Tuesday, July 24, 2007

நொட்ஸ் இரண்டு :

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் , பாலாஜியின் காமடி குறையாமல் திகட்டுகிறது . இவனைப் பற்றி எழுதினாலே மனதிற்குள் மகிழ்ச்சி .

தாமுவுடனும் , பிரசன்னாவிடமும் நொட்ஸின் காமடிகள் இவை !!

தாமுவும் , நொட்ஸும் போனில் பேசுகிறார்கள் .
நொட்ஸ் : ஹலோ தாமு?
தாமு : ம். சொல்லு மச்சி !! எப்படீ இருக்க? ( இன்கமிங் கால்களில் மட்டுமே நலம் விசாரிப்பது தாமுவின் வழக்கம் )
.நல்லாயிருகேன்டா , நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன் மச்சி .
அப்புறம் என்ன விஶேசம் ?
ஒண்ணுமில்ல , சும்மா தான் கால் பண்ணுனேன் . ஆமா நீ எங்க இருக்க ? ஆபிஸ்ல மச்சி .
ஏன் என்ன விஶயம் ?
பக்கத்துல பிரசன்னா இருந்தா குடு மச்சி , அவன்ட்ட பேசணும் .!!

வாரத்திற்கு ஒரு தடவை போன் பண்ணி , தான் நொட்ஸ் தான் என்று நிருபிக்காவிட்டால் , பாலாஜிக்கு தூக்கம் வராது போலும் !!

தாமுவின் நிலைமையினை என்னால் உணர முடிகிறது . ஆபிஸ் சமயத்தில் , பொங்கி வரும் சிரிப்பினைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்திருப்பான் , பாவம் .

தாமுவிடம் நம்பர் வாங்கி பிரசன்னாவிற்கு போன் பண்ணுகிறான் நொட்ஸ் . திருப்பதியில் இருந்ததினால் , அச்சமயத்தில் நொட்ஸ் செய்த காமடிகள், இன்னமும் கிடைக்கப் படாத புறநானூற்று ஓலைகளைப் போல, தெரிந்தால் பாக்கியம் . ஆனால் ஒன்று என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும் , எஸ் டி டி பூத்தில் " பெங்களூர் கால் பண்ணணும் , இந்தியாவோட ஐ.எஸ்.டி கோட் என்ன ஸார் ? " என்று கேட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது . !!

நொட்ஸ் : ஹலோ , பிரசன்னா ஸார் இருக்காங்களா ? ஹிஹி ஹி .. ( அந்த சமயத்தில் நொட்ஸின் குரலிலும் , முகத்திலும் தோன்றியிருக்கும் எதனையோ சாதித்துவிட்ட திருப்தியினையும் , எகதாளத்தையும் வார்த்தயால் விவரிக்க முடியாது. )
பிரசன்னா : சொல்லு , நட்பே . எப்படியிருக்க ? என்ன திடீருனு போன் ?ஒண்ணுமில்ல மச்சி , சும்மாதான் பண்ணுனேன் . நீ நல்லாயிருக்கியா ? நல்லாயிருகேன்டா , உங்க வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா ? நல்லாயிருக்காங்க மச்சி , முக்கியமான விசயம் ஒண்ணு சொல்லணும் . நீ பாட்டு கலராகணும்னு , சிவா அண்ணி கொண்டுவந்திருக்கிற குங்குமப்பூவ சாப்பிட்றாதடா , அது என் தங்கச்சிக்கு வேணும் !!

அதுவரை அண்ணி குங்குமப்பூ கொண்டுவந்த விசயம் பிரசன்னாவிற்கு தெரியாது . மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என நான் சொல்லத் தேவையில்லை . " நீ நடந்தால் நடையழகு " .பாடலை பிரசன்னாவை வைத்து பாடி , கலங்கியிருப்பான் நொட்ஸ் !!

நுணமும் தன் வாயால் கெடும் என்று சொல்வார்களே , அது போல தான் நொட்சும், தனது வாயாலயே கெடுவான் , மற்றவரை சிரிக்க வைப்பான் !!

பின்னர் ஒருநாள் இதுகுறித்து நொட்ஸிடம் கேட்டேன் . அதற்கு பதிலாக நொட்ஸ் உதிர்த்த தத்துவ முத்து ... " அது ஓண்ணுமில்ல மச்சி , " ஊத்தி வைக்கிற பாத்திரத்த பொருத்து தான் தண்ணியோட வடிவம்ன்னு சொல்லுவாங்கள்ல , அதுமாதிரி தான் மச்சி , மத்த எல்லார்டையும் கரெக்டா தான் மச்சி பேசுறேன் . இந்த தாமுட்ட பேசுறப்ப தான் மச்சி தடுமாறிடுறேன் !! அது என் தப்பில்ல மச்சி , தாமுவோட டைப்பு !! " என்று டி ஆர் பாணியில் முடித்தான் !! முத்தாய்ப்பாக என்னிடம் " நாயே , நீ தான் எல்லாத்துடையும் போன் பண்ணி இத பரப்புறியா ? அதுக்கு பேசாம போஸ்டர் அடிச்சி ஒட்டிறேண்டா ?? " பின்னர் அவனே சொன்னான் , " இனி இத நெட்டுல போடுறது தான் பாக்கி , இதையும் நெட்ல போட்டுறாதடா , சாமி உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் " .

போட்டாச்சு நொட்ஸ் . உனது அடுத்தடுத்த காமடிக்காகவும் , உன் பாஶையில் " தடுமாற்றத்திற்காகவும் " காத்திருக்கிறேன் !!

மீண்டும் வருகிறேன் !!

No comments: