Monday, January 21, 2008

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௩ :

அவசியம் :

"பசித்த வேளைக்கு
ருசியுடனோ இல்லாமலோ சாப்பாடு

அவகாசம் கிடைக்கையில்
கையிலொரு கவிதைப் புத்தகம்

அனாசினோஅல்லது ஜண்டுபாமோ
தலைவலிக்கு

தூரப் பயணத்தில் பேருந்தில்
அமர்ந்து போக ஒர் இருக்கை

ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நேரத்தில் மட்டும் அவசியம் "

உண்மையே . ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் மட்டும் தான் அவசியப்படுகிறது . மற்ற நேரங்களில் அனாவசியாமாகவோ , தொந்தரவாகவோ அமைந்துவிடுகிறது .

இப்பொதேல்லாம் காலைப் பொழுதுகளுக்கு , ஒரு கப் சுலைமானி , ஒரு சுடாகு , ஒரு சிகரட் மட்டுமே தேவையாயிருக்கிறது . வேலைப் பயணங்களில் இருக்கும் பொழுது புத்தகமும் , சாயங்கால மற்றும் இரவு நேரங்களில் இரண்டு லார்ஜும் , கம்ப்யுட்டரில் பாட்டும் இருந்துவிட்டால் , ஒரு நாளின் கணக்கு முடிந்துவிடுகிறது . இடைக்கிடைக்கு நண்பர்களின் போன்கால்கள் , வீட்டின் நலம் விசாரிப்பு இவற்றோடே கழிகிறது நாட்கள் .

இவற்றில் எது நேரம் கழித்து கிடைத்தாலும் அவசியப்படுவதில்லை . சாதாரண உண்மையினை மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் இக்கவிதை என்னவோ மனதில் குறுகுறுக்கிறது .

மீண்டும் வருகிறேன் !!

No comments: