Thursday, July 26, 2007

ஜாதிய ஆதிக்கம் :

மெல்ல மெல்ல எனக்குள் ஜாதிய ரீதியிலான எண்ணங்கள் மேலெழுந்து வருகிறது . ஏன் , எப்படி என்று தெரியவில்லை . அவை தேவை என்ற எண்ணம் தோன்றுகிறது . என் அப்பா யாருடனும் முதலில் பரிச்சயப்படும் பொழுதும் பேச்சினுடே கேட்கும் கேள்வி " நீங்க என்ன ஆளுங்க ? " என்பது தான் . அப்பொழுதெல்லாம் எனக்கும் சுரிர் என கோபம் வரும் . ஆனால் இப்பொழுது எனக்கும் ஜாதிய ரீதியிலான வேறுபாடுகள் தேவை தான் எனத் தோன்றுகிறது .

சமீபத்தில் ஒரு வாராந்திர நாளிதழில் ஜாதிகளைப் பற்றியும் அது குறித்த மற்ற குறிப்புகளையும் படித்தேன் . பிறந்த குலத்தை வைத்து , அவரவர் செய்யும் தொழில்களை பொறுத்தும் வரையறுக்கப்பட்டது ஜாதி .இன்னின்ன ஜாதியினர் இன்னின்ன வேலைகளைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது அந்நாளில் . உலகம் கையிடுக்கில் சுருங்கிக் கொண்டுவரும் இந்நாளில் பழைய பஞ்சாங்க முறைகளையும் , ஆச்சாரங்களையும் நம்பியிருப்பது கேவலம்

எனது கம்பனியில் வேம்பு என்ற ஒருவன் இருக்கிறான் . ஐயன் . சுத்தம் சுகாதாரம் என ஊரறிய வாய்கிழிய பேசுவான் . தனது துணி ஸ்டாண்டின் மேல் மற்றவர் கை பட்டால் கூட , கற்பு போய் விட்டது போல கத்துவான் . " தான் " என்ற அகங்காரம் அதிகம் உண்டு அவனிடம் . தன்னம்பிக்கை இருப்பது நல்லது . ஆனால் " தான் " தான் என்ற நம்பிக்கை இருப்பது தவறு . ஐயனுகளுக்கே உரித்தான கஞ்சத்தனமும் உண்டு அவனிடம் . அவனுடன் பழகிப் பழகி , அவர்களது அந்த " தான் " என்ற அகந்தையினை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது . அதுவே வெறியாகி விட்டது .

தாழ்த்தப்பட்டவன் என்ற எண்ணமே யாரிடமும் இருத்தல் கூடாது . இன்னமும் தனது ஜாதி தான் உயர்ந்தது என்று நம்புபவர்களை விஜயகாந்தின் படங்களை தொடர்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும் ( மரண தண்டனையினை விட கொடிய தண்டனையாக இருக்கும் இது ) .

’ தான் ’ என்ற ஆணவத்தினையும் , தான் செய்வதெல்லாம் சரி என்ற அவர்களது எண்ணத்தினை அழிக்க வேண்டும் . இந்த விபரித எண்ணத்தினால் தான் குலக் கல்வி முறையினைக் கொண்டுவந்தார் ராஜாஜி . அதனாலேயே ஆட்சியினையும் இழந்தார். இனியும் அதுபோல எண்ணங்கள் கொண்டு வரும் யாராக இருந்தாலும் இதனையும் விட அதிகமான சம்மட்டி அடி அடிக்க வேண்டும் . இத்தகைய எண்ணங்கள் கொண்டு வருபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவே ராமதாஸும் , திருமாவும் தத்தமது ஜாதிக்காக போராடுகிறார்கள் போலும் !! . அதுவே அவர்களது எண்ணமாக இருந்தால் , அது தவறில்லை என்பேன் நான் .

மேல் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களை , இடஒதுக்கீட்டின் மட்டும் மட்டம் தட்டினால் போதாது , இன்னமும் ஏதாவது செய்து ஒடுக்க வேண்டும் . இப்பொழுதைக்கு என்னால் முடிந்தது வேம்பு சொல்லும் அல்லது செய்யும் எந்த ஒரு விஶயத்திற்கும் தடையாக இருப்பதே . தவறு என்று தெரிந்தாலும் , கண்டிப்பாக மீண்டும் மீண்டும் செய்வேன் . அவர்கள் தோற்று தலைகுனியும் பொழுது , எதனையோ சாதித்துவிட்டது போல ஒரு தோன்றுதல் .

இதனை எழுதும் பொழுது , பள்ளி நாட்களில் படித்த ஒரு சிறுகதை தான் ஞாபகத்திற்கு வருகிறது . கூரை வேய்யும் ஒரு கூலித் தொழிளாளி ஒருவன் , உடம்பு முடியாமல் வீட்டில் படுத்திருப்பான் . அப்பொழுது அவ்வூரின் பண்ணையார் அவனைத் தனது வீட்டின் கூரை வேய வேலைக்கு அழைப்பார் . தனது மனைவி தடுத்தும் , அத்தொழிளாளி வேலைக்குச் செல்வான் . அதன் காரணமாக அவன் கூறுவது , கூரை வேயும் சமயத்தில் அவன் உச்சியில் இருப்பதும் , முதலாளி கீழே இருப்பதுமாகும். கதையினை படித்த அந்நாட்களில் அத்தொழிலாளியின் அற்ப சந்தோஶம் என்றே நினைத்தேன் . இப்பொழுது தான் அதன் வீரியம் புரிகிறது . இதுபோல இன்னும் பல கதைகள் வரவேண்டும் , அதனை நான் படிக்க வேண்டும் .

இதில் முக்கியமான விஶயம் என்னவெனில், இன்னமும் எனது ஜாதி என்னதென்று தெளிவாகத் தெரியவில்லை . ஸ்காலர்ஷிப் வேண்டி எனது ஜாதியினை எனது தந்தை மாற்றினார்( சர்ட்டிவிகேட்டில் மட்டும் ) என்பதைத் தவிற வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை எனக்கு . இன்னமும் தெரியாது .

தெரிந்துகொண்டு மீண்டும் வருகிறேன் .

No comments: