Monday, January 21, 2008

’ அழுகிய’ தமிழ் மகன் :

அழகிய தமிழ் மகன் படம் பார்த்தேன். வித்தியாசமான படம் என்ற சாக்கில் அரதப் பழசான ஒரு மசாலாக் குப்பை !!
வழக்கம்போல ’உலகக் காதலர்களையெல்லாம் ’ சேர்த்து வைக்கும் மாமா வேலை பார்ப்பது , தங்கையினைக் கட்டிக் கொடுத்த ஊரில் உள்ள ரௌடிகளையெல்லாம் அழிப்பது, போலிஸாகி ஊரில் உள்ள ரௌடிகளையெல்லாம் கொன்று குவிப்பது போன்ற வழக்கமான கதையினை விட்டு விட்டு , புதியதாக ஒரு கதையினை பரீட்சித்திப் பார்த்திருக்கும் விஜய்க்கு மட்டுமல்ல , விஜயின் படம் பார்க்கும் நமக்கும் இது ஒரு நல்ல பாடம் !!
முதல் பாதி வறுத்தல் என்று சொல்லிவிட்டால் , இரண்டாம் பாதியினை என்னவென்று சொல்லதென்று தெரியவில்லை . விஜய் அறிமுகமாகும் பாடலில் , பாட்டாலும் , அவரது ஆட்டத்தாலும் சீட்டின் நுனிக்கு வரும் நாம் , அதன் பிறகு கதை செல்லும் போக்கில் , தியேட்டரின் வெளிப்புற வாசலுக்கே வந்துவிடுகிறோம் . என்ன செய்வது ? வித்தியாசமான கதையாயிற்றே !! ஸ்ரேயாவிற்காகவும் , பாடல்களுக்காகவும் பார்கலாம் . அதுவும் திருட்டுசிடி கிடைத்தால் மட்டுமே பார்ப்பதெற்கு சரிப்படும் . இல்லாவிட்டாலும் , இந்த புதுவருடத்தில் கட்டாயம் சின்னத்திரைகளில் " முதன்முறையாக " பார்க்கலாம் !!
மற்றபடி , இதனை பார்காதவர்கள் பாக்கியசாலிகள் . என்னைப் போல் பார்த்தவர்கள் , "செய்துவிட்ட பாவங்களுக்கான பிராயச்சித்தமாக " எண்ணிவிடுதல் உசிதம் !!
விஜயின் அடுத்த "வித்தையாசமான " படத்திற்காக காத்திருப்போம் !!!

மீண்டும் வருகிறேன் !!

No comments: