரம்பிய அவனது முகமும் , இடக்கை முஶ்டியும் நம் முகத்தருகே வந்து பயமுறுத்தும் , நமக்கொ ஜுராஸிக் பார்க் இரண்டாம் பாகம் பார்த்தது போலிருக்கும் !!
ராமசுப்பு ஹாஸ்டலில் சாயந்திர வேளைகளில் டீ என்ற பெயரில் வெந்நீர் தண்ணி தருவார்கள் . யாரும் மதிக்காத அதனை , தோற்றத்தில் ஒரு கூஜாவுக்கு சற்றே சிறியதும் , கொள்ளளவில் அக்கூஜாவை விடவும் பெரியதான ஒரு டம்பளரில் நொட்ஸ் வாங்குவான் !! அதை அவன் வாங்கிக் குடிக்கும் முன்னரே தட்டிப் பறித்து விட நானும் பிரசன்னாவும் சிவாவும் முயற்சி செய்வோம் . பெரும்பாலான நேரங்களில் நாங்கள் தான் ஜெயிப்பொம் , ஆனால் ஒரு சில நேரங்களில் நொட்ஸ் வென்றுவிடுவான் . அத்தகைய நேரங்களில் , தனது முப்பத்தியிரண்டு பற்களும் நன்றாக இருப்பபதை தெரிவிக்கும் வகையில் சிரித்துக் கொண்டும் ,தனியாக இமயமலை வரை சென்று வென்றுவிட்ட கரிகாலச்சோழனைப் போல் தன்னை பாவித்துக் கொண்டு , தனது பராக்கிரமத்தை அனைவரிடமும் பறைசாற்றிக்கொண்டு அரைமணி நேரம் திரிவான் !! ஹாஸ்டலில் சாப்பாட்டுக்கு இருக்கும் கிராக்கியய் விட , நொட்ஸின் தட்டில் சாப்பிடுவதற்கு ஏக கிராக்கி இருக்கும் !!
ஒருநாள் நானும் சிவாவும் ஒரு முக்கிய வேலையில் இருந்தோம் . திடிரென நொட்ஸ் அங்கு வந்தான் , சிவாவின் கையினை எடுத்து தன் வாயில் வைத்துக்கொண்டான் !! எங்களுக்கோ குபீர் சிரிப்பு . விஶயம் தெரிந்ததும் , அவன் முகம் பொன போக்கை பார்க்கவேண்டுமே !! யாருக்கும் தெரியாமல் சினிமாவிற்கு கிளம்பினொம். இது தெரிந்ததும் , வாத்தியார் தன் பின்னால் இருப்பதையும் பொருட்படுத்தாமல் , " எனக்கும் ஒரு டிக்கட் எடுத்துவை மச்சி " என்பதிலாகட்டும் , ஹாஸ்டலில் அனைவருக்கும் முன்பாகவே எழுந்து , குளித்து ரெடியாகி , கல்லூரிக்கு கடைசியாக வருவதிலாகட்டும் , கம்ப்யுட்டர் பிராக்ட்டிகளில் யாராலும் கண்டேபிடிக்க முடியாத அளவிற்கு தவறு செய்து மாட்டிக் கொண்டு பெயிலாவதிலாகட்டும் , ரிகார்ட் நோட்டில் முந்தைய பக்கங்களை காண்பிக்காமல் , கடைசி பக்கத்தை மட்டும் காண்பித்து மாட்டிக்கொள்வதிலும் நொட்ஸுக்கு நிகர் நொட்ஸே !! அவனிருந்திருக்காவிட்டால் , கல்லூரியின் முதலாம் ஆண்டு , தற்பொழுது வரும் விஜய் படங்களை பொலவே உப்புச் சப்பில்லாமலே இருந்திருக்கும் !!
இரண்டாம் ஆண்டு முதல் நொட்ஸ் பர்கூருக்குச் சென்றுவிட்டான் , எனினும் எங்களுடனே சுற்றிக்கொண்டிருப்பான் !! . தனியாக ரும் எடுத்த நாங்கள் , எடுத்தது தவறு எனும் முடிவுக்கு வராதிருக்க நொட்ஸும் அவன் தனது அக்கவுண்டிலும் , தியாகராஜனின் அக்கவுண்டிலும் வாங்கிக் கொடுத்தனுப்பும் புரோட்டாவும் , புல் பாயிலுமே காரணம் . பின்னர் அவனது அக்கவுண்டில் அவனுக்கே தெரியாமல் பில் ஏறத்தொடங்கியது !! இக்காலகட்டத்தில் தான் நொட்ஸ் தனது காமடியின் உச்சத்திற்கு போனது . சென்னையில் டீடிஆரிடம் மாட்டிக்கொண்ட பொழுது , சட்டென்று பஸ் டிக்கட்டை காண்பித்து எக்ஸ்டரா பைன் கட்ட வைத்தது , அவசரத்தில் லேடீஸ் கம்பார்ட்மண்டில் ஏறிக் கொண்ட எங்களை , அதன் இன்னொரு புறம் ஏறிக் கொண்ட அவன் கிண்டலடித்து பின்னர் அசடுவழிய திரும்பி வந்தது என நொட்ஸின் காமடி கிராப் , தற்பொழுதைய அஜீத்தின் மார்க்கட்டைப் போல் , எகத்திற்கும் எகிறத் தொடங்கியிருந்தது !! அனைவருக்கும் பிடித்தவனானன் நொட்ஸ் !!
மூன்றாம், நான்காம் ஆண்டு படிப்பிலும் ஸாரி காமடியிலும் , நொட்ஸ் தான் கிங். அருண்குமார் நோட்ஸ் எடுக்கச் சொல்லி , லைப்பரரிக்கு அனுப்ப , சின்சியராக நொட்ஸ் எடுத்து அதை லைப்பரரியிலேயே வைத்துவிட்டு திரும்ப என்றும் , நைட் ஸ்டடியின் பொழுது சாப்பிட வேண்டி சாப்பாடு வாங்கி மறைத்து வைக்கவும் , நுணலும் தன் வாயாலே கேடும் என்பது போல தன் வாயாலே அதை தெரிவிப்பதுமாக , நொட்ஸ் தனி ஒரு காமடி சாம்ராஜ்யமே நடத்தினான் !! முகத்தை சிரியஸாக வைத்துக் கொண்டு , அனுபவித்து பாடுவது பொல் தனது கர்ண கொடூர குரலால் ஒரு மெலடி பாட்டுப் பாடி , எதிராளியய் திணரடிப்பது நொட்ஸுக்கு கை வந்த கலை . அந்த பாடலின் வரிகளை மாற்றிப் போட்டு , திரும்ப பாடி அவனை இம்சிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு பொழுதுபொக்கு ! அதிலும் " மூவேந்தர் " படத்தில் வரும் என்னவொ ஒரு பாடல் ?? பைனல் பிராக்ட்டிகளுக்கு இரண்டொரு நாட்கள் முன்பு , கடலையின் ரிகார்ட் நோட் தொலைந்துவிட்டது . கே எஸ் ஜி எஸ்டேட்ய புரட்டிப் போட்டும் கிடைக்கவில்லை . பக்கத்தில் சூறாவளி காற்று அடித்தாலும் கூட , கவலைப்படாமல் ட்ராக்டர் ஓட்டும் கடலை கூட ஒரு மணி நேரம் கலங்கிப் போய் விட்டான் !! நொட்ஸ் ஓம்பிரகாஶ் ஜாவின் ருமில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான் . அவனை சுற்றிலும் தேடியாகிவிட்டது , எழுப்பி உட்காரவைத்தும் தேடியாகி விட்டது . கிடைக்கவில்லை . சந்தேகம் வந்து , அவன் டிராயிங் பேடாக! உபயோகித்துக் கொண்டிருந்த புக்கை வாங்கிப் பார்க்க , அது கடலையின் ரிகார்ட் . கடலைக்கு போன உயிர் திரும்பி வந்தது , நொட்ஸுக்கு இருந்த உயிர் போகத் தெரிந்தது !! கல்லூரி நினைவாக யாராவது ஒரு கல்வெட்டு வைக்க ஆசைப்பட்டால் , அதில் நொட்ஸின் இந்த காமடிகள் பொறிக்கப்பட வேண்டியவை !! இப்படியும் நமக்கு ஒரு சீனியர் இருந்தார் என பின்வரும் ஜூனியர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்!!
இந்த நேரத்திலோ என்னவோ தான் திடிரென நொட்ஸின் அப்பா தவறிவிட்டார் . குடும்ப பாரமும் நொட்ஸ் மேல் தான் . சமாளித்தான் . கல்லூரியில் வேறு யாருக்கும் இல்லாத ஒரு பெருமை , எனக்கும் அண்ணாமலைக்கும் உண்டு . அது தமிழ்நாட்டு வரைப்படத்திலேயே இல்லாத நொட்ஸின் சொந்த ஊருக்குச் சென்று திரும்பியது !! தண்ணிர் ஓடாத ஆற்றைக் கடந்து தான் அவனது ஊருக்குச் செல்ல வேண்டும் . ஆயினும் மன்னார்குடியில் அம்மாவும் , தங்கைகளும் காட்டிய அன்பு நெகிழச் செய்யும் . அதுவும் நான் போயிருந்த நேரத்தில் எனக்கோ தீராத வலி !! சமாளித்தொம் !!
அண்ணாமலைக்குக் கூட கிடைக்காத ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்து . ஈ.பீ யில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நோட்ஸ் எனது வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தான் . அப்பவும் காமடிக்கு குறைவில்லை . வண்டியெய் எடுத்துக்கொண்டு ரவுண்ட் வருவது , ஒரு மணி நேரம் ஓட்டினாலும் முதல் கியரிலேயே ஒட்டுவது , எனது தந்தையுடன் வாதிட்டு எனக்கும் என் தந்தைக்குமான உறவை நேராக்குவது பொன்ற காமடிகளும் உண்டு !! இனிய நாட்கள் அவை !!
பசங்களில் எனக்கு ரோல் மாடல்கள் சிலர் உண்டு . இவர்களை போல் இருக்கவேண்டும் என சில சமயங்களில் கற்பனை செய்வதும் உண்டு . முதலிடம் அண்ணாமலைக்கு , நட்புரீதியில் இவனைப் போல் அரவணைத்துச் செல்ல யாராலும் முடியாது , இன்னொருவன் நொட்ஸ் .ப்ளான் பண்ணுவதில் சிதம்பரம் இவனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் !! தங்கையின் கல்யாணத்தை , தனியாளாக நின்று சிறப்பாக நடத்தினான் !! இப்பொழுது கூட என்னால் முடியுமா என்று தெரியவில்லை ! அடுத்த தங்கைக்கான செலவுக்கும் திட்டமிட்டு உள்ளான் . நல்லவன் , ஆனால் ரொம்பவே நல்லவன் !! அவன் மேல் மிகுந்த நம்பிக்கையும் , மரியாதையும் உண்டு எனக்கு . அதுவும் அவனது தங்கையினை பெண் பார்த்து சென்ற அன்று , நானும் நொட்ஸும் மட்டுமே எண்ணூரில் கடற்கரை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் . அன்று நான் அவன் மேல் வைத்திருந்த மரியாதை பன்மடங்கானது .வருங்காலத்தைக் குறித்து தீவிரமாக யொசிப்பதையும் , அதனை தீர்க்கமாக செயல்படுத்துவதுமாக இருந்த அவனின் இன்னொரு முகம் , கல்லூரி நாட்களில் தெரியாமல் பொனதிற்கு வருத்தப்படிகிறேன் .
மனம் கவலையாக இருந்தால் , நொட்ஸுக்கு பொன் பண்ணி பேசலாம் . கண்டிப்பாக சிரிக்கலாம் . நூறு பர்சன்ட் நான் கியாரண்டி!! எப்படியும் நொட்ஸ் இதைப் படிக்கப் போவதில்லை . அப்படியே படித்தாலும் , வரும் கமண்டினை இப்பொழுதே என்னால் சொல்லிவிட முடியும் . " இயேசு நாதர சிலுவேல அறைஞ்சாங்க ,சாக்ரடீஸ கல்லால அடிச்சாங்க , ........................" . நாயின் வாலை நிமிர்த்தத்தான் முடியுமா ? ஆனாலும் இந்த வால் நிமிர்ந்து விட கூடாது என்றே வேண்டுகிறேன் . நொட்ஸின் சேவை , எங்களுக்குத் தேவை .
அவன் எனக்கு நண்பனாதில் எனக்குத் தான் பெருமை !!
கட்டம் போட்ட லுங்கியும் , கையில்லாத முண்டா பனியனுடனும் , தலைக்கு தனது கைகளை கொடுத்துக்கொண்டும் ,தனது கால்களை டக் டக் என ஆட்டிக் கொண்டும் , திறந்திருக்கும் புத்தகத்திற்கு பக்கத்தில் , கண் மூடி படுத்துக்கொண்டிருக்கும் அவனைப் பார்க்கும் வெளியாட்கள் , இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரத்தின் விளைவுகள் குறித்தும் , பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதன் கட்டாயத்தினை குறித்தும் சிந்தனையில் இருக்கிறார் என்று நினைப்பது இயல்பு . ஆனால் எங்களைப் போன்ற அவனுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் அமையப்பட்டவர்களுக்கே தெரியும் , அவன் அடுத்த வேளை சாப்பாட்டில் , காரக்குழம்பிற்கு அப்புறம் ரசம் விட்டு சாப்பிடுவதா இல்லை ரசம் விட்டு சாப்பிட்ட பின் காரக்குழம்பு ஊற்றி சாப்பிடுவதா என்பதை பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினைக் குறித்து யோசிக்கிறான் என்று !! நானும் தாமுவும் நொட்ஸின் காமடிகளை புத்தகமாக போடுவது பற்றியும் , அவனை திரையில் வடிவமைத்து விட்டால் உண்டாகும் சிரிப்பலைகளைக் குறித்தும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !! இது தான் நொட்ஸ் !!!
ஆளைப் பார்த்தால் தெரியாது .
எப்பொழுதும் டக் இன் செய்யப்பட்ட சர்ட், அதற்கு மேட்சான பேன்ட் ,அடர்த்தியான மீசை என ஆள் கம்பிரமாக இருப்பான் ! நெருங்கி வந்து நம்மிடம் " ஹாய் , குட்மார்னிங் ’ என்று சொல்லிவிட்டு , வெளிநாட்டுக் கம்பனியய் விலைக்கு வாங்கிவிட்ட ரத்தன் டாட்டாவை போல் லுக் விடும் பொழுதே , நமக்கு குபீரென்று சிரிப்பு வரும் !! காரணம் , அது இரவு எழு அல்லது எட்டு மணியாக இருக்கும் !! நொட்ஸ் வேண்டுமென்றே காமடி செய்வதில்லை , ஆனால் அவன் செய்யும் எல்லாமே காமடி தான் !! ஐந்து ருபாய்க்கு பேரம் பேசிவிட்டு , ஐம்பது ருபாய் அதிகம் கொடுத்துவிட்டு வருவது ,எட்டு மணி ட்ரேயினைப் பிடிக்க சீக்கிரம் கிளம்பி வழியில் பேப்பர் படிக்க கடைக்குச் சென்று அதற்கடுத்த ட்ரேயினையும் கோட்டை விடுவது , இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்ல , அரை மணி நேரம் சாவி பொடாமலேயே வண்டியய் ஸ்டார்ட் செய்வது , பொன்றவையேல்லாம் நொட்ஸ் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் !! நமக்கோ காமடி டைம்கள் !! நொட்ஸை நான் முதன்முதலில் பார்த்தது பாலாஜி லாட்ஜில் அவன் அப்பாவுடன் என்றாலும் ,அவன் எனக்கு முதலில் பரிச்சயமானது ராமசுப்பு ஹாஸ்டலில் தான் . காலேஜ் ஆரம்பித்த நாட்களில் சாயந்திரம் ஐந்து மணிக்கெல்லாம் , மடியில் ட்ராயிங் பேடை வைத்துக்கொண்டு , கெமிஸ்டரி புக்கின் இன்ட்ரோடக்ஶன் பக்கத்தை மனனம் செய்து கொண்டிருப்பான் . பைனல் பரிட்சை நடக்கும் பொழுதும் அதையே தான் படித்துக்கொண்டிருப்பான் !! நொட்ஸ் என்பது காரணப் பெயர் . வருண்சிவம் சூடிய நாமாகரணம் !! கண்ணாடியய் வலக்கையில் பிடித்துக்கொண்டு ,காய்ந்திருக்கும் தலைமுடியய் ’வரட் வரட் ’ என இடக்கையால் அவன் தலைசீவும் அழகே அழகு !!
கல்லூரி காலத்து நினைவுகள் வருமாயின் , நொட்ஸுக்கு அதில் நீங்கா இடம் உண்டு ! . முதலாம் ஆண்டு விளையாட்டுப்போட்டிகளில் , நோட்ஸ் இடக்கையில் பேட் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சென்றதும் , சென்ற வேகத்திலேயே திரும்ப வந்ததும் , திரும்பி வந்து இடக்கை தலையய் தடவிக்கொண்டிருக்க , ’சே ஒவர் பிட்ச் பால் , நான் எதிர்பார்க்கல மச்சி ’ என பீலிங் விட்டுத் திரிவதில் அவனுக்கு நிகர் அவனே !!அவனிடம் எதாவது சில்மிஶம் செய்து மாட்டிக் கொண்டால் , வலக்கை நமது சட்டைக்காலரை பிடித்துக் கொண்டிருக்க , பருக்கள் நிரம்பிய அவனது முகமும் , இடக்கை முஶ்டியும் நம் முகத்தருகே வந்து பயமுறுத்தும் , நமக்கொ ஜுராஸிக் பார்க் இரண்டாம் பாகம் பார்த்தது போலிருக்கும் !!
ராமசுப்பு ஹாஸ்டலில் சாயந்திர வேளைகளில் டீ என்ற பெயரில் வெந்நீர் தண்ணி தருவார்கள் . யாரும் மதிக்காத அதனை , தோற்றத்தில் ஒரு கூஜாவுக்கு சற்றே சிறியதும் , கொள்ளளவில் அக்கூஜாவை விடவும் பெரியதான ஒரு டம்பளரில் நொட்ஸ் வாங்குவான் !! அதை அவன் வாங்கிக் குடிக்கும் முன்னரே தட்டிப் பறித்து விட நானும் பிரசன்னாவும் சிவாவும் முயற்சி செய்வோம் . பெரும்பாலான நேரங்களில் நாங்கள் தான் ஜெயிப்பொம் , ஆனால் ஒரு சில நேரங்களில் நொட்ஸ் வென்றுவிடுவான் . அத்தகைய நேரங்களில் , தனது முப்பத்தியிரண்டு பற்களும் நன்றாக இருப்பபதை தெரிவிக்கும் வகையில் சிரித்துக் கொண்டும் ,தனியாக இமயமலை வரை சென்று வென்றுவிட்ட கரிகாலச்சோழனைப் போல் தன்னை பாவித்துக் கொண்டு , தனது பராக்கிரமத்தை அனைவரிடமும் பறைசாற்றிக்கொண்டு அரைமணி நேரம் திரிவான் !! ஹாஸ்டலில் சாப்பாட்டுக்கு இருக்கும் கிராக்கியய் விட , நொட்ஸின் தட்டில் சாப்பிடுவதற்கு ஏக கிராக்கி இருக்கும் !!
ஒருநாள் நானும் சிவாவும் ஒரு முக்கிய வேலையில் இருந்தோம் . திடிரென நொட்ஸ் அங்கு வந்தான் , சிவாவின் கையினை எடுத்து தன் வாயில் வைத்துக்கொண்டான் !! எங்களுக்கோ குபீர் சிரிப்பு . விஶயம் தெரிந்ததும் , அவன் முகம் பொன போக்கை பார்க்கவேண்டுமே !! யாருக்கும் தெரியாமல் சினிமாவிற்கு கிளம்பினொம். இது தெரிந்ததும் , வாத்தியார் தன் பின்னால் இருப்பதையும் பொருட்படுத்தாமல் , " எனக்கும் ஒரு டிக்கட் எடுத்துவை மச்சி " என்பதிலாகட்டும் , ஹாஸ்டலில் அனைவருக்கும் முன்பாகவே எழுந்து , குளித்து ரெடியாகி , கல்லூரிக்கு கடைசியாக வருவதிலாகட்டும் , கம்ப்யுட்டர் பிராக்ட்டிகளில் யாராலும் கண்டேபிடிக்க முடியாத அளவிற்கு தவறு செய்து மாட்டிக் கொண்டு பெயிலாவதிலாகட்டும் , ரிகார்ட் நோட்டில் முந்தைய பக்கங்களை காண்பிக்காமல் , கடைசி பக்கத்தை மட்டும் காண்பித்து மாட்டிக்கொள்வதிலும் நொட்ஸுக்கு நிகர் நொட்ஸே !! அவனிருந்திருக்காவிட்டால் , கல்லூரியின் முதலாம் ஆண்டு , தற்பொழுது வரும் விஜய் படங்களை பொலவே உப்புச் சப்பில்லாமலே இருந்திருக்கும் !!
இரண்டாம் ஆண்டு முதல் நொட்ஸ் பர்கூருக்குச் சென்றுவிட்டான் , எனினும் எங்களுடனே சுற்றிக்கொண்டிருப்பான் !! . தனியாக ரும் எடுத்த நாங்கள் , எடுத்தது தவறு எனும் முடிவுக்கு வராதிருக்க நொட்ஸும் அவன் தனது அக்கவுண்டிலும் , தியாகராஜனின் அக்கவுண்டிலும் வாங்கிக் கொடுத்தனுப்பும் புரோட்டாவும் , புல் பாயிலுமே காரணம் . பின்னர் அவனது அக்கவுண்டில் அவனுக்கே தெரியாமல் பில் ஏறத்தொடங்கியது !! இக்காலகட்டத்தில் தான் நொட்ஸ் தனது காமடியின் உச்சத்திற்கு போனது . சென்னையில் டீடிஆரிடம் மாட்டிக்கொண்ட பொழுது , சட்டென்று பஸ் டிக்கட்டை காண்பித்து எக்ஸ்டரா பைன் கட்ட வைத்தது , அவசரத்தில் லேடீஸ் கம்பார்ட்மண்டில் ஏறிக் கொண்ட எங்களை , அதன் இன்னொரு புறம் ஏறிக் கொண்ட அவன் கிண்டலடித்து பின்னர் அசடுவழிய திரும்பி வந்தது என நொட்ஸின் காமடி கிராப் , தற்பொழுதைய அஜீத்தின் மார்க்கட்டைப் போல் , எகத்திற்கும் எகிறத் தொடங்கியிருந்தது !! அனைவருக்கும் பிடித்தவனானன் நொட்ஸ் !!
மூன்றாம், நான்காம் ஆண்டு படிப்பிலும் ஸாரி காமடியிலும் , நொட்ஸ் தான் கிங். அருண்குமார் நோட்ஸ் எடுக்கச் சொல்லி , லைப்பரரிக்கு அனுப்ப , சின்சியராக நொட்ஸ் எடுத்து அதை லைப்பரரியிலேயே வைத்துவிட்டு திரும்ப என்றும் , நைட் ஸ்டடியின் பொழுது சாப்பிட வேண்டி சாப்பாடு வாங்கி மறைத்து வைக்கவும் , நுணலும் தன் வாயாலே கேடும் என்பது போல தன் வாயாலே அதை தெரிவிப்பதுமாக , நொட்ஸ் தனி ஒரு காமடி சாம்ராஜ்யமே நடத்தினான் !! முகத்தை சிரியஸாக வைத்துக் கொண்டு , அனுபவித்து பாடுவது பொல் தனது கர்ண கொடூர குரலால் ஒரு மெலடி பாட்டுப் பாடி , எதிராளியய் திணரடிப்பது நொட்ஸுக்கு கை வந்த கலை . அந்த பாடலின் வரிகளை மாற்றிப் போட்டு , திரும்ப பாடி அவனை இம்சிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு பொழுதுபொக்கு ! அதிலும் " மூவேந்தர் " படத்தில் வரும் என்னவொ ஒரு பாடல் ?? பைனல் பிராக்ட்டிகளுக்கு இரண்டொரு நாட்கள் முன்பு , கடலையின் ரிகார்ட் நோட் தொலைந்துவிட்டது . கே எஸ் ஜி எஸ்டேட்ய புரட்டிப் போட்டும் கிடைக்கவில்லை . பக்கத்தில் சூறாவளி காற்று அடித்தாலும் கூட , கவலைப்படாமல் ட்ராக்டர் ஓட்டும் கடலை கூட ஒரு மணி நேரம் கலங்கிப் போய் விட்டான் !! நொட்ஸ் ஓம்பிரகாஶ் ஜாவின் ருமில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான் . அவனை சுற்றிலும் தேடியாகிவிட்டது , எழுப்பி உட்காரவைத்தும் தேடியாகி விட்டது . கிடைக்கவில்லை . சந்தேகம் வந்து , அவன் டிராயிங் பேடாக! உபயோகித்துக் கொண்டிருந்த புக்கை வாங்கிப் பார்க்க , அது கடலையின் ரிகார்ட் . கடலைக்கு போன உயிர் திரும்பி வந்தது , நொட்ஸுக்கு இருந்த உயிர் போகத் தெரிந்தது !! கல்லூரி நினைவாக யாராவது ஒரு கல்வெட்டு வைக்க ஆசைப்பட்டால் , அதில் நொட்ஸின் இந்த காமடிகள் பொறிக்கப்பட வேண்டியவை !! இப்படியும் நமக்கு ஒரு சீனியர் இருந்தார் என பின்வரும் ஜூனியர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்!!
இந்த நேரத்திலோ என்னவோ தான் திடிரென நொட்ஸின் அப்பா தவறிவிட்டார் . குடும்ப பாரமும் நொட்ஸ் மேல் தான் . சமாளித்தான் . கல்லூரியில் வேறு யாருக்கும் இல்லாத ஒரு பெருமை , எனக்கும் அண்ணாமலைக்கும் உண்டு . அது தமிழ்நாட்டு வரைப்படத்திலேயே இல்லாத நொட்ஸின் சொந்த ஊருக்குச் சென்று திரும்பியது !! தண்ணிர் ஓடாத ஆற்றைக் கடந்து தான் அவனது ஊருக்குச் செல்ல வேண்டும் . ஆயினும் மன்னார்குடியில் அம்மாவும் , தங்கைகளும் காட்டிய அன்பு நெகிழச் செய்யும் . அதுவும் நான் போயிருந்த நேரத்தில் எனக்கோ தீராத வலி !! சமாளித்தொம் !!
அண்ணாமலைக்குக் கூட கிடைக்காத ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்து . ஈ.பீ யில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நோட்ஸ் எனது வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தான் . அப்பவும் காமடிக்கு குறைவில்லை . வண்டியெய் எடுத்துக்கொண்டு ரவுண்ட் வருவது , ஒரு மணி நேரம் ஓட்டினாலும் முதல் கியரிலேயே ஒட்டுவது , எனது தந்தையுடன் வாதிட்டு எனக்கும் என் தந்தைக்குமான உறவை நேராக்குவது பொன்ற காமடிகளும் உண்டு !! இனிய நாட்கள் அவை !!
பசங்களில் எனக்கு ரோல் மாடல்கள் சிலர் உண்டு . இவர்களை போல் இருக்கவேண்டும் என சில சமயங்களில் கற்பனை செய்வதும் உண்டு . முதலிடம் அண்ணாமலைக்கு , நட்புரீதியில் இவனைப் போல் அரவணைத்துச் செல்ல யாராலும் முடியாது , இன்னொருவன் நொட்ஸ் .ப்ளான் பண்ணுவதில் சிதம்பரம் இவனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் !! தங்கையின் கல்யாணத்தை , தனியாளாக நின்று சிறப்பாக நடத்தினான் !! இப்பொழுது கூட என்னால் முடியுமா என்று தெரியவில்லை ! அடுத்த தங்கைக்கான செலவுக்கும் திட்டமிட்டு உள்ளான் . நல்லவன் , ஆனால் ரொம்பவே நல்லவன் !! அவன் மேல் மிகுந்த நம்பிக்கையும் , மரியாதையும் உண்டு எனக்கு . அதுவும் அவனது தங்கையினை பெண் பார்த்து சென்ற அன்று , நானும் நொட்ஸும் மட்டுமே எண்ணூரில் கடற்கரை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் . அன்று நான் அவன் மேல் வைத்திருந்த மரியாதை பன்மடங்கானது .வருங்காலத்தைக் குறித்து தீவிரமாக யொசிப்பதையும் , அதனை தீர்க்கமாக செயல்படுத்துவதுமாக இருந்த அவனின் இன்னொரு முகம் , கல்லூரி நாட்களில் தெரியாமல் பொனதிற்கு வருத்தப்படிகிறேன் .
மனம் கவலையாக இருந்தால் , நொட்ஸுக்கு பொன் பண்ணி பேசலாம் . கண்டிப்பாக சிரிக்கலாம் . நூறு பர்சன்ட் நான் கியாரண்டி!! எப்படியும் நொட்ஸ் இதைப் படிக்கப் போவதில்லை . அப்படியே படித்தாலும் , வரும் கமண்டினை இப்பொழுதே என்னால் சொல்லிவிட முடியும் . " இயேசு நாதர சிலுவேல அறைஞ்சாங்க ,சாக்ரடீஸ கல்லால அடிச்சாங்க , ........................" . நாயின் வாலை நிமிர்த்தத்தான் முடியுமா ? ஆனாலும் இந்த வால் நிமிர்ந்து விட கூடாது என்றே வேண்டுகிறேன் . நொட்ஸின் சேவை , எங்களுக்குத் தேவை .
அவன் எனக்கு நண்பனாதில் எனக்குத் தான் பெருமை !!
நானும் என் அம்மாவும் :
அம்மா என்ற சொல்லின் அர்த்தம் அரசியலாக்கப்படும் தமிழ்நாட்டில் , என் என்ற சொல்லை சேர்க்க வேண்டியிருக்கிறது . இது எனது அம்மாவைப் பற்றியது . அம்மாவிற்கு நேற்று பிறந்த நாள் . கண்டிப்பாக குறித்து வைக்கப்படாவிட்டாலும் , தங்கை தான் நேரம் , நட்சத்திரம் கணித்து கண்டுபிடித்தாள் !!. எனது ராசி மகத்தானது. சிவாஜி வரும் நேரத்தில் , சொந்த செலவில் படம் எடுத்து, வெளியிட சொல்லும் !! கண்டிப்பாக ஜெயிக்கும் என நான் சொல்லும் அணி , கேவலமாக மண்ணைக் கவ்வும் !! அம்மாவும் என்னை போல் தான் போலிருக்கிறது , இல்லாவிடில் எனது அப்பாவை பொன்ற ஒருவருக்கு வாக்கப்பட்டு ,அதை விட கொடுமையாக என்னை பொன்ற ஒரு பையனை பெற்றிருப்பாளா ? இதை நான் என் அம்மாவிடமும் சொல்லியதுண்டு . பதில் என்னையும் எனது அப்பாவையும் விட்டுக்கொடுக்காதவாறே இருக்கும் . !!
. மீனா அப்பா செல்லம் என்பதாலோ என்னவொ ,அம்மாவிற்கு , என் தங்கையய் விட என்னிடம் பாசம் அதிகம் . எனக்கும் , அம்மாவையும் அம்மாவழி சொந்தங்களையுமே பிடிக்கும் !! அம்மா செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் . தங்கத் தட்டில் வைத்து தாங்குவது என்று சொல்வார்களே அது போல , வளர்க்கப்பட்டவர்கள் எனது அம்மா . கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் , ஐம்பது பவுன் நகையும் , ஐம்பதாயிரம் ரொக்கமும் கொடுத்து வாழ வந்தாள் என பாட்டி கூறி கேள்விப்பட்டிருக்கிறேன் . ’கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று சொல்லி வைத்த மூதாதையர்கள் , இப்பொழுது என் கண் முன் வந்தால் , அவர்களை கண்ட இடத்தில் கொளுத்திவிட்டு , அவர்களுக்கு சந்ததியினர் ஏற்படா வண்ணம் , உடலை கூறு கூறாக அறுத்து , எரித்துவிடும் அளவிற்கு கோவம் உள்ளது என்னிடம் !! இதைக் கேட்டுத் தான் , அம்மா அப்பாவின் சகலவித அடக்குமுறைகளையும் அனுபவித்து வந்தாள் , தனது அப்பாவின் சாவிற்கு கூட , ஏதோ பக்கத்து வீட்டுக்காரன் போய் வருவது பொல் , ஒரு மணி நேரம் மட்டுமே போய் வந்தாள் !!
சின்ன வயதில் , நான் செய்யும் தவறுக்கெல்லாம் அம்மாதான் பலிகடா !! தண்ணி அடித்துவிட்டு வந்து என்னை எழுப்புவார் அப்பா . எனக்கு ஏழு முதல் எட்டு வயது வரை இருக்கும். தூங்காவிட்டாலும் , அடிக்கு பயந்து தூங்குவது போல் நடிப்பேன் . எனது அடியும் அம்மாவிற்கு விழுகும் !! . எனது அந்த வயது இயலாமையும் , அம்மாவிற்கெதிரான அப்பாவின் அடக்குமுறையும் தான் , இன்றளவும் நான் என் அப்பாவை ’அப்பா ’ஸ்தானத்தில் வைத்து மதிக்காததின் காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் !!
சின்ன வயதில் , அம்மாவிற்கும் எனக்குமான ஒரு நிகழ்வு இருக்கிறது !! . எனக்கு ஒரு பத்து வயதிருக்கும் என நினைகிறேன் !! . எனக்கு இடியாப்பம் என்றால் உயிர் . அம்மாவிடம் இடியாப்பம் கேட்டேன் . இல்லை என்றார்கள் . அன்று சாயந்திரம் , ’ சர்வேஸ்வரர் கோவிலுக்கு’ச் சென்றொம் . வழி இன்னும் ஞாபகம் இருக்கிறது . செல்லும் வழியில் யாரும் இல்லை . திடிரென்று பின்னால் "தொப்’ என்றொரு சத்தம் . பின்னால் திரும்பிப் பார்த்தால் , நான் நடந்து வந்த வழியில் ஒரு இளநிர் விழுந்திருக்கிறது . சில நொடிகள் தாமதித்திருந்தாலும் , எனது தலையில் தான் விழுந்திருக்கும் , எனது மண்டை பிளந்திருக்கும் !! அன்று , என்னால் அம்மா ரோட்டில் வைத்தே அழுதார்கள் !! அன்று இரவு , எனக்கு சாப்பாடு இடியாப்பம் !!
இன்றளவும் ,எனக்கு தெரிந்து நான் அம்மாவுடன் செய்த தவறு , அம்மாவை என்னவளின் விட்டிற்க்கு அழைத்து சென்றதே . தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவான் என நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு தாயுடன் , தனது வருங்காலத்தைப் பற்றி பேசிய ஒரே மகன் நானாகத் தான் இருப்பேன் !! என்ன ஒரு கேவலம் ? அந்த நேரத்தில் அம்மாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? இருந்தாலும் அம்மா சொல்லி வந்தார்கள் , " பிராப்தம் இருந்தால் நடக்கட்டும் !! " .
கல்லூரிக்காலத்தில் எனக்கும் அம்மாவிற்கான தொடர்பு , கடிதம் வாயிலாக மட்டுமே . பத்து பக்க கடிதம் வரும் . அதில் ஒன்பதரை பக்கங்களுக்கு அப்பா அறிவுருத்தியிருப்பார் !! மீதி இருக்கும் அரைப் பக்கத்தில் அம்மாவும் மீனாவும் அன்பை பொழிந்திருப்பார்கள் !! திருநெல்வேலியில் இருக்கும் பொழுது , ஒரு மத்தியான வேளையில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு , "பொன்னியின் செல்வன் " படித்தது ஞாபகம் இருக்கிறது . அது ஒரு சுகானுபவம் !! ஐந்து பைசாவிற்கு வழியில்லாத பொழுது கிடைத்தது , இன்று ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் பொழுதும் கிடைக்காது !!
அம்மா அற்புதமாக சமைப்பார்கள் . அம்மாவின் கையால் கிடைக்கும் மோர்குழம்பும் , உருளைக்கிழங்கு பொரியலும் கலக்கலாக இருக்கும் !!அதற்காகவே மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவேன் !!இங்கு ஹோட்டலில் சில சமயம் மொர்குழம்பு போடுவார்கள் !! சட்டென்று அம்மாவின் ஞாபகம் வரும். ஆனால் அந்த சுவை வருவதில்லை !!
இஞ்சினியரிங் முடித்து வந்த ஒரு நாள் இரவு , வழக்கம் போல் அப்பாவின் அடிதடி ஆரம்பித்தது . இந்த முறை எனக்கும் விட மனசில்லை , அம்மாவாலும் முடியவில்லை . சட்டென்று கைக்கலப்பாக , "இனி இந்த வீட்டுக்குன்னு ஒரு பைசா தர மாட்டேன் , பிச்சைதான் எடுக்கணும் " என்று அப்பா வாழ்த்த , அம்மாவும் " நாங்க ஏன் பிச்சைதான் எடுக்கணும்? , என் பையன் காப்பாத்துவான் " என்று சொல்ல ,கல்லூரி காலத்து இனிய வாழ்க்கையும் சொகுசும் முடிவுக்கு வந்தது . ஆர்.டி.ஓ ஆபிஸில் வேலைக்குச் சென்றேன் . தினமும் கிடைக்கும் ஐம்பது ரூபாய் , மளிகைச் செலவுக்கும் , வீட்டு வாடகைக்கும் சரியாய் போனது . திடிரென வரும் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணருவேன் .அந்த நேரத்தில் , நானே எதிர்பார்க்காத வகையில் , அம்மா துணி தைத்து கொடுத்தும் , மாவு அரைத்துக்கொடுத்தும் சம்பாதித்தார்கள் !! அந்த இரண்டு மாதங்களும் அம்மா காட்டிய உறுதியும் , சிக்கனமும் தான் நானும் என் தங்கையும் இன்று இந்த நிலைமையில் இருக்க காரணம் .
பின்னர் நான் பிலிப்ஸ் , பஜாஜ் என்று வேலைக்கு சென்றதும் , அம்மாவின் கூட இருக்கும் எனது நேரங்கள் குறைந்தன .நான் சொந்தமாக பைக் வாங்கியதும் அம்மாவின் கண்களில் பெருமிதம் . நன்றாக ஒட்ட கற்றுக் கொண்டதும் , அம்மாவை வைத்து கோவிலுக்கும் , பாட்டிவிட்டிற்கும் கூட்டிச் செல்வேன் .முதன் முதலாக அப்படி கூட்டிச் சென்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது !! அம்மா பயத்துடனே உட்கார்ந்தார்கள் .பிடித்ததிற்காக அம்மாவின் கை எனது தோளில் இருக்கும் . வளைவுகளிலும் , எதிரே எதாவது வாகனம் வந்தாலோ , அந்த கைப்பிடியின் அழுத்தம் கூடும் .நானும் அதை ரசித்துக்கொண்டே வண்டி ஒட்டுவேன் !!
கலர்டீவி வாங்கி படம் பார்க்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை . வாங்கிக்கொடுத்ததும் , அம்மாவிற்கு ரொம்ப சந்தொசம் . சொந்தக்காரங்களை எல்லாம் வரவழைத்துக் காண்பித்து , ஒரு ’கெட் டு கெதர் ’ நடத்தினாள் !! சமையலறையிலிருந்த படியே சேனல் மாற்றுவதும் , சீரியல் பார்த்துக்கொண்டே சமையல் செய்வதும் , என்று ஒரே கோலாகலம் தான் !!
அம்மாவை பொருத்தவரை எனக்கு ஒரே ஒரு ஆசை தான் . அம்மாவின் சொந்த ஊரான மதுரையில் , அம்மா பெயரில் ஒரு சொந்த வீடு !! கார் ஒன்று வாங்கி , அதில் அம்மா , மீனாவுமாக ஏதாவது ஒரு கோவிலுக்கு பயணம் . அங்கு வைத்து , மொர்குழம்பு சாதம் சாப்பிட வேண்டும் !! என்ன ஒரே ஒரு குறையிருக்கும் ,வண்டியில் சென்றால் கிடைக்கும் அம்மாவின் அந்த தோள்பிடி அழுத்தம் காரில் சென்றால் கிடைக்காது !! பரவாயில்லை.
இந்த ஆசை நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை !!
. மீனா அப்பா செல்லம் என்பதாலோ என்னவொ ,அம்மாவிற்கு , என் தங்கையய் விட என்னிடம் பாசம் அதிகம் . எனக்கும் , அம்மாவையும் அம்மாவழி சொந்தங்களையுமே பிடிக்கும் !! அம்மா செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் . தங்கத் தட்டில் வைத்து தாங்குவது என்று சொல்வார்களே அது போல , வளர்க்கப்பட்டவர்கள் எனது அம்மா . கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் , ஐம்பது பவுன் நகையும் , ஐம்பதாயிரம் ரொக்கமும் கொடுத்து வாழ வந்தாள் என பாட்டி கூறி கேள்விப்பட்டிருக்கிறேன் . ’கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று சொல்லி வைத்த மூதாதையர்கள் , இப்பொழுது என் கண் முன் வந்தால் , அவர்களை கண்ட இடத்தில் கொளுத்திவிட்டு , அவர்களுக்கு சந்ததியினர் ஏற்படா வண்ணம் , உடலை கூறு கூறாக அறுத்து , எரித்துவிடும் அளவிற்கு கோவம் உள்ளது என்னிடம் !! இதைக் கேட்டுத் தான் , அம்மா அப்பாவின் சகலவித அடக்குமுறைகளையும் அனுபவித்து வந்தாள் , தனது அப்பாவின் சாவிற்கு கூட , ஏதோ பக்கத்து வீட்டுக்காரன் போய் வருவது பொல் , ஒரு மணி நேரம் மட்டுமே போய் வந்தாள் !!
சின்ன வயதில் , நான் செய்யும் தவறுக்கெல்லாம் அம்மாதான் பலிகடா !! தண்ணி அடித்துவிட்டு வந்து என்னை எழுப்புவார் அப்பா . எனக்கு ஏழு முதல் எட்டு வயது வரை இருக்கும். தூங்காவிட்டாலும் , அடிக்கு பயந்து தூங்குவது போல் நடிப்பேன் . எனது அடியும் அம்மாவிற்கு விழுகும் !! . எனது அந்த வயது இயலாமையும் , அம்மாவிற்கெதிரான அப்பாவின் அடக்குமுறையும் தான் , இன்றளவும் நான் என் அப்பாவை ’அப்பா ’ஸ்தானத்தில் வைத்து மதிக்காததின் காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் !!
சின்ன வயதில் , அம்மாவிற்கும் எனக்குமான ஒரு நிகழ்வு இருக்கிறது !! . எனக்கு ஒரு பத்து வயதிருக்கும் என நினைகிறேன் !! . எனக்கு இடியாப்பம் என்றால் உயிர் . அம்மாவிடம் இடியாப்பம் கேட்டேன் . இல்லை என்றார்கள் . அன்று சாயந்திரம் , ’ சர்வேஸ்வரர் கோவிலுக்கு’ச் சென்றொம் . வழி இன்னும் ஞாபகம் இருக்கிறது . செல்லும் வழியில் யாரும் இல்லை . திடிரென்று பின்னால் "தொப்’ என்றொரு சத்தம் . பின்னால் திரும்பிப் பார்த்தால் , நான் நடந்து வந்த வழியில் ஒரு இளநிர் விழுந்திருக்கிறது . சில நொடிகள் தாமதித்திருந்தாலும் , எனது தலையில் தான் விழுந்திருக்கும் , எனது மண்டை பிளந்திருக்கும் !! அன்று , என்னால் அம்மா ரோட்டில் வைத்தே அழுதார்கள் !! அன்று இரவு , எனக்கு சாப்பாடு இடியாப்பம் !!
இன்றளவும் ,எனக்கு தெரிந்து நான் அம்மாவுடன் செய்த தவறு , அம்மாவை என்னவளின் விட்டிற்க்கு அழைத்து சென்றதே . தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவான் என நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு தாயுடன் , தனது வருங்காலத்தைப் பற்றி பேசிய ஒரே மகன் நானாகத் தான் இருப்பேன் !! என்ன ஒரு கேவலம் ? அந்த நேரத்தில் அம்மாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? இருந்தாலும் அம்மா சொல்லி வந்தார்கள் , " பிராப்தம் இருந்தால் நடக்கட்டும் !! " .
கல்லூரிக்காலத்தில் எனக்கும் அம்மாவிற்கான தொடர்பு , கடிதம் வாயிலாக மட்டுமே . பத்து பக்க கடிதம் வரும் . அதில் ஒன்பதரை பக்கங்களுக்கு அப்பா அறிவுருத்தியிருப்பார் !! மீதி இருக்கும் அரைப் பக்கத்தில் அம்மாவும் மீனாவும் அன்பை பொழிந்திருப்பார்கள் !! திருநெல்வேலியில் இருக்கும் பொழுது , ஒரு மத்தியான வேளையில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு , "பொன்னியின் செல்வன் " படித்தது ஞாபகம் இருக்கிறது . அது ஒரு சுகானுபவம் !! ஐந்து பைசாவிற்கு வழியில்லாத பொழுது கிடைத்தது , இன்று ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் பொழுதும் கிடைக்காது !!
அம்மா அற்புதமாக சமைப்பார்கள் . அம்மாவின் கையால் கிடைக்கும் மோர்குழம்பும் , உருளைக்கிழங்கு பொரியலும் கலக்கலாக இருக்கும் !!அதற்காகவே மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவேன் !!இங்கு ஹோட்டலில் சில சமயம் மொர்குழம்பு போடுவார்கள் !! சட்டென்று அம்மாவின் ஞாபகம் வரும். ஆனால் அந்த சுவை வருவதில்லை !!
இஞ்சினியரிங் முடித்து வந்த ஒரு நாள் இரவு , வழக்கம் போல் அப்பாவின் அடிதடி ஆரம்பித்தது . இந்த முறை எனக்கும் விட மனசில்லை , அம்மாவாலும் முடியவில்லை . சட்டென்று கைக்கலப்பாக , "இனி இந்த வீட்டுக்குன்னு ஒரு பைசா தர மாட்டேன் , பிச்சைதான் எடுக்கணும் " என்று அப்பா வாழ்த்த , அம்மாவும் " நாங்க ஏன் பிச்சைதான் எடுக்கணும்? , என் பையன் காப்பாத்துவான் " என்று சொல்ல ,கல்லூரி காலத்து இனிய வாழ்க்கையும் சொகுசும் முடிவுக்கு வந்தது . ஆர்.டி.ஓ ஆபிஸில் வேலைக்குச் சென்றேன் . தினமும் கிடைக்கும் ஐம்பது ரூபாய் , மளிகைச் செலவுக்கும் , வீட்டு வாடகைக்கும் சரியாய் போனது . திடிரென வரும் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணருவேன் .அந்த நேரத்தில் , நானே எதிர்பார்க்காத வகையில் , அம்மா துணி தைத்து கொடுத்தும் , மாவு அரைத்துக்கொடுத்தும் சம்பாதித்தார்கள் !! அந்த இரண்டு மாதங்களும் அம்மா காட்டிய உறுதியும் , சிக்கனமும் தான் நானும் என் தங்கையும் இன்று இந்த நிலைமையில் இருக்க காரணம் .
பின்னர் நான் பிலிப்ஸ் , பஜாஜ் என்று வேலைக்கு சென்றதும் , அம்மாவின் கூட இருக்கும் எனது நேரங்கள் குறைந்தன .நான் சொந்தமாக பைக் வாங்கியதும் அம்மாவின் கண்களில் பெருமிதம் . நன்றாக ஒட்ட கற்றுக் கொண்டதும் , அம்மாவை வைத்து கோவிலுக்கும் , பாட்டிவிட்டிற்கும் கூட்டிச் செல்வேன் .முதன் முதலாக அப்படி கூட்டிச் சென்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது !! அம்மா பயத்துடனே உட்கார்ந்தார்கள் .பிடித்ததிற்காக அம்மாவின் கை எனது தோளில் இருக்கும் . வளைவுகளிலும் , எதிரே எதாவது வாகனம் வந்தாலோ , அந்த கைப்பிடியின் அழுத்தம் கூடும் .நானும் அதை ரசித்துக்கொண்டே வண்டி ஒட்டுவேன் !!
கலர்டீவி வாங்கி படம் பார்க்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை . வாங்கிக்கொடுத்ததும் , அம்மாவிற்கு ரொம்ப சந்தொசம் . சொந்தக்காரங்களை எல்லாம் வரவழைத்துக் காண்பித்து , ஒரு ’கெட் டு கெதர் ’ நடத்தினாள் !! சமையலறையிலிருந்த படியே சேனல் மாற்றுவதும் , சீரியல் பார்த்துக்கொண்டே சமையல் செய்வதும் , என்று ஒரே கோலாகலம் தான் !!
அம்மாவை பொருத்தவரை எனக்கு ஒரே ஒரு ஆசை தான் . அம்மாவின் சொந்த ஊரான மதுரையில் , அம்மா பெயரில் ஒரு சொந்த வீடு !! கார் ஒன்று வாங்கி , அதில் அம்மா , மீனாவுமாக ஏதாவது ஒரு கோவிலுக்கு பயணம் . அங்கு வைத்து , மொர்குழம்பு சாதம் சாப்பிட வேண்டும் !! என்ன ஒரே ஒரு குறையிருக்கும் ,வண்டியில் சென்றால் கிடைக்கும் அம்மாவின் அந்த தோள்பிடி அழுத்தம் காரில் சென்றால் கிடைக்காது !! பரவாயில்லை.
இந்த ஆசை நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை !!
Saturday, May 26, 2007
பயணங்கள் :
பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை . பல்வேறு சூழ்நிலைகளில் , பல்வேறு மனநிலைகளோடும் , பல்வேறு நினைவுகளொடும் பயணித்திருக்கிறேன் . பயணம் செய்வதே வாழ்க்கை என்றாகிப் போனது பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும் . சில பயணங்களில் பேச்சுத்துணைக்கு ஆள் இருக்கும் , சிலவற்றில் நானும் , என் நினைவலைகளும் மட்டுமே . சில பயணங்களை மறக்க வேண்டும் என நினைக்கிறேன் , சிலது தொடராதா எனவும் ஏங்கியிருக்கிறேன் , சிலவற்றை தவிற்றிருக்கலாமே எனவும் இப்பொழுது நினைக்கிறேன் . எனக்கு நினைவு தெரிந்து , என் ஞாபகத்தில் இருக்கும் எனது முதல் பயணம் , நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் தான் . மதுரையில் இருந்த நாங்கள் , எப்படி நாகர்கோவில் சென்றோம் எனத் தெரியவில்லை . எனக்கு எத்தனை வயதிருந்திருக்கும் எனத் தெரியவில்லை . இங்கிருந்து கன்னியாகுமரி பக்கம் என்றும் , அங்கு கடல் இருக்கும் என்றும் யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் . உடன் அங்கு போக வேண்டும் என அடம் பிடித்து , பாட்டியய் அழைத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறது . நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பயணம் என்றும் இனிமையானது . கன்னியாகுமரி நெருங்க நெருங்க , எதிர்வரும் கடற்காற்றால் , நித்திரா தேவி நம்மை ஆட்கொள்ளும் . பஸ்சில் ஒட்டுனரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏறக்குறைய தூங்கியிருப்பார்கள் . அப்பொழுது எனது பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டே பயணம் செய்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . முதன்முறையாக கடலை பார்க்கும் பயணம் என்பதாலோ என்னவொ , அந்த பயணம் இன்னும் ஞாபகம் இருக்கிறது .ராணுவக்கட்டுப்பாட்டை பற்றி எனக்கு தெரியாது , கேள்வி தான் பட்டிருக்கிறேன் . இருந்தாலும் , உறுதியாக சொல்லலாம் , ராமசுப்பிரமணிய ( அப்பா ) கட்டுப்பாடு ,ராணுவக்கட்டுப்பாட்டை விட மிகவும் கொடுமை . ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நான் ராமசுப்பிரமணிய கட்டுப்பாட்டில் தான் இருந்தேன் . அதனால் சிற்சில ரயில் பயணங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியான பயணங்கள் இருக்கவில்லை . முதன்முதலாக மதுரையில் இருந்து , நாகர்கோவிலுக்கு தனியாக பயணம் செய்தது தான் மறக்க முடியாதது .அப்பா என்னை மதுரை ரயில்வே ஸ்டேஶனில் ஏற்றி விட்டார் . வேறு எந்த ஸ்டேஶனிலும் இறங்க வேண்டாம் என்றும் , வழியில் டீ கொண்டுவருவார்கள் அப்பொழுது மட்டும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருந்தார் . ரயில் கிளம்பியது . அடுத்த ஸ்டேஶன் திருப்பரங்குன்றம் . அந்த ஸ்டேஶனிலேயே இறங்கி ஏறி , அப்பாவின் அடக்குமுறையினை மீறிவிட்ட ஒருவித சந்தொஶத்துடன் குதூகலித்தது ஞாபகம் இருக்கிறது . ப்ளஸ் ஒன்னில் பசங்க செட் செர்ந்ததும் ஆரம்பித்தது கொண்டாட்டம் . நினைத்த நெரத்தில் , நினைத்த இடத்திற்கு பயணம் . அப்பொழுது ஸ்கூல் பாஸ் கொடுத்திருந்தார்கள் . ஆசிரமத்தில் இருந்து நாகர்கொவிலுக்கு சென்று வர மட்டுமே உபயொகப்படுத்த படவேண்டிய அந்த பாஸில் , நாகர்கொவிலில் இருந்து கன்னியாகுமரி வரை சென்று திரும்பியிருக்கிறொம் . அதிலும் , எனது பாஸில் என் நண்பனும் வருவான் !!! சந்தொச பயணங்கள் அவை . !!! உட்கார இடம் கிடைக்க கூடாது என்று வேண்டுவேன் . புட் போர்டில் தான் பயணம் . பின்னர் என்னவளை சந்திக்கச் செல்லும் பயணங்களிலும் அதே பாஸ் , ஆனால் பஸ்ஸின் உள்ளே தான் பயணம் . பின்னர் கிருஶ்ணகிரி காலேஜில் சேர்ந்ததும் , தனியாக திருநெல்வேலியில் இருந்து கிருஶ்ணகிரி வரை . காலை ஐந்து மணி ரயில் ஒன்று , திருநெல்வேலியில் இருந்து புறப்படும் . இரண்டரை மணிக்கு ஈரோடு வந்து சேரும் . அங்கிருந்து மூன்றரைக்கு கிளம்பி , ஒன்பது மணியளவில் ஜோலார்பேட்டை வந்தடையும் . அங்கிருந்து ஒரு மணி நேரம் பஸ் பயணம் கிருஶ்ணகிரி . காலை ஐந்து மணிக்கு கிளம்பி , இரவு பத்து மணி வரை பயணம் . தாவு தீர்ந்து விடும் என்பார்களே அது தான் அது . எத்தனை நேரம் தான் புக் படித்துக்கொண்டும் , தூங்கிக்கொண்டும் நேரம் கழிப்பது ? வெறுத்துப் போய் விடும் . எப்ப தான் காலேஜ் போய் பசங்கள பார்ப்பொம் என்றிருக்கும் . ஒரே ஒரு தடவை தான் முழு பிரயாணம் செய்தேன் . பின்னர் அவ்வாறு பயணப்பட நேர்ந்த பொழுது , ஒன்று மொரப்புர் ஸ்டேஶனிலேயே இறங்கி , பஸ் பிடித்து தர்மபுரி வழியாக கிருஶ்ணகிரி வந்து சேர்வேன் , அல்லது ஈரோட்டிலேயே இறங்கி பஸ்ஸில் சேலம் வழியாக கிருஶ்ணகிரி வந்து சேர்வேன் . இந்த பயணங்களில் உற்ற துணை புத்தகம் தான் . அதுவும் இல்லாவிட்டால் , கண்டதையும் கற்பனை பண்ணிக்கொண்டு , கண்களை மூடிக் கொண்டு எனக்கே உரித்தான கற்பனா உலகில் பவனி வருவேன் . கனவு இல்லை அது , கற்பனை . சுகானுபவம் !!! ஒருதடவை இவ்வாறு வந்து சேர , இரவு பத்து மணியாகிவிட்டது . கல்லூரி திறக்க இன்னும் இரண்டு வாரம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள் . வீட்டிற்கு போக மனதில்லை . அதனால் சென்னை கிளம்பினேன் . முதல் முறையாக தனியாக சென்னை மாநகருக்கு !! . தாத்தா வீட்டிற்கு , அதுவும் அப்பாவிற்கு தெரியாமல் !! வழியில் பாலாஜியய் ஒரு மொட்டலில் சந்தித்தேன் . அப்பொழுது அவனுடன் அவ்வளவாக பரிச்சயம் இல்லை . காலேஜ் லீவ் மச்சி என்றேன் . இவன் பொய் சொல்லி நமது படிப்பை கெடுக்க போகிறான் என்று நினைத்தானோ என்னவோ , பரவாயில்ல நான் போய் பார்த்துக்கிறேன் என்றான் . வழி தெரியாத ஊரில் , அதுவும் சென்னையில் எப்படியோ வழி கண்டுபிடித்து , தாத்தா வீட்டை அடைந்தேன் . இந்த பயணம் இருந்திருக்கா விட்டால் , தாத்தா மற்றும் அத்தையின் பாசத்தை அறியாமலே போயிருப்பேன் . !! கல்லூரி காலத்துப் பயணங்கள் , பெரும்பாலும் அரட்டையுடனும் கதைகளுடனுமே சென்றன . காமராஜ் அக்கா கல்யாணத்திற்க்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டி தஞ்சாவுர் , மயிலாடுதுறை , காட்டுமன்னார்குடி என சுற்றியது , கடலையின் அக்கா கல்யாணத்திற்கு என்று கடலூர் , பாண்டி எனச் சென்றது , மீண்டும் நொட்ஸ் வீட்டிற்கு அதாவது மன்னார்குடி சென்றது , அண்ணாமலை , வெண்மணி தயவால் "ரோடு என்றால் என்ன ? " என கேட்கும் வதுவார்ப்பட்டிக்கும் , மேலாண்மறை நாட்டிற்கும் சென்றது என கல்லூரி காலத்து பயணங்கள் ஊர் சுற்றி பார்க்கும் எனது ஆசைக்கு வடிகாலானது . இப்பயணங்கள் எங்களது நட்பினை இன்னும் வலிதாக்கியது . பின்னால் எனது சேல்ஸ் பீல்டிலின் முன்னனுபவமாய் இருந்தது. உபயோகமாய் இருந்தது .வேலை கிடைத்து பெங்களுர் சென்றேன். ஊர் சுற்றும் வேலை . இந்த சமயத்தில் தான் நான் ஊர்களையும் , வழிகளையும் கவனிக்கவும், ரசிக்கவும் தொடங்கினேன் .ஒவ்வொரு ஊரிலும் ஒரே பாஶையய் வெவ்வேறு விதமாய் பேசினர் . பழக்க வழக்கங்கள் வெவ்வேறாய் இருந்தது . வேலை இல்லாவிட்டாலும் கைகாவிற்கும் , கண்டகளும் சென்று இயற்கை காட்சியினை ரசித்தேன் . பிலிப்ஸில் வேலை கிடைத்ததும் , எனது பயணங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டன . இரண்டாம் வகுப்பு பிரயாணியான நான் , அதே வைகை எக்ஸ்பிரஸில் இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணம் செய்தேன் !! கம்பனி காசு!!! பிலிப்ஸ் , பஜாஜ் தயவால் தென் மாவட்டங்களை நன்றாக அறிந்தேன் . விருதுநகர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் மீண்டும் பயணங்கள் . !! பின்னால் வழுக்கி செல்லும் மரங்களையும் , தனியாளாக மெயின் ரோட்டிற்கு கொஞ்சம் பின் தள்ளியிருக்கும், ஒற்றை குண்டு பல்ப் எரியும் மொட்டார் ருமின் காவலாளையும் , இரவு நேர பயணங்களில் சில்லென்று முகத்தில் அறையும் காற்றின் குளிர்ச்சியும் , எனது கற்பனா உலகின் ஐஸ்வர்யங்களுமாய் , இந்த பயணங்களில் நான் என்னையே தொலைத்தேன் . வாரத்தின் ஆறு வேலை நாட்களில் , ஒரே ஒரு நாள் தான் மதுரையில் இருப்பேன் . மற்ற ஐந்து நாட்களும் , இல்லாத வேலையய் இருப்பதாக சொல்லிக்கொண்டு , வெளியுர்களில் இருப்பேன் . இப்பயணங்களால் , எனக்கு சில புதிய நண்பர்களும் கிடைத்தார்கள் . ஆரப்பாளயம் ஆட்டோ ஸ்டான்ட் நண்பர் குட்டீயும் சங்கரும் பரிச்சயமானது அப்படித்தான் . இன்றும் கூட பழக்கம் இருக்கிறது . மதுரையில் இருந்து காலை கிளம்பி , சிவகாசி சென்றுவிட்டு , இரவு திரும்புவேன் . போன் பண்ணிவிட்டால் , குட்டியும் சங்கரும் ஆட்டோவொடு பஸ்ஸ்டான்ட் வந்து விடுவார்கள் . எதாவது பாருக்குப் போய் தண்ணி அடித்துவிட்டு , சினிமா பார்த்துவிட்டு , அப்படியே என்னை வீட்டில் கொண்டு போய் விடுவார்கள் . இனிமையான காலமாயிருந்தது அது . !! அபுதாபிக்கு வந்த விமானப் பயணம் கண்டிப்பாக எனது வாழ்வில் ஒரு திருப்புமுனை . புதிய வாழ்க்கையின் தேடலுக்கான கேள்விக்குறியும் , கவலையும் விமானத்தில் பயணித்த அனைவரின் முகத்திலும் கண்டேன் . தங்களுக்கு சொந்தமான , தங்களுக்கு பிடித்த ஒரு பொருளை பின்னால் விட்டுவிட்டு செல்லும் பரிதவிப்பு அனைவரிடமும் !! இப்பயணத்திலும் நான் எனது கற்பனைகளோடு தான் பயணித்தேன் !!ஆனாலும் , திரும்ப நாட்டிற்க்கு செல்லும் விமானத்தில் பயணிக்கும் பொழுது பயணிகள் அனைவரின் முகத்திலும் நான் காணப்பொகும் மகிழ்ச்சியய்யும் , நிறைவையும் காண ஆவலோடு காத்திருக்கிறேன் !! ஆனால் இதற்கு இன்னும் பதினோரு மாதங்கள் காத்திருக்க வேண்டும் !!! இங்கும் பயணங்களுக்கு குறைவில்லை !!டாக்ஸியில் போகும் பொழுது போடும் குட்டித்தூக்கத்தை அனுபவிக்கிறேன் !! டாக்சியில் வேறு யாருக்கும் தமிழ் தெரியாது என்ற நம்பிக்கையில் , மனைவியுடனோ , காதலியுடனோ அந்தரங்கமாக பேசுபவர்களின் காதல் மொழிகளை கேட்டு ரசித்திருக்கிறேன் !! அடுத்தடுத்தான எனது பயணங்களுக்காக காத்திருக்கிறேன் , கற்பனைகளோடு!!
மீண்டும் வருகிறேன் !!
மீண்டும் வருகிறேன் !!
பார் பெண்கள்
இங்கு அபுதாபியில் நான் அடிக்கடி பாருக்குச் செல்வது உண்டு . முதலில் எனக்கு பார் இருக்குமிடம் அறிமுகப்படுத்திய பெருமை , எனது சீனியர் மகான் சீனிவாசனையே சாரும் . அவர் இந்தியா சென்றதும் , நான் பாருக்குச் செல்வது நின்றது .. சரவணனை பார்க்கும் வரை .
ஆபிஸில் தண்ணி அடித்து விட்டு , அது போதாமல் பாருக்குச் செல்வோம் . இங்கு பாரில் தமிழ் , மலையாள பாடல்கள் அதிர , ஸ்டேஜில் பெண்கள் ஆடுவார்கள் . பெண்கள் அனைவரும் தென்னிந்திய பெண்கள் . அரபி பெண்கள் ஆடும் பார்களும் உண்டு . ஆனால் நாங்கள் அங்கு செல்வது இல்லை . குறைந்த ஆடைகளுடன் ஆடும் பெண்கள் , மெல்லிய வெளிச்சம் , அதிரடி பாட்டுக்கள் என தென்னிந்திய பார்கள் அமர்களப்படும் .அதுவும் வியாழன் இரவும் , வெள்ளி இரவும் கொண்டாட்டங்கள் தான் !!
பெண்கள் அனைவரும் சுமாராக இருப்பார்கள் . அதுவும் தமிழ் பெண்கள் தான் அதிகம் .இந்த பெண்கள் அனைவரும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வருகிறார்கள் , முன்று மாதங்களுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் என்று பேசி , விசிட் விசாவில் கொண்டு வருவார்கள் , முன்று மாதங்களுக்கு பின் அவர்களை அனுப்பி விட்டு , வேறு பெண்களை அழைத்து வருவார்கள் என்று , பின்னர் ஒரு தமிழ் பெண்ணிடம் நெருங்கிப் பேசும் வாய்ப்பு கிடைத்த பொழுது அறிந்து கொண்டேன் !! முதலில் எனக்கு இந்த பெண்களிடம் ஒருவித கழிவிறக்கம் தான் தோன்றியது . அது தவறு என்று பின்னர் தான் அறிந்து கொண்டேன் . நமது அனுபவங்களில் இருந்து மட்டும் தான் பாடம் கற்க வேண்டுமா என்ன?
பாரில் நமக்கு தேவையான விரும்பிய பாடல் கேட்கலாம் .அதற்கு தனி கட்டணம் . நாம் விரும்பிய பெண்ணுக்கு , மாலை போடலாம் .அதற்கும் தனி கட்டணம். இந்திய மதிப்பில் சுமார் அறுநூறு ருபாய் . இந்த தவறை மட்டும் நான் செய்ததில்லை . செய்யவும் கூடாது என்ற வைராக்கியத்தில் உள்ளேன் . ஆனால் சரவணன் இந்த விஶயத்தில் மோசம் . ஒரு தடவை பாருக்குச் சென்றால் , குறைந்தது ஐந்து மாலைகள் போடுவான், அதுவும் ஒரே பெண்ணுக்கு !! பெண்களுக்கு கிரிடம் சூட்டலாம் , அதற்கு சுமார் ஆறாயிரம் ரூபாய். நாம் பாருக்குச் செல்வது குறைந்தால் , அங்கிருக்கும் பெண்களிடம் இருந்து போன் வரும் , " உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது , இன்று பாருக்கு வாருங்கள் "என்று . போதையில் இருக்கும் ஒருவனிடம் இருந்து , எவ்வளவு எல்லாம் கறக்க முடியுமோ அவ்வளவையும் கறக்கும் பணியய் செவ்வனே செய்து வருகின்றன இந்த பார்கள் .
சரவணன் மிகச் சரியாக சிக்கினான் . தினமும் பாருக்குச் செல்வதை வாடிக்கையாக்கினான். நானாவது ஆபிசில் தண்ணி அடிப்பதொடு சரி .அவன் இங்கும் என்னுடன் தண்ணி அடிப்பான் , பின்னர் தனியாக பாருக்குச் சென்றும் தண்ணி அடிப்பான் .காரணம் கேட்டால் , காதல் என்றான் . நானும் இன்னும் சில நண்பர்களும் சொல்லிப் பார்த்தொம் , கேட்பதாக தெரியவில்லை , பட்டுத் தெரியட்டும் என்று விட்டு விட்டொம் .
சரி அந்த காதலாவது அம்பிகாபதி - அமராவதி காதலாக இருக்கும் என்ற எனது எண்ணத்திலும் அணுகுண்டு விழுந்தது . ஒரு நாள் , சரவணன் என்னிடம் வந்தான் . " பாஸ் , இந்த சிடில இருக்குற போட்டோ என் மொபைல்ல மாத்தி தாங்க பாஸ் " என்றான் . அதில் ஒரு கைக்குழந்தையின் போட்டோ இருந்தது . யாருடா இது என்றேன் , அது அவனது ஆள். உமாவின் குழந்தையாம்!! . " என்னடா சொல்ற ?" என்றேன். " ஆமா பாஸ் , உமாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு , புருஶன் கைவிட்டுட்டான் , அதான் இங்க வந்திருக்கா " என்றான் . எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. காசுக்காக , பெற்ற குழந்தையய் விட்டுவிட்டு , இங்கு வந்து நடனமாடி , கண்டவர்களிடம் கொஞ்சிப் பேசி , மாலை வாங்கி சூடிக்கொண்டு , என்ன பொழப்பு இது ?
கொஞ்ச நாள் கழித்து , சரவணன் என்னிடம் வந்து , " பாஸ் , உமா இந்தியா போரா பாஸ் , மனசு கஶ்டமா இருக்கு , " என்றான் . நானும் , விட்டுதுடா சனியன் , இனி பையன் ஒழுங்கா இருப்பான் என்று நினைத்தேன் . அதிலும் மண் . இந்தியாவிற்கு கால் பண்ணியே , சம்பளம் அனைத்தையும் இழந்தான் . பின்னர் சரவணன் வருவது குறைந்தது , அவனை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன . உமா தனது குழந்தைக்கு சென்னையில் சீரியஸ் ஆகிவிட்டதாக சொல்லவும் , அதற்கு சரவணன் வட்டிக்கு வாங்கி ஐம்பதாயிரம் ருபாய் அனுப்பி வைத்ததாகவும் , அதை வைத்து அவள் ஒரு வியாபார ஏஜன்சி ஆரம்பித்துள்ளதாகவும் , சரவணன் ’காதல் ’ பட க்ளைமாக்ஸாக திரிவதாகவும் தகவல் வந்தது .
பின்னர் ஒரு நாள் சரவணன் போன் பண்ணிணான் . தான் இந்தியா செல்வதாகவும் , திரும்பி வர வாய்ப்பு கம்மி எனவும் கூறினான் . தண்ணி அடித்து அனுப்பி வைத்தொம் . பின்னர் தான் தெரியவந்தது . தலைவர் உமாவை பார்க்க பாருக்கு சென்ற கணக்கிலும் , அவளுக்காக நகையும் பணமுமாக செய்ததிழும் , கிட்டத்தட்ட இரண்டு லட்ச ருபாய் அளவில் கடன் வைத்திருப்பது . கடன் கொடுத்தவர்கள் ஆபிசுக்கு போன் பண்ண , ஆபிசில் சரவணனை திரும்ப அழைத்துக் கொண்டனர் .
நேற்று முன் தினம் சரவணன் வந்திருந்தான் . " பாஸ் , உமா திரும்ப வந்திருக்கா பாஸ் . என்ன பார்கணும் பொல இருக்காம் . அவளோட புருஶனும் இன்னக்கி பாருக்கு வர்றானாம் . அவனுக்கு முன்னாடி நான் அவளுக்கு மாலை போடணும்னு சொல்லிருக்கா பாஸ் , நீங்களும் வர்றீங்களா கலக்குவோம் ? " என்றான் . அவனது மடத்தனத்தை நினைத்து கோபப்படுவதா , இல்லை அறியாமையை நினைத்து வருத்தப்படுவதா என தெரியாமல் , " நாளேல இருந்து நான் சார்ஜா போறென்டா , அபுதாபி வந்தா உனக்கு கால் பண்றேன் " என்று சொல்லி அனுப்பி வைத்தேன் . பட்டும் தெரியாதவர்களை வேறு என்னதான் செய்வது . ??
இன்னொரு நாள் , ஹபிப் கால் பண்ணியிருந்தான் . " மச்சி , நேத்து ஒரு பாருக்கு போயிருந்தென் . கலக்கல் மச்சி , என்னா பொண்ணுங்க ? ஒரு பிலிப்பிணி பொண்ணு எனக்கு கால் பண்ணிருந்துது மச்சி " .. பதிலுக்கு நான் சொல்லியது , " பாருக்கு போ , பாட்டு கேளு , பொண்ணுங்கள ரசி .. ஆனா அதோட நிறுத்திக்கோ !! மாலை , போன் லாம் வேண்டாம் " என்று !! சரவணன் கூடவே இருந்து கொண்டு , இந்த அறிவு கூட வராவிட்டால் எப்படி ? ......
மீண்டும் வருகிறேன் !!
ஆபிஸில் தண்ணி அடித்து விட்டு , அது போதாமல் பாருக்குச் செல்வோம் . இங்கு பாரில் தமிழ் , மலையாள பாடல்கள் அதிர , ஸ்டேஜில் பெண்கள் ஆடுவார்கள் . பெண்கள் அனைவரும் தென்னிந்திய பெண்கள் . அரபி பெண்கள் ஆடும் பார்களும் உண்டு . ஆனால் நாங்கள் அங்கு செல்வது இல்லை . குறைந்த ஆடைகளுடன் ஆடும் பெண்கள் , மெல்லிய வெளிச்சம் , அதிரடி பாட்டுக்கள் என தென்னிந்திய பார்கள் அமர்களப்படும் .அதுவும் வியாழன் இரவும் , வெள்ளி இரவும் கொண்டாட்டங்கள் தான் !!
பெண்கள் அனைவரும் சுமாராக இருப்பார்கள் . அதுவும் தமிழ் பெண்கள் தான் அதிகம் .இந்த பெண்கள் அனைவரும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வருகிறார்கள் , முன்று மாதங்களுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் என்று பேசி , விசிட் விசாவில் கொண்டு வருவார்கள் , முன்று மாதங்களுக்கு பின் அவர்களை அனுப்பி விட்டு , வேறு பெண்களை அழைத்து வருவார்கள் என்று , பின்னர் ஒரு தமிழ் பெண்ணிடம் நெருங்கிப் பேசும் வாய்ப்பு கிடைத்த பொழுது அறிந்து கொண்டேன் !! முதலில் எனக்கு இந்த பெண்களிடம் ஒருவித கழிவிறக்கம் தான் தோன்றியது . அது தவறு என்று பின்னர் தான் அறிந்து கொண்டேன் . நமது அனுபவங்களில் இருந்து மட்டும் தான் பாடம் கற்க வேண்டுமா என்ன?
பாரில் நமக்கு தேவையான விரும்பிய பாடல் கேட்கலாம் .அதற்கு தனி கட்டணம் . நாம் விரும்பிய பெண்ணுக்கு , மாலை போடலாம் .அதற்கும் தனி கட்டணம். இந்திய மதிப்பில் சுமார் அறுநூறு ருபாய் . இந்த தவறை மட்டும் நான் செய்ததில்லை . செய்யவும் கூடாது என்ற வைராக்கியத்தில் உள்ளேன் . ஆனால் சரவணன் இந்த விஶயத்தில் மோசம் . ஒரு தடவை பாருக்குச் சென்றால் , குறைந்தது ஐந்து மாலைகள் போடுவான், அதுவும் ஒரே பெண்ணுக்கு !! பெண்களுக்கு கிரிடம் சூட்டலாம் , அதற்கு சுமார் ஆறாயிரம் ரூபாய். நாம் பாருக்குச் செல்வது குறைந்தால் , அங்கிருக்கும் பெண்களிடம் இருந்து போன் வரும் , " உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது , இன்று பாருக்கு வாருங்கள் "என்று . போதையில் இருக்கும் ஒருவனிடம் இருந்து , எவ்வளவு எல்லாம் கறக்க முடியுமோ அவ்வளவையும் கறக்கும் பணியய் செவ்வனே செய்து வருகின்றன இந்த பார்கள் .
சரவணன் மிகச் சரியாக சிக்கினான் . தினமும் பாருக்குச் செல்வதை வாடிக்கையாக்கினான். நானாவது ஆபிசில் தண்ணி அடிப்பதொடு சரி .அவன் இங்கும் என்னுடன் தண்ணி அடிப்பான் , பின்னர் தனியாக பாருக்குச் சென்றும் தண்ணி அடிப்பான் .காரணம் கேட்டால் , காதல் என்றான் . நானும் இன்னும் சில நண்பர்களும் சொல்லிப் பார்த்தொம் , கேட்பதாக தெரியவில்லை , பட்டுத் தெரியட்டும் என்று விட்டு விட்டொம் .
சரி அந்த காதலாவது அம்பிகாபதி - அமராவதி காதலாக இருக்கும் என்ற எனது எண்ணத்திலும் அணுகுண்டு விழுந்தது . ஒரு நாள் , சரவணன் என்னிடம் வந்தான் . " பாஸ் , இந்த சிடில இருக்குற போட்டோ என் மொபைல்ல மாத்தி தாங்க பாஸ் " என்றான் . அதில் ஒரு கைக்குழந்தையின் போட்டோ இருந்தது . யாருடா இது என்றேன் , அது அவனது ஆள். உமாவின் குழந்தையாம்!! . " என்னடா சொல்ற ?" என்றேன். " ஆமா பாஸ் , உமாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு , புருஶன் கைவிட்டுட்டான் , அதான் இங்க வந்திருக்கா " என்றான் . எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. காசுக்காக , பெற்ற குழந்தையய் விட்டுவிட்டு , இங்கு வந்து நடனமாடி , கண்டவர்களிடம் கொஞ்சிப் பேசி , மாலை வாங்கி சூடிக்கொண்டு , என்ன பொழப்பு இது ?
கொஞ்ச நாள் கழித்து , சரவணன் என்னிடம் வந்து , " பாஸ் , உமா இந்தியா போரா பாஸ் , மனசு கஶ்டமா இருக்கு , " என்றான் . நானும் , விட்டுதுடா சனியன் , இனி பையன் ஒழுங்கா இருப்பான் என்று நினைத்தேன் . அதிலும் மண் . இந்தியாவிற்கு கால் பண்ணியே , சம்பளம் அனைத்தையும் இழந்தான் . பின்னர் சரவணன் வருவது குறைந்தது , அவனை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன . உமா தனது குழந்தைக்கு சென்னையில் சீரியஸ் ஆகிவிட்டதாக சொல்லவும் , அதற்கு சரவணன் வட்டிக்கு வாங்கி ஐம்பதாயிரம் ருபாய் அனுப்பி வைத்ததாகவும் , அதை வைத்து அவள் ஒரு வியாபார ஏஜன்சி ஆரம்பித்துள்ளதாகவும் , சரவணன் ’காதல் ’ பட க்ளைமாக்ஸாக திரிவதாகவும் தகவல் வந்தது .
பின்னர் ஒரு நாள் சரவணன் போன் பண்ணிணான் . தான் இந்தியா செல்வதாகவும் , திரும்பி வர வாய்ப்பு கம்மி எனவும் கூறினான் . தண்ணி அடித்து அனுப்பி வைத்தொம் . பின்னர் தான் தெரியவந்தது . தலைவர் உமாவை பார்க்க பாருக்கு சென்ற கணக்கிலும் , அவளுக்காக நகையும் பணமுமாக செய்ததிழும் , கிட்டத்தட்ட இரண்டு லட்ச ருபாய் அளவில் கடன் வைத்திருப்பது . கடன் கொடுத்தவர்கள் ஆபிசுக்கு போன் பண்ண , ஆபிசில் சரவணனை திரும்ப அழைத்துக் கொண்டனர் .
நேற்று முன் தினம் சரவணன் வந்திருந்தான் . " பாஸ் , உமா திரும்ப வந்திருக்கா பாஸ் . என்ன பார்கணும் பொல இருக்காம் . அவளோட புருஶனும் இன்னக்கி பாருக்கு வர்றானாம் . அவனுக்கு முன்னாடி நான் அவளுக்கு மாலை போடணும்னு சொல்லிருக்கா பாஸ் , நீங்களும் வர்றீங்களா கலக்குவோம் ? " என்றான் . அவனது மடத்தனத்தை நினைத்து கோபப்படுவதா , இல்லை அறியாமையை நினைத்து வருத்தப்படுவதா என தெரியாமல் , " நாளேல இருந்து நான் சார்ஜா போறென்டா , அபுதாபி வந்தா உனக்கு கால் பண்றேன் " என்று சொல்லி அனுப்பி வைத்தேன் . பட்டும் தெரியாதவர்களை வேறு என்னதான் செய்வது . ??
இன்னொரு நாள் , ஹபிப் கால் பண்ணியிருந்தான் . " மச்சி , நேத்து ஒரு பாருக்கு போயிருந்தென் . கலக்கல் மச்சி , என்னா பொண்ணுங்க ? ஒரு பிலிப்பிணி பொண்ணு எனக்கு கால் பண்ணிருந்துது மச்சி " .. பதிலுக்கு நான் சொல்லியது , " பாருக்கு போ , பாட்டு கேளு , பொண்ணுங்கள ரசி .. ஆனா அதோட நிறுத்திக்கோ !! மாலை , போன் லாம் வேண்டாம் " என்று !! சரவணன் கூடவே இருந்து கொண்டு , இந்த அறிவு கூட வராவிட்டால் எப்படி ? ......
மீண்டும் வருகிறேன் !!
Subscribe to:
Posts (Atom)