Saturday, May 26, 2007

பயணங்கள் :

பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை . பல்வேறு சூழ்நிலைகளில் , பல்வேறு மனநிலைகளோடும் , பல்வேறு நினைவுகளொடும் பயணித்திருக்கிறேன் . பயணம் செய்வதே வாழ்க்கை என்றாகிப் போனது பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும் . சில பயணங்களில் பேச்சுத்துணைக்கு ஆள் இருக்கும் , சிலவற்றில் நானும் , என் நினைவலைகளும் மட்டுமே . சில பயணங்களை மறக்க வேண்டும் என நினைக்கிறேன் , சிலது தொடராதா எனவும் ஏங்கியிருக்கிறேன் , சிலவற்றை தவிற்றிருக்கலாமே எனவும் இப்பொழுது நினைக்கிறேன் . எனக்கு நினைவு தெரிந்து , என் ஞாபகத்தில் இருக்கும் எனது முதல் பயணம் , நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் தான் . மதுரையில் இருந்த நாங்கள் , எப்படி நாகர்கோவில் சென்றோம் எனத் தெரியவில்லை . எனக்கு எத்தனை வயதிருந்திருக்கும் எனத் தெரியவில்லை . இங்கிருந்து கன்னியாகுமரி பக்கம் என்றும் , அங்கு கடல் இருக்கும் என்றும் யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் . உடன் அங்கு போக வேண்டும் என அடம் பிடித்து , பாட்டியய் அழைத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறது . நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பயணம் என்றும் இனிமையானது . கன்னியாகுமரி நெருங்க நெருங்க , எதிர்வரும் கடற்காற்றால் , நித்திரா தேவி நம்மை ஆட்கொள்ளும் . பஸ்சில் ஒட்டுனரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏறக்குறைய தூங்கியிருப்பார்கள் . அப்பொழுது எனது பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டே பயணம் செய்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . முதன்முறையாக கடலை பார்க்கும் பயணம் என்பதாலோ என்னவொ , அந்த பயணம் இன்னும் ஞாபகம் இருக்கிறது .ராணுவக்கட்டுப்பாட்டை பற்றி எனக்கு தெரியாது , கேள்வி தான் பட்டிருக்கிறேன் . இருந்தாலும் , உறுதியாக சொல்லலாம் , ராமசுப்பிரமணிய ( அப்பா ) கட்டுப்பாடு ,ராணுவக்கட்டுப்பாட்டை விட மிகவும் கொடுமை . ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நான் ராமசுப்பிரமணிய கட்டுப்பாட்டில் தான் இருந்தேன் . அதனால் சிற்சில ரயில் பயணங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியான பயணங்கள் இருக்கவில்லை . முதன்முதலாக மதுரையில் இருந்து , நாகர்கோவிலுக்கு தனியாக பயணம் செய்தது தான் மறக்க முடியாதது .அப்பா என்னை மதுரை ரயில்வே ஸ்டேஶனில் ஏற்றி விட்டார் . வேறு எந்த ஸ்டேஶனிலும் இறங்க வேண்டாம் என்றும் , வழியில் டீ கொண்டுவருவார்கள் அப்பொழுது மட்டும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருந்தார் . ரயில் கிளம்பியது . அடுத்த ஸ்டேஶன் திருப்பரங்குன்றம் . அந்த ஸ்டேஶனிலேயே இறங்கி ஏறி , அப்பாவின் அடக்குமுறையினை மீறிவிட்ட ஒருவித சந்தொஶத்துடன் குதூகலித்தது ஞாபகம் இருக்கிறது . ப்ளஸ் ஒன்னில் பசங்க செட் செர்ந்ததும் ஆரம்பித்தது கொண்டாட்டம் . நினைத்த நெரத்தில் , நினைத்த இடத்திற்கு பயணம் . அப்பொழுது ஸ்கூல் பாஸ் கொடுத்திருந்தார்கள் . ஆசிரமத்தில் இருந்து நாகர்கொவிலுக்கு சென்று வர மட்டுமே உபயொகப்படுத்த படவேண்டிய அந்த பாஸில் , நாகர்கொவிலில் இருந்து கன்னியாகுமரி வரை சென்று திரும்பியிருக்கிறொம் . அதிலும் , எனது பாஸில் என் நண்பனும் வருவான் !!! சந்தொச பயணங்கள் அவை . !!! உட்கார இடம் கிடைக்க கூடாது என்று வேண்டுவேன் . புட் போர்டில் தான் பயணம் . பின்னர் என்னவளை சந்திக்கச் செல்லும் பயணங்களிலும் அதே பாஸ் , ஆனால் பஸ்ஸின் உள்ளே தான் பயணம் . பின்னர் கிருஶ்ணகிரி காலேஜில் சேர்ந்ததும் , தனியாக திருநெல்வேலியில் இருந்து கிருஶ்ணகிரி வரை . காலை ஐந்து மணி ரயில் ஒன்று , திருநெல்வேலியில் இருந்து புறப்படும் . இரண்டரை மணிக்கு ஈரோடு வந்து சேரும் . அங்கிருந்து மூன்றரைக்கு கிளம்பி , ஒன்பது மணியளவில் ஜோலார்பேட்டை வந்தடையும் . அங்கிருந்து ஒரு மணி நேரம் பஸ் பயணம் கிருஶ்ணகிரி . காலை ஐந்து மணிக்கு கிளம்பி , இரவு பத்து மணி வரை பயணம் . தாவு தீர்ந்து விடும் என்பார்களே அது தான் அது . எத்தனை நேரம் தான் புக் படித்துக்கொண்டும் , தூங்கிக்கொண்டும் நேரம் கழிப்பது ? வெறுத்துப் போய் விடும் . எப்ப தான் காலேஜ் போய் பசங்கள பார்ப்பொம் என்றிருக்கும் . ஒரே ஒரு தடவை தான் முழு பிரயாணம் செய்தேன் . பின்னர் அவ்வாறு பயணப்பட நேர்ந்த பொழுது , ஒன்று மொரப்புர் ஸ்டேஶனிலேயே இறங்கி , பஸ் பிடித்து தர்மபுரி வழியாக கிருஶ்ணகிரி வந்து சேர்வேன் , அல்லது ஈரோட்டிலேயே இறங்கி பஸ்ஸில் சேலம் வழியாக கிருஶ்ணகிரி வந்து சேர்வேன் . இந்த பயணங்களில் உற்ற துணை புத்தகம் தான் . அதுவும் இல்லாவிட்டால் , கண்டதையும் கற்பனை பண்ணிக்கொண்டு , கண்களை மூடிக் கொண்டு எனக்கே உரித்தான கற்பனா உலகில் பவனி வருவேன் . கனவு இல்லை அது , கற்பனை . சுகானுபவம் !!! ஒருதடவை இவ்வாறு வந்து சேர , இரவு பத்து மணியாகிவிட்டது . கல்லூரி திறக்க இன்னும் இரண்டு வாரம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள் . வீட்டிற்கு போக மனதில்லை . அதனால் சென்னை கிளம்பினேன் . முதல் முறையாக தனியாக சென்னை மாநகருக்கு !! . தாத்தா வீட்டிற்கு , அதுவும் அப்பாவிற்கு தெரியாமல் !! வழியில் பாலாஜியய் ஒரு மொட்டலில் சந்தித்தேன் . அப்பொழுது அவனுடன் அவ்வளவாக பரிச்சயம் இல்லை . காலேஜ் லீவ் மச்சி என்றேன் . இவன் பொய் சொல்லி நமது படிப்பை கெடுக்க போகிறான் என்று நினைத்தானோ என்னவோ , பரவாயில்ல நான் போய் பார்த்துக்கிறேன் என்றான் . வழி தெரியாத ஊரில் , அதுவும் சென்னையில் எப்படியோ வழி கண்டுபிடித்து , தாத்தா வீட்டை அடைந்தேன் . இந்த பயணம் இருந்திருக்கா விட்டால் , தாத்தா மற்றும் அத்தையின் பாசத்தை அறியாமலே போயிருப்பேன் . !! கல்லூரி காலத்துப் பயணங்கள் , பெரும்பாலும் அரட்டையுடனும் கதைகளுடனுமே சென்றன . காமராஜ் அக்கா கல்யாணத்திற்க்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டி தஞ்சாவுர் , மயிலாடுதுறை , காட்டுமன்னார்குடி என சுற்றியது , கடலையின் அக்கா கல்யாணத்திற்கு என்று கடலூர் , பாண்டி எனச் சென்றது , மீண்டும் நொட்ஸ் வீட்டிற்கு அதாவது மன்னார்குடி சென்றது , அண்ணாமலை , வெண்மணி தயவால் "ரோடு என்றால் என்ன ? " என கேட்கும் வதுவார்ப்பட்டிக்கும் , மேலாண்மறை நாட்டிற்கும் சென்றது என கல்லூரி காலத்து பயணங்கள் ஊர் சுற்றி பார்க்கும் எனது ஆசைக்கு வடிகாலானது . இப்பயணங்கள் எங்களது நட்பினை இன்னும் வலிதாக்கியது . பின்னால் எனது சேல்ஸ் பீல்டிலின் முன்னனுபவமாய் இருந்தது. உபயோகமாய் இருந்தது .வேலை கிடைத்து பெங்களுர் சென்றேன். ஊர் சுற்றும் வேலை . இந்த சமயத்தில் தான் நான் ஊர்களையும் , வழிகளையும் கவனிக்கவும், ரசிக்கவும் தொடங்கினேன் .ஒவ்வொரு ஊரிலும் ஒரே பாஶையய் வெவ்வேறு விதமாய் பேசினர் . பழக்க வழக்கங்கள் வெவ்வேறாய் இருந்தது . வேலை இல்லாவிட்டாலும் கைகாவிற்கும் , கண்டகளும் சென்று இயற்கை காட்சியினை ரசித்தேன் . பிலிப்ஸில் வேலை கிடைத்ததும் , எனது பயணங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டன . இரண்டாம் வகுப்பு பிரயாணியான நான் , அதே வைகை எக்ஸ்பிரஸில் இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணம் செய்தேன் !! கம்பனி காசு!!! பிலிப்ஸ் , பஜாஜ் தயவால் தென் மாவட்டங்களை நன்றாக அறிந்தேன் . விருதுநகர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் மீண்டும் பயணங்கள் . !! பின்னால் வழுக்கி செல்லும் மரங்களையும் , தனியாளாக மெயின் ரோட்டிற்கு கொஞ்சம் பின் தள்ளியிருக்கும், ஒற்றை குண்டு பல்ப் எரியும் மொட்டார் ருமின் காவலாளையும் , இரவு நேர பயணங்களில் சில்லென்று முகத்தில் அறையும் காற்றின் குளிர்ச்சியும் , எனது கற்பனா உலகின் ஐஸ்வர்யங்களுமாய் , இந்த பயணங்களில் நான் என்னையே தொலைத்தேன் . வாரத்தின் ஆறு வேலை நாட்களில் , ஒரே ஒரு நாள் தான் மதுரையில் இருப்பேன் . மற்ற ஐந்து நாட்களும் , இல்லாத வேலையய் இருப்பதாக சொல்லிக்கொண்டு , வெளியுர்களில் இருப்பேன் . இப்பயணங்களால் , எனக்கு சில புதிய நண்பர்களும் கிடைத்தார்கள் . ஆரப்பாளயம் ஆட்டோ ஸ்டான்ட் நண்பர் குட்டீயும் சங்கரும் பரிச்சயமானது அப்படித்தான் . இன்றும் கூட பழக்கம் இருக்கிறது . மதுரையில் இருந்து காலை கிளம்பி , சிவகாசி சென்றுவிட்டு , இரவு திரும்புவேன் . போன் பண்ணிவிட்டால் , குட்டியும் சங்கரும் ஆட்டோவொடு பஸ்ஸ்டான்ட் வந்து விடுவார்கள் . எதாவது பாருக்குப் போய் தண்ணி அடித்துவிட்டு , சினிமா பார்த்துவிட்டு , அப்படியே என்னை வீட்டில் கொண்டு போய் விடுவார்கள் . இனிமையான காலமாயிருந்தது அது . !! அபுதாபிக்கு வந்த விமானப் பயணம் கண்டிப்பாக எனது வாழ்வில் ஒரு திருப்புமுனை . புதிய வாழ்க்கையின் தேடலுக்கான கேள்விக்குறியும் , கவலையும் விமானத்தில் பயணித்த அனைவரின் முகத்திலும் கண்டேன் . தங்களுக்கு சொந்தமான , தங்களுக்கு பிடித்த ஒரு பொருளை பின்னால் விட்டுவிட்டு செல்லும் பரிதவிப்பு அனைவரிடமும் !! இப்பயணத்திலும் நான் எனது கற்பனைகளோடு தான் பயணித்தேன் !!ஆனாலும் , திரும்ப நாட்டிற்க்கு செல்லும் விமானத்தில் பயணிக்கும் பொழுது பயணிகள் அனைவரின் முகத்திலும் நான் காணப்பொகும் மகிழ்ச்சியய்யும் , நிறைவையும் காண ஆவலோடு காத்திருக்கிறேன் !! ஆனால் இதற்கு இன்னும் பதினோரு மாதங்கள் காத்திருக்க வேண்டும் !!! இங்கும் பயணங்களுக்கு குறைவில்லை !!டாக்ஸியில் போகும் பொழுது போடும் குட்டித்தூக்கத்தை அனுபவிக்கிறேன் !! டாக்சியில் வேறு யாருக்கும் தமிழ் தெரியாது என்ற நம்பிக்கையில் , மனைவியுடனோ , காதலியுடனோ அந்தரங்கமாக பேசுபவர்களின் காதல் மொழிகளை கேட்டு ரசித்திருக்கிறேன் !! அடுத்தடுத்தான எனது பயணங்களுக்காக காத்திருக்கிறேன் , கற்பனைகளோடு!!
மீண்டும் வருகிறேன் !!

No comments: