Sunday, May 13, 2007

சென்னை ௨௮ :

சென்னை ௨௮ படம் பார்க்க நேர்ந்தது . நன்றாக இருக்கிறது . இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் அன்றாட வாழ்கை தான் படம் என்று முன்னமே சொல்லிவிடுகிறார்கள் . அவர்களுக்குள் இருக்கும் நட்பு , கோபம் , சண்டை , கிரிக்கெட் இவை மட்டும் தான் இருக்கும் என்றும் சொல்லிவிடுகிறார்கள் . பின்னர் ஆரம்பிக்கிறது படம் .

குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பின்ணனி இசை . அவ்வப்பொழுது வரும் பழைய பாடல்களின் பின்னனியினை ரசிக்க முடிகிறது . பாண்டியன் போல் கார்த்திகின் காதல் பாட்டும் , தண்ணி அடிக்க வேண்டி சிறுவர்களிடம் பெட் மாட்ச் கட்டி தோற்று , அதனால் தனது பேட்டை பறிகொடுக்கும் பொழுது அழுகும் கோபியின் சோக பின்ணனியும் கலக்கல் . அதுவும் தமிழ் சினிமாவில், விஜயின் படங்களில் , அவர் வண்டியில் அருவாள் தீட்டும் பொழுதும் , தனி ஆளாக மாமிச மலைகளை உருட்டும் சமயத்திலும் மட்டுமே பயன்படுத்தப்படும் அடிதடி ரகளை பின்ணனியினை இந்த டீம் கிரிக்கெட் ஆட வரும் பொழுது கொடுத்திருப்பது அழகு !!
பிரேம்ஜி கலக்கல். "என்ன கொடும சார் இது ?" என்று அவர் கூறும் பொழுதெல்லாம் சிரிப்பு தான் . அதுவும் அவர் காட்ச் பிடித்தது நோ பால் , என்றவுடன் சொல்லும் "என்ன கொடும சார் இது ? . அந்த சீன் பார்த்தவுடன் , நான் புதூரில் ஆடிய ( ? ) மேட்ச் தான் ஞாபகம் வருகிறது . நான் , பிரசன்னா , காட்ஸ் , அசோக் எல்லாரும் ஹரி ஊருக்கு சென்றிருந்தொம் , மேட்ச் விளையாடுவதற்கு !! பைனல்சுக்கு முன் ஆடிய பிராக்டிஸ் மேட்சு அது . எங்கள் டீம் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது . எதிரணியில் பிரசன்னா வெளுத்துக்கொண்டிருந்தான் . அவனை அவுட் ஆக்கினால் தான் நாங்கள் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை . எங்கள் டீம் காப்டன் ஹரி என்னிடம் வந்து , " குமாரு , உன்ன நம்பி தான் இருக்கேன் , எப்படியாவது ஜெயிக்கணும்" என்றார் . ஆதனால் இன்னும் சிறப்பாக கவனித்து காத்திருந்தேன் . அந்த சமயத்தில் , ஹரியின் பந்தில் பிரசன்னா தூக்கி சிக்சருக்கு விரட்ட முயற்சிக்க , பந்து நான் இருக்கும் திசையில் வந்தது . என் வாழ்நாளிலேயெ என்னாலும் , பிரசன்னாவாலும் மறக்க முடியாத கேட்ச் அது . டைவ் பண்ணி , பறந்து போய் , ( இன்னும் என்ன வேண்டுமானலும் சேர்த்து கொள்ளுங்கள் !! ) கேட்ச் பிடித்தேன் . ----- இப்படி இன்னும் எத்தனை நாள் தான் சொல்லிக்கொண்டிருப்பது ? உண்மையில் , தம் அடிக்க ஏதாவது வழியிருக்காதா என்ற யோசனையில் இருந்தேன் . அப்பொழுது " டேய் குமாரு " என்று ஒரு சத்தம் கேட்டது . எதேச்சையாக திரும்பினேன் . பால் தானாகவே கைக்கு வந்தது . பின்னர் தான் தெரியும் . பிரசன்னா அவுட் என்று . அதை வைத்தே இன்னமும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் .!!

சில சின்ன சின்ன சீன்கள் நன்றாக இருக்கிறது . தண்ணி அடிக்க காசு இல்லாமல் போகும் பொழுது , அனைவரும் காணாமல் போவது , ஜெய் காதலியின் நண்பனானதும் அவன் போடும் எல்லா பால் ம் சூப்பர் என்று சிவா சொல்வது , ஸ்வேதா கெஸ்ட் ஹவுஸுக்கு போனேன் என்று அரவிந்த் சொல்லும் பொழுது அனைவரும் சொல்லிவைத்தாற் போல் அடியய் நிறுத்துவது , கடைசி நேரத்தில் "நீங்க விளையாட வாங்க "என்று இளவரசிடம் கலாய்ப்பது என்று ரசிக்க வைக்கிறார்கள் .பிரேம்ஜி கலக்கல்.

விஜயகாந்தின் படங்களில் , சண்டைக்காட்சி தேவைப்படும் என்று தோன்றினால் , காஶ்மிர் தீவிரவாதி ஒருவன் சென்னை கிளம்பி வந்து விஜயகாந்திடம் இருந்து அடி வாங்கிச் செல்வது போல , இந்த படத்திலும் சில சண்டைக்காட்சிகளும் , தேவையில்லாத பாட்டும் இருக்கிறது . தம் அடிக்க சரியான நேரம் .

கதை ஒன்றும் இல்லை . ஆனால் கவலைப்படாமல் போய் சிரித்து விட்டு வரலாம் !!

No comments: