Saturday, May 26, 2007

பார் பெண்கள்

இங்கு அபுதாபியில் நான் அடிக்கடி பாருக்குச் செல்வது உண்டு . முதலில் எனக்கு பார் இருக்குமிடம் அறிமுகப்படுத்திய பெருமை , எனது சீனியர் மகான் சீனிவாசனையே சாரும் . அவர் இந்தியா சென்றதும் , நான் பாருக்குச் செல்வது நின்றது .. சரவணனை பார்க்கும் வரை .
ஆபிஸில் தண்ணி அடித்து விட்டு , அது போதாமல் பாருக்குச் செல்வோம் . இங்கு பாரில் தமிழ் , மலையாள பாடல்கள் அதிர , ஸ்டேஜில் பெண்கள் ஆடுவார்கள் . பெண்கள் அனைவரும் தென்னிந்திய பெண்கள் . அரபி பெண்கள் ஆடும் பார்களும் உண்டு . ஆனால் நாங்கள் அங்கு செல்வது இல்லை . குறைந்த ஆடைகளுடன் ஆடும் பெண்கள் , மெல்லிய வெளிச்சம் , அதிரடி பாட்டுக்கள் என தென்னிந்திய பார்கள் அமர்களப்படும் .அதுவும் வியாழன் இரவும் , வெள்ளி இரவும் கொண்டாட்டங்கள் தான் !!
பெண்கள் அனைவரும் சுமாராக இருப்பார்கள் . அதுவும் தமிழ் பெண்கள் தான் அதிகம் .இந்த பெண்கள் அனைவரும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வருகிறார்கள் , முன்று மாதங்களுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் என்று பேசி , விசிட் விசாவில் கொண்டு வருவார்கள் , முன்று மாதங்களுக்கு பின் அவர்களை அனுப்பி விட்டு , வேறு பெண்களை அழைத்து வருவார்கள் என்று , பின்னர் ஒரு தமிழ் பெண்ணிடம் நெருங்கிப் பேசும் வாய்ப்பு கிடைத்த பொழுது அறிந்து கொண்டேன் !! முதலில் எனக்கு இந்த பெண்களிடம் ஒருவித கழிவிறக்கம் தான் தோன்றியது . அது தவறு என்று பின்னர் தான் அறிந்து கொண்டேன் . நமது அனுபவங்களில் இருந்து மட்டும் தான் பாடம் கற்க வேண்டுமா என்ன?
பாரில் நமக்கு தேவையான விரும்பிய பாடல் கேட்கலாம் .அதற்கு தனி கட்டணம் . நாம் விரும்பிய பெண்ணுக்கு , மாலை போடலாம் .அதற்கும் தனி கட்டணம். இந்திய மதிப்பில் சுமார் அறுநூறு ருபாய் . இந்த தவறை மட்டும் நான் செய்ததில்லை . செய்யவும் கூடாது என்ற வைராக்கியத்தில் உள்ளேன் . ஆனால் சரவணன் இந்த விஶயத்தில் மோசம் . ஒரு தடவை பாருக்குச் சென்றால் , குறைந்தது ஐந்து மாலைகள் போடுவான், அதுவும் ஒரே பெண்ணுக்கு !! பெண்களுக்கு கிரிடம் சூட்டலாம் , அதற்கு சுமார் ஆறாயிரம் ரூபாய். நாம் பாருக்குச் செல்வது குறைந்தால் , அங்கிருக்கும் பெண்களிடம் இருந்து போன் வரும் , " உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது , இன்று பாருக்கு வாருங்கள் "என்று . போதையில் இருக்கும் ஒருவனிடம் இருந்து , எவ்வளவு எல்லாம் கறக்க முடியுமோ அவ்வளவையும் கறக்கும் பணியய் செவ்வனே செய்து வருகின்றன இந்த பார்கள் .
சரவணன் மிகச் சரியாக சிக்கினான் . தினமும் பாருக்குச் செல்வதை வாடிக்கையாக்கினான். நானாவது ஆபிசில் தண்ணி அடிப்பதொடு சரி .அவன் இங்கும் என்னுடன் தண்ணி அடிப்பான் , பின்னர் தனியாக பாருக்குச் சென்றும் தண்ணி அடிப்பான் .காரணம் கேட்டால் , காதல் என்றான் . நானும் இன்னும் சில நண்பர்களும் சொல்லிப் பார்த்தொம் , கேட்பதாக தெரியவில்லை , பட்டுத் தெரியட்டும் என்று விட்டு விட்டொம் .
சரி அந்த காதலாவது அம்பிகாபதி - அமராவதி காதலாக இருக்கும் என்ற எனது எண்ணத்திலும் அணுகுண்டு விழுந்தது . ஒரு நாள் , சரவணன் என்னிடம் வந்தான் . " பாஸ் , இந்த சிடில இருக்குற போட்டோ என் மொபைல்ல மாத்தி தாங்க பாஸ் " என்றான் . அதில் ஒரு கைக்குழந்தையின் போட்டோ இருந்தது . யாருடா இது என்றேன் , அது அவனது ஆள். உமாவின் குழந்தையாம்!! . " என்னடா சொல்ற ?" என்றேன். " ஆமா பாஸ் , உமாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு , புருஶன் கைவிட்டுட்டான் , அதான் இங்க வந்திருக்கா " என்றான் . எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. காசுக்காக , பெற்ற குழந்தையய் விட்டுவிட்டு , இங்கு வந்து நடனமாடி , கண்டவர்களிடம் கொஞ்சிப் பேசி , மாலை வாங்கி சூடிக்கொண்டு , என்ன பொழப்பு இது ?
கொஞ்ச நாள் கழித்து , சரவணன் என்னிடம் வந்து , " பாஸ் , உமா இந்தியா போரா பாஸ் , மனசு கஶ்டமா இருக்கு , " என்றான் . நானும் , விட்டுதுடா சனியன் , இனி பையன் ஒழுங்கா இருப்பான் என்று நினைத்தேன் . அதிலும் மண் . இந்தியாவிற்கு கால் பண்ணியே , சம்பளம் அனைத்தையும் இழந்தான் . பின்னர் சரவணன் வருவது குறைந்தது , அவனை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன . உமா தனது குழந்தைக்கு சென்னையில் சீரியஸ் ஆகிவிட்டதாக சொல்லவும் , அதற்கு சரவணன் வட்டிக்கு வாங்கி ஐம்பதாயிரம் ருபாய் அனுப்பி வைத்ததாகவும் , அதை வைத்து அவள் ஒரு வியாபார ஏஜன்சி ஆரம்பித்துள்ளதாகவும் , சரவணன் ’காதல் ’ பட க்ளைமாக்ஸாக திரிவதாகவும் தகவல் வந்தது .
பின்னர் ஒரு நாள் சரவணன் போன் பண்ணிணான் . தான் இந்தியா செல்வதாகவும் , திரும்பி வர வாய்ப்பு கம்மி எனவும் கூறினான் . தண்ணி அடித்து அனுப்பி வைத்தொம் . பின்னர் தான் தெரியவந்தது . தலைவர் உமாவை பார்க்க பாருக்கு சென்ற கணக்கிலும் , அவளுக்காக நகையும் பணமுமாக செய்ததிழும் , கிட்டத்தட்ட இரண்டு லட்ச ருபாய் அளவில் கடன் வைத்திருப்பது . கடன் கொடுத்தவர்கள் ஆபிசுக்கு போன் பண்ண , ஆபிசில் சரவணனை திரும்ப அழைத்துக் கொண்டனர் .
நேற்று முன் தினம் சரவணன் வந்திருந்தான் . " பாஸ் , உமா திரும்ப வந்திருக்கா பாஸ் . என்ன பார்கணும் பொல இருக்காம் . அவளோட புருஶனும் இன்னக்கி பாருக்கு வர்றானாம் . அவனுக்கு முன்னாடி நான் அவளுக்கு மாலை போடணும்னு சொல்லிருக்கா பாஸ் , நீங்களும் வர்றீங்களா கலக்குவோம் ? " என்றான் . அவனது மடத்தனத்தை நினைத்து கோபப்படுவதா , இல்லை அறியாமையை நினைத்து வருத்தப்படுவதா என தெரியாமல் , " நாளேல இருந்து நான் சார்ஜா போறென்டா , அபுதாபி வந்தா உனக்கு கால் பண்றேன் " என்று சொல்லி அனுப்பி வைத்தேன் . பட்டும் தெரியாதவர்களை வேறு என்னதான் செய்வது . ??
இன்னொரு நாள் , ஹபிப் கால் பண்ணியிருந்தான் . " மச்சி , நேத்து ஒரு பாருக்கு போயிருந்தென் . கலக்கல் மச்சி , என்னா பொண்ணுங்க ? ஒரு பிலிப்பிணி பொண்ணு எனக்கு கால் பண்ணிருந்துது மச்சி " .. பதிலுக்கு நான் சொல்லியது , " பாருக்கு போ , பாட்டு கேளு , பொண்ணுங்கள ரசி .. ஆனா அதோட நிறுத்திக்கோ !! மாலை , போன் லாம் வேண்டாம் " என்று !! சரவணன் கூடவே இருந்து கொண்டு , இந்த அறிவு கூட வராவிட்டால் எப்படி ? ......
மீண்டும் வருகிறேன் !!

No comments: