Sunday, June 24, 2007

சார்ஜா வாழ்க்கை :

எனது கம்பனியில் இருந்து ஒருவன் விலகிவிட்டான் . அதனால் , அவனது பொறுப்பும் எனக்கு வந்தது . கூடுதல் பொறுப்பு குறித்து எனக்கு கவலையில்லை . எனது கவலையெல்லாம் அபுதாபியினை விட்டு வர வேண்டுமே என்பது தான் . தனிமை, ஆபிஸில் என்னைக் கேள்வி கேட்க யாருமில்லாதது , வேலைநேரமும் காலமும் என் தீர்மானத்தில் இருப்பது , சில நண்பர்கள் ,இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை அண்ணி வீட்டு சாப்பாடு , அக்ஷயின் மழலை என்று எனது அபுதாபி வாழ்க்கை அற்புதமாகவும் , இனிமையாகவும் சென்று கொண்டிருந்தது . அதனை விட்டு வர மனமில்லை . இருந்தாலும் வேறு வழியிருக்கவில்லை . ஒரே ஆறுதல் , மாதத்தில் இரண்டு தடவை அபுதாபி பயணம் இருப்பது .

சார்ஜா வந்த முதல் நாளே வேலை அதிகம். விருப்பமில்லாமல் வேலை செய்தேன் . அடுத்த நாள் வெள்ளி, வாராந்திர விடுமுறை .கம்பனியில் அனைவருடனும் ஒரே போல் பழகுவதால் , இங்கு அனைவருக்கும் என்னைப் பிடிக்கும் . குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இரண்டு பேர் . ஒருவன் மது ( மலையாளி ) , மற்றவன் வேம்பு ( தமிழ் ) . இருவருக்கும் ஒத்துப் போகாது . மது பேருக்கு ஏற்றாற் போல் எப்பவும் தானும் தன் பாட்டிலும் உண்டு என்று இருப்பான் . வேம்புவும் பேருக்கு ஏற்றாற் போல் தான் , ஒரே கசப்பு . ஐயன் . அதனால் அதற்கு உரிய சகல வித லட்சணங்களும் குறையாது , அடுத்தவரை குறைகூறிக் கொண்டும் , தன்னை உயர்த்திப் பேசிக் கொண்டே இருப்பது அவனது பழக்கம் .ஆனால் இருவரும் என்னிடம் ஒரே மாதிரி தான் பழகுகிறார்கள் . மது என்னை "மகனே " என்றும் , வேம்பு என்னை "தம்பீ" என்றே அழைப்பது வழக்கம் .

இருவருடனான எனது சில அனுபவங்களே இனி வருவன .
மது: போன வார வெள்ளிக்கிழமை சாயந்திரம் சிவாஜி பார்த்துவிட்ட சந்தோஶத்தில் இருந்தேன் . அப்பொழுது சித்தப்பா ( மது ) வந்தார் . "பீச்சுக்கு " அழைத்தார் . சந்தோசமாக உடன் சென்றேன் . போகும் வழியிலேயே ஜம்பொ பீர் பாக் வாங்கிக் கொண்டோம் . அஜ்மனில் உள்ள பீச்சுகள் தனிமைக்குக் பேர் போனவை. அதுவும் அங்கு பெரும்பாலான இடங்களில் கட்டிட பணிகள் நடைபெறுவதால் , அதற்குப் பின்னால் இருக்கும் பீச்சுக்கு போவது தடைசெய்யப்பட்டுள்ளது . அப்படி தடைசெய்யப்பட்ட இடம் ஒன்றில் சென்று அமர்ந்தோம் . மது திடீரென்று , "நான் கொஞ்சம் தனிமையில் இருக்க வேண்டும் " என்றான் . நானும் எனது பங்கான பீரை எடுத்துக் கொண்டு தனியாக அமர்ந்தேன்.

கடல் எப்பொழுதும் இனிமையானது. எனக்கும் கடலுக்கும் அதற்கு முன்பான உறவினைப் பற்றி நினைத்துப் பார்த்தேன் . பாட்டியுடன் எனது கன்னியாகுமரிப் பயணம் , என்னவளுடன் விவேகானந்தர் மண்டபம் சென்றது , சென்னை மெரினாவில் நடந்த வீர விளையாட்டு , கர்நாடகா கோவா பார்டரில் தனிமையான கடற்கரை ,சுனாமி நிவாரண பொருட்கள் வழங்க கன்னியாகுமரி சென்றது , அபுதாபிக்கு கிளம்பி வரும் முன் நானும் சிவாவும் தனியாக மெரினா சென்றது என கடலுடனான எனது அனுபவங்கள் நினைத்துப் பார்க்கும் பொழுதே இனிமையும் கவலையும் ஒரு சேர தர வல்லவை. நானும் , பீரும் எனது எண்ணங்களுமாக பொழுது இனிதே கழிந்தது .

பீச்சில் நாங்கள் இருவர் மட்டுமே !! அதுவும் தனித்தனியாக . மணலில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை எழுதுவேன் . கடலலை மூன்றுமுறை அருகில் வந்தும் , அப்பெயர்கள் அழியாமல் இருந்தால் , அவர்கள் காலம் முழுவதும் என்னுடனே இருப்பார்கள் என்ற நம்பிக்கை!! சில சமயங்களில் நமக்குப் பிடித்த பதில் வரும் , சில சமயத்தில் வேறு மாதிரியாக ! அதே போல் எதாவதொரு ஆசையை நினைத்துக் கொண்டு கடலுக்கு அருகில் நிற்பேன் . அடுத்ததாக வரும் கடலலை நம் காலை நனைத்துச் சென்றால் , அந்த ஆசை நிறைவேறும் என்றும் , நனைக்காமல் சென்றுவிட்டால் அது நிறைவேறாது என்று சிற்சில விளையாட்டுகள் விளையாடினேன் .

கிளம்பும் சமயமாகிய பொழுது , மதுவுக்கு அருகில் வந்தேன். உற்று நோக்கிய பொழுது தான் தெரிந்தது, அவன் அழுதிருக்கிறான் என்று . நான் அவனிடம் ஒண்ணும் கேட்கவில்லை . என்னிடம் சொல்ல முடியாத விஶயமாக இருக்கலாம் , அல்லது என்னிடம் சொல்வது பிடிக்காமல் இருக்கலாம் . ஆனால் " சொல்லப்படாத சோகங்கள் " இன்னும் அதிக வலியினை தருபவை .!!

வேம்பு : அமாவாசை அன்று மட்டும் அசைவம் தவிர்த்து , மாதத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் அசைவம் தன் சாப்பாடில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் சுத்த பிராமணன் !! வயது நாற்பதைத் தாண்டி விட்டாலும் , அவனை நேரிட்டு பார்த்து மதிப்பிட்டால் ௩0 வயது தான் இருக்கும் என்று சொல்லலாம் . நல்லவன் .... அவனுக்கு மட்டும் !!

ஒரு தடவை பேச்சுவாக்கில் " அண்ணா , நீ தான் நல்லா பாடுறியே , சினிமால ட்ரை பண்ணுணா " என்றேன் . பதில் என்னயே திக்கு முக்காட செய்தது "எங்க வீட்டுல கூட இத தான்டா சொன்னாங்க , விசா வந்துடுச்சு , வேற என்ன பண்ணுறது , அதான் வந்துட்டேன் !! ".அன்று முதல் ஆரம்பித்தது சனி . என்னை எப்பொழுது தனியாக பார்த்தாலும் , அவனுக்குள் இருக்கும் எஸ் .பி .பி முழித்துக் கொண்டு விடுவார் !!கஶ்ட காலம் !!

" முகிலினங்கள் அலைகிறதே .....
முகவரிகள் தொலைந்தனவோ ????? " என்று ஆரம்பித்து "முகவரிகள் தொலைந்ததனால் ......
அழுகிறதே , அது மழையோ ???? " என்று முடிக்கும் பொழுது , எதிரில் அமர்ந்திருக்கும் நமது கண்களிலும் மழை இருக்கும் !!

நல்ல மப்பில் இருக்கும் பொழுது , " ஐயனுகள நம்பவே கூடாதுடா , தானும் முன்னேற மாட்டாங்க , மத்தவனையும் முன்னேற விட மாட்டாங்க " என்று தமது பரம்பரை ரகசியத்தினை போட்டு உடைக்கும் நல்ல மனசுக்காரர் . மனைவி குடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால் , குடிப்பதை இரண்டு வாரங்களாக நிறுத்தி வைத்திருக்கிறார் .

இதற்கிடையில் போன வாரம் நானும் மதுவும் பீச்சுக்குச் சென்று தண்ணியடித்துவிட்டு திரும்பியது அவருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது . திடிரென்று " நீ அளவுக்கு மீறி தண்ணி அடிக்கிறடா .. ( இத்தனைக்கும் அன்று நான்கு பீர் மட்டும் தான் அடித்திருந்தேன் !! ) , உடம்புக்கு ஒத்துக்காது , பார்த்துக்கோ ... " என்று சராமரியாக இலவச அறிவுரை வழங்க ஆரம்பித்தார் !! அடுத்த நாள் மதுவிடம் போய் சண்டை பிடித்திருக்கிறார் , அவன் தான் தண்ணி வாங்கிக் கொடுத்து என்னைக் கெடுப்பதாக !! "

இதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது . ஒன்று : தான் தண்ணி அடிக்கவில்லையே , இவன் மட்டும் போய் தண்ணி அடித்துவிட்டு வருகிறானே என்ற இயலாமையினால் வரும் ஆதங்கக் கோபம் .
இரண்டு :தண்ணியடிப்பதால் வரும் விளைவுகளை அறிந்துகொண்ட ஞானம் !! (மூன்று வாரங்களுக்கு முன் என்னுடன் அமர்ந்து தண்ணியடிக்கும் பொழுது வராத ஞானம் , இப்பொழுது மட்டும் திடிரென எப்படி ? )
முன்று : உண்மையிலேயே என்னைத் திருத்தும் நல்லெண்ணம் !! ( இதற்கு வாய்ப்பு கம்மி , ஏனென்றால் இவன் ஐயன் . அப்படியே இருந்தாலும் என்னைத் திருத்துறதுக்கு இவன் யாரு ???? )

விளையாட்டும் வியாக்கியானமுமாக விரதே சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை !!!

மீண்டும் வருகிறேன் !!

சிவாஜி :

ரிலிஸ் அன்றே படம் பார்த்துவிட்டேன் . ரஜினி , ஶங்கர் , ஏ வி எம் , ஏ அர் ரஹ்மான் , வைரமுத்து , கே வி ஆனந்த் , தோட்டாதரணி போன்ற திறையுலக ஜாம்பவான்கள் இணைந்த படம் . ஏகத்திற்கும் எதிர்ப்பார்ப்பு ஏகிறியிருக்கிறது என்பதை பத்திரிக்கை வாயிலாக அறிவேன் . டிக்கட் முன்பதிவு செய்ய போகும் பொழுதே அது உறுதியாக தெரிந்துவிட்டது . பத்து மணிக்கு ஆரம்பித்த முன்பதிற்கு அரை மணி நேரம் தாமதமாக போனதால் , எனக்கு முன்னால் கிட்டத்தட்ட ௪௫ பேர் . மதிய ஶோவிற்கான டிக்கட் தான் கிடைத்தது . தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே , முந்தியடித்து டிக்கட் வாங்குபவர்களுக்கு சராமரியாக வசவுகளும் , கெட்ட வார்த்தைப் பிரயோகங்களும் !!

முன்பதிவு செய்துவிட்டு வெளியே வரும் பொழுது எனக்கு இருந்த மனநிலை விவரிக்க முடியாதது . இரண்டு வருடங்களுக்குப் பின் வரும் தலைவரின் படத்தை முதல் நாளே பார்க்கப் போகிறொம் என்ற உற்சாக உந்துதல் . புதன் இரவும் , வியாழனும் சிவாஜி பற்றிய சிந்தனை தான் . ஆபிஸுற்கு செல்லும் பொழுது கூட , டிக்கடினை பத்திரமாக சட்டைப் பையில் வைத்துக் கொண்டே திரிந்தேன் !!வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய துணி துவைத்தல் , ரூம் க்ளின் செய்தல் பொன்றவை வியாழன் இரவே முடிந்துவிட்டது .

வெள்ளிக்கிழமை மதியம் ௧௨ மணிக்கெல்லாம் தியேட்டருக்குச் சென்றுவிட்டேன் . படம் பார்த்துவிட்டு வருபவர்களிடம் படம் எப்படி ? என்று கேட்கக் கூடாது என்று நினைத்தே போனேன் . ஒருவேளை சரியில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை . ஆனால் ஆர்வக்கோளாறால் , வழியில் ஒரு காபி ஶாப்பில் பார்த்த இருவரிடமும் படம் பற்றிக் கேட்டு தெரிந்துகொண்டேன் . படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன் !!

ரஜினி படத்தில் முக்கியமாக இருப்பது அவரது இன்ட்ரோ. இதில் அமைதியாகத் திரும்புகிறார் . மற்ற அனைவரின் இன்ட்ரோவும் அப்படியே இருப்பது அழகு . படத்தில் பளிச் ரஜினி . சுஜாதா கூறியது போல் முதல் பாதியில் விழுகிறார் . இரண்டாம் பாதியில் எழுகிறார் . முதற்பாதியில் காமடியும் , இரண்டாம் பாதியில் ஆக்ஶனுமாக அமர்க்களப் படுத்தியிருக்கிறார் .. ’பல்லெலக்கா ’ பாடலில் சில சமயங்களில் சிரித்துக் கொண்டும் , சில சமயத்தில் ஆட முடியாமலும் ஆடி கலக்கியிருக்கிறார் . ஏர்ப்போர்டில் இருந்து அறிமுகமாகும் விவேகின் டைமிங் காமடி கலக்கல் . ஆனால் படம் முழுக்கவே அவர் ரஜினியுடன் வருவதும் , ரஜினியை விட சில காட்சிகளில் அழகாய் இருப்பதும் சில சமயங்களில் எரிச்சலைத் தருகிறது. ’ சிங்கம் சிங்கிளா தான் வரணும் ’ .

மணிவண்ணன் , சிவாவின் வடிவுக்கரசி , ரகுவரன் இன்னும் சிற்சில பேர் படத்தில் இருக்கிறார்கள் ! ஸ்ரேயா அழகு . நடித்திருக்கலாம் !! பிரச்சனைக்குள் வருவதும் , காதலியின் வீட்டில் காமடியுமாக படம் இரட்டைத் தண்டவாளத்தில் செல்கிறது . நச் என்ற இன்டர்வல் .

சங்கரின் படத்தில் எதாவது மெஸெஜ் இருக்கும் . இதில் கல்விக்காக வந்து , அப்படியே கருப்புப் பணம் என்று படம் ட்ராக் மாறுகிறது . அதுவும் நன்றாகத் தான் இருக்கிறது . முதல் காட்சியில் ரஜினி ஜெயிலுக்கு வரும் பொழுது , கூடியிருக்கும் மக்களின் அழுகுரலையும் , போராட்டத்தினையும் நியாயப்படுத்தும் அளவிற்கு படத்தில் பாமரனுக்கு உதவுவது போல் எதாவது காட்சி வைத்திருக்கலாம் . சிவாஜி ஹாஸ்பிடல் , யுனிவர்சிட்டி , ஹாஸ்பிடல் என்று சொல்வதோடு முடித்துவிடுகிறார்கள் .

படத்தில் வரும் ஆக்ஶன் காட்சிகளும் , பாடல்களும் இது ஶங்கர் படம் என்று சொல்கின்றன .படத்தின் க்ளைமாக்ஸில் வரும் மொட்டை பாஸ் கலக்கல் . இன்னும் கொஞ்ச காலம் இதுவே பேச்சாயிருக்கும் .

ரஜினியின் சிரசில் மற்றொரு மணிமகுடம் !!

எனக்குப் பிடித்தவர்கள் : மூன்று

அரசியலில் எனக்குப் பிடித்தது மு.க . முன்னமே சொல்லியிருந்ததினைப் போல் , மற்ற யாரையும் பிடிக்காமல் போனதற்கு , இவரின் மேல் உள்ள தீவிர பற்றே காரணம் !!

கருணாநிதியினை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்களே எனக்குத் தோன்றுகிறது . முதலாவது ஆணாதிக்கம் !! நம்மை ஆள்வது ஒரு பெண்ணா ? என்ற ஆணாதிக்க வெறி . இரண்டாவதும் முக்கியமுமாக பத்திரிக்கைகள் !! நான் ௧௯௯௧ - ௧௯௯௨ ஆம் ஆண்டு முதல் தான் அரசியல் பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பித்தேன் . அப்பா வாங்கி வரும் ஜூனியர் விகடனும் , நக்கீரனும் எனது அப்பொழுதைய அரசியல் ஆர்வத்தின் ஆரம்ப அறிமுகமானது .அந்த வருடங்களில் பத்திரிக்கைகளில் வந்தவையெல்லாம் ஜெ வின் ஊழல்கள் குறித்தவையாகவே இருந்தன. இவற்றிற்கான ஒரே மாற்றாக அப்பொழுது இருந்தது கருணாநிதி மட்டும் தான் . வைகோவும் , விஜயகாந்தும் அப்பொழுது இல்லை . காங்கிரஸும் , கம்யுனிஸ்டுகளும் இப்பொழுது இருப்பதினை விடவும் பரிச்சயமில்லாமல் இருந்தார்கள் !! அதுவும் மத்தியில் கணிசமான உறுப்பினர்களைப் பெற்றதால் கம்யுனிஸ்டுகளும் , வழக்கமான கோஶ்டிச்சண்டையால் காங்கிரஸும் இப்பொழுது தான் மக்களுக்கு கொஞ்சம் பரிச்சயமாகத் தொடங்கியிருக்கிறது !! அதனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்து , ஊழல் மிகுந்த ஆட்சியினை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது எனது ஆசையானது . அதுவே மு .க வின் மேல் எனக்குத் தீவிர பற்று உண்டாக காரணமானது !!

பின்னர் அவரைக் குறித்து பத்திரிக்கைகளில் படிக்கும் பொழுதெல்லாம் அந்த பற்று அதிகமானதே தவிர குறையவில்லை . பன்னிரண்டு வயதில் மாணவர்மன்றம் அமைத்தும் , பதினெட்டாவது வயதில் ரயில் மறிப்பு போராட்டம் நடத்தவும் எத்துணை துணிச்சல் இருந்திருக்க வேண்டும் ?
௯௬அம் ஆண்டு ஆட்சி அமைத்து நன்றாகவே ஆட்சி செய்தார் . ஊழலற்ற நேர்மையான ஆட்சி என்று சொல்லவில்லை. உழவர் சந்தை , மினிபஸ் , பாலங்கள் , சமத்துவபுரம் போன்ற கண்ணுக்குப் புலப்படும் நற்திட்டங்கள் !!முந்தைய ஆட்சியினை விட கம்மியான ஊழல் . இன்னமும் ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று முழங்குபவர்களை தூக்கத்தில் இருந்து தான் எழுப்ப வேண்டும் . காந்தி மீண்டும் வந்தால் கூட சாத்தியமில்லை . ரமணா , முதல்வன் போன்ற படங்களில் பார்த்து மட்டும் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் !!

௨00௧ஆம் தேர்தல் முடிவுகளின் பொழுது நான் ராஜவல்லிபுரத்தில் இருந்தேன் . அப்பொழுது வீட்டில் டீவி கிடையாது . அதனால் பஸ் ஏறி சங்கர் சிமிண்ட்ஸ் பஸ் ஸ்டாப் அருகில் இருக்கும் ஒரு சலூனில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன் . தலைவர் தோற்றுப் போய்க் கொண்டிருந்தார் . மிகுந்த கவலையாய் இருந்தது !! அப்பொழுது ஒரு குரல் " கவலைப்படாதடா , அதான் நாற்பது எம் .எல் ,ஏ இருக்காங்கள்ல , தலைவரு சட்டசபைல கண்ல விரல விட்டு ஆட்டிருவாரு " ,திரும்பிப் பார்த்தால் , சோர்ந்த முகத்தோடு என் தோளில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் என் அப்பா !! நானும் எனது அப்பாவும் ஒத்துப் போகும் ஒரே விஶயம் தி மு க தான் . அன்று அப்பா சோகத்தில் சோமபானம் அருந்தினார். வெளியே நான் காத்திருந்தேன் . பின்னர் இருவரும் ஒன்றாக நடந்தே வீடு வந்து சேர்ந்தோம் . வரும் வழியிலெல்லாம் இதனைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம் . நீண்ட நாள் கழித்து அப்பாவுடன் தனிமையில் பேசியதால் , இந்த விஶயம் மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கிறது !!

பசங்களுடன் அரசியல் பற்றி அரட்டை அடிப்பது உண்டு !! நான் , பிரசன்னா , நொட்ஸ் , சிவா(?) தி மு க . பாலாஜி , காமராஜ் திவிர அதிமுக !! அரட்டை களைகட்டும் .தியாகராஜன் மக்கள் கட்சி , அதாவது எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ , அந்த கட்சி . ஹிஹிஹி !!மு கவை கைது செய்த நாளன்று நான் மதுரையில் இருந்து கிருஶ்ணகிரி வந்து கொண்டிருந்தேன் . நிறைய இடங்களில் தொண்டர்கள் மறியல் செய்வதும் , போலிஸ் வந்து கைது செய்வதுமாய் இருந்தது . சாலையினை மறிக்க வேண்டி , காவேரிப்பட்டினம் பாலம் அருகில் , டயருக்கு தீ வைத்து உருட்டி விட்டார்கள் .இதெல்லாம் பார்த்த பொழுது , தலைவருக்கு இவ்வளவு செல்வாக்கா என்று பிரமித்தேன் !!

எனக்குப் பிடித்தவர்கள் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்தும் விசித்திர குணம் எனக்கு உண்டு .அவர்களை விமர்சிப்பவர்களை கண்டாலும் , அதனைப் பற்றிப் படித்தாலும் எரிச்சல் தான் வருகிறது .எழுத்தாளர்களில் விகடன் மூலமாக ஞாநியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் . ஆனால் இந்த வார தொடரில் இவர் கருணாநிதியினை விமர்சித்திருந்தது போல் எதிர்கட்சியினர் கூட விமர்சித்திருக்கமாட்டார்கள் .படித்தவுடன் எனக்கு கோபம் தான் வந்தது . அவர் சொல்வதெல்லாம் நியாயம் தான் . உண்மை தான் . அதற்காக மற்றவரை குறை கூற இவர் யார் ? வாழ்வில் தவறேதும் செய்யாத புத்த பிட்சுவா ? மகாத்மாவா ? என்றேல்லாம் கேள்வி எனக்குள் வந்தது . காசுக்காக எழுதுபவர் தானே அவர் என்றளவுக்கெல்லாம் மனதிற்குள் திட்டித் தீர்த்தேன்.

வந்த கோபம் அப்படி !!

மீண்டும் வருகிறேன் !!

எனக்குப் பிடித்தவர்கள் : இரண்டு

சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்தது அஜீத் . நான் அஜித் ரசிகனானது சுவாரஸ்ய வரலாறு !! வெறுமனே இருக்கும் பொழுது அரட்டை அடிப்பது , பசங்களின் பொழுதுப்பொக்கு . அதுபோல ஒரு நாள் , கே எஸ் ஜி எஸ்டேட்டில் இருக்கும் பொழுது , இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வந்தோம் . கச்சேரி தொடங்கியது . பேச்சுவாக்கில் அஜித்தா விஜய்யா ? என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சையில் வந்து நின்றது . . இந்த இடத்தில் பிரசன்னா பற்றி சொல்ல வேண்டும் . காலையில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது , இனிமையான அக்காலை நேர தூக்கத்தினை கெடுக்கும் வகையில் , திடிறென்று ஏதாவது சத்தமொ , பேச்சோ கேட்டால் உறுதியாக சொல்லிவிடலாம் , பிரசன்னா எழுந்துவிட்டான் என்று !! அது பொல் இரவு ரூமிற்கு வரும்பொழுது நிசப்தமாக இருந்தால் , சத்தியம் செய்து சொல்லிவிடலாம் பிரசன்னா தூங்கி விட்டான் என்று !! காலை எழுவது முதல் மாலை அடங்கும் வரை எதையாவது பேசிக்கொண்டும் , முக்கியமாக யாரையாவது ஓட்டிக் கொண்டு இருப்பது பிரசன்னாவின் அன்றாட வேலைகளுள் முதலானது . அப்படிப்பட்ட பிரசன்னாவை எதிர்த்துப் பேசி , அதனால் ஓட்டு வாங்கிக் கொண்டும் , அவனை ஓட்டிக் கொண்டும் இருப்பது அலாதியான சுகம் !! பிரசன்னா விஜய் பக்கம் , அதனால் நான் அஜித் பக்கம் நின்றேன் !!

ஆனால் நானே எதிர்பாராத வகையில் பிரசன்னாவிற்கு சப்போர்டாகவும் , விஜய்கு ஆதரவாகவும் நிறைய பேர் ஆகிவிட்டார்கள் !! பிரசன்னா , அசோக் , காமராஜ் , தியாகராஜன் , என பேட்ஸின் பெரும்புள்ளிகள் அந்தப் பக்கம் . கூட்டம் பார்த்து கடலையும் அப்பக்கம் போய்விட்டான் . நானும் , கார்த்தியும் , பாலாஜியும் மட்டுமே இப்பக்கம் . வெண்மணி பின்னால் வந்து சேர்ந்தான் . இதில் பாலாஜி மதில் மேல் இருக்கும் ’ குருட்டு , மற்றும் செவிட்டுப் பூனை ’ , அதனால் அப்பக்கம் போய் விட வாய்ப்பு அதிகம் !! தனியாக மாபெரும் கூட்டத்தினை எதிர்த்து பேசிப் போராடுவதும் சுவாரஸ்யமானது . காலை முதல் மாலை வரை இதைப் பற்றியே பேச்சாயிருக்கும் . அனுபவித்தேன் !! சொல்லிவிட்டொம் என்பதற்காகவே அஜித் படங்களை விரும்பிப் பார்ப்பேன் . நாளைடைவில் அஜித்தின் வெறித்தனமான ரசிகனானேன் !!

பசங்களுடன் பார்த்த அஜித் படங்களில் மறக்க முடியாதது ரெட்டும் , சிட்டிஸனும் !! புதூரில் மேட்ச் ஆடிய பொழுது ரிலீஸானது ரெட் . அப்பொழுது சிகரெட் வாங்கக் கூட என்னிடம் காசு இல்லை . காட்ஸிடம் கேட்டேன் . அவரும் முடியாது என்று சொல்லிக்கொண்டே வந்தார் . ரெட் படத்திற்கு பொனோம் . படம் ப்ளாப் . இன்டர்வலில் "காட்ஸ் " என்றென் . உடனே அவர் , பையில் இருந்த காசு எடுத்துக் கொடுத்து " போடா போய்ட்டு வா , அப்படியே எனக்கும் காபி வாங்கிட்டு வா , தலைய வலிக்குது " என்றார் . படம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் , " படம் கலக்கல் , கண்டிப்பாக இரண்டாவது தடவை பார்க்க வேண்டும் " என்றேன் . பதிலுக்கு ரோட்டில் போய்க் கொண்டிருந்த யாரோ , " இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்குறதுக்கு சாகலாம் " என்றது மறக்க முடியாது !! இந்த படத்திற்காக தான் சிவா நெய்வேலியில் நூறு ருபாய் ப்ளாக்கில் படம் பார்த்தது !!

நான் அஜித்தின் புகழ் பாட , பதிலுக்கு தியாகராஜனோ பிரசன்னாவோ அதனை ஓட்ட , என்று கல்லூரிக் காலங்கள் இனிதே கழிந்தன . பெயிண்டின் அக்கா கல்யாணமும் , தாமு அக்கா கல்யாணமும் அடுத்தடுத்த மூன்று நாள் இடைவேளியில் வந்தது . பேட்ஸ் அனைவரும் ஒரு டூர் பொல கிளம்பினோம் . கார்த்தி வீட்டில் சாப்பாடு , பெயிண்ட் அக்கா கல்யாணம் பின்னர் மதுரையில் தாமு அக்கா கல்யாணம் என்று ப்ளான் செய்தோம் !! தஞ்சாவூரில் இருக்கும் பொழுது ரிலிஸானது சிட்டிஸன் . தியேட்டருக்குச் சென்றால் நல்ல கூட்டம் . டிக்கட் கிடைத்து நான் மட்டும் உள்ளே சென்றேன் . பசங்களுக்கு டிக்கட் கிடைக்கவில்லை !! அதனால் வெளியே வந்தேன் . அப்புறம் தான் தெரிந்தது , டிக்கட் கிடைக்காத எரிச்சலோ , சந்தோஶமோ பிரசன்னா அதனை சலித்துக்கொண்டு தரையில் உதைத்து வெளிப்படுத்த , அதனை பார்த்த போலீஸ்காரர் அவனை காலில் அடிக்க என்று களேபரமானது !! தஞ்சாவூரில் படம் பார்க்கவில்லை . மதுரை கிளம்பினோம் .

மதுரை என் சொந்த ஊர் . அங்கு தான் " நோட் புக் " கல்யாண மஹாலில் வைத்து தாமு அக்காவின் கல்யாணம் . அங்கிருந்து அரைமணி நேர நடைதூரத்தில் அபிராமி தியேட்டர் . சிட்டிஸன் ரிலிஸ் !! நான் , நொட்ஸ் , காமராஜ் , பாலாஜி , கடலை , கார்த்தி என ஒரு கூட்டமே படம் பார்க்கச் சேன்றொம்.இரவு பத்து மணி காட்சிக்கு ஒன்பது மணிக்கே சென்றுவிட்டோம் . கவுண்டரில் கூட்டமே இல்லை . நொட்ஸ் தான் கவுண்டரில் முதலாவதாக இருந்தான் . அப்பொழுதே அவனிடம் சொன்னேன் , " மச்சி டிக்கட் கொடுக்குற நேரத்தில நிறைய பேர் வருவாங்க , அதனால ஜாக்கிரதையா இரு !! " , சொன்னது பொலவே டிக்கட் கொடுக்கும் நேரத்தில் எங்கள் மேல் ஏறிக்கொண்டும் , மிதித்துக்கொண்டும் சிலர் வர , நோட்ஸ் ஆவேசப்பட்டு சவுண்ட் விட , எனக்கோ பயம் , "எங்கே மெட்ராஸில் விட்ட பாக்கியினை மதுரையில் வாங்கிவிடுவார்களோ என்று !! நல்லவேளை பதில் சவுண்ட் வந்தவுடன் நொட்ஸ் அமைதியாகிவிட்டான் !! படம் பார்த்துவிட்டு அனைவரும் நடந்தே திரும்பிவந்தது மறக்க முடியாதது !! பின்னர் சில காலம் கழித்து பர்கூர் துரைஸ் பேரடைஸில் சிட்டிசன் இறங்கியது !! மழையோடு நனைந்து கொண்டு நானும் நொட்ஸும் படம் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . படத்துக்காக அல்ல , படத்தின் இண்டர்வலில் கிடைக்கும் டீக்காக தான் நொட்ஸ் படத்திற்கு வருவான் . படம் ஆரம்பித்ததும் ஆரம்பிக்கும் இவனது தூக்கம் , இன்டர்வலில் முடியும் , பின்னர் மறுமடியும் ஆரம்பிக்கும் !! எனக்கோ வழித்துணைக்கு ஒரு ஆள் !! அவ்வளவுதான் .

அபுதாபி கிளம்பும் முன் , பாண்டிசேரி சென்றோம் . அங்கு திருப்பதி ரிலிஸ் .பசங்கள் அனைவரும் கூட்டமாக சென்றோம் !! படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது !! இரண்டரை மணி நேர படத்தில் , கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நானும் சிவாவும் வெளியே தான் கூல் ட்ரிங் சாப்பிட்டும் , டீ குடித்தும் நேரம் போக்கினோம் !!
அஜித்தின் அனைத்துப் படங்களையும் பார்த்துவிடுவது எனது ’தலை’யாய கடமையாய் இருந்தது , இருக்கிறது !! . வேலைக்காகத படமானாலும் நான்கு தடவை பார்த்துவிட்டால் தான் நிம்மதி . குட்டி அஜித் வரப்போவதாக பேப்பரில் அறிந்தேன் . சந்தோஶம் , மகிழ்ச்சி !!

பெரிய தலை பட ரிலிஸுக்காக சின்ன தலை வேய்ட்டிங் !! கிரிடம் கண்டிப்பாக கிரிடம் சூடும் . தவறிவிட்டால் , பில்லா ௨00௭ அதற்கு பதில் சொல்லும் !!

மீண்டும் வருகிறேன் .

எனக்குப் பிடித்தவர்கள் : ஓன்று

நண்பர்களையும் , உறவினர்களையும் தவிர்த்து , சினிமாவிலும் பொதுவாழ்க்கையிலும் எனக்குப் பிடித்தவர்கள் இவர்கள் .இவர்களைப் பிடித்துப் போனதற்கு சில பல காரணங்கள் உண்டு , ஆனால் இவர்களது துறையில் மற்றவர்களை வெறுப்பதற்கு இவர்களே காரணம் !!

சினிமாவில் ரஜினி . ரஜினியின் வெறித்தனமான ரசிகன் நான் . சின்ன வயதில் மாமாவுடனும் , சித்தியுடனும் தான் இருப்பேன் . அவர்களும் ரஜினி ரசிகர்கள் . அவர்களிடம் இருந்து தான் இது எனக்கும் தொற்றியிருக்கும் என்றே நினைக்கிறேன் !! ரஜினி படங்கள் என்றால் எனக்கு உயிர் . எத்தனை தடவை போட்டாலும் , கலங்காது பார்த்துக்கொண்டே இருப்பேன் .
அப்பொழுது வீட்டில் டி.வி இல்லை . பக்கத்து வீட்டில் டிவி போட்டால் , எங்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன் . வெள்ளிக்கிழமை தோறும் ஒளியும் ஒலியும் , ஞாயிறு தோறும் சாயங்கால வேளையில் போடும் தமிழ்த்திரைப்படம் போன்றவற்றிற்கு மட்டும் ஸ்பெஶல் பெர்மிஶன் . அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் !!சில நேரங்களில் ரஜினி படங்கள் போடுவார்கள் . அன்று காலை முதலே பரபரப்பாக இருப்பேன் . மளிகைக்கடைக்குப் போவது , வேறு எதாவது வெளி வேலை என்றேல்லாம் கேட்டு கேட்டு முடித்துவிட்டு தான் டிவி பார்க்கப் போவேன் . இல்லாவிடில் நடுவில் செல்ல வேண்டியிருக்கும் !!

தனியாக படம் பார்க்க ஆரம்பித்ததும் , பசங்களுடன் நான் பார்த்த முதல் ரஜினி படம் பாட்ஶா தான் . அதுவரை வீட்டினர் யாருடனாவது தான் படம் பார்க்கச் செல்ல முடியும் . முதல் முறையாக நண்பர்களுடன் ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் , பையில் இருக்கும் இருபது ருபாயுடன் சைக்கிளில் வேகம் வேகமாக தியேட்டர் சென்றால் , டிக்கட் விலை நாற்பது . கண்டிப்பாக வீட்டில் கேட்க முடியாது. கேட்டால் உதை விழுவது உறுதி . அதனால் என் நண்பன் வாசுதேவன் வீட்டிற்குச் சென்றேன் .அவனுக்கு தசைகளில் கோளாறு. சட்டென்று கை கால் தூக்க முடியாது . பிறவிக் கோளாறு . வைத்தியம் செய்து வந்தான் . அவர்கள் வீட்டில் பெரிய கை . அப்பாவும் அம்மாவும் டாக்டர்கள் . அதனால் பையன் படம் பார்ப்பதற்கு கண்டிப்பாக நூறு ருபாய்க்கு குறையாமல் கொடுப்பார்கள் . அவனை வழுக்கட்டாயமாக வரச் செய்து , டிக்கெட் எடுத்தால் , அது அடுத்த ஶோவுக்கான டிக்கெட் . இரவு படம் முடிந்ததும் , கால் வலிக்க சைக்கிள் மிதித்து , அவனை அண்ணாநகரில் இருந்து புதூர் வரை கொண்டு போய் விட்டு விட்டு வீட்டிற்கு வர , இரவு மணி பன்னிரெண்டு . அப்பாவின் சீப்பு அடியும் கிடைத்தது , மறக்க முடியாதது !! அடுத்த நாள் , பள்ளியில் சுதந்திரப் போராட்ட நாயகர்களைப் போல் , நானும் வாசுதேவனும் சுற்றிலும் பசங்களும் , பெண்களும் படைசூழ படத்தின் கதையினை விவரித்ததும் , அதை வைத்து வாரந்தோறம் சனிக்கிழமை நடக்கும் கிளப்பில் நாடகமாய் போட்டதும் இன்னும் நினைவிலிருக்கிறது !!!

நாகர்கோவிலில் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் படையப்பா படம் ரிலிஸானது . முதல் ஶோ பார்க்காவிட்டால் எப்படி ? நானும் குமாரசாமியும் ( சம்பத் ) மற்ற க்ளாசில் உள்ள பசங்கள் அனைவரும் படம் பார்ப்பதென முடிவானது . எப்படியும் க்ளாஸ் கட் அடிக்க வேண்டும் . காசைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை . நான் தான் க்ளாஸ் லீடர் என்பதால் , எனது க்ளாஸ் பசங்களின் மாச ஸ்கூல் பீஸ் என்னிடம் தான் இருக்கும் . முதல் தேதியே அனைவரிடமும் வாங்கி , இருபத்தியேழாம் ( கடைசி நாள் ) தேதி தான் பணம் அடைப்பேன் . அதனால் எப்பவும் என்னிடம் காசு இருக்கும் . ரிலிஸுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ரசிகர் மன்ற டிக்கட் வாங்கியாகி விட்டது .மொத்தம் இருபது டிக்கட் . க்ளாசிலோ மொத்தமே முப்பது மாணவர்கள் தான் , பெண்கள் எட்டு பேர் . முதல் நாளே ப்ளான் செய்தது போல் நானும் இன்னும் நான்கு பேரும் லீவ் எடுத்துவிட்டோம் . ( அப்பொழுது தான் அடுத்த நாள் வரவில்லையென்றாலும் சந்தேகம் வராது !! ) , சம்பத்துக்கு அன்று வயிற்றுவலி என்றும் , அவனை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல நான்கு பேருமாய் , கிட்டத்தட்ட அனைவரும் எதனையாவது சாக்குச் சொல்லி மட்டம் தட்டி விட்டு படம் பார்த்தோம் . அடுத்த நாள் பள்ளியில் பிரச்சனையாகி விட்டது . க்ளாசில் மொத்தமே பத்து மாணவர்கள் தான் இருந்திருக்கிறார்கள் . பெற்றவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி விட்டார்கள் . எப்படியோ சமாளித்தோம் . !!! எடுத்த பீஸை சரிகட்ட , லெப்ரசி டொனேஶன் என்று கார்ட் அடித்து , வீடு வீடாக சென்று பணம் வாங்கியது ஒரு தனிக்கதை !!!

கிருஶ்ணகிரியில் படிக்கும் பொழுது ரீலிஸானது ’ பாபா ’ .பிரசன்னாவும் கூவமும் சென்று காசட் வாங்கி வந்தார்கள் ( அது ஒரு தனிக்கதை ) . அக்காஸட்டினை ருமில் இருந்த அனைவரும் ஒன்றாக ஒரே ரூமில் உட்கார்ந்து கேட்டது ஞாபகம் இருக்கிறது . நானும் கூவமும் படம் பார்க்க திட்டமிட்டொம் . பாதி மேட்சில் கிளம்பி வந்தான் கூவம் . அதனால் அசோக்கும் , பிரசன்னாவிற்கும் கோபம் !! படம் பார்க்க டிக்கட் எடுக்கச் செல்லும் பொழுதெ , ரஜினியின் கட் அவுட் சரிந்தது . படம் எனக்குப் பிடித்திருந்தாலும் , ப்ளாப் . தண்ணி அடித்தோம் . அன்று பாரில் குடிமகன்கள் அனைவரும் பாபா ப்ளாப் ஆனது பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர் !!! படத்தினை ஒரு எட்டு முறை பார்திருப்பேன் தியேட்டரில் !! கடைசி முறையாக சென்ற பொழுது , நான் மட்டும் தனியாக சென்று பார்த்ததும் நினைவிலிருக்கிறது .

மதுரையில் நல்ல சம்பளத்தில் பிலிப்ஸில் இருக்கும் பொழுது ரிலிஸானது சந்திரமுகி . படத்தின் முதல் ஶோ , இண்டர்வலில் மானேஜர் ராதாகிருஶ்ணன் போன் பண்ணியிருந்தார் . வேறு எதைப் பற்றியும் கேட்கவில்லை , " படம் பார்த்திருப்பேன்னு தெரியும் , எப்படி இருக்கு ?" என்றார் . இது தான் தலைவர் !! ஏ க்ளாஸ் , பி க்ளாஸ் என்றில்லை , எல்லா க்ளாசிலும் தலைவருக்கு ரசிகர்கள் உண்டு !! மப்பில் ஒருதடவை படம் பார்க்க நானும் முத்துவும் சென்று , கீழே விழுந்து , எனக்கும் வண்டிக்கும் நல்ல அடிபட்டும் , படம் பார்த்துவிட்டே டாக்டரிடம் போனோம் .

பெங்களுரில் இருக்கும் பொழுது , நானும் சஞ்சையும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தோம் . " சரியா நடக்கத் தெரியாது , ஸ்டைலுன்டாங்க !! சரியா தமிழ் பேசத் தெரியாது ஸ்டைலுன்டாங்க !!" என்று . அதுபோல் தலைவர் எல்லாத்தையும் சரியாகச் செய்தாலும் சரி , எல்லாத்தையும் தப்பாகச் செய்தாலும் சரி , அது ஸ்டைல் தான் !!ஓரு நடிகனின் திரைப்பட அறிவிப்பே பரபரப்பாகிறது என்றால் , அது ரஜினிக்கு மட்டுமே !!ரஜினி குடிக்கும் ஜூஸிலிருந்து , வைக்கும் விக் வரை எல்லாமே பத்திரிக்கைக்கு நியூஸ் தான் .

சில சமயங்களில் உறைக்கிறது , இது கிறுக்குத்தனம் என்று !!காமராஜுக்கும் எனக்கும் இதனால் சண்டையே வந்திருக்கிறது . அவர் கமல் ரசிகர்!! . ஆனாலும் முடியவில்லை . இதோ இன்னும் பத்து நாட்களில் சிவாஜி !! இப்பொழுதே ஆபிஸில் சொல்லிவிட்டேன் . அடுத்த வாரம் அண்ணண் வீட்டில் கல்யாண நாள் என்று .படம் எப்பொழுது இங்கு ரிலிஸ் ஆகும் எனத் தெரியவில்லை . ரிலிஸ் அன்று படம் பார்க்காவிட்டால் ஜென்ம சாபல்யம் கிட்டாது போல ஒரு தவிப்பு .

மீண்டும் வருகிறேன் !!

Tuesday, June 5, 2007

விகடனில் ஒரு கவிதை

போன வார விகடனில் வந்திருந்த ஒரு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது . அனிதா என்பவரின் கவிதை .

" விடுதி அறையைச் சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக் கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா .

எனக்கு முன் இருந்தவரோ
அதற்கு முன் இருந்தவரோ
யாருடையதாகவும் இருக்கலாம்.

மறந்ததா மறுத்ததா எனத் தெரியாதபட்சத்தில்
மடல் விலக்கி தூசு அகற்றி சுவரில் ஒட்டிவிட்டேன்.

கொடுத்தவரும் பெற்றவரும்
இன்னும் பிரியாமல் இருக்கவும் கூடும் !!

இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானதாகிப் போனது . "மறந்ததா மறுத்ததா எனத் தெரியாதபட்சத்தில் " என சிந்திக்க ஆரம்பித்து , அதற்கான காரணத்தைக் கொண்டு முடிப்பதிலாகட்டும் , இக்கவிதை என்னை கொள்ளை கொள்கிறது .

அந்த ஒற்றை ரோஜா எதன் வெளிப்பாடாக இருக்கும் ? காதலர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம் , அல்லது காதலன் காதலியிடம் காதலை தெரிவிக்கும் காதல் கடிதமாக இருக்கலாம் !! தெரிவிக்க வேண்டி வாங்கி வைத்து , நிராகரிக்கப் பட்டுவிடுமோ என்ற பயத்தில் தெரிவிக்காமலே விட்டுவிட்ட காதலின் சாட்சியாய் இருக்கலாம், அல்லது " உனது அன்பினை ஏற்றுக் கொண்டேன் " எனத் தெரிவிக்கும் அறிவிப்புக் கடிதமாக இருக்கலாம் ,நிராகரிக்கப்பட்ட காதலின் அல்லது அன்பின் சோக சாட்சியாய் இருக்கலாம் !!
எதன் வெளிப்பாடாக இருந்தால் என்ன ? ஒற்றை ரோஜா எனபது என்றென்றும் அன்பின் சின்னம். பாதுகாப்பாய் வைத்திருக்கப் பட வேண்டியது !!

மீண்டும் வருகிறேன் !!

தனிமையில் எனது எண்ணங்கள் :

மாற்றம் மானிடதத்துவம் என்று சொல்வார்கள் . அது உண்மை என்று தொன்றினாலும் , இவ்வளவு சீக்கிரம் எற்படும் மாற்றங்கள் சரியா என்று தொன்றத் தொடங்கியுள்ளது .மாற்றங்கள் எனில் , எண்ணங்களின் மாற்றங்கள் . சற்று நாள் முன்பு வரை , சரி என்று தொன்றிய விஷயங்கள் , இப்பொழுது தவறு என்று தோன்றுகிறது . இவைதான் முக்கியம் என்றெண்ணியிருந்த விஶயங்கள் , இப்பொழுது அர்த்தமில்லாமலே போகின்றன . ஒரு காலத்தில் பிடித்ததும் , ஏங்கியிருந்ததுமான விஶயங்கள் , இன்று அர்த்தமற்று போகிறது .

தனிமையில் இருக்கும் பொழுது , அதுவும் தண்ணியுடன் இருந்துவிட்டால் , நான் பலவற்றைக் குறித்தும் நான் சிந்திப்பது உண்டு . நட்பு எது வரை ? எதிர்பார்ப்புகள் சரியா , தவறா ? போன்றவற்றில் ஆரம்பித்து , போதையில் தலை சாயும் வரை சிந்தித்திருப்பேன் .இது ராமக்கிருஶ்ணனின் கேள்விக்குறி இல்லை !! விடை கிடைக்க வேண்டி ஒரு சிந்தனைப் பயணம் !! காலேஜ் படிக்கும் பொழுது , யாராவது என்னிடம் , நண்பர்கள் முக்கியமா , குடும்பம் முக்கியமா ? என்ற கேள்வி எழுப்பியிருந்தால் , கண்டிப்பாக நண்பர்களே முக்கியம் என்றிருப்பேன் . ஆனால் இப்பொழுது அதே கேள்வியினை யாராவது கேட்டால் , கண்டிப்பாக எனது பதில் வேறாகத் தான் இருக்கும் .பொறுப்புகள் கூடிக் கொண்டே போவது தான் காரணமா, இல்லை அது தான் நிஜமா என்று தெரியவில்லை , ஆனால் இப்பொழுது தொன்றுகிறது , குடும்பம் முக்கியம் என்று !! தேவையில்லாமல் கூட்டம் சேர்த்துக் கொண்டும் , அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பதினால் மட்டும் என்னால் , அதாவது இப்பொதைய குமாரசாமியால் இருந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது . ! அது ஒரு சுகம் , இனிமை , அந்த அந்த வயதிற்குள் இழந்துவிடக் கூடாத அனுபவம் . நான் அதனை நன்றாகவே அனுபவித்தாகிவிட்டது !!

அந்த சுகத்தையும் , அனுபவத்தினையும் நீட்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் , பேராசையிலும் , தான் சென்னையில் நமக்கென்று நமக்காகவென்று ஒரு பிளாட் என்றது . அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக கழிக்கவல்ல ஓர் இடம் !! வாழ்வின் கடைசிவரை ஒருவர் மற்றவரின் சுகதுக்கங்களில் பங்கேடுத்துக் கொண்டு , நாம் அனுபவித்திறாத , நாம் ஆசைப்படும் அனைத்தையும் நமது சந்ததியினருக்கு தரும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொண்டு , சுகமாய் இருக்க நல்லதொரு இடம் !! .இதில் ஆரம்பம் முதலே பிரச்சனைகள் !! சேருவான் என்றேண்ணியிருந்தவன் காலை வார .....என்பதில் ஆரம்பித்து , அன்று முதல் இன்று வரை ஏகத்துக்கும் ஏகத்துக்கும் பிரச்சனைகள் , மனஸ்தாபங்கள் , கோபங்கள் !! இத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தினை விட்டு வெளியேறுகிறோம் என்பது மட்டும் புலனாகிறது !!நான் இந்த ப்ளாகில் எழுத எண்ணியிருந்த விஶயத்தை விட்டு , தடம் மாறிவிட்டேன் , மீண்டும் விஶயத்திற்கு வருகிறேன் !!

’தளபதி’ ரஜினி அளவிற்கு நாம் இல்லாவிட்டாலும் , மம்முட்டி அளவிற்கு கூட இருக்க இயலாதவர்களை என்னவென்று சொல்வது ? நாம் செலுத்தும் அன்பும் அக்கறையும் , குறைந்தபட்சம் பாதியளவாவது திரும்ப கிடைத்தால் பரவாயில்லை , ஆனால் பாலைவனத்திற்கு இறைத்த நீரானால் ? உண்மையில் யாராலும் தாங்க முடியாது என்றே தோன்றுகிறது !! கண்டிப்பாக என்னால் முடியவில்லை !! காதலி தன்னை நேருக்கு நேர் நிராகரிக்கும் கொடுமைக்கு மேலானது அது !!

எதிர்பார்ப்புகள் இல்லாதது தான் நட்பு என்கிறான் , இங்கிருக்கும் நண்பன் (?) ஒருவன் . அதுவே சரி என்றாலும் எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையோ , சொந்தமோ , நட்போ தேவையா என்ன ? எனக்குத் தெரியவில்லை . பதில் எப்பொழுது உறைக்கும் என்றும் தெரியவில்லை . விளையும் என்ற நம்பிக்கையில், காலந்தோறும் விழலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க நான் ஒன்றும் மகாத்மா இல்லை , மனிதன் தான் !! சிவாவை போல் இருக்க நினைக்கிறேன் . யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது நட்பையும் , குடும்பத்தையும் சரிவிகிதத்தில் சமாளிப்பான் .

திகட்ட திகட்ட அனுபவிக்கும் எதுவும் தித்திக்கும் என்பார்களே அது போல , திகட்ட திகட்ட வாரி வழங்கும் நட்பும், பாசமும் திகட்டும் பொலிருக்கிறது . அதாவது பெறுவருக்கு திகட்டிப் போகும் அளவிற்கும் , அளிப்பவர் வெறுத்துப் போகும் அளவிற்கும் !!

இப்பொழுதெல்லாம் நான் தனிமையினை அதிகம் நாடுகிறேன் . நண்பர்கள் அருகில் இல்லை என்பதல்ல காரணம் , தனிமையாய் இருக்க விரும்புகிறேன் என்பதே காரணம் . தனிமையில் வானமே எல்லை !! கற்பனா உலகில் இஶ்டம் போல் சஞ்சரிக்கலாம் ! தனியாக படுத்துக் கொண்டு விகடன் படிக்கும் அந்த நேரங்கள் இனிமையானவை . அந்த நேரத்தில் போன் கால் வந்தால் , எரிச்சலுருகிறேன் !! சபித்துக்கொண்டே போன் எடுக்கிறேன் !! எதிர்முனையில் இருப்பவனின் உத்தேசம் எனது நலனாய் இருப்பினும் , நடக்கக் கூடாது என்றே வேண்டுவேன் !!

ஓன்றாக கூடவே இருப்பதால் மட்டும் அன்பும், அக்கறையும் நிலைக்கும் , நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கூடவே இருப்பதால் , மற்றவர் மீது எரிச்சலும் , கோபமுமே வருகிறது . வீணான சம்பாஶனைகளும் , தேவையில்லாத சண்டைகளுமாக இருக்கும் கொஞ்ச நஞ்ச நட்பும் நசித்துப் போகிறது . பிரிவில் தான் மற்றவரின் அன்பும் , அக்கறையும் நமக்குப் புலப்படும் !!

கல்லூரி நாட்களில் அதிகம் சந்தோசமாய் கூடி இருந்துவிட்டொம் என நினைக்கிறேன் . அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம் என இப்பொழுது தோன்றுதிறது . மனம் அதை நாடினாலும் , அதனை பெற முடியாத சூழ்நிலையில் நானும் , தர முடியாத அளவிற்கு ரொம்பவே பிசியாக (?) அவர்களும்!! சில சமயங்களில் , யாரையும் தொடர்பு கொள்ளாது , யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஏதாவது ஊருக்குச் சென்றுவிடலாம் என்று கூட தோன்றுகிறது. மாதாமாதம் விட்டிற்கு தேவையானதை மட்டும் அனுப்பிக் கொண்டு , எனக்கென எனக்காக வாழலாம் என்றும் தோன்றுகிறது !! அதுவும் சில நாட்கள் நன்றாகத் தான் இருக்கும் , நண்பர்களைப் பற்றிய நினைவு வரும் வரை !!

சிரித்திருந்த நேரங்களை பின்னாளில் நினைத்துப் பார்த்தால் , அவை அழ வைக்கும் என்று எதிலோ கேட்டது சரிதான் போலிருக்கிறது !!

மீண்டும் வருகிறேன் !!

நொட்ஸ் :

சிலரைப் பற்றி நினைத்தாலே , அவர்களாது செய்கைகளின் ஞாபகங்களும் , மனோபாவமும் நமக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள் . அது அவர்களது தனித்தன்மை என்றே நினைக்கிறேன் !! உதாரணத்திற்கு , ரஜினி என்றால் ஸ்டைல் , ஸ்நேகா என்றால் புன்னகை , அதுபோல நொட்ஸ் என்றால் .................. வேறன்ன காமடி தான் . தன்னை அழித்துக்கொண்டு பிறருக்கு ஒளி தரும் மெழுகுவர்த்தியினைப் போலில்லாமல் , தான் செய்யும் கேனத்தனங்களால் , பிறரை சிரிக்க வைத்து , அது தெரிந்ததும் தானும் சிரித்து , அசடு வழியும் ஒரு மகாபுருஶன் !! நொட்ஸின் காமடிகள் என்றென்றும் நினைவிலிருப்பவை . நான் ப்ளாக் எழுதிக்கொண்டிருக்கும் , இந்த நேரத்தில் கண்டிப்பாக பற்பல நொட்ஸ் காமடிகள் நடந்தேறியிருக்கும் !! இதையெல்லாம் நான் எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருகையிலேயே என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை . தனியாக சிரித்துக்கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன் !!

கட்டம் போட்ட லுங்கியும் , கையில்லாத முண்டா பனியனுடனும் , தலைக்கு தனது கைகளை கொடுத்துக்கொண்டும் ,தனது கால்களை டக் டக் என ஆட்டிக் கொண்டும் , திறந்திருக்கும் புத்தகத்திற்கு பக்கத்தில் , கண் மூடி படுத்துக்கொண்டிருக்கும் அவனைப் பார்க்கும் வெளியாட்கள் , இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரத்தின் விளைவுகள் குறித்தும் , பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதன் கட்டாயத்தினை குறித்தும் சிந்தனையில் இருக்கிறார் என்று நினைப்பது இயல்பு . ஆனால் எங்களைப் போன்ற அவனுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் அமையப்பட்டவர்களுக்கே தெரியும் , அவன் அடுத்த வேளை சாப்பாட்டில் , காரக்குழம்பிற்கு அப்புறம் ரசம் விட்டு சாப்பிடுவதா இல்லை ரசம் விட்டு சாப்பிட்ட பின் காரக்குழம்பு ஊற்றி சாப்பிடுவதா என்பதை பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினைக் குறித்து யோசிக்கிறான் என்று !! நானும் தாமுவும் நொட்ஸின் காமடிகளை புத்தகமாக போடுவது பற்றியும் , அவனை திரையில் வடிவமைத்து விட்டால் உண்டாகும் சிரிப்பலைகளைக் குறித்தும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !! இது தான் நொட்ஸ் !!!
ஆளைப் பார்த்தால் தெரியாது .

எப்பொழுதும் டக் இன் செய்யப்பட்ட சர்ட், அதற்கு மேட்சான பேன்ட் ,அடர்த்தியான மீசை என ஆள் கம்பிரமாக இருப்பான் ! நெருங்கி வந்து நம்மிடம் " ஹாய் , குட்மார்னிங் ’ என்று சொல்லிவிட்டு , வெளிநாட்டுக் கம்பனியய் விலைக்கு வாங்கிவிட்ட ரத்தன் டாட்டாவை போல் லுக் விடும் பொழுதே , நமக்கு குபீரென்று சிரிப்பு வரும் !! காரணம் , அது இரவு எழு அல்லது எட்டு மணியாக இருக்கும் !! நொட்ஸ் வேண்டுமென்றே காமடி செய்வதில்லை , ஆனால் அவன் செய்யும் எல்லாமே காமடி தான் !! ஐந்து ருபாய்க்கு பேரம் பேசிவிட்டு , ஐம்பது ருபாய் அதிகம் கொடுத்துவிட்டு வருவது ,எட்டு மணி ட்ரேயினைப் பிடிக்க சீக்கிரம் கிளம்பி வழியில் பேப்பர் படிக்க கடைக்குச் சென்று அதற்கடுத்த ட்ரேயினையும் கோட்டை விடுவது , இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்ல , அரை மணி நேரம் சாவி பொடாமலேயே வண்டியய் ஸ்டார்ட் செய்வது , பொன்றவையேல்லாம் நொட்ஸ் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் !! நமக்கோ காமடி டைம்கள் !! நொட்ஸை நான் முதன்முதலில் பார்த்தது பாலாஜி லாட்ஜில் அவன் அப்பாவுடன் என்றாலும் ,அவன் எனக்கு முதலில் பரிச்சயமானது ராமசுப்பு ஹாஸ்டலில் தான் . காலேஜ் ஆரம்பித்த நாட்களில் சாயந்திரம் ஐந்து மணிக்கெல்லாம் , மடியில் ட்ராயிங் பேடை வைத்துக்கொண்டு , கெமிஸ்டரி புக்கின் இன்ட்ரோடக்ஶன் பக்கத்தை மனனம் செய்து கொண்டிருப்பான் . பைனல் பரிட்சை நடக்கும் பொழுதும் அதையே தான் படித்துக்கொண்டிருப்பான் !! நொட்ஸ் என்பது காரணப் பெயர் . வருண்சிவம் சூடிய நாமாகரணம் !! கண்ணாடியய் வலக்கையில் பிடித்துக்கொண்டு ,காய்ந்திருக்கும் தலைமுடியய் ’வரட் வரட் ’ என இடக்கையால் அவன் தலைசீவும் அழகே அழகு !!

கல்லூரி காலத்து நினைவுகள் வருமாயின் , நொட்ஸுக்கு அதில் நீங்கா இடம் உண்டு ! . முதலாம் ஆண்டு விளையாட்டுப்போட்டிகளில் , நோட்ஸ் இடக்கையில் பேட் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சென்றதும் , சென்ற வேகத்திலேயே திரும்ப வந்ததும் , திரும்பி வந்து இடக்கை தலையய் தடவிக்கொண்டிருக்க , ’சே ஒவர் பிட்ச் பால் , நான் எதிர்பார்க்கல மச்சி ’ என பீலிங் விட்டுத் திரிவதில் அவனுக்கு நிகர் அவனே !!அவனிடம் எதாவது சில்மிஶம் செய்து மாட்டிக் கொண்டால் , வலக்கை நமது சட்டைக்காலரை பிடித்துக் கொண்டிருக்க , பருக்கள் நிரம்பிய அவனது முகமும் , இடக்கை முஶ்டியும் நம் முகத்தருகே வந்து பயமுறுத்தும் , நமக்கொ ஜுராஸிக் பார்க் இரண்டாம் பாகம் பார்த்தது போலிருக்கும் !!

ராமசுப்பு ஹாஸ்டலில் சாயந்திர வேளைகளில் டீ என்ற பெயரில் வெந்நீர் தண்ணி தருவார்கள் . யாரும் மதிக்காத அதனை , தோற்றத்தில் ஒரு கூஜாவுக்கு சற்றே சிறியதும் , கொள்ளளவில் அக்கூஜாவை விடவும் பெரியதான ஒரு டம்பளரில் நொட்ஸ் வாங்குவான் !! அதை அவன் வாங்கிக் குடிக்கும் முன்னரே தட்டிப் பறித்து விட நானும் பிரசன்னாவும் சிவாவும் முயற்சி செய்வோம் . பெரும்பாலான நேரங்களில் நாங்கள் தான் ஜெயிப்பொம் , ஆனால் ஒரு சில நேரங்களில் நொட்ஸ் வென்றுவிடுவான் . அத்தகைய நேரங்களில் , தனது முப்பத்தியிரண்டு பற்களும் நன்றாக இருப்பபதை தெரிவிக்கும் வகையில் சிரித்துக் கொண்டும் ,தனியாக இமயமலை வரை சென்று வென்றுவிட்ட கரிகாலச்சோழனைப் போல் தன்னை பாவித்துக் கொண்டு , தனது பராக்கிரமத்தை அனைவரிடமும் பறைசாற்றிக்கொண்டு அரைமணி நேரம் திரிவான் !! ஹாஸ்டலில் சாப்பாட்டுக்கு இருக்கும் கிராக்கியய் விட , நொட்ஸின் தட்டில் சாப்பிடுவதற்கு ஏக கிராக்கி இருக்கும் !!

ஒருநாள் நானும் சிவாவும் ஒரு முக்கிய வேலையில் இருந்தோம் . திடிரென நொட்ஸ் அங்கு வந்தான் , சிவாவின் கையினை எடுத்து தன் வாயில் வைத்துக்கொண்டான் !! எங்களுக்கோ குபீர் சிரிப்பு . விஶயம் தெரிந்ததும் , அவன் முகம் பொன போக்கை பார்க்கவேண்டுமே !! யாருக்கும் தெரியாமல் சினிமாவிற்கு கிளம்பினொம். இது தெரிந்ததும் , வாத்தியார் தன் பின்னால் இருப்பதையும் பொருட்படுத்தாமல் , " எனக்கும் ஒரு டிக்கட் எடுத்துவை மச்சி " என்பதிலாகட்டும் , ஹாஸ்டலில் அனைவருக்கும் முன்பாகவே எழுந்து , குளித்து ரெடியாகி , கல்லூரிக்கு கடைசியாக வருவதிலாகட்டும் , கம்ப்யுட்டர் பிராக்ட்டிகளில் யாராலும் கண்டேபிடிக்க முடியாத அளவிற்கு தவறு செய்து மாட்டிக் கொண்டு பெயிலாவதிலாகட்டும் , ரிகார்ட் நோட்டில் முந்தைய பக்கங்களை காண்பிக்காமல் , கடைசி பக்கத்தை மட்டும் காண்பித்து மாட்டிக்கொள்வதிலும் நொட்ஸுக்கு நிகர் நொட்ஸே !! அவனிருந்திருக்காவிட்டால் , கல்லூரியின் முதலாம் ஆண்டு , தற்பொழுது வரும் விஜய் படங்களை பொலவே உப்புச் சப்பில்லாமலே இருந்திருக்கும் !!

இரண்டாம் ஆண்டு முதல் நொட்ஸ் பர்கூருக்குச் சென்றுவிட்டான் , எனினும் எங்களுடனே சுற்றிக்கொண்டிருப்பான் !! . தனியாக ரும் எடுத்த நாங்கள் , எடுத்தது தவறு எனும் முடிவுக்கு வராதிருக்க நொட்ஸும் அவன் தனது அக்கவுண்டிலும் , தியாகராஜனின் அக்கவுண்டிலும் வாங்கிக் கொடுத்தனுப்பும் புரோட்டாவும் , புல் பாயிலுமே காரணம் . பின்னர் அவனது அக்கவுண்டில் அவனுக்கே தெரியாமல் பில் ஏறத்தொடங்கியது !! இக்காலகட்டத்தில் தான் நொட்ஸ் தனது காமடியின் உச்சத்திற்கு போனது . சென்னையில் டீடிஆரிடம் மாட்டிக்கொண்ட பொழுது , சட்டென்று பஸ் டிக்கட்டை காண்பித்து எக்ஸ்டரா பைன் கட்ட வைத்தது , அவசரத்தில் லேடீஸ் கம்பார்ட்மண்டில் ஏறிக் கொண்ட எங்களை , அதன் இன்னொரு புறம் ஏறிக் கொண்ட அவன் கிண்டலடித்து பின்னர் அசடுவழிய திரும்பி வந்தது என நொட்ஸின் காமடி கிராப் , தற்பொழுதைய அஜீத்தின் மார்க்கட்டைப் போல் , எகத்திற்கும் எகிறத் தொடங்கியிருந்தது !! அனைவருக்கும் பிடித்தவனானன் நொட்ஸ் !!

மூன்றாம், நான்காம் ஆண்டு படிப்பிலும் ஸாரி காமடியிலும் , நொட்ஸ் தான் கிங். அருண்குமார் நோட்ஸ் எடுக்கச் சொல்லி , லைப்பரரிக்கு அனுப்ப , சின்சியராக நொட்ஸ் எடுத்து அதை லைப்பரரியிலேயே வைத்துவிட்டு திரும்ப என்றும் , நைட் ஸ்டடியின் பொழுது சாப்பிட வேண்டி சாப்பாடு வாங்கி மறைத்து வைக்கவும் , நுணலும் தன் வாயாலே கேடும் என்பது போல தன் வாயாலே அதை தெரிவிப்பதுமாக , நொட்ஸ் தனி ஒரு காமடி சாம்ராஜ்யமே நடத்தினான் !! முகத்தை சிரியஸாக வைத்துக் கொண்டு , அனுபவித்து பாடுவது பொல் தனது கர்ண கொடூர குரலால் ஒரு மெலடி பாட்டுப் பாடி , எதிராளியய் திணரடிப்பது நொட்ஸுக்கு கை வந்த கலை . அந்த பாடலின் வரிகளை மாற்றிப் போட்டு , திரும்ப பாடி அவனை இம்சிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு பொழுதுபொக்கு ! அதிலும் " மூவேந்தர் " படத்தில் வரும் என்னவொ ஒரு பாடல் ?? பைனல் பிராக்ட்டிகளுக்கு இரண்டொரு நாட்கள் முன்பு , கடலையின் ரிகார்ட் நோட் தொலைந்துவிட்டது . கே எஸ் ஜி எஸ்டேட்ய புரட்டிப் போட்டும் கிடைக்கவில்லை . பக்கத்தில் சூறாவளி காற்று அடித்தாலும் கூட , கவலைப்படாமல் ட்ராக்டர் ஓட்டும் கடலை கூட ஒரு மணி நேரம் கலங்கிப் போய் விட்டான் !! நொட்ஸ் ஓம்பிரகாஶ் ஜாவின் ருமில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான் . அவனை சுற்றிலும் தேடியாகிவிட்டது , எழுப்பி உட்காரவைத்தும் தேடியாகி விட்டது . கிடைக்கவில்லை . சந்தேகம் வந்து , அவன் டிராயிங் பேடாக! உபயோகித்துக் கொண்டிருந்த புக்கை வாங்கிப் பார்க்க , அது கடலையின் ரிகார்ட் . கடலைக்கு போன உயிர் திரும்பி வந்தது , நொட்ஸுக்கு இருந்த உயிர் போகத் தெரிந்தது !! கல்லூரி நினைவாக யாராவது ஒரு கல்வெட்டு வைக்க ஆசைப்பட்டால் , அதில் நொட்ஸின் இந்த காமடிகள் பொறிக்கப்பட வேண்டியவை !! இப்படியும் நமக்கு ஒரு சீனியர் இருந்தார் என பின்வரும் ஜூனியர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்!!

இந்த நேரத்திலோ என்னவோ தான் திடிரென நொட்ஸின் அப்பா தவறிவிட்டார் . குடும்ப பாரமும் நொட்ஸ் மேல் தான் . சமாளித்தான் . கல்லூரியில் வேறு யாருக்கும் இல்லாத ஒரு பெருமை , எனக்கும் அண்ணாமலைக்கும் உண்டு . அது தமிழ்நாட்டு வரைப்படத்திலேயே இல்லாத நொட்ஸின் சொந்த ஊருக்குச் சென்று திரும்பியது !! தண்ணிர் ஓடாத ஆற்றைக் கடந்து தான் அவனது ஊருக்குச் செல்ல வேண்டும் . ஆயினும் மன்னார்குடியில் அம்மாவும் , தங்கைகளும் காட்டிய அன்பு நெகிழச் செய்யும் . அதுவும் நான் போயிருந்த நேரத்தில் எனக்கோ தீராத வலி !! சமாளித்தொம் !!

அண்ணாமலைக்குக் கூட கிடைக்காத ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்து . ஈ.பீ யில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நோட்ஸ் எனது வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தான் . அப்பவும் காமடிக்கு குறைவில்லை . வண்டியெய் எடுத்துக்கொண்டு ரவுண்ட் வருவது , ஒரு மணி நேரம் ஓட்டினாலும் முதல் கியரிலேயே ஒட்டுவது , எனது தந்தையுடன் வாதிட்டு எனக்கும் என் தந்தைக்குமான உறவை நேராக்குவது பொன்ற காமடிகளும் உண்டு !! இனிய நாட்கள் அவை !!

பசங்களில் எனக்கு ரோல் மாடல்கள் சிலர் உண்டு . இவர்களை போல் இருக்கவேண்டும் என சில சமயங்களில் கற்பனை செய்வதும் உண்டு . முதலிடம் அண்ணாமலைக்கு , நட்புரீதியில் இவனைப் போல் அரவணைத்துச் செல்ல யாராலும் முடியாது , இன்னொருவன் நொட்ஸ் .ப்ளான் பண்ணுவதில் சிதம்பரம் இவனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் !! தங்கையின் கல்யாணத்தை , தனியாளாக நின்று சிறப்பாக நடத்தினான் !! இப்பொழுது கூட என்னால் முடியுமா என்று தெரியவில்லை ! அடுத்த தங்கைக்கான செலவுக்கும் திட்டமிட்டு உள்ளான் . நல்லவன் , ஆனால் ரொம்பவே நல்லவன் !! அவன் மேல் மிகுந்த நம்பிக்கையும் , மரியாதையும் உண்டு எனக்கு . அதுவும் அவனது தங்கையினை பெண் பார்த்து சென்ற அன்று , நானும் நொட்ஸும் மட்டுமே எண்ணூரில் கடற்கரை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் . அன்று நான் அவன் மேல் வைத்திருந்த மரியாதை பன்மடங்கானது .வருங்காலத்தைக் குறித்து தீவிரமாக யொசிப்பதையும் , அதனை தீர்க்கமாக செயல்படுத்துவதுமாக இருந்த அவனின் இன்னொரு முகம் , கல்லூரி நாட்களில் தெரியாமல் பொனதிற்கு வருத்தப்படிகிறேன் .

மனம் கவலையாக இருந்தால் , நொட்ஸுக்கு பொன் பண்ணி பேசலாம் . கண்டிப்பாக சிரிக்கலாம் . நூறு பர்சன்ட் நான் கியாரண்டி!! எப்படியும் நொட்ஸ் இதைப் படிக்கப் போவதில்லை . அப்படியே படித்தாலும் , வரும் கமண்டினை இப்பொழுதே என்னால் சொல்லிவிட முடியும் . " இயேசு நாதர சிலுவேல அறைஞ்சாங்க ,சாக்ரடீஸ கல்லால அடிச்சாங்க , ........................" . நாயின் வாலை நிமிர்த்தத்தான் முடியுமா ? ஆனாலும் இந்த வால் நிமிர்ந்து விட கூடாது என்றே வேண்டுகிறேன் . நொட்ஸின் சேவை , எங்களுக்குத் தேவை .

அவன் எனக்கு நண்பனாதில் எனக்குத் தான் பெருமை !!

நானும் என் அம்மாவும் :

அம்மா என்ற சொல்லின் அர்த்தம் அரசியலாக்கப்படும் தமிழ்நாட்டில் , என் என்ற சொல்லை சேர்க்க வேண்டியிருக்கிறது . இது எனது அம்மாவைப் பற்றியது . அம்மாவிற்கு நேற்று பிறந்த நாள் . கண்டிப்பாக குறித்து வைக்கப்படாவிட்டாலும் , தங்கை தான் நேரம் , நட்சத்திரம் கணித்து கண்டுபிடித்தாள் !!. எனது ராசி மகத்தானது. சிவாஜி வரும் நேரத்தில் , சொந்த செலவில் படம் எடுத்து, வெளியிட சொல்லும் !! கண்டிப்பாக ஜெயிக்கும் என நான் சொல்லும் அணி , கேவலமாக மண்ணைக் கவ்வும் !! அம்மாவும் என்னை போல் தான் போலிருக்கிறது , இல்லாவிடில் எனது அப்பாவை பொன்ற ஒருவருக்கு வாக்கப்பட்டு ,அதை விட கொடுமையாக என்னை பொன்ற ஒரு பையனை பெற்றிருப்பாளா ? இதை நான் என் அம்மாவிடமும் சொல்லியதுண்டு . பதில் என்னையும் எனது அப்பாவையும் விட்டுக்கொடுக்காதவாறே இருக்கும் . !!
. மீனா அப்பா செல்லம் என்பதாலோ என்னவொ ,அம்மாவிற்கு , என் தங்கையய் விட என்னிடம் பாசம் அதிகம் . எனக்கும் , அம்மாவையும் அம்மாவழி சொந்தங்களையுமே பிடிக்கும் !! அம்மா செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் . தங்கத் தட்டில் வைத்து தாங்குவது என்று சொல்வார்களே அது போல , வளர்க்கப்பட்டவர்கள் எனது அம்மா . கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் , ஐம்பது பவுன் நகையும் , ஐம்பதாயிரம் ரொக்கமும் கொடுத்து வாழ வந்தாள் என பாட்டி கூறி கேள்விப்பட்டிருக்கிறேன் . ’கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று சொல்லி வைத்த மூதாதையர்கள் , இப்பொழுது என் கண் முன் வந்தால் , அவர்களை கண்ட இடத்தில் கொளுத்திவிட்டு , அவர்களுக்கு சந்ததியினர் ஏற்படா வண்ணம் , உடலை கூறு கூறாக அறுத்து , எரித்துவிடும் அளவிற்கு கோவம் உள்ளது என்னிடம் !! இதைக் கேட்டுத் தான் , அம்மா அப்பாவின் சகலவித அடக்குமுறைகளையும் அனுபவித்து வந்தாள் , தனது அப்பாவின் சாவிற்கு கூட , ஏதோ பக்கத்து வீட்டுக்காரன் போய் வருவது பொல் , ஒரு மணி நேரம் மட்டுமே போய் வந்தாள் !!
சின்ன வயதில் , நான் செய்யும் தவறுக்கெல்லாம் அம்மாதான் பலிகடா !! தண்ணி அடித்துவிட்டு வந்து என்னை எழுப்புவார் அப்பா . எனக்கு ஏழு முதல் எட்டு வயது வரை இருக்கும். தூங்காவிட்டாலும் , அடிக்கு பயந்து தூங்குவது போல் நடிப்பேன் . எனது அடியும் அம்மாவிற்கு விழுகும் !! . எனது அந்த வயது இயலாமையும் , அம்மாவிற்கெதிரான அப்பாவின் அடக்குமுறையும் தான் , இன்றளவும் நான் என் அப்பாவை ’அப்பா ’ஸ்தானத்தில் வைத்து மதிக்காததின் காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் !!
சின்ன வயதில் , அம்மாவிற்கும் எனக்குமான ஒரு நிகழ்வு இருக்கிறது !! . எனக்கு ஒரு பத்து வயதிருக்கும் என நினைகிறேன் !! . எனக்கு இடியாப்பம் என்றால் உயிர் . அம்மாவிடம் இடியாப்பம் கேட்டேன் . இல்லை என்றார்கள் . அன்று சாயந்திரம் , ’ சர்வேஸ்வரர் கோவிலுக்கு’ச் சென்றொம் . வழி இன்னும் ஞாபகம் இருக்கிறது . செல்லும் வழியில் யாரும் இல்லை . திடிரென்று பின்னால் "தொப்’ என்றொரு சத்தம் . பின்னால் திரும்பிப் பார்த்தால் , நான் நடந்து வந்த வழியில் ஒரு இளநிர் விழுந்திருக்கிறது . சில நொடிகள் தாமதித்திருந்தாலும் , எனது தலையில் தான் விழுந்திருக்கும் , எனது மண்டை பிளந்திருக்கும் !! அன்று , என்னால் அம்மா ரோட்டில் வைத்தே அழுதார்கள் !! அன்று இரவு , எனக்கு சாப்பாடு இடியாப்பம் !!
இன்றளவும் ,எனக்கு தெரிந்து நான் அம்மாவுடன் செய்த தவறு , அம்மாவை என்னவளின் விட்டிற்க்கு அழைத்து சென்றதே . தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவான் என நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு தாயுடன் , தனது வருங்காலத்தைப் பற்றி பேசிய ஒரே மகன் நானாகத் தான் இருப்பேன் !! என்ன ஒரு கேவலம் ? அந்த நேரத்தில் அம்மாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? இருந்தாலும் அம்மா சொல்லி வந்தார்கள் , " பிராப்தம் இருந்தால் நடக்கட்டும் !! " .
கல்லூரிக்காலத்தில் எனக்கும் அம்மாவிற்கான தொடர்பு , கடிதம் வாயிலாக மட்டுமே . பத்து பக்க கடிதம் வரும் . அதில் ஒன்பதரை பக்கங்களுக்கு அப்பா அறிவுருத்தியிருப்பார் !! மீதி இருக்கும் அரைப் பக்கத்தில் அம்மாவும் மீனாவும் அன்பை பொழிந்திருப்பார்கள் !! திருநெல்வேலியில் இருக்கும் பொழுது , ஒரு மத்தியான வேளையில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு , "பொன்னியின் செல்வன் " படித்தது ஞாபகம் இருக்கிறது . அது ஒரு சுகானுபவம் !! ஐந்து பைசாவிற்கு வழியில்லாத பொழுது கிடைத்தது , இன்று ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் பொழுதும் கிடைக்காது !!
அம்மா அற்புதமாக சமைப்பார்கள் . அம்மாவின் கையால் கிடைக்கும் மோர்குழம்பும் , உருளைக்கிழங்கு பொரியலும் கலக்கலாக இருக்கும் !!அதற்காகவே மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவேன் !!இங்கு ஹோட்டலில் சில சமயம் மொர்குழம்பு போடுவார்கள் !! சட்டென்று அம்மாவின் ஞாபகம் வரும். ஆனால் அந்த சுவை வருவதில்லை !!
இஞ்சினியரிங் முடித்து வந்த ஒரு நாள் இரவு , வழக்கம் போல் அப்பாவின் அடிதடி ஆரம்பித்தது . இந்த முறை எனக்கும் விட மனசில்லை , அம்மாவாலும் முடியவில்லை . சட்டென்று கைக்கலப்பாக , "இனி இந்த வீட்டுக்குன்னு ஒரு பைசா தர மாட்டேன் , பிச்சைதான் எடுக்கணும் " என்று அப்பா வாழ்த்த , அம்மாவும் " நாங்க ஏன் பிச்சைதான் எடுக்கணும்? , என் பையன் காப்பாத்துவான் " என்று சொல்ல ,கல்லூரி காலத்து இனிய வாழ்க்கையும் சொகுசும் முடிவுக்கு வந்தது . ஆர்.டி.ஓ ஆபிஸில் வேலைக்குச் சென்றேன் . தினமும் கிடைக்கும் ஐம்பது ரூபாய் , மளிகைச் செலவுக்கும் , வீட்டு வாடகைக்கும் சரியாய் போனது . திடிரென வரும் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணருவேன் .அந்த நேரத்தில் , நானே எதிர்பார்க்காத வகையில் , அம்மா துணி தைத்து கொடுத்தும் , மாவு அரைத்துக்கொடுத்தும் சம்பாதித்தார்கள் !! அந்த இரண்டு மாதங்களும் அம்மா காட்டிய உறுதியும் , சிக்கனமும் தான் நானும் என் தங்கையும் இன்று இந்த நிலைமையில் இருக்க காரணம் .
பின்னர் நான் பிலிப்ஸ் , பஜாஜ் என்று வேலைக்கு சென்றதும் , அம்மாவின் கூட இருக்கும் எனது நேரங்கள் குறைந்தன .நான் சொந்தமாக பைக் வாங்கியதும் அம்மாவின் கண்களில் பெருமிதம் . நன்றாக ஒட்ட கற்றுக் கொண்டதும் , அம்மாவை வைத்து கோவிலுக்கும் , பாட்டிவிட்டிற்கும் கூட்டிச் செல்வேன் .முதன் முதலாக அப்படி கூட்டிச் சென்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது !! அம்மா பயத்துடனே உட்கார்ந்தார்கள் .பிடித்ததிற்காக அம்மாவின் கை எனது தோளில் இருக்கும் . வளைவுகளிலும் , எதிரே எதாவது வாகனம் வந்தாலோ , அந்த கைப்பிடியின் அழுத்தம் கூடும் .நானும் அதை ரசித்துக்கொண்டே வண்டி ஒட்டுவேன் !!
கலர்டீவி வாங்கி படம் பார்க்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை . வாங்கிக்கொடுத்ததும் , அம்மாவிற்கு ரொம்ப சந்தொசம் . சொந்தக்காரங்களை எல்லாம் வரவழைத்துக் காண்பித்து , ஒரு ’கெட் டு கெதர் ’ நடத்தினாள் !! சமையலறையிலிருந்த படியே சேனல் மாற்றுவதும் , சீரியல் பார்த்துக்கொண்டே சமையல் செய்வதும் , என்று ஒரே கோலாகலம் தான் !!
அம்மாவை பொருத்தவரை எனக்கு ஒரே ஒரு ஆசை தான் . அம்மாவின் சொந்த ஊரான மதுரையில் , அம்மா பெயரில் ஒரு சொந்த வீடு !! கார் ஒன்று வாங்கி , அதில் அம்மா , மீனாவுமாக ஏதாவது ஒரு கோவிலுக்கு பயணம் . அங்கு வைத்து , மொர்குழம்பு சாதம் சாப்பிட வேண்டும் !! என்ன ஒரே ஒரு குறையிருக்கும் ,வண்டியில் சென்றால் கிடைக்கும் அம்மாவின் அந்த தோள்பிடி அழுத்தம் காரில் சென்றால் கிடைக்காது !! பரவாயில்லை.
இந்த ஆசை நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை !!