Monday, January 21, 2008

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௩ :

பணம் :

ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
காசு சம்பாதிக்கப்
போனான் கணவன்

அய்ந்து வருடமோ
ஆறு வருடமோ கழித்து வரும்
கணவனுக்காக காத்திருக்கிறாள் மனைவி

வாழ்க்கைக்கு பணம் வேண்டும்
சேர்ந்து வாழமுடியாத வாழ்க்கைக்குக்
இருந்தால் என்னஇல்லாவிட்டால் என்ன பணம் ?

படித்தவுடன் தோன்றியது சரியான கிறுக்கல் , பினாத்தல் என்று . சில நாட்கள் கழித்து யோசிக்கையில் சரிதானோ என்று தோன்றியது . இன்னும் புரிபடாத மனநிலையில் நான் .

ஏற்கனவே சொல்லியிருந்ததினைப் போல் , இங்கு நடக்கும் கட்டுமான பணியில் இருப்பவர்களில் அதிகமானோர் தமிழர்கள் . சரியாக படிக்காமல் இருந்துவிட்டதினால் , தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நூற்றியம்பது ருபாய் கிடைக்கும் . அதுவும் அன்று வேலை இருந்தால் மட்டும் . இங்கு மாதம் பதினோராயிரம் . செலவு போக மாதம் ஆறாயிரமாவது வீட்டிற்கு அனுப்பலாம் . இவர்கள் இங்கு வந்ததில் நியாயமிருக்கிறது .

எனது நிலை வேறு .பொறியியல் முடித்து விட்டு , நல்ல கம்பனியிலும் வேலை செய்துவிட்டு , நான் இங்கு வரக் காரணம் ? சமாதானம் சொல்வதேன்றால் , நான் வழிதவறிப் போன ஒரு ஆடு .பிரகாஶ்ராஜ் மேற்கோள் காட்டியிருந்ததினைப் போல , " வழிதவறிப் போகும் ஆட்டிற்கு தான் , மேய்ப்பன் தோளில் இடம் கிடைக்கும் " .. ஹிஹி ..

எதற்காக ஒருவன் வெளிநாட்டுக்கு வேலைக்காக வருகிறான் ? சரியான வேலை கிடைக்காமல் சிலர் , சம்பளம் அதிகம் வேண்டி சிலர் , தனிப்பட்ட காரணம் காரணமாக சிலர் . வீட்டிலுல்லோர் நலமும் , நிம்மதியும் தான் வேண்டும் எனக்கு . இங்கு வருவதால் , எனது வீட்டின் பணப்பிரச்சனைகள் சில குறைந்திருக்கிறது . நான் இந்தியாவில் இருந்தினைக் காட்டிலும் இப்பொழுது நலமாகவே இருக்கிறார்கள் . அவர்கள் இழந்தது என் அருகாமையினைத் தான் . அது போலவே நானும் . வீட்டு நினைப்பு தட்டும் சில நேரங்களைத் தவிர , நலமாகவே இருக்கிறேன் . வேறேன்ன வேண்டும் ? இது எனது வாதம் .

பணம் பெரிதா ? உணர்வுகள் பெரிதா ? உனது அருகாமை இல்லாமையினை , நீ வெளிநாட்டுக்குச் சென்று அனுப்பும் அதிகமான பணம் சமன் செய்து விடுமா? அம்மாவின் அன்பும் , தங்கையின் அன்பும் , வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும் , அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அந்த சில விலைமதிப்பில்லா நேரங்களையும் , நீ தனியாக இருந்து சாப்பிடும் குப்பூஸூம் ,ரொட்டியும் நெருங்க முடியுமா ? இது கவிஞரின் வாதமாக இருக்கலாம் .

அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் . எதிலோ படித்தது ஞாபகம் வருகிறது . " சரியென்றும் தவறென்றும் ஒன்றும் இல்லை . இன்று சரி என்று படுவது , நாளை தவறாகப் படலாம்". இது சரி என்று இப்பொழுது படுகிறது . தவறு என்று தோன்றும் முன்பே , காலம் தாழ்த்தாமல் இந்தியா வந்திருப்பேன் . இடைப்பட்ட காலத்தில் நான் தவற விட்டது , அதனை விட பலமடங்காக திருப்பிக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

மீண்டும் வருகிறேன் !!

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Wireless, I hope you enjoy. The address is http://wireless-brasil.blogspot.com. A hug.