Monday, May 7, 2007

யாருக்கு லாபம் ?

இது ஒரு உண்மைச் சம்பவம் .என் நண்பன் சிவாவின் வாழ்கையில் நடந்தது . நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறிர்கள் என்று வைத்துக்கொள்வோம் . ஏதோ ஒரு வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு வந்திருக்கிறிர்கள் என்றே வைத்துக்கொள்வோம் . உங்கள் கூட வந்த ஒரு நண்பன் சைவம் . நீங்கள் அசைவப் பிரியர் . இரண்டு பேரும் சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கு செல்கிறீர்கள் .இருக்கும் பணம் உங்கள் இருவருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது . உங்களுக்கோ அதிகம் சாப்பிட வேண்டும் என ஆசையிருக்கிறது . என்ன செய்விர்கள் ?
நண்பன் சிவா செய்தது : சிவா மற்றவனிடம் கூறியது , " மச்சி , இங்க வெஜிடெரியன் காசு அதிகம் . அதனால நம்ம மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணுவொம் .மட்டன் பீஸ எனக்கு குடுத்துறு , வெறும் ரைஸ் மட்டும் நீ சாப்பிடு " என்று . அப்படியே நடந்தது .
இதில் யாருக்கு லாபம் ? சிவாவிற்கா , இல்லை அவனது நண்பனுக்கா? யாருக்கு லாபமோ இல்லையோ , சிவாவிற்கு இரண்டு மட்டன் பீஸ் லாபம் !! இதற்கு பெயர் தான் , சாமர்த்தியம் . சிவா சாப்பாட்டிலும் சாமர்த்தியசாலி .

No comments: