Monday, January 21, 2008

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௨ :

பாசம் :

"பட்டணத்தில் படிக்கும்
மகன் வருவானென
காத்திருந்தாள் தாய்
பல மாதங்களாக

விடுமுறை நாளில் அதிகாலை வேளை
அசதியாய் வந்தவன்
உறங்கச் சென்றான்
தூங்கட்டும் என்று
தாலாட்டினாள் தனக்குள்ளேயே

எழுந்தவன் அவசரமாய்ப் புறப்பட்டுச் சென்றான்
நண்பர்களைப் பார்க்க
திரும்பி வந்தவன் தயாரானான்
பட்டணம் புறப்பட
மீண்டும் பார்த்தபடியேயிருந்தாள் பாசத்துடன்

வாசல் வரை வந்து
வழியனுப்பினாள் ஏக்கத்துடன் "

இதனை விடவும் அழகாக தாயின் அன்பை , பாசத்தினை உணர்த்தமுடியுமா ?
வாழ்பானுவங்களில் இருந்து வருவது தான் இலக்கியம் என்பது மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது . " இன்றைய இலக்கியம் என்பது வாழ்க்கையினை பிரதிபலிப்பதாயுள்ளது " என்ற ஆசிரியரின் முன்னுரைக்கேற்ப இக்கவிதை உள்ளது .

பாசம் கிடைக்கும் இடத்தில் அதனை உதாசினப்படுத்துவதும் , கிடைக்காத இடத்தினில் அதனை தேடி அலைவதாகவுமே அலைபவனாகவே நான் இருந்திருக்கிறேன் . நான் மட்டுமல்ல , நம்மில் பலரும் .

மாசுயில்லாத அன்பினை தாயிடம் தவிர வேறேங்கும் காணுதல் அரிது . கிடைக்கும் இரண்டு மாத விடுமுறையில் , அதிகமாக அம்மாவுடனே இருக்க வேண்டும் என ஏற்கனவே செய்திருந்த முடிவினை , இக்கவிதை இன்னமும் வலியுருத்துகிறது .

மீண்டும் வருகிறேன் !!

No comments: